63 வாக்குகள்! சர்ச்சையான சங்கராபுரம் தேர்தல்!

ss

"இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகின்றது' என சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தல் தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. இந் நிலையில் இரு வெற்றி சான்றிதழ்கள், வாக்கு மறுஎண்ணிக்கை மற்றும் அதிகாரிகள் சஸ்பெண்ட் உள்ளிட்ட களேபரத்தில் 'ஐஏஎஸ் அதிகாரிகள் செய்தது தவறா?. வெற்றிக்கான 63 வாக்குகள் யாருடையது?' என மீண்டும் சர்ச்சை தொடங்கியுள்ளது.

"2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி ஒன்றியத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தலில் தேவி மாங்குடி என்பவர் ஆட்டோ சின்னத்திலும், பிரியதர்ஷினி அய்யப்பன் என்பவர் பூட்டுச்சாவி சின்னத்திலும் போட்டியிட்ட நிலையில், தேவி மாங்குடி 310 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றிப்பெற்று விட்டதாக இரவு எட்டு மணியளவில் ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. 'வாக்குச்சாவடிகளின்படி பத

"இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகின்றது' என சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தல் தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. இந் நிலையில் இரு வெற்றி சான்றிதழ்கள், வாக்கு மறுஎண்ணிக்கை மற்றும் அதிகாரிகள் சஸ்பெண்ட் உள்ளிட்ட களேபரத்தில் 'ஐஏஎஸ் அதிகாரிகள் செய்தது தவறா?. வெற்றிக்கான 63 வாக்குகள் யாருடையது?' என மீண்டும் சர்ச்சை தொடங்கியுள்ளது.

"2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி ஒன்றியத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தலில் தேவி மாங்குடி என்பவர் ஆட்டோ சின்னத்திலும், பிரியதர்ஷினி அய்யப்பன் என்பவர் பூட்டுச்சாவி சின்னத்திலும் போட்டியிட்ட நிலையில், தேவி மாங்குடி 310 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றிப்பெற்று விட்டதாக இரவு எட்டு மணியளவில் ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. 'வாக்குச்சாவடிகளின்படி பதிவான மொத்த வாக்குகள் 11,936. இன்னும் முழுமையாக வாக்குகளை எண் ணாமல் எப்படி தேவி மாங்குடி வெற்றிப்பெற்றாரென அறிவிப்பீங்க? முறைப்படி முழுமையாக வாக்கு களை எண்ணிவிட்டு வெற்றியை அறிவியுங்கள்' என போட்டி வேட்பாளர் பிரியதர்சினி வாக்குவாதம் செய்யவும், அவசரஅவசரமாக தேவிமாங்குடி வெற்றிபெற்றார் என வெற்றிக்கான சான்றிதழை முத்திரை இல்லாமலேயே வழங்கினார் தேர்தல் அலுவலர் மாலதி. இதனையடுத்து விவகாரம் மீடியா மூலம் பெரிதான நிலையில், சிவகங்கை மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளரான கருணாகரன், அன்றைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் ஆகியோர் பார்வையிட்டு, மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தர விட்டனர்" என்றார் அன்றைய வாக்கு எண் ணிக்கையில் கலந்துகொண்ட சாக்கோட்டை யூனியன் அதிகாரி ஒருவர்.

