ராங்கால் 7 கட்டம் எம்.பி. தேர்தல்! தடுமாறும் இந்தியா கூட்டணி! தி.மு.க.வில் புகையும் கொங்கு அரசியல்! போயஸ்கார்டனில் சசி! அதிர்ச்சியில் எடப்பாடி!

ff

"ஹலோ தலைவரே, இந்தியத் தேர்தல் ஆணையமே பரபரப்பில் மூழ்கி இருக்கிறது.''”

"ஆமாம்பா, நாடாளுமன்றத் தேர்தல் தேதியை அவங்க அறிவிச்சாகணுமே?''”

"ஆமாங்க தலைவரே, மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்னு தெரியுது. அதற்கான ஆயத்தப் பணிகள் தான் இப்ப விறுவிறுப்பாக நடந்துக்கிட்டு இருக்கு. நாடாளுமன்றத் தேர்தலை வழக்கமாக பல கட்டங்களாக நடத்தும் தேர்தல் ஆணையம், இந்தமுறை ஏழு கட்டங்களாக தேர்தலை நடத்தத் தீர்மானிச்சிருக்காம். எனினும், தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள தொகுதிகளுக்கான தேர்தலை முதல் கட்டத்திலேயே ஒரே மூச்சில் நடத்திவிடலாமா? என்ற ஆலோசனையும் நடக்கிறதாம். அதிகாரிகளில் சிலர் மட்டும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தலை கடைசிக் கட்டத்தில் நடத்தலாம் என்று சொல்லி வருகிறார்களாம். இதுகுறித்த இறுதிமுடிவு விரைவில் எட்டப்படும்னு சொல்றாங்க. ஆக மொத்தத்தில் நாட்டின் தலை விதியைத் தீர்மா னிக்கும் வாய்ப் பை வாக்காளர் விரைவில் பெற இருக்கிறார்கள்.''”

r

"இந்த நேரம் பார்த்து, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் சலசலப்பு கேட்குதேப்பா?''

"மோடி அரசை வீழ்த்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’வலிமையாக இருப்பதுபோல் வெளியே தெரிந்தாலும், அவர்களுக்குள் நிறைய கருத்து முரண்பாடுகளும் ஈகோ பிரச்சினைகளும் இருக்கு. இது குறித்து 2 மாதங்களுக்கு முன்பே, ’இந்தியா கூட்டணிக்குள் சிக்கல்’ என்ற தலைப்பில் நம் நக்கீரன், தனி செய்திக் கட்டுரையையே வெளி யிட்டது. அதன்படிதான் இப்போதும் நிலைமை நீடிக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடனும், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடனும் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும் உடன்பாடு எட்டப்படவில்லை.''”

"ஆமாம்பா நிலைமை இன்னும் மோசமா போய்க்கிட்டு இருக்குதே?''

"ஆமாங்க தலைவரே. இதனால், ’இந்தியா கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் எங்களுக்கு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. நாங்கள் தனிச்சுதான் போட்டியிடப் போறோம்னு மம்தா அறிவித்து அனை வருக்கும் ஷாக் கொடுத் திருக்கார். அதேபோல, ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாபில் நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம். அங்கே காங்கிரஸூடன் எங்களுக்கு உறவு இல்லைன்னு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், காங்கிரசுக்கு பெரிய அளவில் முக்கியம் தர

"ஹலோ தலைவரே, இந்தியத் தேர்தல் ஆணையமே பரபரப்பில் மூழ்கி இருக்கிறது.''”

"ஆமாம்பா, நாடாளுமன்றத் தேர்தல் தேதியை அவங்க அறிவிச்சாகணுமே?''”

"ஆமாங்க தலைவரே, மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்னு தெரியுது. அதற்கான ஆயத்தப் பணிகள் தான் இப்ப விறுவிறுப்பாக நடந்துக்கிட்டு இருக்கு. நாடாளுமன்றத் தேர்தலை வழக்கமாக பல கட்டங்களாக நடத்தும் தேர்தல் ஆணையம், இந்தமுறை ஏழு கட்டங்களாக தேர்தலை நடத்தத் தீர்மானிச்சிருக்காம். எனினும், தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள தொகுதிகளுக்கான தேர்தலை முதல் கட்டத்திலேயே ஒரே மூச்சில் நடத்திவிடலாமா? என்ற ஆலோசனையும் நடக்கிறதாம். அதிகாரிகளில் சிலர் மட்டும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தலை கடைசிக் கட்டத்தில் நடத்தலாம் என்று சொல்லி வருகிறார்களாம். இதுகுறித்த இறுதிமுடிவு விரைவில் எட்டப்படும்னு சொல்றாங்க. ஆக மொத்தத்தில் நாட்டின் தலை விதியைத் தீர்மா னிக்கும் வாய்ப் பை வாக்காளர் விரைவில் பெற இருக்கிறார்கள்.''”

r

"இந்த நேரம் பார்த்து, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் சலசலப்பு கேட்குதேப்பா?''

