ஹலோ தலைவரே, தமிழக தேர்தலின் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கும் பா.ஜ.க. தலைமை, தி.மு.க. தரப்புக்குச் செக் வைக்கும் நடவடிக்கைகளை தொடங்கிடிச்சி.''
""மு.க.ஸ்டாலினை முதல்வராக வரவிடமாட்டோம்னு கட்சிக்கூட்டத்தில் பா.ஜ.க. முரளிதர்ராவ் வெளிப்படையா பேசியது இன்னமும் காதில் ஒலிக்குதுப்பா...''
""அதேதாங்க தலைவரே... தி.மு.க. செல்வாக்கு இருப்பது சம்பந்தமா பல சர்வே ரிப்போர்ட்டுகள் மோடி-அமித்ஷா பார்வைக்குப் போயிருப்பதை ஏற்கனவே நம்ம நக்கீரனில் விரிவா எழுதியிருக்கோம். அதனால, 2021-ல் வரப்போகும் பொதுத் தேர்தலுக்குள், தி.மு.க.வை பொருளாதார ரீதியில் பலவீனமாக்கித் திணறவைக்கனும்னு பா.ஜ.க. திட்டமிடுது. அதற்காக கர்நாடகத்தில் காங்கிரசுக்கு எதிரா கையாண்ட டெக்னிக்கையே இங்கும் கையிலெடுக்கப் போகுதாம். “அதாவது... ரெய்டு, பலவிதமான வழக்கு, கைதுன்னு தமிழ்நாடும் வேட்டைக்காடாக மாறும்னு சொல்றியா?''
""ஆமாங்க தலைவரே... கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் சிவகுமார் குறி வைக்கப்பட்டார். காங்கிரசுக்கான வருமான வழிகள் அடைக்கப்பட்டன. காபி டே ஓனர் சித்தார்த் தற்கொலை செய்துகொண்டார். சிவகுமார் கைது செய்யப்பட்டார். இந்த அதிரடிகளால கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. அந்த வகையில் தமிழ்நாட்டில், தி.மு.கவுக்கு தேர்தல் நேரத்தில் தாராளமா உதவக்கூடியவர்னு சொல்லப்படும் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனை முதலாவது நபரா பட்டியல்ல வச்சிருக்கு பா.ஜ.க மேலிடம். பி.வி.ராஜ் என்பவர் நடத்திய ராசி சிமெண்டின் பங்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி, ஒட்டுமொத்த கம்பெனியையும் 98-ல் தன்வசம் கொண்டுவந்தவர் சீனிவாசன். அதே பாணியிலேயே இப்ப இந்தியா சிமெண்ட்ஸில் 20 சத பங்கிற்கு மேல் வைத்திருக்கும் இந்தியாவின் இரண்டாவது பணக்காரரான ராதாகிருஷ்ணன் தமானியை விட்டு, அந்த நிறுவனத்தைக் கைப்பற்றச் செய்யவும் ரூட் போடப்படுது.''’
""இந்த லிஸ்டில் வேறு யார் யார் இருக்காங்க?''’
""சொல்றேங்க தலைவரே, தேர்தல் காலங்களில் தி.மு.க.வுக்கு 2 ஆயிரம் "சி' வரை உதவக்கூடியவர்னு கணக்கு போடப்பட்டு ஜெகத்ரட்சகன் எம்.பி.யும் குறிவைக்கப்பட்டிருக்காரு. அவர் போரூரின் பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி உட்பட பல்வேறு சொத்துக் களை வாங்கிப் போட்டிருக்காராம். ஏற்கனவே நடந்த ரெய்டுகளில் 350 கோடி ரூபாய் வரையிலான ஆவணங்கள் பிடிபட் டுச்சு. அப்போது வருமானவரித்துறை டைரக்டர் ஜெனரலாக இருந்த முரளிகுமார் வரை தொடர்பு கொண்டு, சிக்கல்ல இருந்து அவர் தப்பிச்சார். இந்த நிலையில், அவர் தொடர்பான 150 "சி' ஃபாரின் டிரான்சாக்ஷனை சமீபத்தில் அமலாக்கத்துறை கண்டுபிடிச்சிருக்கு.''
""ஆமாம்பா, ஒரு சிக்கலான வழக்கை முடிச்சிவைக்க நடந்த டிரான்சாக்ஷன்னு போனமுறைதானே நாம பேசிக்கிட்டோமே?''’
