"கோவையில் கல்வி பயிலும் மாணாக்கர்களை குறிவைத்து வாட்ஸ் அப் குழு மூலம் விபச்சாரத் தொழில் செய்த நபர்களிடமிருந்து சிம் கார்டுகள், செல்போன்கள் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக 15-க்கும் அதிகமான பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்'' என கோவை மாநகர காவல்துறையின் வடக்கு துணை ஆணையர் தெரிவிக்க, நிம்மதியில் பெருமூச்செறிந்தனர் மாணவர்களின் பெற்றோர்கள்.
கல்வி, வணிகத்திற்கு தலைசிறந்த நகர் என்றால் அது கோவை என்பார்கள். அதே வேளையில், இங்கு கல்விபயிலும் மாணவர்களையும், தொழிலதி பர்களையும் குறிவைத்துத்தான் போதை மாத்திரை, ஊசி, கஞ்சா, இளம்பெண்கள் மற்றும் வெளிநாட்டு இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பது குறிப் பிடத்தக்கது.
இந்நிலை யில், கோவை மாநகரில் நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டுப் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக கோவை மாநகர காவல்துறைக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து விசாரணையில் களமிறங்கிய கோவை தனிப்படை காவல் துறையினர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா, கன்னியாகுமரி மாவட் டத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்ற இரண்டு ஏஜெண்ட்டுகளை கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசா ரணையில், இந்தியா முழுவதும் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி 117 ஏஜென்ட்டுகள் மூலம் விபச்சாரத் தொழில் செய்வது தெரியவந்தது. இதை யடுத்து கோவையிலுள்ள முக்கியமான 8 நட்சத்திர ஹோட் டல்கள
"கோவையில் கல்வி பயிலும் மாணாக்கர்களை குறிவைத்து வாட்ஸ் அப் குழு மூலம் விபச்சாரத் தொழில் செய்த நபர்களிடமிருந்து சிம் கார்டுகள், செல்போன்கள் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக 15-க்கும் அதிகமான பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்'' என கோவை மாநகர காவல்துறையின் வடக்கு துணை ஆணையர் தெரிவிக்க, நிம்மதியில் பெருமூச்செறிந்தனர் மாணவர்களின் பெற்றோர்கள்.
கல்வி, வணிகத்திற்கு தலைசிறந்த நகர் என்றால் அது கோவை என்பார்கள். அதே வேளையில், இங்கு கல்விபயிலும் மாணவர்களையும், தொழிலதி பர்களையும் குறிவைத்துத்தான் போதை மாத்திரை, ஊசி, கஞ்சா, இளம்பெண்கள் மற்றும் வெளிநாட்டு இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பது குறிப் பிடத்தக்கது.
இந்நிலை யில், கோவை மாநகரில் நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டுப் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக கோவை மாநகர காவல்துறைக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து விசாரணையில் களமிறங்கிய கோவை தனிப்படை காவல் துறையினர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா, கன்னியாகுமரி மாவட் டத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்ற இரண்டு ஏஜெண்ட்டுகளை கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசா ரணையில், இந்தியா முழுவதும் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி 117 ஏஜென்ட்டுகள் மூலம் விபச்சாரத் தொழில் செய்வது தெரியவந்தது. இதை யடுத்து கோவையிலுள்ள முக்கியமான 8 நட்சத்திர ஹோட் டல்களில், நீண்ட நாட்கள் தங்கியிருந்தவர்கள், வந்து சென்றவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இதனடிப்படையில் ரஷ்யா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விபச்சாரத்தில் ஈடுபட்ட 15 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத் துள்ளனர்.
இந்தியா முழுவதும் வாட்ஸ்அப் குழு மூலம் விபச்சாரத் தொழில் செய்த நபர்களிடமிருந்து சிம் கார்டுகள், செல் போன்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் வெளிநாட்டுப் பெண்களை வைத்து விபச்சாரத் தொழிலைச் செய்துவந்த கபீர் சிங் என்ற முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றோம்' என்கிறது கோவை மாநகர வடக்கு காவல்துறையின் செய்தியறிக்கை.
தனிப்படை அதிகாரி ஒருவரோ, "சமீபத்தில் ஆவாரம்பாளையம் சாலையில் இளைஞன் ஒருவனைத் தாக்கி ரூ.4,500 அபகரித்துக்கொண்டதாக புகார் வந்தது. இது, வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் ஸ்டாலினுக்குத் தெரியவர சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. விசாரணையில், இளைஞனை விபச்சாரத்திற்கு அழைத்து தாக்கி பணத்தைப் பறித்தது கன்னியாகுமரி மாவட்டத்தினைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், இந்திய அளவில் விபச்சாரத்திற்கென "ஆல் இந்தியா ஏஜென்ட்' என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து, அதன்மூலம் வெளிநாட்டு இளம்பெண்கள், வெளிமாநில பெண்களை இணைத்து விபச்சாரம் செய்துவந்தது தெரியவந்தது. அதுபோல் இவனுடைய பாஸ் சிக்கந்தர் பாஷா என்பதும் வெளியானது. அதனடிப்படையில் இருவரையும் கைதுசெய்து, 10 சிம்கார்டுகள், 16 மொபைல் போன், 7 வங்கிக் கணக்கு புத்தகங்கள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து 15-க்கும் அதிகமான பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். இவர்கள் இதில் மாத வருமானமாக மட்டும் 40 லட்சம் சம்பாதித்துள்ளனர். தொழில் தடையின்றித் தொடர உள்ளூர் ரவுடிகளுக்கு ஒன்றரை லட்சம், அதுபோக போலீசாருக்கு 5 லட்சம் மாமூல் கொடுத்திருக்கிறான் பாஷா. சிக்கந்தர் பாஷாவின் மாமூல் பட்டியலில் சில பத்திரிகையாளர்களும் அடங்குவர். பத்திரிகை யாளர்களுக்கு அனுப்பப்பட்ட ஜிபே தகவல்களை பாஷாவின் மொபைலில் போலீசார் கண்டறிந்துள்ளனர். இங்கே கோவையில் சதை வியாபாரத்தில் கிடைத்த லாபத்தில் பெங்களூருவில் தனியாக பிரியாணிக் கடையும் நடத்திவந்திருக்கிறான்'' என்றார் அவர்.
