ராங்கால் மாஜிக்கு அமலாக்கத்துறை விதித்த 908 கோடி அபராதம்! விஜய்யை இயக்கும் அந்த இரண்டு பேர்!

ss

"ஹலோ தலைவரே, முதல்வரின் அமெரிக்கப் பயணம் கடைசி நேரத்தில் அனைவரையும் பதட்டப் பரபரப்பில் ஆழ்த்தியிருக்கு.''”

"ஆமாம்பா, முதல்வர் சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருந்ததா மிரட்டல் வந்திருக்கே?''”

"உண்மைதாங்க தலைவரே, சென்னையிலிருந்து முதல்வர் EK-537 எமிரேட்ஸ் விமானத்தில் 27ஆம் தேதி இரவு பிளைட் ஏறினார். அவரை அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் வழியனுப்பினார்கள். அது துபாய் வழியாக அமெரிக்காவுக்குப் போகிற விமானம். அது துபாயை நோக்கிப் போகும்போதுதான், முதல்வர் பயணித்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மர்ம மிரட்டல் விடுக்கப் பட்டிருக்கிறது என்கிற தகவல் பரவ ஆரம்பித்தது. இந்தத் தகவல் மெல்ல கசிய ஆரம்பித்ததும் அதிகாரிகள் கைபிசைய ஆரம்பிச்சிட்டாங்க. எல்லோரும் திகிலோடு தவித்துக்கொண்டிருந்த நிலையில், அந்த விமானம் பத்திரமாக துபாயில் போய் இறங்கியிருக்கு. அதற்குப் பிறகு அந்த விமானத்தை சோதித்துப் பார்த்துட்டு, அது டுபாக்கூர் மிரட்டல் என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்குப் பிறகுதான் எல்லோரும் நிம்மதியடைந்திருக்கிறார்கள். முதல்வரும் துபாயிலிருந்து அமெரிக்க விமானத்தில் பறந்து, அங்க வெற்றிகரமாகத் தரையிறங்கி, தன் பணிகளை தொடர்ந்துகொண்டிருக் கிறார்.''”

"சென்னையிலிருந்து விமானம் புறப்படுறதுக்கு முன்பாகவே மிரட்டல் வந்துடுச்சுன்னு ஒரு தகவல் இருக்கேப்பா?''”

stalin

"ஆமாங்க தலைவரே, முதல்வரின் விமானம் புறப்படுவதற்கு முன்பே அந்த மிரட்டல் வந்ததாகவும், ஆனால், அதில் அதிகாரிகள் பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்து விட்டார்கள் என்றும் ஒரு தகவல் சொல்லப் படுகிறது. பொதுவாக இப்படிப்பட்ட மிரட்டல்கள் வந்தால் அந்த விமானத்தை முழுமையாக சோதனைக்கு உட்படுத்திய பிறகே, அதைப் புறப்பட அனுமதிப்பார்கள். ஆனால், முதல்வரின் இந்த விமானம் குறித்து எதனால், யார் மெத்தனமாக தகவலை அலட்சியப்படுத்தினார்கள் என்கிற கேள்வியும் இப்போது பெரிதாக எழுந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான அதிகாரிகள், விமானம் புறப்பட்டு 2 மணி நேரம் கழித்துதான் அந்த மிரட்டல் வந்தது. உடனே துபாய்க்கு தகவல் தரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது என்று சொல்கிறார்கள்.''”

’"பெரிய அளவில் தொழில் முதலீடுகளைத் திரட்டும் கனவோடு ஸ்டாலின் சென்றிருக் கிறாரே?''”