""ஆமாங்க தலைவரே, முதல்வர் எடப்பாடியின் பெயரைச் சொல்லி, சி.பி.சி.ஐ.டி. பிரிவு டி.ஜி.பி.யாக இருந்த ஜாபர்சேட், இதில் சம்பந்தப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டிருக்குதாம். இப்படிப்பட்ட விவகாரங்களை வைத்து தி.மு.க.வின் வெயிட்டான எம்.பி.யான ஜெகத்துக்கும் பா.ஜ.க. செக் வைக்கப்போகுதாம். இதேபோல் தி.மு.க.வின் பசைப் பார்ட்டிகளான எ.வ.வேலு, தயாநிதி மாறன்னு சிலரையும் தேர்தல் நேரத்தில் நெருக்கடிக்கு ஆளாக்கி, தி.மு.க.வுக்குப் பாய வேண்டிய கரன்ஸிப் பாசனத்தை தடுத்துட்டா, தி.மு.க. ஆட்சிக்கு வர்றதைத் தடுத்துட முடியும்ன்னு பா.ஜ.க. கணக்குப் போடுது. மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பொதுக்குழுவில் பேசுறப்போ, வெற்றி நமக்கு எளிதில் வராது. வரவிடவும் மாட்டார்கள்னு இதை மனசிலே வச்சித்தான் சொல்லியிருந்தாரு. அதனால், பா.ஜ.க.வின் நெருக்கடிகளை சமாளிக்கும் சாதுர்ய வியூகங்களில் தி.மு.க. தீவிரமா இருக்குது.''
""தி.மு.க.வை பா.ஜ.க. பார்த்துக்கும்ங்கிற தெம்பில்தான் எடப்பாடி தன் விருப்பத்துக்கு நடந்துக்குறாருன்னு அமைச்சரவையிலேயே குமுறலாமே?''
""கொரோனா நடவடிக்கைகளில் மெத்த னம், சாத்தான்குள படுகொலைகள் உள்ளிட்ட குளறுபடிகள் பத்தி தி.மு.க.வின் மாஜி மந்திரி கள் பலரும் கடும் அறிக்கைகள் கொடுக்கும் போதும், அ.தி.மு.க அமைச்சர்களிடமிந்து பெருசா எதிர்வினை கள் இல்லையாம். அதனால், அவர்களுக் கான அறிக்கைகளை யும் தலைமையே ரெடி பண்ணி, ஒன்னு ரெண் டை சேர்த்துக்கங் கன்னு எடப்பாடி தன்னோட அமைச்சர் களுக்கு அனுப்பியும், அமைச்சர் சி.வி.சண்முகம் போன்ற ஓரிருவர் தவிர மற்றவர்கள் சைலண்டாவே இருந்திருக்காங்க.''
""என்ன காரணமாம்?''
""அமைச்சர்களின் அப்செட்டுக்கும் கோபத்துக்குக் காரணம், அண்மையில் நடந்த 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்பரில் அவங்க பரிந்துரைகள் எடப்பாடியால் ஏற்கபட லையாம். அதிகாரிகளிடம் முன்கூட்டியே டிரான்ஸ்பர் டீல் நடத்தியிருந்த மந்திரிகள் கடும் அப்செட். இந்த நேரத்தில்தான், தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு பதில் கொடுக்கும் வகையில், பால்வளம் ராஜேந்திரபாலாஜிக்காக அ.தி.மு.க மேலிடம் ஒரு அறிக்கை ரெடி செய்து. அவரோ, அமைச்சரா மட்டும் இருக்கும் நான், ஒரு லிமிட் வரைதான் இறங்கியடிக்க முடியும்னு சொல்லியிருக்காரு. அவரோட எதிர்பார்ப்பை புரிஞ்சிக்கிட்ட எடப்பாடி, உடனடியாக அவரை விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்க, அந்த உற்சாகத்தில்தான் உடனடியா ஸ்டாலினை அட்டாக் பண்ணி அறிக்கை விட்டிருக்கார் ராஜேந்திரபாலாஜி.''
""மற்ற அமைச்சர்களின் எதிர்பார்ப்பை அறிந்து கூல் பண்ணுவாரா எடப்பாடி?''
""தன்னிடம் முதல்வர் நலன் விசாரிப்பாருன்னு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எதிர்பார்ப்போடு இருந்தாரு. கொரோனா பாதிப்புக்கு ஆளான ஆளும்கட்சி எம். எல்.ஏ.க்களான சதன்பிரபாகர், குமரகுரு உள்ளிட்ட பலரையும் அக்கறையோடு தொடர்புகொண்டு விசாரிச்ச எடப்பாடி, அவர்களுக்கு சிகிச்சை கொடுத்த டாக்டர்களிடமும் அவர்களின் உடல் நிலை குறித்து கேட்டறிஞ்சிருக்கார். ஆனா, கே.சி. அன்பழகனை கண்டுக்கலையாம். அதனால் அவர் ரொம்பவே அப்செட்.''’’