"மோடி அரசை வீழ்த்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’வலிமையாக இருப்பதுபோல் வெளியே தெரிந்தாலும், அவர்களுக்குள் நிறைய கருத்து முரண்பாடுகளும் ஈகோ பிரச்சினைகளும் இருக்கு. இது குறித்து 2 மாதங்களுக்கு முன்பே, ’இந்தியா கூட்டணிக்குள் சிக்கல்’ என்ற தலைப்பில் நம் நக்கீரன், தனி செய்திக் கட்டுரையையே வெளி யிட்டது. அதன்படிதான் இப்போதும் நிலைமை நீடிக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடனும், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடனும் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும் உடன்பாடு எட்டப்படவில்லை.''”

"ஆமாம்பா நிலைமை இன்னும் மோசமா போய்க்கிட்டு இருக்குதே?''

"ஆமாங்க தலைவரே. இதனால், ’இந்தியா கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் எங்களுக்கு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. நாங்கள் தனிச்சுதான் போட்டியிடப் போறோம்னு மம்தா அறிவித்து அனை வருக்கும் ஷாக் கொடுத் திருக்கார். அதேபோல, ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாபில் நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம். அங்கே காங்கிரஸூடன் எங்களுக்கு உறவு இல்லைன்னு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், காங்கிரசுக்கு பெரிய அளவில் முக்கியம் தர வேண்டாம் என தி.மு.க. தலைமைக்கு தகவல் பாஸ் செய்திருக்கிறார் மம்தா. இதனால் கடுப்பான காங்கிரஸோ, "இந்தியா கூட்டணிக்குள் மோடியின் ஸ்லீப்பர் ஷெல்லாக மம்தா இயங்கி வந்திருக்கிறார்'’என்று அணுகுண்டை காட்டமாய் வீசி இருக்கிறது. இப்படிப்பட்ட களேபரங்கள் இந்தியா கூட்டணியில் நடப்பதைப் பார்க்கும், ’மாற்றத்தை விரும்பும்’ வாக்காளர்கள் கவலை அடைஞ்சிருக்காங்க.'' ”

"நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, இங்குள்ள தி.மு.க. வும், அ.தி.மு.க.வும் தேர்தல் பணிகளுக்கான குழுக்களை அமைத்திருக்கிறதே?''’

dd

"உண்மைதாங்க தலைவரே, இந்த இரண்டு கட்சிகளுமே பல்வேறு குழுக்களை நியமித்து, பரபரப்பாக இயங்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, கூட்டணி பேச்சு வார்த்தைக் குழு, தொகுதி பங்கீட்டுக் குழு என பல்வேறு குழுக்களை இரண்டு கட்சிகளும் நியமித்துள்ளன. அ.தி.மு.க.வில் அமைக்கப்பட்ட இந்த குழுக்களில், கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த செங்கோட்டையன், பொன்னையன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி ஆகிய 5 பேருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இது அங்கே மற்ற சமூகத்தினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கு. அதே சமயம், தி.மு.க.வில் அமைக்கப்பட்ட குழுக்களில், கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் மருந்துக்கக் கூட வாய்ப்புத் தரப்படவில்லை.''”

"இதனால் அந்த சமூகத்தினர் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வருகிறதே?''”

"கொங்கு மண்டல தி.மு.க.வில் உள்ள கொங்கு வேளாளர்கள் மத்தியில் இது குறித்த ஆதங்கமும் அதிருப்தியும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் காலத்தில் கொங்கு வேளாளர் சமூகத்தைப் புறக்கணிக்கலாமா? என்று சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏக்கக்குரல்கள் எதிரொலித்தபடி இருக்கின்றன. ஏற்கனவே, கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், தி.மு.க. அமைத்த குழுக்களில் கட்சியைச் சேர்ந்த கொங்கு வேளாள கவுண்டர்களுக்கு வாய்ப்புத் தரப்பட்டால்தானே அங்கே அரசியல் செய்ய முடியும் என்று கேட்கிறார்கள். இதுபற்றிய ஆதங்கப் புகார்கள் அறிவாலயம்வரை சென்றிருக்கிறது.''”

"அது சரிப்பா, தி.மு.க. இந்த மாதமே தன் கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்கப் போகுதே?''”

