குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதங்கோட்டில் 6-ம் வகுப்பு மாணவனுக்கு பள்ளியில் வைத்து ஆசிட் கலந்த ஜூஸ் கொடுத்து கொலை செய்த சம்பவத்தில், குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

மெதுகும்மல் வாறுதட்டுவிளையைச் சேர்ந்த சுனில்- சோபியா தம்பதியின் மகன் அஸ்வின், அதங்கோடு மாயா கிருஷ்ணா கோவில் டிரஸ்ட் நடத்தும் மாயா கிருஷ்ணா ஸ்வாமி வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவந்தான். இந்த ஆண்டுக்கான காலாண்டுத் தேர்வு கடந்த மாதம் 24-ம் தேதி முடிந்தது. கடைசித் தேர்வை காலையில் எழுதி விட்டு மதியம் வெளியே வந்த மாணவர்கள், இனி 10 நாட்கள் விடுமுறையென்பதால் மகிழ்ச்சியில் ஒருவர் மீது ஒருவர் சட்டையில் மை தெளித்தும், சாயப்பொடி வீசியும் விளையாடினார்கள்.

as

Advertisment

அப்போது அஸ்வினுக்கு அறி முகமில்லாத ஒருவர் திடீரென்று அஸ்வினிடம் ஒரு ஜூஸ் பாட்டிலைக் கொடுத்து குடிக்கச் சொல்லியிருக்கிறார். அஸ்வின் மறுக்க, "குடிச்சிட்டு ஜாலியா விளையாடு' என்று ஆசைகாட்டி கொடுக்கவும், அதைக் குடித்தபின் வீட்டுக்குச் செல்கிறான் அஸ்வின். அன்றிலிருந்து அஸ்வினுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, 23 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த அஸ்வின் 17-ஆம் தேதி இறந்தான். பெற்றோருக்கும், சக பள்ளி மாணவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அஸ்வினின் மரணம் குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அஸ்வினின் தாயார் சோபியா, "பரீட்சை எழுதிட்டு மதியம் வீட்டுக்கு வந்த அஸ்வின் சோர்வா இருந்தான். சாப்பிட்ட பிறகு வயிறு ஒரு மாதிரியாக இருக்குதுன்னு சொல்லி, கொஞ்சம் மிச்சம் வச்சுட்டான். அடுத்த நாள் அவனுக்கு காய்ச்சல் அடிச்சதால் பக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் ஊசி போட்டு, மருந்தும் வாங்கிட்டு வந்தோம். அப்பதான் அவன் சொன்னான், "ஸ்கூல்ல வச்சி ஒருத்தன் ஜூஸ் தந்தான். அதுல ரெண்டு மடக்குதான் குடிச்சேன், மீதியை குடிக்க முடியல, ஒரு மாதிரியாக இருந்துச்சு'ன்னு. அவன் சொன்னத நானும் அப்ப பெரிசா எடுக்கல. பின்னர் தொடர்ந்து 3 நாளு அதே ஆஸ்பத்திரியில் மருந்து வாங்கினோம். கொஞ்சமும் வலி குறையவில்லை. 29-ம் தேதி அவனுக்கு வாய் மற்றும் நாக்கு வெந்திருந்தது. இதனால் பயந்துபோன நான், வெளிநாட்டிலிருந்த கணவருக்கு தகவல் சொன்னேன். அவர் திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போகச் சொன்னார்.

உடனே அங்குள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தோம். அவர்களும் முதலில் வைரஸ் காய்ச்சலா இருக்கும்னுதான் இரண்டு நாளைக்கு ட்ரீட்மெண்ட் கொடுத் தாங்க. அதுக்கப்புறம், அவனுக்கு வயிறு தீப்பற்றி எரிவதுபோல் வலிக்குதுன்னு சத்தம் போட்டதால் 2-ம் தேதி ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது... குடல், தொண்டை, நுரையீரல் எல்லாமே வெந்து சுருங்கியிருந்தது. "இரண்டு கிட்னியும் செயலிழந்து அவன் ஆபத்தான கண்டிசனில் இருப்பதாகவும், அவன் குடித்த ஜூஸில் ஆசிட் கலந்திருந்ததால்தான் இப்படி ஆனதென்று'ம் டாக்டர்கள் கூறினார்கள்.

Advertisment

as

இதையடுத்து வெளிநாட்டிலிருந்து கணவர் வந்து, போலீசில் 3-ம் தேதி புகார் கொடுத்தோம். போலீசும் விசாரிச்சிட்டு இருக்கறதா சொல்றாங்க. 15 நாளுக்கு மேலாகியும் ஆசிட் ஜூஸ் குடுத்தவன் யார்னு கண்டுபிடிக்க முடியல. அவனோட முகம் எங்க மகனுக்கு மட்டும்தான் தெரியும். இப்ப மகனும் எங்கள விட்டு போயிட்டான்'' என்று கதறினார்.

இந்த சம்பவத்தில் குற்றவாளியை கண்டு பிடிக்க வலியுறுத்தி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், களியக்கா விளை காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு, கலெக்டர் மற்றும் எஸ்.பி .யையும் சந்தித்துப் பேசி னார். மேலும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பிலும் ஆர்ப்பாட்டம், உண்ணா விரதப் போராட்டங்கள் நடந்தன.

ss

மாணவனின் சித்தப்பா ஜஸ்டின் ஜாஸ் கூறும்போது, "போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தபோது போலீசார் தீவிரம் காட்ட வில்லை. பள்ளி நிர்வாகத்துக்கு காவல்துறை சப்போர்ட்டாக இருக்கிறது. பள்ளியில் மே மாதத்திலிருந்து சி.சி.டி.வி. கேமரா பழுதடைந் துள்ளது என்று கூறுவதை நம்ப முடியவில்லை. குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்களும் விடப்போவதில்லை'' என்றார் ஆவேசமாக.

களியக்காவிளை போலீசாரிடம் கேட்டபோது, "புகார் தந்த அன்றே பள்ளியில் சென்று விசாரணை நடத்தினோம். பள்ளியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பழுதாகியிருப்பதால் சம்பவம் நடந்தது அதில் பதிவாகவில்லை. இவ்விவகாரத்தில், மாணவன் தரப்பிலும், பள்ளி தரப்பிலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளி யாரென்பது விரைவில் தெரிய வரும்'' என்றனர்.

பள்ளி நிர்வாகி சசிகுமாரிடம் கேட்டபோது, "இந்த சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியாகத்தான் உள்ளது. அந்த மாணவனும் ப்ரீகேஜிலியில் இருந்தே இங்குதான் படிக் கிறான். இந்த விசயத்தில் முமு ஒத்துழைப்பு கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார்.