ராங்கால் மோதல்! கறி விருந்துக்கு 7 ஆயிரம் ஆடு ரெடி! உன் வேலையை நீ காட்டினா நானும் என் வேலையை காட்டுவேன்! அ.தி,.மு.க.வில் ஊழல் முதலைகள்! அமித்ஷாவிடம் குமுறிய அண்ணாமலை

dd

"ஹலோ தலைவரே, பரபரப்பான சூழலில் தமிழக சட்டமன்றம் கூடியிருக்கு.''”

"இதில் காவிரி விவகாரம் பூதாகர மாகக் கிளம்பும் போலிருக்கே?''

"உண்மைதாங்க தலைவரே, இந்தக் கூட்டத்தில், காவிரி பிரச்சனை உள்பட பல்வேறு விவகாரங்களை எழுப்ப அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டம் போட்டிருக்கின்றன. இதற்கிடையே, காவிரி விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் வலிமையான தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கு. காவிரி நடுவர் மன்றம், தனது தீர்ப்பின் மூலம், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளைக் கையாளும் அதிகாரத்தை காவிரி ஆணையத் துக்கு வழங்கியது. ஆனால், ஒன்றிய அரசோ காவிரி ஆணையத்தை அமைக்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு, காவிரி ஆணையத்தை அமைத்தது. இருந்தும் அணை களைக் கையாளும் அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்படவில்லை. அதனால் அதிகாரமற்ற நிலையில் இருக்கும் ஆணையத்தால், தமிழகத்திற்கான நீரைப் பெற்றுத் தரமுடியாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் சட்டமன்றம் கூடியிருக்கு.''”

"அது சரிப்பா, காவிரி ஆணையத்தை அதிகாரம் மிக்கதாக அமைத்திருந்தால், அது நமக்கான தண்ணீரைக் கொடுக்க வைத் திருக்குமே?''”

"ஆமாங்க தலைவரே, அதனால்தான், காவிரி ஆணையத்துக்கு, காவிரி நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அணைகளைக் கையாளும் அதிகாரத்தை வழங்க வேண்டும்னு, ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்ற தி.மு.க. அரசு முன்வரவேண்டும் என்று பா.ம.க, நிறுவனரான டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் வைத் திருக்கிறார். மேலும், இப்படி யொரு தீர்மானம் நடைமுறைக்கு வர, சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். பா.ம.க. தரப்பின் இந்தக் கோரிக்கையை கர்நாடக அரசும், மோடி தலைமையிலான ஒன்றிய அரசும் உற்று நோக்குகின்றன. இப்படி ஒரு தீர்மானத்தை சட்டப் பேர

"ஹலோ தலைவரே, பரபரப்பான சூழலில் தமிழக சட்டமன்றம் கூடியிருக்கு.''”

"இதில் காவிரி விவகாரம் பூதாகர மாகக் கிளம்பும் போலிருக்கே?''

"உண்மைதாங்க தலைவரே, இந்தக் கூட்டத்தில், காவிரி பிரச்சனை உள்பட பல்வேறு விவகாரங்களை எழுப்ப அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டம் போட்டிருக்கின்றன. இதற்கிடையே, காவிரி விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் வலிமையான தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கு. காவிரி நடுவர் மன்றம், தனது தீர்ப்பின் மூலம், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளைக் கையாளும் அதிகாரத்தை காவிரி ஆணையத் துக்கு வழங்கியது. ஆனால், ஒன்றிய அரசோ காவிரி ஆணையத்தை அமைக்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு, காவிரி ஆணையத்தை அமைத்தது. இருந்தும் அணை களைக் கையாளும் அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்படவில்லை. அதனால் அதிகாரமற்ற நிலையில் இருக்கும் ஆணையத்தால், தமிழகத்திற்கான நீரைப் பெற்றுத் தரமுடியாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் சட்டமன்றம் கூடியிருக்கு.''”

