பேருந்து நடத்துநர் என்றாலே பயணச்சீட்டுக்கு காசுவாங்கிக்கொண்டு மிச்ச சில்லறையே சரியாகக் கொடுக்கதாவர்கள் என்ற மனநிலைதான் பொதுவாக உள்ளது. பேருந்தில் ஒரு அபலைப் பெண் தொலைத்த செல்போன் மற்றும் பணத்துக்காக 80 கிலோமீட்டர் பயணித்த ஒரு அபூர்வ நடத்துநரின் கதை இது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நிதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவடிவேலின் மனைவி சந்திரா. இவரது கணவர் சுந்தரவடிவேல் சிங்கப்பூரிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குச் செல்வதற்காக விமானத்தில் சென்னை வந்ததிறங்கினார். சென்னை தேனாம்பேட்டையிலுள்ள ஹயாத் ஓட்டலில் கொரோனா தனிமைப் படுத்துதலில் தங்கவைக்கப்பட்ட அவர் மர்மமான முறையில் ஓட்டல் அறையில் இறந்துகிடந்தார். இறந்துபோன தனது கணவரின் இழப்புக்கு நீதிகேட்டு தனது கைக்குழந்தையுடன் சந்திரா போராடிவருகிறார்.
இதுசம்பந்தமான பிரேதப் பரிசோதனை அறிக்கை, காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் நகல், இறப்புச் சான்றிதழ் இப்ப
பேருந்து நடத்துநர் என்றாலே பயணச்சீட்டுக்கு காசுவாங்கிக்கொண்டு மிச்ச சில்லறையே சரியாகக் கொடுக்கதாவர்கள் என்ற மனநிலைதான் பொதுவாக உள்ளது. பேருந்தில் ஒரு அபலைப் பெண் தொலைத்த செல்போன் மற்றும் பணத்துக்காக 80 கிலோமீட்டர் பயணித்த ஒரு அபூர்வ நடத்துநரின் கதை இது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நிதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவடிவேலின் மனைவி சந்திரா. இவரது கணவர் சுந்தரவடிவேல் சிங்கப்பூரிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குச் செல்வதற்காக விமானத்தில் சென்னை வந்ததிறங்கினார். சென்னை தேனாம்பேட்டையிலுள்ள ஹயாத் ஓட்டலில் கொரோனா தனிமைப் படுத்துதலில் தங்கவைக்கப்பட்ட அவர் மர்மமான முறையில் ஓட்டல் அறையில் இறந்துகிடந்தார். இறந்துபோன தனது கணவரின் இழப்புக்கு நீதிகேட்டு தனது கைக்குழந்தையுடன் சந்திரா போராடிவருகிறார்.
இதுசம்பந்தமான பிரேதப் பரிசோதனை அறிக்கை, காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் நகல், இறப்புச் சான்றிதழ் இப்படிப் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவது சம்பந்தமாகச் சென்னைக்கும் ஊருக்கும் சந்திரா குழந்தையோடு அவ்வப்போது சென்றுவருகிறார். சமீபத்தில், அப்படி சென்னை சென்றுவிட்டு கடந்த 5-ஆம் தேதி இரவு திட்டக்குடி செல்லும் அரசு பஸ்சில் (பச.32- 4411) ஏறியுள்ளார். குழந்தையுடன் துணிமணிகள் வைக்கப்பட்ட பேக், செல்ஃபோனுடன் வந்துகொண்டிருந்தார்.
பஸ் ஊரை நெருங்கும்போது, இறங்குவதற்குத் தயாராக தன்னுடன் எடுத்துவந்த பேக் மற்றும் பொருட்களைச் சரிபார்த்துள்ளார். அப்போது, அவரது பேக்கிலிருந்த செல்ஃபோனும் பணம் 2,300 ரூபாயும் காணவில்லை. இதனால் பதறிப்போய் கதறியழுதுள்ளார் சந்திரா. அதைக் கண்ட பஸ் கண்டக்டர் சையத் தஸ்தகீர் ஷாஜகான், என்ன நடந்தது என்று கேட்டபோது, தன்னுடைய செல்ஃபோனையும் பணத்தையும் யாரோ எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.
அப்போது சந்திரா அமர்ந்திருந்த சீட்டுக்குப் பின்புறம் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் மீதுதான் சந்தேகமாக உள்ளது. அவன் சென்னை யில் ஏறி அரசூர் வரை டிக்கெட் எடுத்ததாகவும். ஆனால் மேல்மருவத்தூரிலேயே இறங்கிக்கொண்டதாகவும் ஏன் இங்கேயே இறங்குகிறாய் என்று கேட்டபோது, உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மறுநாள் ஊருக்குப் போவதாகக் கூறினான். அவனைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகுந்த சிரமம் என்று கண்டக்டர் சையத் கூறியுள்ளார்.