""இந்த கொரோனா காலத்திலும், தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் பட்டியல் வெளியாகியிருக்கே?''
""தலைவரே, விரைவில் பட்டியல்வரும்னு நாம ஏற்கனவே பேசியிருந்தோம். தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன், அண்மையில் டெல்லிக்கு அழைக்கப்பட்டதையும், அவர் கொண்டு சென்ற மாநில நிர்வாகிகளின் பட்டியல் பரிசீலனையில் இருப்பதையும் நாம பேசி, அது நம்ம நக்கீரனில் வந்தது. அந்தப் பட்டியல் சில திருத்தங்களுடன் வெளியிடப்பட்டிருக்கு. இது தமிழக பா.ஜ.கவுக்குள் மகிழ்ச்சி-அதிர்ச்சி இரண்டையுமே உருவாக்கியிருக்கு.''
""யாருக்கு மகிழ்ச்சி? யாருக்கு அதிர்ச்சி?''
""நீண்டகால பா.ஜ.க. பிரமுகரான முன் னாள் மாநில தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் இந்தப் பதவி நியமனத்தில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டதில் அவர் தரப்பு அப்செட்டாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கு. அ.தி.மு.க.வில் இருந்து பா.ஜ.க.வுக்குத் தாவி, கட்சியின் துணை தலைவர் பதவியை எதிர்பார்த்திருந்த எக்ஸ் எம்.பி. சசிகலா புஷ்பாவை தேசிய செயற்குழு பட்டியல்லயே இருக்க வச்சிட்டாங்க. அதனால் அவரும் டென்ஷனாகி இருக்கார்.''
""ம்...''
""அதே சமயம் அண்மையில் தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.வுக்குத் தாவிய வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவியை, உறவுக்காரர் என்ற ரீதியில் முருகன் வாங்கித்தந்ததா சர்ச்சை கிளம்பி யிருக்கு. அதே போல, மாநில மகளிரணிப் பதவியை எதிர்பார்த்த நடிகைகள் கௌதமி யையும், நமீதாவையும் தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களாக மட்டும் நியமிக்க, எங்க பவரே தெரியலையேன்னு அவங்களும் அலுத்துக்கறாங்களாம். மாநில பொதுச் செய லாளர் பதவியை எதிர்பார்த்த நடிகர் எஸ்.வி. சேகருக்கு அவரோட நாடக டைட்டில் போலவே அல்வா கொடுத்திருக்கு பா.ஜ.க.. இந்த நிலையில், பா.ஜ.க.வின் தேசிய அளவிலான நிர்வாகிகளும் விரைவில் அறிவிக்கப்பட இருக்காங்களாம்.''
""பிரதமர் மோடி, இந்திய சீன எல்லையில் இருக்கும் லடாக் பகுதிக்குப் போய் வீரர்களை சந்திச்சி, திருக்குறள் எல்லாம் சொல்லி உற்சாகப்படுத்தி இருக்காரே?''
""இந்தியாவுக்கு தார்மீக பலம் தரும் விசிட்டா இது சொல்லப்படுது. ராணுவத் தரப்பிலும் உற்சாக விளக்கங்கள் வந்திருக்குது. இந்த விசிட்டில் பிரதமர் மோடி சென்ற மருத் துவமனைங்கிறது, பதற்றம் நிலவும் லடாக் பகுதிக்கு முன்பாக 250 கி.மீ.தூரத்தில் லே பகுதி யில் இருக்கும் பேஸ் மருத்துவமனை. அங்கும் கொரோனா தொற்றுக்கு ஆளான ராணுவவீரர் கள் அட்மிட் ஆகி இருப்பதால், அந்த மருத்துவ மனைக்குள் அவர் போகலை. அங்கே இருக்கும் ஒரு கான்பரன்ஸ் ஹாலை வார்டாக மாற்றியிருக் காங்க. அங்கிருந்தவர்களுடன் மோடி தன் வழக்கமான ஃபோட்டோ போஸ்களுடன் சந்திப்பை நடத்தி உரை நிகழ்த்தியிருக்காரு.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு குஜராத்தில் மகன் வழிப்பேரன் பிறந்து 2 வாரமாகுது. சிறப்பு விமானத்தில் போய் பேரனைப் பார்க்க அமித்ஷா விரும்புறாரு. ஆனால், பிரதமரை அடிக்கடி சந்திக்கும் நீங்கள், கொரோனா நேரத்தில் அங்கு போவதைத் தவிர்ப்பது நல்லதுன்னு மோடியின் பாதுகாப்பு அதிகாரிகள், அமித்ஷாவின் பாச வெள்ளத்துக்கு அணை போட்டுட்டாங்களாம்.''