"அது சரிப்பா, காவிரி ஆணையத்தை அதிகாரம் மிக்கதாக அமைத்திருந்தால், அது நமக்கான தண்ணீரைக் கொடுக்க வைத் திருக்குமே?''”

"ஆமாங்க தலைவரே, அதனால்தான், காவிரி ஆணையத்துக்கு, காவிரி நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அணைகளைக் கையாளும் அதிகாரத்தை வழங்க வேண்டும்னு, ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்ற தி.மு.க. அரசு முன்வரவேண்டும் என்று பா.ம.க, நிறுவனரான டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் வைத் திருக்கிறார். மேலும், இப்படி யொரு தீர்மானம் நடைமுறைக்கு வர, சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். பா.ம.க. தரப்பின் இந்தக் கோரிக்கையை கர்நாடக அரசும், மோடி தலைமையிலான ஒன்றிய அரசும் உற்று நோக்குகின்றன. இப்படி ஒரு தீர்மானத்தை சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? என்ற எதிர்பார்ப்புதான் பரவலாக எழுந்திருக்கிறது.''”

"அ.தி.மு.க.வில் மாஜி மந்திரி வேலுமணியின் தனி ஆவர்த்தனம், எடப்பாடியைப் பதட்டமாக்கி இருக்கிறதே?''”

tt

"ஆமாங்க தலைவரே, அங்கே கட்சியின் லகானைக் கைப்பற்றும் சந்தர்ப்பத்திற்காக மாஜி மந்திரியான வேலுமணி காத்திருக்கிறாராம். இதற்காக கட்சியின் நிர்வாகிகள் அனைவரையும் தன் ஆதரவாளர்களாக மாற்ற அவர் பல்வேறு ஏற்பாடுகளையும் செய்து வருகிறாராம். இதற்கிடையே, தனது சகோதரர் அன்பரசனின் மகன் விவேக் திருமணத்தை, தன் செல்வாக்கைக் காட்டும் நிகழ்ச்சியாக மாற்ற, தடபுடலாக ஏற்பாடு செய்துவருகிறார். இந்தத் திருமணத்திற்கு வருகிறவர்களுக்காக கோவைப் பகுதியில் நான்கு இடங்களில் மெஹா விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. குனியமுத்தூரில் கறி விருந்து படைக்க 7 ஆயிரம் ஆடுகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஈச்சனாரியில் வி.ஐ.பி.க்களுக்கு ஸ்பெஷல் விருந்து தயார் செய்யப்படுகிறதாம். இந்தத் திருமணத்திற்கு கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் அனைவரையும் அழைத்திருக்கிறார் வேலுமணி. இது தவிர தனது டெல்லி செல்வாக்கைக் காட்ட அமித்ஷா மகன் ஜெய்ஷா உள்ளிட்ட பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களையும் அவர் அழைத்திருக்கிறார். இவரது திட்டத்தை அறிந்த எடப்பாடி, வேலுமணியைத் தொடர்புகொண்டு, ’"நீ என்னவெல்லாம் திட்டம் போடுகிறாய் என்பது எனக்குத் தெரியும். ஓ.பி.எஸ்.சை நீ ரகசியமாக சந்தித்ததும் தெரியும். நீ உன் வேலையைக் காட்டினால், நான் என் வேலையைக் காட்டுவேன். அதை உன்னால் தாங்கமுடியாது'’என்று எச்சரித்திருக்கிறாராம். எனினும் வேலுமணியின் நடவடிக்கைகள் எடப்பாடியைப் பதட்டப்படுத்தி வருவதாக அ.தி.மு.க.வினரே சொல் கிறார்கள்.''”