"தமிழகத்திற்கு பெரிய அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தான் அமெரிக்கா விற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டி ருக்கிறார் ஸ்டாலின். இதற்கு முன் இதேபோல், 5 நாள் பயணமாக துபாய்க்கு அவர் சென்றார். அங்கிருந்து 8,100 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை அவர் திரட்டிவந்தார். அடுத்து, 8 நாள் பயணமாக ஸ்பெயின் சென்றார். அங்கிருந்து 3,440 கோடி ரூபாய் முதலீடுகளை அள்ளி வந்தார். அடுத்ததாக 9 நாள் பயணமாக ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு ஸ்டாலின் சென்று வந்தார். அந்தமுறை 1,342 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துகொண்டு திரும்பி

"ஹலோ தலைவரே, முதல்வரின் அமெரிக்கப் பயணம் கடைசி நேரத்தில் அனைவரையும் பதட்டப் பரபரப்பில் ஆழ்த்தியிருக்கு.''”

"ஆமாம்பா, முதல்வர் சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருந்ததா மிரட்டல் வந்திருக்கே?''”

"உண்மைதாங்க தலைவரே, சென்னையிலிருந்து முதல்வர் EK-537 எமிரேட்ஸ் விமானத்தில் 27ஆம் தேதி இரவு பிளைட் ஏறினார். அவரை அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் வழியனுப்பினார்கள். அது துபாய் வழியாக அமெரிக்காவுக்குப் போகிற விமானம். அது துபாயை நோக்கிப் போகும்போதுதான், முதல்வர் பயணித்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மர்ம மிரட்டல் விடுக்கப் பட்டிருக்கிறது என்கிற தகவல் பரவ ஆரம்பித்தது. இந்தத் தகவல் மெல்ல கசிய ஆரம்பித்ததும் அதிகாரிகள் கைபிசைய ஆரம்பிச்சிட்டாங்க. எல்லோரும் திகிலோடு தவித்துக்கொண்டிருந்த நிலையில், அந்த விமானம் பத்திரமாக துபாயில் போய் இறங்கியிருக்கு. அதற்குப் பிறகு அந்த விமானத்தை சோதித்துப் பார்த்துட்டு, அது டுபாக்கூர் மிரட்டல் என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்குப் பிறகுதான் எல்லோரும் நிம்மதியடைந்திருக்கிறார்கள். முதல்வரும் துபாயிலிருந்து அமெரிக்க விமானத்தில் பறந்து, அங்க வெற்றிகரமாகத் தரையிறங்கி, தன் பணிகளை தொடர்ந்துகொண்டிருக் கிறார்.''”

"சென்னையிலிருந்து விமானம் புறப்படுறதுக்கு முன்பாகவே மிரட்டல் வந்துடுச்சுன்னு ஒரு தகவல் இருக்கேப்பா?''”

stalin

"ஆமாங்க தலைவரே, முதல்வரின் விமானம் புறப்படுவதற்கு முன்பே அந்த மிரட்டல் வந்ததாகவும், ஆனால், அதில் அதிகாரிகள் பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்து விட்டார்கள் என்றும் ஒரு தகவல் சொல்லப் படுகிறது. பொதுவாக இப்படிப்பட்ட மிரட்டல்கள் வந்தால் அந்த விமானத்தை முழுமையாக சோதனைக்கு உட்படுத்திய பிறகே, அதைப் புறப்பட அனுமதிப்பார்கள். ஆனால், முதல்வரின் இந்த விமானம் குறித்து எதனால், யார் மெத்தனமாக தகவலை அலட்சியப்படுத்தினார்கள் என்கிற கேள்வியும் இப்போது பெரிதாக எழுந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான அதிகாரிகள், விமானம் புறப்பட்டு 2 மணி நேரம் கழித்துதான் அந்த மிரட்டல் வந்தது. உடனே துபாய்க்கு தகவல் தரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது என்று சொல்கிறார்கள்.''”

’"பெரிய அளவில் தொழில் முதலீடுகளைத் திரட்டும் கனவோடு ஸ்டாலின் சென்றிருக் கிறாரே?''”