ss

இரவில் ஆரம்பித்த வாக்கு எண்ணிக் கையின்போது தேவி மாங்குடி தரப்பு தங்களுக்கு மறுவாக்கு எண்ணிக்கையில் விருப்பம் இல்லை என வெளியேறினர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான கருணாகரன், ஜெயகாந்தன், தாசில்தார் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட மறுவாக்கு எண்ணிக்கையின்போது, ஒவ்வொரு சுற்று முடிவின்போதும் பூத் வாரியாக பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை குறித்து தனியாகக் குறிப்பெழுதி வந்தார். (தற்பொழுது வைரலாகி வருவது இதுவே) பதிவான 11,936 வாக்குகளில், 5871 வாக்குகள் பூட்டுச்சாவி சின்னத்திற்கும், 5808 வாக்குகள் ஆட்டோ விற்கும் விழுந்த நிலையில், பூட்டுச்சாவி சின்னத்தில் போட்டியிட்ட பிரியதர்சினி அய்யப்பன் 63 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு, மற்றுமொரு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், பிரியதர்சினி அய்யப்பனின் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை தேவி மாங்குடி தரப்பு நாடியதால், பதவி ஏற்பிற்கு தடைவிதித்து, இரண்டாவதாக வழங்கப்பட்ட வெற்றிச் சான்றிதழுக்கு தடை விதித்தது நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது பிரியதர்சினி தரப்பு.

இதே வேளையில், இரவு 8.20 மணியளவில் தேர்தல் அலுவலர் தரப்பில் கொடுக்கப்பட்ட பார்ம் 22ன் படி தபால் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 80. ஆனால், அதிகாலை 4.50 மணியளவில் அதே பார்ம் 22ன் படி தபால் வாக்குகளின் எண்ணிக்கை 49. தபால் வாக்குகளை ஒன்றுமே செய்ய முடியாது. அது எப்படி குறையும்? செல்லாத வாக்குகளை செல்லும் வாக்குகளாக அறிவித்து பிரியதர்சினியை அதிகாரிகள் வெற்றிபெற வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாவட்ட வருவாய்த்துறை ஊழியர் கூறுகையில், "14-02-2020 அன்று மாவட்ட நிர்வாகமும் தங்களை ஒரு வாதியாக இணைந்து வழக்கினை எதிர்கொண்டது. 'மூன்றாவது சுற்றின் போது எண்ணப்பட வேண்டிய 6 பூத்களுக்குரிய வாக்குகள் முழுமையாக சேர்த்து எண்ணப்படவில்லை. முதலில் வெற்றி பெற்றதாக வழங்கப் பட்டபோது மொத்தம் 10,981 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டது. மொத்த வாக்குகள் 11,936 என்பதால் படிவம் 22ன் படி இது தவறானது. மீண்டும் வாக்குகள் சரி பார்க்கப்பட்டு எண்ணப்பட்ட நிலையில் 11936 வாக்குகள் சரியாக வருகின்றது' எனத் தங்கள் தரப்பு வாதத்தை வைத்தது. இதனிடையே, பிரியதர்சினி அய்யப்பனே சங்கராபுரம் பஞ்சாயத்துக்கான தலைவர் என அரசிதழில் வெளியிடப்பட்டது. அத்துடன் இல்லாமல் 13.11.2020 அன்று தேர்தல் நேரத்தில் சாக்கோட்டை ஒன்றிய ஊராட்சி தேர்தல் அலுவலராக இருந்த மாலதி மற்றும் துணை தேர்தல் அலுவலராக பணியாற்றிய பர்வதவர்த்தினி இருவரும் பதவி இறக்கம் செய்யப்பட்டதும் அன்றைய நாளில் சர்ச்சையானது'' என்கிறார் அவர்.

இது இப்படியிருக்க, மூன்று வருடம் கழித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பிரியதர்சினி அய்யப்பனின் மனுவினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மீண்டும் மறு சீராய்விற்கு மனு அளித்துள்ளார் பிரியதர்சினி அய்யப்பன். இந்நிலையில், வெற்றிக்கான வாக்குகள் யாருடையது? ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்தது தவறா? என சமூக வலைத்தளத்தில் யுத்தம் நடக்க, ஐ.ஏ.எஸ். கருணாகரன் கைப்பட எழுதிய குறிப்பு வாட்ஸ் அப்பில் வைரலாகியுள் ளது!

-நா.ஆதித்யா

படங்கள்:விவேக்

nkn250223
இதையும் படியுங்கள்
Subscribe