"இந்த மாதம் 28ஆம் தேதி முதல், தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளி டம் தொகுதிப் பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தையை நடத்த இருக்கிறது. டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க.வின் பேச்சுவார்த்தைக் குழு, முதலில் காங்கிரஸை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 10 தொகுதிகளை காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கியிருந்தது. இந்த முறை கூடுதலாக 5 தொகுதிகளை எதிர்பார்க்கிறது காங்கிரஸ். ராகுல் காந்தியும், நமக்கு 15 தொகுதிகளை கேட்டுவாங்குங்கள் என்று, தங்கள் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் அஜோய்குமாரிடம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறாராம். இதற்கு ஏற்ப, தாங்கள் போட்டியிட விரும்பும் 15 தொகுதிகளின் பட்டியலையும் காங்கிரஸ் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறதாம். ஆனால் தி.மு.க.வோ காங்கிரஸுக்கு 6 சீட்டை மட்டும் ஒதுக்குவது என்கிற தீர்மானத்தில் இருக்கிறதாம். இதனால் இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் உரசல் வராதா என்ற எதிர்பார்ப்போடு கவனிக்கிறது அ.தி.மு.க.''”

"இந்தமுறை புதுவையை காங்கிரஸுக்கு ஒதுக்கக்கூடாது என்று தி.மு.க.வினர் கொடிபிடிக் கிறார்களே?''”

"காங்கிரசுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையைத் தொடங்க இருக்கும் நிலையில், புதுச்சேரியை இந்த முறையும் காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. நாம்தான் நிற்கவேண்டும் என்று புதுவை தி.மு.க.வினர் கொடி பிடிக்கிறார்கள். புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் 1967-ல் இருந்து 2019 வரை 11 முறை தேர்தல் நடந்திருக்கிறது. இவற்றில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் தலா ஒருமுறை வெற்றிபெற்றிருக்கின்றன. மற்ற 8 முறை காங்கிரஸ்தான் கூட்டணிக் கட்சிகளிடம் சீட்டை வாங்கி ஜெயித்திருக்கிறது. இந்த 8-ல் காங்கிரசிலிருந்து பிரிந்துசென்ற என்.ஆர். காங்கிரஸ் ஒருமுறை ஜெயித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, தொகுதியை இந்தமுறையும் காங்கிரஸுக்கே ஒதுக்கினால், தொகுதியை அந்தக் கட்சிக்கே பட்டா போட்டுக்கொடுத்தது போலாகிவிடும் என்கிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள். இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில் தான் நிற்க விரும்புவதாக, புதுவை தி.மு.க. அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா, ஆர்வமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்.''”

"ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் பங்களாவைக் கைப்பற்ற முடியாவிட்டாலும், அதன் அருகிலேயே பங்களா கட்டி குடிபெயர்ந் திருக்கிறாரே சசிகலா?''

sasi

"உண்மைதாங்க தலைவரே, ஜெ.வின் மறைவிற்குப் பிறகு, அவரைப் போலவே அவரது போயஸ்கார்டன் பங்களாவில் அமர்ந்து, அரசியல் தர்பாரை நடத்தவேண்டும் என்று கனவு கண்ட சசிகலாவின் கனவு பலிக்கவில்லை. அந்த பங்களா, நீதிமன்றத்தால், ஜெ.வின் வாரிசு களுக்குப் போய்விட்டது. அதனால் ஏமாற்ற மடைந்த சசிகலா, அந்த பங்களா அருகிலேயே ஒரு இடத்தை வாங்கி, அங்கே ஒரு பங்களாவைக் கட்டிவந்தார். அது குறித்து விசயங்களை நம் நக்கீரன்தான் முதன்முதலில் வெளிப்படுத்தியது. அந்த பங்களாவில்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு சசிகலா, கிரஹப்பிரவேசம் நடத்திக் குடி போயிருக்கிறார். அதேபோல், ஜெ.வின் போயஸ் கார்டனை நினைவில்லமாக மாற்றமுடியாததால், கொடநாடு பங்களாவில் ஜெ.வுக்கான நினைவு மண்டபத்தை உருவாக்கப் போவதாகவும் சசிகலா அறிவித்திருக்கிறார். சசிகலாவின் ஜெ.’தொடர்பான அதிரடிகள் எடப்பாடியை எரிச்சலடைய வைத்திருக்கிறது. சசிகலாவுக்கு பா.ஜ.க. அளித்து வரும் ஆதரவும், அவரையும் வேலுமணியையும் வைத்து அ.தி.மு.க.வை உடைக்க முயலும் பா.ஜ.க.வின் சதியும் எடப்பாடியை ஆத்திரப்படுத்தி இருப்பதால், ‘ராமர் கோயிலைக் கட்டித் திறப்பதால் எல்லாம் மோடிக்கு ஓட்டுக்கள் விழாது’ என்று எடப்பாடி கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறாராம்.''”