"தமிழகத்திற்கு பெரிய அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தான் அமெரிக்கா விற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டி ருக்கிறார் ஸ்டாலின். இதற்கு முன் இதேபோல், 5 நாள் பயணமாக துபாய்க்கு அவர் சென்றார். அங்கிருந்து 8,100 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை அவர் திரட்டிவந்தார். அடுத்து, 8 நாள் பயணமாக ஸ்பெயின் சென்றார். அங்கிருந்து 3,440 கோடி ரூபாய் முதலீடுகளை அள்ளி வந்தார். அடுத்ததாக 9 நாள் பயணமாக ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு ஸ்டாலின் சென்று வந்தார். அந்தமுறை 1,342 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துகொண்டு திரும்பினார். அதேபோல் இந்த 15 நாள் அமெரிக்கப் பயணத்தின்போது, சுமார் 8,000 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை அவர் திரட்டி வர இருக்கிறார் என்கிறது அரசுத் தரப்பு. இந்த பயணத்தின்போது 29ஆம் தேதி அங்கே முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார். இதுதவிர அமெரிக்கவாழ் தமிழ் சங்கத்தினருடனும், சிகாகோவில் அங்குள்ள தமிழர்களுடனும் அவர் கலந்துரையாடுகிறார். அதேபோல் கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை யையும் அவர் சந்திக்கிறார். இதற்கான அப்பாயின்ட்மெண்ட்டை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னதாகவே வாங்கியிருக்கிறார். இந்தப் பயணத்தில் 6 நாட்களும் அவருடைய பர்சனல் வேலைகளுக்கானவை என்று தெரிகிறது.''”

"அமைச்சர் துரைமுருகன் மீதான கோபம், முதல்வர் அமெரிக்கா செல்லும் போதும் எதிரொலித்திருக்கிறதே?''”

"ரஜினியுடன் மோதிய விவகாரத்தில் அமைச்சர் துரை முருகன் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு இன்னும் கோபம் தீரவில்லை என்கிறார்கள் சக அமைச்சர்களே. ரஜினியை அவர் முதுமையின் உச்சத்தில் இருப்பவரைப் போல மறைமுகமாக விமர்சித்ததை ஸ்டாலின் கொஞ்சமும் ரசிக்கவில்லையாம். நம் விழாவிற்கு விருந்தினராக வந்தவரை இப்படி விமர்சிக்கலாமா? நீங்கள் உடனடியாக ரஜினியிடம் மன்னிப்புக்கேளுங்கள் என்று ஸ்டாலின் சொன்னதன் அடிப்படையிலேயே ‘ரஜினி பற்றி நான் நகைச்சுவையாகப் பேசியதை யாரும் பகைச்சுவையாக நினைக்க வேண்டாம்’ என்ற ரீதியில் தன் நிலையில் இருந்து துரைமுருகன் இறங்கிவந்தார் என்கிறார்கள். இருந்தும் தன்னை அமெரிக்கப் பயணத்திற்கு வழியனுப்ப வந்த துரைமுருகனிடம் இருந்து சற்று விலகி நின்றே, தன் கோபத்தை அவரிடம் காட்டினாராம் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து துரைமுருகனின் அமைச்சர் பதவி தொடர்ந்து நீடிக்குமா? என்கிற விவாதம் அமைச்சர்கள் மட்டத்திலேயே பரபரப்பாக இருக்கிறது.''”

"கொங்கு மண்டல மணல் குவாரிகள் தரப்பில் புகைச்சல் தெரிகிறதே?''”

"ஸ்டாலின் வெளிநாடு சென்ற நிலையில், கேரளாவுக்கு மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அனுப்பிவரும் கோவை, நெல்லை, குமரி மாவட்ட குவாரிகளை எல்லாம், முழுமையாக கரிகாலனின் கண்ட்ரோலுக்குக் கொண்டுவந்துவிட்டாராம் அமைச்சர் துரைமுருகன். இதில் ஷாக்கான குவாரி உரிமையாளர்கள், கோவை கலெக்டரிடம் மனுகொடுத்து முறையிட்டிருக்கிறார்கள். கலெக்டரோ, "நாங்கள் என்ன செய்வது? அமைச்சர் துரைமுருகன் சொல்லித்தான் இப்படி நடந்திருக்கிறது' என்று அவர்களிடம் சொன்னதோடு, அமைச்சர் துரைமுருக னிடமும் போன்போட்டு இது தொடர்பாகக் கேட்டிருக்கிறார். அதற்கு துரைமுருகன் ‘"எல்லாம் மேலிடம் சொன்னபடிதான் நடக்கிறது'’என சமாளித்தாராம். குவாரிகள் தரப்பு, அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராகக் கொடி பிடித்துவருகிறது.''”

"ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருக்கும் நேரத்தில் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை 908 கோடி அபராதம் விதித்திருக்கிறதே?''”

rr

"ஏற்கனவே, தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 89 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக் களை அமலாக்கத்துறையினர் முடக்கி வைத்திருக்கும் நிலையில், இப்போது இப்படியொரு அதிரடி அபராதத்தை அவருக்கு விதித்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் முதலீடு செய்வதாக இருந்தால் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவேண்டும் என்பது விதி. ஆனால், ஜெகத்ரட்சகனும் அவரது குடும்பத்தினரும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமலே சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி யிருப்பதை வைத்துதான், அந்நியச் செலாவணி மேலாண் மை சட்டத்தின்படி இந்த அபராதத்தை விதித்துள்ளனர். தி.மு.க.வின் அட்சய பாத்திரங்களாக உள்ள வி.வி.ஐ.பி. உடன்பிறப்புகளை குறிவைத்து அவர்களது சொத்துக்களை முடக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுத்துவருகிறது அமலாக்கத்துறை, தற்போது ஜெகத்ரட்சகனுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தைக் கண்டு தி.மு.க. தரப்பு அதிர்ச்சியடைந்திருக்கிறது. குறிப்பாக அமைச்சர்கள் பலரும் ஆடிப்போயிருக்கிறார்கள்.''”

"நடிகர் விஜய், தங்கள் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தும் முயற்சியில் ஜரூராக இறங்கிவிட்டாரே?''”

ff

"நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்துகிறார், இதற்காக, 86 ஏக்கர் நிலம் பார்க்கப்பட்டு, அந்த நிலத்தின் உரிமை யாளர்களிடம், மாநாடு நடத்துவதற்கு முறைப்படி அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, நிலத்தை வழங்கக்கூடாது என்று நில உரிமையாளர்களுக்கு ஆளும்கட்சித் தரப்பிலிருந்து சிலர் மிரட்டல் விடுத்தார்களாம். ஆனால் நில உரிமையாளர்களோ, எங்க இடத்தைத் தருவதில் உங்களுக்கு என்ன கஷ்டம்? என்று சொல்லி மிரட்டலுக்கு பணிய மறுத்திருக்கிறார்கள். அடுத்த கட்டமாக, அந்த மாநாட்டுக்கு அனுமதியையும், பாதுகாப்பையும் கேட்டு விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முறைப்படி மனு கொடுத்திருக்கிறார்கள். இந்த மனுவை ஏற்று அனுமதி வழங்குவார்களா? இல்லை சிக்கலை ஏற்படுத்துவார்களா? என கட்சியின் மாநில நிர்வாகிகளிடம் விஜய் விவாதித்திருக்கிறார். அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை அணுக அவரது கட்சியின் வழக்கறிஞர்கள் டீம் தயாராக இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு 25 லட்சம் பேரைத் திரட்டி அரசியல் கட்சிகளை அதிர விடவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறாராம் விஜய். எனவே மாநாட்டுப் பணி ஒவ்வொன்றிலும் அவர் தீவிர கவனம் செலுத்திவருகிறார்.''”

"விஜய் திங்கட்கிழமையில் மாநாட்டை நடத்துகிறாரே?''”

