சாதித்த முதல்வர்! சந்தோஷத்தில் பெரம்பலூர் மக்கள்!

ss

டந்த 15 ஆண்டுகளாக சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பெரம்பலூர் மக்களுக்கு பன்னாட்டு முதலீட்டுடன் ஒரு தொழிற்பூங்காவையே அமைத்துத் தந்து அசத்தியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தின் மைய மாவட்டங்களுள் ஒன்றாகத் திகழும் பெரம்பலூரில், தொழில்வளத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிட சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க கடந்த 2007-ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது மத்திய அரசு. இதற்காக ஆந்திராவைச் சேர்ந்த ஜி.வி.கே. குழுமமும், இந்திய அரசின் பெருவணிகத் துறையும் (டெட்கோ) இணைந்து, கடந்த 2007-ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 3,800 ஏக்கர் விவசாய விளைநிலங்களைக் கையகப்படுத்தினர்.

இந்நிலையில், தமிழக சட்டப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நடந்த 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, ‘தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையிலும், அந்தந்த பகுதிகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்தோடும் மதுரை, கோவை, பெரம்பலூர், வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய

டந்த 15 ஆண்டுகளாக சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பெரம்பலூர் மக்களுக்கு பன்னாட்டு முதலீட்டுடன் ஒரு தொழிற்பூங்காவையே அமைத்துத் தந்து அசத்தியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தின் மைய மாவட்டங்களுள் ஒன்றாகத் திகழும் பெரம்பலூரில், தொழில்வளத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிட சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க கடந்த 2007-ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது மத்திய அரசு. இதற்காக ஆந்திராவைச் சேர்ந்த ஜி.வி.கே. குழுமமும், இந்திய அரசின் பெருவணிகத் துறையும் (டெட்கோ) இணைந்து, கடந்த 2007-ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 3,800 ஏக்கர் விவசாய விளைநிலங்களைக் கையகப்படுத்தினர்.

இந்நிலையில், தமிழக சட்டப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நடந்த 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, ‘தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையிலும், அந்தந்த பகுதிகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்தோடும் மதுரை, கோவை, பெரம்பலூர், வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்’ என அறிவித்திருந்தார் முதல்வர். அதன்பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, காலணி மற்றும் தோல்பொருட்கள் உற்பத்திக்கான தனிக் கொள்கையை வெளியிட்டார்.

dd

அந்த தொழிற்கொள்கை வெளி யிடப்பட்ட அன்றே, பிரபல சர்வதேச காலணி தயாரிப்பு நிறுவனமான ஃபீனிக்ஸ் அக்கார்ட் நிறுவனமும், இந்தியாவின் மிகப்பெரும் தொழில் சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனமும் இணைந்து ரூபாய் 1,700 கோடி முதலீட்டில் 25 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் வகையில் தொழில் துவங்குவதற்கான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி மிகக்குறுகிய காலத்திலேயே தமிழக முதல்வர், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அதிகாரிகளின் சிறப்பான ஒத்துழைப்போடு பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் சுமார் 243.49 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில், மொத்தம் 2 ஆயிரத்து 440 கோடி ரூபாய் முதலீட்டில் கோத்தாரி ஃபீனிக்ஸ் காலணி தொழிற்பூங்காவை உருவாக்கி, அங்கு தோல் அல்லாத காலணி தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் அதற்குத் தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் 10 தொகுப்பு நிறுவனங்களைத் துவக்க திட்டம் தயாராகவே, தொழிற்பூங்கா அமைப்பதற்கு தேவையான பூர்வாங்கப் பணிகளை செய்துவந்தது கோத்தாரி நிறுவனம்.

இந்நிலையில்தான், பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் கடந்த 28-ஆம் தேதி நடந்த அரசு விழாவின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை யில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமான கோத்தாரி ஃபீனிக்ஸ் காலணி பூங்கா மற்றும் அதன் 10 தொகுப்பு நிறுவனங்களோடு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியது. இதன் மூலம் மேலும் 740 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு ஈர்க்கப்படுவதோடு, சுமார் 4 ஆயிரத்தி 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதுவரை உருவான 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் மொத்தம் 2,440 கோடி ரூபாய் முதலீட்டோடு, சுமார் 29,300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் உருவான அந்த மிகப்பெரிய ‘ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி தொழிற்பூங்காவிற்கும், சிட்கோ தொழிற்பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதுகுறித்து கோத்தாரி நிறுவனங்களின் துணைத் தலைவரும் அதன் மேலாண்மை இயக்குனருமான டாக்டர்.ஜே.ஜின்னா ரஃபிக்கிடம் பேசியபோது, "பெரம்பலூரில் தற்போது துவங்கப்படவிருக்கும் கோத்தாரி ஃபீனிக்ஸ் காலணி தொழிற்பூங்காவானது, இம்மாவட்டத்திலுள்ள பெண்கள், இளைஞர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி ஒட்டு மொத்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். மிகக்குறுகிய கால அளவில் இதற்கான ஏற்பாடு கள் அனைத்தையும் துரிதமாக செய்துமுடித்த சிப்காட் மற்றும் தமிழக தொழில்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி. அதேபோல, கட்டு மானப்பணிகள் அனைத்தையும் விரைவாக முடித்து தற்போது அடிக்கல் நாட்டியதைப் போலவே தொழிற் பூங்காவை திறந்துவைக்கவும் தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுப்போம்''” என்றார் மகிழ்ச்சியோடு.

இதுநாள்வரை பெரம்பலூர் மாவட்ட மக்கள் பலரும் வேலை தேடி வெளியூர்களுக்கு சென்று கொண்டிருந்த நிலையில், வெளிநாட்டவர்கள் பலரையும் தொழில்துவங்க பெரம்பலூருக்குள் ஈர்த்துவந்தது தமிழக முதல்வரின் சாதனைதான்!

________________

அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்வர் சுற்றுப்பயணம்!

திருச்சியிலிருந்து நவம்பர் 29-ஆம் தேதி காலை பெரம்பலூர் வருகைதந்த முதல்வர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எறையூர் அருகே, கடந்த 2006-2011, தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக சுமார் 300 ஏக்கருக்கு மேல் நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் அமைப்பதற்கான திட்டத்தைத் துவக்கிவைத்தார். பிறகு அரியலூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம் வழியாக கங்கைகொண்டசோழபுரம் கோயில் அருகிலுள்ள மாளிகைமேடு பகுதியில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டு மகிழ்ந்தார். மறுநாள் காலை 10 மணியளவில் கொல்லாபுரம் பகுதியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேருரையாற்றினார்.

-எஸ்.பி.எஸ்.

nkn031222
இதையும் படியுங்கள்
Subscribe