தேனி மாவட்டம் கம்பத்தினைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா மீது மாநகரில் துடியலூர், சரவணம்பட்டி, பீளமேடு, ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, காட்டூர், சாய்பாபா காலனி ஆகிய காவல் நிலையங்களிலும், மாவட்டத்தில் பேரூர், சூலூர் காவல் நிலையங்களிலும் மற்றும் சென்னை, ஈரோடு, திருப்பூர் ஆகிய பிற மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களிலும் விபச்சார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, கடந்த 4 வருடமாக தலைமறைவுக் குற்றவாளியாக மறைந்து வாழ்ந்தவர் சிக்கந்தர் பாஷா. தனிப்பட்ட 8 ஹோட்டல்களில் நிரந்தரக் கணக்கு வைத்துக்கொண்டு, வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் களை அந்த ஹோட்டலுக்கு வரவழைப்பது இவர்களின் வழக்கம். பொதுவாக இந்தியர்களுக்கு வெளிநாட்டுப் பொருட்களின் மீது இருக்கும் மோகம் வெளிப்படை. அது பொருட்களின் மீது மட்டுமல்ல… பெண்களின் மீதும் அப்படித் தான் என்பதைத் தெரிந்து கொண்டு, வெளிநாட்டுப் பாலியல் தொழிலாளிகளை சுற்றுலா என்ற போர்வையில் வரவழைத்து கல்லா கட்டியிருக்கின்றான். வருகின்ற கஸ்டமர்கள் இந்த ஹோட்டலில் ரூம் எடுத்துவிட்டு, அந்த ரூமின் எண்ணை/ சாவியை புகைப்படம் எடுத்து மீண்டும் அந்த வாட்ஸ் அப்பிற்கு அனுப்பினால், குறிப்பிட்ட பெண்கள் அந்த ரூமிற்கு செல்வார்கள். இதுதான் சிக்கந்தர் பாஷாவின் ஸ்டைல் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
"கமிஷனர் அறிவுறுத்தலின் பேரிலும், தனிப்படை டீமின் ஒத்துழைப்பிலும் இதனைச் செய்துள்ளோம். துவக்கத்தில் தான் வைத்திருந்த செல்போன் நிறுவனத்தால் நஷ்டம் ஏற்பட, தனது நண்பர் அசோக் மூலம் ஷேக்அப்துல்காதர்அறிமுகமாகி ஈரோட்டில் பாலியல் தொழில் செய்துவந்த கண்ணன் என்பவரிடம் பணிபுரிந்து வந்திருக்கின்றான் சிக்கந்தர் பாஷா. அதன்பின் தனியாகவே பாலியல் தொழில் செய்திருக்கின்றான். அப்பொழுதுதான் தனியார் வாடகை பைக் ஓட்டும் ஸ்டீபன்ராஜ் அறிமுகமாகி யிருக்கின்றான். அவனும் சிக்கந்தர் பாஷாவிடம் வேலைக்குச் சேர, அவனுடன் தமிழகம் முழுவதும் கவனித்துக்கொள்ள மேட்டுப் பாளையத்தைச் சேர்ந்த சிவா, டேனிஷ், ஊட்டியைச் சேர்ந்த யுவராஜ், ஸ்ரீகாந்த், திருச்சியைச் சேர்ந்த அசார், தர்மபுரியைச் சேர்ந்த கோபி ஆகிய 8 மேனேஜர்களை நியமித்து, 117 ஏஜெண்ட்கள் மூலம் "ஆல் இந்தியா ஏஜென்ட்' எனும் வாட்ஸ்அப் குழு அமைத்து விபச்சாரத் தொழிலை விரிவுபடுத்தியிருக்கின்றான். பாலியல் தொழிலுக்காக நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் இளம்பெண்கள்/வெளிநாட்டு இளம்பெண்களை பிடித்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வாட்ஸ்அப்குழுவில் இந்தோனேஷியா, ரஷ்யாவில் உள்ள ஏஜெண்டுகளும் அடங் குவர். மேலும், சிக்கந்தர் பாஷா இந்தியா முழுவதும் மாநிலம் வாரியாக ஏஜெண்டுகள் மூலம் பெண்கள்/வெளிநாட்டு இளம்பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கு மூளையாக செயல்பட்டுவந்திருக்கின்றான் என்பது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 4 மாதங்களாக சிக்கந்தர் பாஷாவின் வாட்ஸ்அப் எண்ணின் செயல்பாடுகளைக் கண்டறிந்து அவனை கைது செய்துள்ளோம். அத்தோடு இல்லாமல் அவனுக்கு மேல்மட்டத்தில் இருக்கும் கபீரையும் தேடி வருகின்றோம்'' என்கின்றார் மாநகர் வடக்கு சட்டம் ஒழுங்கின் துணை ஆணையர் ஸ்டாலின்.
சபலத்தால் தடுமாறும் மாணக்கர்களை, தொழிலதிபர்களை மீட்ட காவல்துறை யினருக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டு குவிந்து வருகின்றது.
படங்கள்: விவேக்