"அ.தி.மு.க. எதிர்ப்பு விவ காரத்தில் அண்ணாமலை டெல்லியை கூல் பண்ணிவிட்டார்னு தகவல் வருதே?''”

rr

"டெல்லி சென்ற அண்ணாமலையை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்தது, தமிழக பா.ஜ.க,.வினர் மத்தியில் பரபர டாக்காக இருந்துவரும் நிலையில், அண்ணாமலை அமித்ஷா வுடன் போனில் பேசிய விபரம் இப்போது தெரியவந்திருக்கிறது. தனது உரையாடலின்போது அண்ணாமலை "அ.தி.மு.க. உறவு முறிய நான் காரணம் என்று என் மீது குற்றம் சாட்டப் படுகிறது. தமிழகத்தில் தி.மு.க.வை எதிர்ப்பது போல் அ.தி,.மு.க.வையும் நாம் எதிர்த்தால்தான் நம் கட்சியை வளர்க்க முடியும். எனக்கும் அ.தி. மு.கவினருக்கும் தனிப்பட்ட எந்தப் பகையும் இல்லை. தி.மு.க.வின் ஊழலைப் பேசும் நாம், அவர்களைவிட பெரிய ஊழல் முதலைகளான அ.தி.மு.க.வினரைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், நம் நம்பகத்தன்மை கேள்விக்குறி யாகும்'’ என்றெல்லாம் அமித்ஷாவிடம் சொன்னதோடு, ஊழல் ஆதாரங்களையும் அவர் பார்வைக்கு அனுப்பிவைத்தாராம். இதன்பின் அண்ணாமலை மீதான டெல்லியின் கோபம் கொஞ்சம் தணிந்திருப்ப தாகவும் சொல்கிறார்கள்.''’

"மகளிர் உரிமைத்தொகையை வழங்கு வதில் அரசுக்கு நிதி நெருக்கடி என்கிறார் களே?”

"தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்தை இந்த செப்டம்பரில் தொடங்கியது. இந்தத் திட்டத்தின்படி மாதந்தோறும் 1 கோடி பேருக்கு பதில் 1 கோடியே 60 லட்சம் பேருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வீதம் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. தகுதியுள்ள பலருக்கும் இந்தப் பணம் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் அதனை சரிசெய்தும் வருகிறார்கள். அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு இந்த நடப்பு நிதியாண்டில், மார்ச் மாதம் வரைக்குமாக 7,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது பயனாளிகளின் எண்ணிக்கை 1.6 கோடியாக உயர்ந்துவிட்டதால் கூடுதலாக உள்ள 60 லட்சம் பயனாளிகளுக்கும் பணம் கொடுக்க வேண்டி இருப்பதால் அரசுக்குத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல்வேறு துறை களில் இருந்த பணத்தையும் எடுத்து, இந்த திட்டத்துக்காக செலவிட ஆரம்பித்திருக் கிறது தி.மு.க. அரசு. இதுவும் போதாது, பய னாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தவேண் டும் என்கிற கோரிக்கைகள் எழுந்து வருவ தால், நிதிக்கு என்ன செய்யலாம் என்ற ஆலோ சனையில் தி.மு..க. அரசு இருக்கிறதாம்.''”

"ஜெ’வின் போயஸ்கார்டன் குறித்த பிரச்சினை ஒன்றும் பரபரப்பை ஏற்படுத்துதே?''”

"ஆமாங்க தலைவரே, ஜெ.வின் அண்ணன் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு இடையில், ஜெ.வின் போயஸ்கார்டன் வீட்டை எப்படிப் பிரித்துக்கொள்வது? யாருக்கு கீழ்த் தளம்? யாருக்கு மேல் தளம்? என்பது குறித்த மோதல் ஏற்பட்டிருக்கிறதாம். கீழ்த் தளத்தை தீபா பிடித்துக்கொண்டதால்... தீபக், சசிகலாவிடம் பஞ்சாயத்துக்குச் சென்றாராம். இதையறிந்த தீபா, இது குறித்து பஞ்சாயத்து செய்ய சசிகலா யார்? என்று டென்ஷன் ஆகிவிட்டாராம். இவர்களுக்கு இடையிலான இந்த மோதல் தற்போது உச்சமடைந்திருப்பதாக அவர்கள் தரப்பில் இருந்தே செய்தி கசிகிறது.''’

