இடைத்தேர்தல் களமென்றாலே ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சி வட்டாரங்களில் ஒரு பரபரப்பும், பதட்டமும். சுறுசுறுப்பும் இருக்கும். குறிப்பாக மதுரை மாவட் டம் திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது தி.மு.க. அங்கு வெற்றிபெற்றது. அப்போதுதான் திருமங்கலம் ஃபார்முலா என்ற பிரயோகம் பெயர்பெற்றது. ஆனால் ஈரோடு கிழக்கில் நடைபெறும் இடைத்தேர்தல் எந்த ஃபார்முலாவையும் பேசவைக்கவில்லை.
ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணிதான் தொகுதியில் களப்பணி ஆற்றிவருகிறது. எதிர்க் கட்சியான அ.தி.மு.க.வில் உள்ள பிளவால், அந்தக் கட்சி வேட்பாளரையே தேர்வுசெய்ய இயலாத வகையில் சென்றுகொண்டிருக்கிறது. மேற்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிச்சாமி அணி தான் வலுவாக இருக்கிறது என்றாலும், ஓ.பன்னீர்செல்வம், "நானும் வேட் பாளரை நிறுத்தப்போகிறேன்' என கூறியதோடு கூட்டணிக் கட்சி தலைவர்களை நேரில்சென்று சந்தித்து தேர்தல் களத்தில் அவரும் ஒரு பேசு பொருளாக உள்ளார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும
இடைத்தேர்தல் களமென்றாலே ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சி வட்டாரங்களில் ஒரு பரபரப்பும், பதட்டமும். சுறுசுறுப்பும் இருக்கும். குறிப்பாக மதுரை மாவட் டம் திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது தி.மு.க. அங்கு வெற்றிபெற்றது. அப்போதுதான் திருமங்கலம் ஃபார்முலா என்ற பிரயோகம் பெயர்பெற்றது. ஆனால் ஈரோடு கிழக்கில் நடைபெறும் இடைத்தேர்தல் எந்த ஃபார்முலாவையும் பேசவைக்கவில்லை.
ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணிதான் தொகுதியில் களப்பணி ஆற்றிவருகிறது. எதிர்க் கட்சியான அ.தி.மு.க.வில் உள்ள பிளவால், அந்தக் கட்சி வேட்பாளரையே தேர்வுசெய்ய இயலாத வகையில் சென்றுகொண்டிருக்கிறது. மேற்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிச்சாமி அணி தான் வலுவாக இருக்கிறது என்றாலும், ஓ.பன்னீர்செல்வம், "நானும் வேட் பாளரை நிறுத்தப்போகிறேன்' என கூறியதோடு கூட்டணிக் கட்சி தலைவர்களை நேரில்சென்று சந்தித்து தேர்தல் களத்தில் அவரும் ஒரு பேசு பொருளாக உள்ளார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், தே.மு.தி.க. வேட்பாளராக மாவட்டச் செயலாளர் ஆனந்தும் அறிவிக்கப் பட்டுள்ளனர். பா.ம.க. போட்டியில்லை எனவும், மக்கள் நீதி மையம் காங் கிரசை ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளது. மேலும் சில கட்சிகள் பா.ஜ.க. நிலைப்பாட்டைப் பொறுத்து முடிவை அறி விக்க உள்ளதாகக் கூறியிருக் கின்றன.
இந்நிலையில், தி.மு.க.விலுள்ள 13 அமைச்சர்கள், 18 மாவட்டச் செய லாளர்கள் என 31 பேர் கொண்ட குழு ரெடியாகி விட்டது. ஆடு களம் தயா ராகிவிட்டா லும், எதி ரணியில் ஆடவருகிற ஆட்டக்காரர் இல்லையென்ப தால் இடைத்தேர்தல் மேட்ச் இன்னும் சூடுபிடிக்கா மல் மந்தமாக இருக்கிறது. ஈரோட்டில் 19-ஆம் தேதி தி.மு.க. கூட்டணி தேர்தல் கமிட்டி கூட்டத்தை நடத்திய மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சு.முத்துச்சாமி, தொடர்ந்து தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார். வாக்கு சேகரிப்பு, வார்டு வாரியாக உள்ள வாக்குகள் கணக்கெடுப்பு, அதைத் தொடர்ந்த கூட்டங்கள் என தினமும் ஒவ்வொரு பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 25-ஆம் தேதி தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பணிமனையை ஈரோட்டில் அக்கட்சியினர் திறந்துள்ளார்கள். மூத்த அமைச்சரான எ.வ.வேலு, சு.முத்துசாமி, அமைச்சர் செந்தில்பாலாஜி, எம்.பி. அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி இவர்களோடு வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் வந்திருந்தார். இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த தனது மகன் திருமகன் இறப்புக்குப் பிறகு பொதுநிகழ்வில் முதல்முறையாகக் கலந்துகொண்ட இளங்கோவன், ஒரு உருக்கமான மனநிலையில் இருந்தார்.