"வழக்கமாக வாரக்கடைசி நாட்களில்தான் இதுபோன்ற மாநாடுகளை நடத்துவார்கள். அதே பாணியில் ஞாயிற்றுக்கிழமையான செப்டம்பர் 22-ல் தான் நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது ஜோதிடர்தான், 22 உகந்த தேதி இல்லை. 23-ல் நடத்தலாம் என்று விஜய்க்கு எடுத்துச் சொன்னாராம். அவர் சொன்னபடிதான் விஜய் செப்டம்பர் 23-ஐ டிக் அடித்தாராம். அதேபோல் விஜய், தன் கட்சியை தன் விருப்பத்தின் பேரில் ஆரம்பிக்கவில்லையாம். மும்பையைச் சேர்ந்த ஜான்ஆரோக்கியம் என்ற அரசியல் ஆலோசகர், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகக் கொடுத்த அட்வைஸ் காரணமாகவே அவர் அரசியல் கட்சியைத் தொடங்கும் முடிவை எடுத்தார் என்கிறார்கள். இந்த ஜான், ஏற்கனவே அன்புமணிக்கு அரசியல் வியூகம் வகுத்துக் கொடுத்தவராம். ‘"மாற்றம்- முன்னேற்றம்-அன்பு மணி' என்று கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அன்புமணி, ஜெபக்கூட்ட பாணியில் உரை நிகழ்த்தி பிரச்சாரம் செய்ததற்கும் இவர்தான் காரணமாம். இவர்தான் தற்போது விஜய்யின் அரசியல் மூளையாக இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இப்படியாக அந்த ஜோதிடரும் ஜானும்தான் இப்போது நடிகர் விஜய்யை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்களாம்.''”

"பா.ஜ.க. தமிழிசையும் ஒரு வார் ரூமை தயார் செய்கிறாராமே?''”

"எடப்பாடியை மோசமாகவும் கடுமையாகவும் விமர்சித்துவரும் தமிழக பா.ஜ.க. நிர்வாகிக்கு, ’இப்படி தலைவர்களைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பது சரியல்ல’ என்று தமிழிசை அட்வைஸ் கொடுத்தார். இதில் தமிழிசை மீது கடுப்பான, அந்த பா.ஜ.க. நிர்வாகியின் வார்ரூம் ஆட்கள், அவரை கொச்சையாக விமர்சித்து பதிவுகளை வெளி யிட்டு வருகிறார்கள். இது பா.ஜ.க.வினரை அதிர வைத்துவரும் நிலையில், இதைக்கண்டு கொதித்துப்போன தமிழிசை, இந்த விவகாரம் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடம் புகார் தெரிவித்திருக்கிறார். மேலும் பதிலடி கொடுப்பதற்காக, தானும் ஒரு வார் ரூமை அவர் ஏற்பாடு செய்துவருகிறாராம். இந்த நிலையில் எடப்பாடியை விமர்சித்த அந்த பா.ஜ.க. நிர்வாகி யைக் கண்டித்து அ.தி.மு.க. போராட்டம் நடத் தியது. கொங்கு மண்டலத்தில் இந்த போராட் டத்தை நடத்த. மாஜி மந்திரி வேலுமணி ஆர்வம் காட்டவில்லையாம். இந்த நிலையில், எடப்பாடியை சீமான் வானளாவப் புகழ்ந்திருப் பதால், எடப்பாடியுடன் அவர் கூட்டணிக்குத் தயாராகிவிட்டார் என்கிற டாக் அரசியல் வட்டாரத்தில் எதிரொலித்து வருகிறது.''”

"தமிழகத்துக்கு அனுப்பவேண்டிய கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு அனுப்ப மறுத்து அடம்பிடித்து வருகிறதே?''”

