புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக் கோட்டை தொகுதி, முட்டுக்காடு ஊராட்சி, இறையூர் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த சம்பவத்தில், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே ஆகியோர் உடனடி விசாரணையில் இறங்கியதில், அப்பிரச் சனைக்கு அடுத்ததாக, பட்டியலின மக்களை அய்யனார் கோயிலுக்குள் அனுமதிக்காதது தெரிய வரவும், அவர்களைக் கோவிலுக்குள் அழைத்துச் சென்றதோடு, அதற்கு எதிர்ப்பாகச் செயல்பட்ட வர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.
இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில், அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றாக இணைந்து சாமி கும்பிடுவதாக முடிவானது. இதனையடுத்து மறுநாள், அமைச்சர் மெய்யநாதன், ஆட்சியர் கவிதா ராமு, கந்தர்வக் கோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை மற்றும் பொதுமக்கள் அனைவரும் அய்யனார் கோயி
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக் கோட்டை தொகுதி, முட்டுக்காடு ஊராட்சி, இறையூர் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த சம்பவத்தில், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே ஆகியோர் உடனடி விசாரணையில் இறங்கியதில், அப்பிரச் சனைக்கு அடுத்ததாக, பட்டியலின மக்களை அய்யனார் கோயிலுக்குள் அனுமதிக்காதது தெரிய வரவும், அவர்களைக் கோவிலுக்குள் அழைத்துச் சென்றதோடு, அதற்கு எதிர்ப்பாகச் செயல்பட்ட வர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.
இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில், அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றாக இணைந்து சாமி கும்பிடுவதாக முடிவானது. இதனையடுத்து மறுநாள், அமைச்சர் மெய்யநாதன், ஆட்சியர் கவிதா ராமு, கந்தர்வக் கோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை மற்றும் பொதுமக்கள் அனைவரும் அய்யனார் கோயிலுக் குச் சென்று சமத்துவ வழிபாடு செய்தனர்.
அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர் களிடம் பேசியபோது, "குடிதண்ணீர் தொட்டியில் கழிவுகளைக் கலந்தவர் விரைவில் கைதுசெய்யப் படுவார். அதே பகுதியில் புதிய தண்ணீர்த்தொட்டி கட்டும் பணி தொடங்கப்படவுள்ளது. தீண்டாமை சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்'' என்றார்.
இறையூருக்கு வந்த சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். கிராம மக்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்த பிறகு, "குடிதண்ணீரில் மலம் கலந்தவனை விரைவில் கைது செய்ய வேண்டும்'' என்றார். மறுநாள் விடுதலை சிறுத்தை கள் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில், "தீண்டாமை யை ஒழிக்க வேண்டும். சட்டங்களை சரியாகப் பயன்படுத்த வேண்டும்'' என்று பேசினார். தொடர்ந்து, சி.பி.ஐ. தரப்பில் முத்தரசன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடந்தது. இந்நிலையில், குடி தண்ணீரில் மலம் கலந் தவனைக் கண்டறிய 11 பேர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, முதற்கட்டமாக, செல்போன் சிக்னல்கள் மூலமாக சிலரிடம் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை இருந்தால் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வெளி யிட்ட வாட்ஸப் நம்பருக்கு, ஜனவரி 1 வரை சுமார் 100 புகார்கள் வந்துள்ளன. அந்த புகார்களை தனிக்குழு அமைத்து விசாரித்தாக வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் 'தீண்டாமை இல்லா கிராமம்' என்று பதாகை வைக்கும் திட்டத்தை வாய்மொழி உத்தரவாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இது கஞ்சா இல்லாம கிராமம், சாராயம் இல்லாத கிராமம் என்று பதாகைகள் வைத்து வீண் செலவழித்ததுபோல், தீண்டாமை இல்லாத கிராமம் என்பதும் வீணான செலவாகப்போகிறது என்கிறார்கள் ஊராட்சி நிர்வாகத்தினர். தீண்டாமைச் சம்பவங்கள் குறித்து கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரையிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
இறையூரில் உண்மையில் நடந்தது என்ன?
"குடிதண்ணீர் தொட்டியில் மலம் கலந்து விட்டதாக தகவலறிந்த உடனே அங்குசென்று, பட்டியலின மக்களிடமும், மற்ற சமூகத்தினரிடமும் அதுகுறித்து விசாரித்தேன். யாரோ சமூக விரோதி உள்நோக்கத்துடன் செய்திருக்க வேண்டும் என்ப தாகச் சொன்னார்கள். அங்கே தீண்டாமை உள்ள தாகத் தெரியவில்லை. அனைவரும் ஒற்றுமையாகத் தான் இருக்கிறார்கள். தற்போது அந்த ஒற்றுமை குலைந்துவிடுமோ என்று அச்சப்படுகிறேன்.''
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைய கிராமங்களில் தீண்டாமை இன்னும் உள்ளதா?
"திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பார்த்தால் தீட்டு, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் தொட்டால் தீட்டு என்றிருந்த காலம் மாறிவிட்டது. கறம்பக்குடி, புதுப்பட்டியில் சில வருடங்களுக்கு முன்பு இருந்ததுகூட தற்போது மாறிவிட்டது. தலித் மக்கள் கிராமத்திற்குள் நடக்கக்கூடாது என்பதெல்லாம் மாறி தற்போது தீண்டாமை இல்லாத மாவட்டமாகத்தான் உள்ளது.''
புதுக்கோட்டை மாவட்டத்தை தீண்டா மைப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளாரே?
"அவர் எந்த அடிப்படையில் சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால் நான் மாவட்டம் முழுவதும் பயணித்து வருவதால் சொல்கிறேன் அப்படி எங்கேயும் நடக்கவில்லை.''
ஆட்சியரின் வாட்ஸப்பில் 100க்கும் மேற்பட்ட தீண்டாமை புகார்கள் வந்துள்ளதே?
"இந்த புகார்கள் குறித்து உடனே ஆய்வு செய்து, சரியான தீர்வையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தினால் வெகுவிரைவில் அவற்றைப் போக்கிவிடலாம். எனது சட்டமன்றத் தொகுதி யில் இப்படியான புகார்கள் வந்திருந்தால் நானே நேரில்சென்று அங்குள்ள மக்களிடம், இளைஞர் களிடம் பேசி தீர்வை எட்டிவிடுவேன். அதற்கான முயற்சியில் இருக்கிறேன்'' என்றார்.
இறையூர் பரபரப்பு தொடர்ந்துகொண்டி ருக்கும் நிலையில், அருகிலுள்ள தொடையூர் கிராமத்தில் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண் டாட்டத்தில், பட்டியலின இளைஞர்கள் வாங்கி வைத்திருந்த கேக்கை தள்ளிவிட்டு ரகளை செய்த தாக, அதே பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் பி.சி.ஆர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.