"நானும் என் காதுக்கு வந்த தகவலைப் பகிர்ந்துக்கறேன். சென்னையில் உள்ள செக்மேட் பாரில் போதைப்பொருள் சப்ளை ஆவது குறித்து, அண்மையில் நடந்த காவல்துறை மாநாட்டில் முதல்வரே சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார். அந்த பாரில் ஏற்பட்ட மோதல் குறித்தும் நம் நக்கீரனில் செய்தி வெளியானது. இதன் பிறகே அந்த பாரை மாநகர போலீஸ் இழுத்து மூடி யிருக்கிறது. மோதலின்போது தாக்குதலுக்கு ஆளானவர்கள், முதல்வர் வரை புகாரைக் கொண்டுபோயும், தாக்குதலை நடத்திய கிரி என்பவர் மீது கொலைமுயற்சி வழக்கைப் பதிவுசெய்ய வேண்டிய போலீஸ், அவர் முன்ஜாமீன் பெற அவகாசம் கொடுக் கும் வகையில் விவகாரத்தை இழுத் தடித்ததாம். அந்த நபர் முன்ஜாமீன் பெற்றதை உறுதிசெய்த பிறகே அவர் மீது வழக்கைப் பதிவு செய்தார்களாம்.''

___________

இறுதிச்சுற்று

ff

ரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் தமிழக அரசின் மழைக்கால சட்டமன்றம் 9-ந் தேதி காலையில் கூடியது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ். உள்பட அனைவரும் கலந்துகொண்டனர். கூட்டம் துவங்கியதும், முன்னாள் உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து, கேரள முதல்வர் உம்மன்சாண்டி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றினார் சபாநாயகர் அப்பாவு. கேள்வி நேரத்தின்போது, "அத்திக்கடவுலி அவிநாசி திட்டம் எப்போது முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்' என்று செங்கோட்டையன் எழுப்பிய கேள்விக்கு, "இந்த திட்டம் முழுமையாக முடிந்துவிட்டது. திட்டத்தை தொடங்குவதற்கு காலிங் கராயன் அணையிலிருந்து 1.5 டி.எம்.சி. தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். அணையில் தண்ணீர் இல்லாததால் திட்டத்தை தொடங்க முடியவில்லை. தண்ணீர் கிடைத்ததும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார்''” என்று பதிலளித்தார் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன். அப்போது செல்லூர் ராஜு பேச, "அணைகளில் தண்ணீர் வீணாகாமல் இருக்க தெர்மாகோல் போட்டு மூடி பத்திரமாக வைத் திருக்கிறோம்'' என துரைமுருகன் நக்கல்செய்ய சிரிப்பொலியால் சபை அதிர்ந்தது. காவிரி விவகாரம் குறித்து தனித்தீர்மானத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றவேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்திருந்த நிலையில், ஒன்றிய அரசை வலியுறுத்தி அது குறித்த தனித் தீர்மானத்தை கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின். இதன்மீது அனைத்துக் கட்சிகளின் உறுப் பினர்கள் பேசினர். பா.ஜ.க. உறுப்பினர் வானதி, "இது இரட்டை நிலைப்பாடு' என பேசியபோது அதனை இடைமறித்து வானதிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். இருந்தும் பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது. உறுப்பினர்களின் பெரும் பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. இந்த கூட்டத் தொடரில் 2023-24 நிதியாண்டுக் கான கூடுதல் செலவினங் களுக்கான மானிய கோரிக்கை களும் தாக்கல் செய்யப்படவுள்ளன. பேரவை கூடுவதற்கு முன்பாக, மு.க.ஸ்டாலினை கோட்டையில் சந்தித்த பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்தை நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தியிருக்கிறார்.

-இளையர்

nkn111023
இதையும் படியுங்கள்
Subscribe