"காவல்துறை பெண் அதிகாரி ஒருவருக்கு உள்துறைச் செயலாளர் மெமோ கொடுத்த விவகாரம் பரபரப்பாகி வருகிறதே?''”

"காவல்துறையில் பொருளாதாரக் குற்றப்பிரிவின் ஐ.ஜி.யாக உள்ள சத்தியப்பிரியா வுக்கு, உள்துறைச் செயலாளரான அமுதா தற்போது மெமோ கொடுத்த விவகாரம், அரசுத்தரப்பில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த சத்தியப்பிரியா, இதற்கு முன்பு போலீஸ் அகாடமியில் டி.ஐ.ஜி.யாக இருந்தார். அப்போது இரண்டு எஸ்.பி.க்களை அவர் மோசமாக நடத்தியதாகப் புகார் எழுந்தது, அதேபோல் அகாடமிக்குச் சொந்தமான கார்களை தனது உறவினர்களின் பயணத்திற்கு பயன்படுத்தியதாக வும், அப்போது ஏற்பட்ட விபத்தை அவர் மறைத்ததாகவும் கூட குற்றச்சாட்டு எழுந்தது. இதோடு கையாடல் புகாரும் அவர் மீது விழுந்தது. எனினும், அப்போதிருந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபுவின் ஆதரவோடு அவர் திருச்சி கமிஷனராகி, இப்போது பொருளாதாரக் குற்றப்பிரிவின் ஐ.ஜி.யாகவும் வந்து அமர்ந்திருக்கிறார். இத்தனை நாளாய் நிலுவையில் இருந்த அவர் மீதான குற்றச்சாட்டுக் கோப்புகளை, தற்போதைய டி.ஜி.பி. சங்கர் ஜிவால், உள்துறைச் செயலாளர் அமுதா வுக்கு அனுப்பிவைக்க, இதன் அடிப்படையிலேயே சத்தியப்பிரியாவுக்கு மெமோ கொடுத்திருக்கிறார் அமுதா.''

"சரிதான், சுவாரஸ்யமாகத்தான் போகுது கதை.''”

"ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு ஒரு பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி கொடுத்திருக்கும் இந்த மெமோ விவகாரம், பலராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. எனினும் இந்த மெமோ வெல்லாம் என்ன ஆகும்? என்று விசாரித்தபோது, இதுபோன்ற துறை ரீதியான நடவடிக்கைகளின் பாதிப்புகள் ஒருவருட காலத்தில் முடிந்துவிடும், அதே நேரம் இதுபோன்ற புகார்கள் நீதிமன்றத்தில் நிரூபணமாகி தண்டனைக்கு ஆளானால்... சம்பந்தப்பட்டவர்களின் பதவி உயர்வு, இன்கிரிமெண்ட் உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டுவிடும் என்கிறார்கள். ஆயினும், விசாரணைக் கைதியின் பல்லைப் பிடுங்கி, சர்ச்சையில் சிக்கிய அதிகாரி பல்வீர் சிங் மீதான நடவடிக்கைகள் அண்மையில் ரத்தாகிவிட்டது. குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பலரும் பணியில் தொடர்கிறார்கள். அதேபோல் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் சிக்கிய ஒரு அதிகாரிக்கு, அண்மையில் டி.ஜி.பி. அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. காவல் துறையில் லட்சணம் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்கள் துறையைச் சார்ந்தவர்களே.''”

stalin

"ஒரு முக்கியமான தகவலை நானும் பகிர்ந்துக்கறேன். முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகள் டீமோடு 28ஆம் தேதி வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்கிறார். அவருடன் அவர் துணைவியார் துர்காவும் செல்கிறார். இடையில் அமைச்சர் உதயநிதியும் அங்கே சென்று வருவார் என்றும் சொல்லப்படுகிறது. முதல்வரின் இந்தப் பயணத்தை நெறிப்படுத்த தனியாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் நியமிக்கப்பட்டிருக்கிறார். 28 ஆம் தேதி கிளம்பி பிப்ரவரி 7ஆம் தேதி திரும்பும் முதல்வரின் இந்த டூர் பட்டியலில் ஸ்பெயின் நாடும் இடம்பெற்றிருக்கிறது. வெளிநாடு செல்லும் முதல்வர் 30ஆம் தேதி அங்கு எந்த அப்பாயின்ட்மெண்ட்டும் வைத்துக்கொள்ள வில்லை என்கிறார்கள். காரணம், அவர் அன்றைய தினம் மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்ளவிருக்கிறார் என்று செய்திகள் கசிகின்றன. முதல்வர் வரும்வரை அவர் தொடர்பான அரசு மற்றும் அரசியல் விவகாரங்களை உதயநிதியே கண்காணிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.''’

nkn270124
இதையும் படியுங்கள்
Subscribe