ராங்கால் : அதிரடி ரெய்டு! அ.தி.மு.கவுக்கு பா.ஜ.க. சிக்னல்! அதிகாரிகள் ராஜ்ஜியம்! முதல்வரிடம் விவரித்த சீனியர் அமைச்சர்!

rr

"ஹலோ தலைவரே, உச்சநீதிமன்றத்தில் எடப்பாடித் தரப்புக்கு சாதகமான உத்தரவு வந்தாலும், அதே டெல்லியிருந்து ஷாக் ட்ரீட்மெண்ட்டும் கிடைச்சிருக்கு.''”

"ரெய்டைச் சொல்றியா?''”

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டத் தடையில்லைன்னு உச்சநீதிமன்றத் தீர்ப்பு 6-ஆம் தேதி கிடைக்க, அந்த சந்தோசத்தில் மூழ்கத் தொடங்கிய எடப்பாடி தரப்புக்கு, அடுத்த கொஞ்ச நேரத்திலேயே ஷாக் கொடுக்க ஆரம்பிச்சிடுச்சி ஒன்றிய பா.ஜ.க. அரசு. அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான "நமது அம்மா' நாளிதழின் வெளியீட்டாளரான சந்திரசேகரைக் குறிவைத்து, வருமான வரித்துறையை அதிரடியாக ஏவியது டெல்லி. இதைத் தொடர்ந்து கோவை வடவள்ளி பகுதியில் உள்ள அவர் வீடு, அவர் தந்தையின் வீடுன்னு 6 இடங்களில் அதிகாரிகள் ரெய்டை நடத்தினர். சந்திரசேகர் அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணிக்கு நெருக்கமானவர். அவர் தொடர்பான ஊழல் விவகாரங்களில் இவர் பெயரும் அடிபட்ட நிலையில், இந்த ரெய

"ஹலோ தலைவரே, உச்சநீதிமன்றத்தில் எடப்பாடித் தரப்புக்கு சாதகமான உத்தரவு வந்தாலும், அதே டெல்லியிருந்து ஷாக் ட்ரீட்மெண்ட்டும் கிடைச்சிருக்கு.''”

"ரெய்டைச் சொல்றியா?''”

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டத் தடையில்லைன்னு உச்சநீதிமன்றத் தீர்ப்பு 6-ஆம் தேதி கிடைக்க, அந்த சந்தோசத்தில் மூழ்கத் தொடங்கிய எடப்பாடி தரப்புக்கு, அடுத்த கொஞ்ச நேரத்திலேயே ஷாக் கொடுக்க ஆரம்பிச்சிடுச்சி ஒன்றிய பா.ஜ.க. அரசு. அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான "நமது அம்மா' நாளிதழின் வெளியீட்டாளரான சந்திரசேகரைக் குறிவைத்து, வருமான வரித்துறையை அதிரடியாக ஏவியது டெல்லி. இதைத் தொடர்ந்து கோவை வடவள்ளி பகுதியில் உள்ள அவர் வீடு, அவர் தந்தையின் வீடுன்னு 6 இடங்களில் அதிகாரிகள் ரெய்டை நடத்தினர். சந்திரசேகர் அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணிக்கு நெருக்கமானவர். அவர் தொடர்பான ஊழல் விவகாரங்களில் இவர் பெயரும் அடிபட்ட நிலையில், இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. சந்திரசேகரின் மனைவி சர்மிளா கோவை மாநகராட்சியின் 38-ஆவது வார்டு கவுன்சிலராக இருக்கிறார்.''

"இதன் மூலம் அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. சிக்னல் காட்டியிருக்கோ?''”

"சரியாச் சொன்னீங்க தலைவரே, பா.ஜ.க. தலைமையைப் பொறுத்தவரை தாங்கள் கிழித்த கோட்டினை மீறாதவர் என்கிற நம்பிக்கை ஓ.பி.எஸ். மீது உண்டு. இந்த நிலையில் எடப்பாடி, கட்சியில் இருக்கும் 90%க்கும் மேலான நிர்வாகிகளைக் கையில் வைத்திருப்பதற்கு அவர் தரப்பின் கரன்ஸி பலம்தான் காரணம்னு பா.ஜ.க. கணக்குப் போடுது. அதனால் எந்த வழியிலாவது எடப்பாடியைச் சறுக்கவைத்து, அ.தி.மு.க.வின் பவர் பாயிண்ட்டை ஓ.பி.எஸ். கையில் ஒப்படைச்சிடணும்னு திட்டமிடுது. அதனால தேர்தல் கமிஷன் மூலம் எடப்பாடித் தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வியூகத்திலும் இப்போது பா.ஜ.க. தலைமை இருக் கிறதாம்.''”

"தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜ.க. உண்ணா விரதப் போராட்டம் நடத்தியிருக்கே?''”

"தேர்தல் வாக்குறுதி யை நிறைவேற்றாத தி.மு.க. அரசைக் கண்டிப்பதாக, 5-ஆம் தேதி பா.ஜ.க. தமிழகம் தழுவிய அளவில் நடத்திய உண்ணாவிரதப் போராட் டத்துக்கு, எதிர்பார்த்த அளவுக்குப் பரவலாகவே கூட்டத்தைத் திரட்ட முடியலையாம். இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத் துக்கு, 9 மணியளவில் முக்கிய நிர்வாகிகள் எல் லோரும் வந்தும், தலைமை ஏற்கவேண்டிய அண்ணா மலையின் தலையை வெகுநேரம் காணலையாம்.''”

"ம்...''”

rr

"அண்ணாமலையோ, எதுவும் நடக்காத மாதிரி, 11.40 மணி வாக்கில் அங்குவந்து சேர்ந்திருக்கிறார். இதைப் பார்த்த பா.ஜ.க.வினர், ’பொதுவா எந்தக் கட்சி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினாலும், அதன் தலை வர்கள் காலை உணவைக்கூட சாப்பிடாமல் 7 மணிக்கே வந்துருவாங்க. ஆனா நம்ம தலைவரு, மதியச் சாப்பாட் டையும் ஒரேயடியா முடிச்சிட்டு வந்திருக்கார்னு முணுமுணுத்திருக்காங்க. அண்ணாமலையோ, மாநிலத் தலைவரான என் தலைமை யில் நடக்கும் இந்தப் போராட்டத்துக்கு 5 ஆயிரம் பேரைக் கூடத் திரட்ட முடியலையான்னு அதன் ஏற்பாட்டாளர்களிடம் எரிஞ்சி விழுந்திருக்கார். அந்த வேகத்தோடு, மகாராஷ்டிரா வைப் பார்த்தோமென்றால், பால்தாக்கரேவின் மூணாவது மகன் தான் உத்தவ் தாக்கரே, அதேபோல் கலைஞரின் மூன்றாவது மகன்தான் ஸ்டாலின். ரெண்டு பேரும் இளைஞரணியில் இருந்து வந்தவங்க. இப்ப உத்தவ் தாக்கரே ஆட்சி புட்டுக்குச்சு. இங்கும் அதுதான் நடக்கும்னு தாறுமாறாகத் தாக்கிவிட்டுக் கிளம்பியிருக்கார்.''”

"முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் துரைமுருகன் ஏதோ சொல்லியிருக்காராமே?''”

stalin

"சீனியர் அமைச்சரான துரைமுருகன் முதல்வரிடம், மந்திரிகளே கோட்டை அதிகாரிகள் மீது ஆதங்கத்தில் இருக்காங்க. மந்திரிகள் சொல்றதை விட கோட்டைல இருக்கும் அதிகாரிகள் சொல்றதுதான் நடக்குது. நம்மள அவங்க டம்மியா ஆக்கப் பார்க்கறாங்கன்னு வருத்தப்படறாங்க. மற்ற அதிகாரிகள் தரப்பிலிருந்தும் கோட்டை அதிகாரிகள் மீதே ரிப்போர்ட் வருது. காரணம், போன ஆட்சியில் கோலோச்சிய அதிகாரிகளையே நாமும் கோலோச்ச வச்சிக்கிட்டு இருக்கோம்னு சொல்லி இருக்கார். சீனியரான துரைமுருகன் சொன்னதை முதல்வர் சீரியஸா கவனிச்சிக் கேட்டிருக்கிறார். அவர் யார் பக்கம் முடிவெடுக்கப் போறாருன்னு அமைச்சர்கள் எதிர்பார்ப்போடு இருக்காங்க.''”

duraimurugan

ramdoss

"நானும் எனக்குக் கிடைச்ச ஒரு தகவலை உன் மூலம் பகிர்ந்துக்கறேன். பா.ம.க. தொண்டர்கள் தங்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸை அதிகம் பார்க்க முடியலையேன்னு ஆதங்கப்பட்டிருக்காங்க. இது ராமதாஸ் காதுவரை போயிருக்கு. அதனால் அவர், தைலாபுரத்தில் தன்னைத் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கட்சி நிர்வாகிகள் உட்பட எவர் வேண்டுமானாலும், அப்பாயின்ட்மெண்ட் இல்லாமலே சந்திக்கலாம்னும், தினமும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை போனில் தொடர்பு கொள்ளலாம்னும் அறிவிக்கச் சொல்லிட்டாராம்.''’

nkn090722
இதையும் படியுங்கள்
Subscribe