"நாங்கள் ஏற்கனவே பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டோம். போகுமிடமெல்லாம் மக்கள் ஒருவித துக்கம் கலந்த வரவேற்பைக் கொடுக்கிறார் கள். திருமகன் ஈவேராவின் இழப்பை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த ஒன்றரை ஆண்டுகளில் திருமகன் ஈரோட்டு மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். தனது மகன் செய்ய நினைத்த பணிகளை அப்பாவான இளங்கோவன் உறுதியாகச் செய்வார்'' என்றார் அமைச்சர் முத்துசாமி.
"பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றிபெறுவார்'' என்றார் எ.வ.வேலு.
"என் மகன் செய்யவேண்டிய பணியைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் போட்டியிட ஒத்துக்கொண்டேன். வேட்பாளர் நான்தான் என்றாலும் உண்மையான வேட்பாளர் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின்தான். ஒரு போர் வீரராக இருந்து தமிழகத்தை நமது முதலமைச்சர் காத்துக்கொண்டிருக்கிறார்'' என்றார் வேட்பாளர் இளங்கோவன்.
மற்றொருபுறம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை அமைத்துள்ளது. அங்கு தினமும் வந்து செல்கிறார் அ.தி.மு.க. மாஜியான செங்கோட்டையன். செய்தி யாளர்களிடம் சிரித்துக்கொண்டே புன்முறுவ லோடு "எடப்பாடி பழனிச்சாமி வீரர் தீரர். அ.தி. மு.க. ஆட்சியில் சாதனை செய்தோம்''’ என்றெல்லாம் கூறிவிட்டு, வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, ஓ.பி.எஸ்., பா.ஜ.க. இப்படி கேள்வி வரும் போது, "விரைவில்.... பொறுத் திருங்கள்...., நடக்கும்... நடக்கும்...'' என சிரிக்காமல் கூறிவிட்டுச் செல்கிறார்.
முதலில் வேட்பாள ராகக் களமிறங்க சம்மதம் தெரிவித்த அ.தி.மு.க. மாஜி யும் மாவட்டச் செயலாள ருமான கே.வி. ராமலிங்கம், தி.மு.க. அணியின் வேகத் தைக் கண்டு எடப்பாடிக்கே போன்செய்து, "அண்ணே ஆளை விடுங்க நான் சம்பாதித்தது எல்லாம் செலவு பண்ண முடியாது. குறைந்தது 100 கோடி வேணும்'' என புலம்பியிருக்கிறார். அதன்பிறகு எடப்பாடிபழனிச்சாமி முன்னாள் ஈரோடு எம்.எல்.ஏ.வான தென்னரசுவுக்கு போன்செய்து, "நீங்க நில்லுங்க'' எனக் கூற அதற்கு தென்னரசு "அய்யய்யோ எனக்கெல்லாம் தேர்தல்ல நிக்கிற ஆசையே இல்லைங்கண்ணா'' என கூறியிருக்கிறார். நொந்துபோன எடப்பாடி, "விருப்ப மனு கொடுங்கள்'' என அறிவித்ததோடு, அமைச்சர்கள் கருப்பண்ணன், தங்கமணி, வேலுமணி ஆகிய மூவரிடமும், குறைந்தபட்சம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 100 பேராவது விருப்ப மனு கொடுக்கவேண்டும். அதற்கு நீங்கள்தான் ஏற்பாடு செய்யவேண்டும்'' எனக்கூறி ஈரோட்டுக்கு அனுப்பியிருக்கிறார்.
கட்சியினர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை காட்டிக்கொள்ள இவர்களே பணம் கொடுத்து 100 பேருக்கு விருப்ப மனு கட்டவுள்ளனர்.
ஜனவரி 26 அன்று, ஈரோடு வந்த எடப்பாடி, தமிழ்மகன் உசேன் முதல் ஜான்தங்கம் வரை தனது அணியிலுள்ள அனை வரையும் தேர்தல் பணிக் குழுவில் நியமித்து, தேர்தல் பணிகள் தொடங்கி விட்டதாக காட்டிக்கொண் டிருக்கிறார்.