"ஒன்றிய அரசின் கல்வித் திட்டமான சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தை தமிழகத்தில் தி.மு.க. அரசு அமல்படுத்தி வருகிறது. இதற்காக 3,586 கோடி ரூபாயை திட்டக்குழு அனுமதித் திருக்கிறது. இதில் தமிழக அரசு 40 சத பங்குத் தொகையான 1,434 கோடி ரூபாயையும், ஒன்றிய அரசின் 60 சத பங்குத் தொகையாக 2,152 கோடி ரூபாயையும் ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என்பது விதி. இந்த நிலையில், இந்தக் கல்வித் திட்டத்துக்கான முதல் கட்டத் தவணையான 573 கோடி ரூபாயை ஒன்றிய அரசு ஜூன் மாதமே தமிழகத்திற்கு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், இப்போது வரை அதை அனுப்பாமல் அடம்பிடித்து வருகிறது. இதனால், சுமார் 15,000-க்கும் அதிகமான ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தைக் கூட பெறமுடியாத ஆபத்து ஏற்பட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத் தில் பயிலும் குழந் தைகளுக்கான கல்விக் கட்டணமும் இதனால் பாதிக்கப்படும் சூழல் உண்டாகியிருக்கிறது. இங்கே நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கையை அழித்து இந்தியைப் புகுத்தும், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி கொடுக்கப்படும் என்று அதிகாரம் காட்டி வருகிறது டெல்லி. இருந்தும் இந்த நிதியை வழங்குமாறு கேட்டு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.''”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். உயர்நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க, தகுதியான வழக்கறிஞர்களை தேர்வு செய்வதற்கு ஒரு கமிட்டியை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். அதில் ஆ.ராசா, பி.எஸ்.ராமன், என்.ஆர். இளங்கோ, வில்சன், ரவீந்திரன் ஆகியோர் இடம்பெற்றனர். இந்தக் குழுவும் தகுதியான வர்களைத் தேர்வு செய்து அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கான வழக்கறிஞர்களை பரிந்துரைத் தது. இந்த நிலையில் மேலிடத்துக்கு வேண்டப் பட்ட நீதியரசர் ஒருவர் சிபாரிசு செய்ததாக ஸ்டாலின் என்ற வழக்கறிஞரும் பரிந்துரைக்கப் பட்டார். ஆனால், சம்பந்தப்பட்ட நீதியரசர், ஆற்காடு வீராச்சாமியின் சீடர் என வர்ணிக்கப் படும் புருஷோத் என்ற வழக்கறிஞரைத்தான் சிபாரிசு செய்தாராம். ஆனால், அதை மறைத்துவிட்டு தனக்கு நெருக்கமான ஸ்டாலினை நீதியரசர் சிபாரிசு செய்ததாக, குழுவில் உள்ள ஒருவரே பொய் சொல்லி, காரியம் சாதித்திருக்கிறார். இந்த தகிடுதத்தம் முதல்வர் கவனத்துக்குப் போக, தவறு செய்த அந்த நபர் மீது கோபமான அவர், அந்த நபருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டாராம். இந்த நிலையில், முதல்வருக்கு எல்லாமுமாக இருக்கும் நபர் மூலம், அந்த நபர் காய் நகர்த்திய பிறகே அவர் சாந்த மானாராம். இதற்கிடையே, நீதியரசர் சிபாரிசு செய்த வழக்கறிஞர் புருஷோத்தும், விரைவில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுவார் என்கிறது தி.மு.க. வழக் கறிஞர்கள் தரப்பு.''”

__________

இறுதிச் சுற்று

s

கூட்டுறவு வங்கிகளில் வீட்டுக் கடன் பெறுவதற்காக, "கூட்டுறவு' எனும் செயலியை 29-ந்தேதி அறிமுகப்படுத்தி யிருக்கிறார் தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன். இந்த அறிமுக விழாவில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். கலந்துகொண்டார்

இந்த கூட்டுறவு செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக்கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர்க் கடன், நகைக்கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வழங்கி வருகிறது கூட்டுறவுத்துறை வங்கிகள். ஆனால், அத்தகைய கடன்களை பெறுவதில் நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் தமிழக மக்கள். சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டும், கடன்களை எளிதாக பெறும் வகையிலும் கூட்டுறவு செயலியை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த செயலி மூலம் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்து, 8.5% வட்டியில் கடன் பெறலாம். இந்த கடனை அடைப்பதற்கு 20 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

-இளையர்

nkn310824
இதையும் படியுங்கள்
Subscribe