அப்போது, தனது கணவர் சிங்கப்பூரிலிருந்து வந்து ஹயாத் ஓட்டலில் மர்மமான முறையில் இறந்ததையும் அந்த செல்போனில் கணவர் உயிரோடு இருந்தபோது பேசிய வார்த்தைகளை வீடியோ காட்சிகளாய் பதிவுசெய்து வைத்துள்ளதையும் மேலும் அவரது புகைப்படங்களும் அதில் உள்ளதாகவும் பணம் போனாலும் பரவாயில்லை செல்ஃபோன் கிடைத்தால் போதும் என்று கண்ணீரோடு கூறியுள்ளார்.
அந்தப் பெண் நீங்கள்தானா உங்கள் பேட்டி படங்களை ஊடகங்களில் பார்த்துள்ளேன். என்று பரிதாபத்தோடு கேட்டுள்ளார் கண்டக்டர் சையத். ஊருக்குச் சென்றதும் அங்கிருந்து வேறொரு செல்போனிலிருந்து, திருடுபோன செல்போனுக்கு அவ்வப்போது தொடர்புகொண்டபடியே இருந்துள்ளார் சந்திரா. சில நேரம் செல்போன் அடித்தும் யாரும் எடுத்து பதில் கூறவில்லை.
மறுநாள் காலை 8 மணியளவில் மீண்டும் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த எண்ணிலிருந்து ஆண்குரல் பேசியுள்ளது. அப்போது சந்திரா அழுதபடியே எனது செல்போனை மட்டுமாவது கொடுத்து விடுங்கள் என்று கெஞ்சியுள்ளார். அதில் பேசிய அந்த ஆண் குரல் ""அம்மா கவலைப்படவேண்டாம், நான்தான் பஸ் கண்டக்டர் சையத் பேசுகிறேன். உங்கள் செல்போனை கொண்டுவந்துவிட்டேன். கருவேப்பிலங்குறிச்சி வந்து வாங்கிச்செல்லுங்கள்'' என்று கூறியுள்ளார்.
அதன்படி கருவேப்பிலங்குறிச்சி சென்ற சந்திராவிடம் செல்போனை கொடுத்ததோடு திருடுபோன 2,500 ரூபாய் பணத்தில் 1,300 ரூபாய் பணத்தையும் சையத் திருப்பிக்கொடுத்து நடந்ததையும் விவரித்தார். சந்திரா பஸ்ஸில் வருந்தியதால் மனமிரங்கிய சையத், பணிமுடிந்ததும் தொழுதூரிலிருந்து ஒரு வாட கைக் காரை எடுத்துக்கொண்டு, அரசூர் சென்றுள்ளார்.
அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் அந்த இளைஞனின் அடையாளத்தைக் கூறி விசாரிக்க... முதலில் தயங்கியவர்கள் பிறகு அந்த இளைஞன் வேறொரு பஸ்ஸில் வந்திறங்கி ஆட்டோவில் அவனது ஊரான ஆலப்பாக்கம் சென்றதாகக் கூறியதோடு, அந்த ஆட்டோ டிரைவர் அந்த இளைஞன் வீட்டை அடையாளம் காட்டினார். சுமார் 80 கி.மீ தூரம் பயணித்து அவரது வீட்டை அடைந்தோம்.
முதலில் எடுக்கவில்லை என்று மறுத்தவன், நான் போலீசில் புகார் கொடுக்கப்போகிறேன் என்று மிரட்டலாகக் கூறியதும் செல்போனையும் 1,300 ரூபாய் பணத்தையும் கொடுத்தார். மீதி ஆயிரம் ரூபாய் பணத்தைச் செலவழித்து விட்டதாகக் கூறினான். இதோ உனது செல் போனும் மீதிப் பணமும்'' என்று என்னிடம் கொடுத்தார்.
" "முன்பின் தெரியாத அந்த கண்டக்டர் சையத்தின் சகோதர மனப்பான்மையை எண்ணி கண்ணீர்விட்டு அழுதேன். என் கணவரின் நினைவாகப் பாதுகாத்துவரும் செல்போனை மீட்டுக்கொடுத்த அந்த கண்டக்டர் நூறாண்டு வாழவேண்டும்'' என்றார் சந்திரா.
-எஸ்.பி.எஸ்.