ஆவின் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கி வரும் விவசாயிகளுக்கு கடந்த 60 நாள்களாக பால் பணம் பட்டுவாடா செய்யாமல், வயிற்றிலடித்திருப்பதாக குமுறுகிறார்கள் பால் உற்பத்தியாளர்கள்.
நாட்டிலேயே பால் விநியோகம், கொள்முதலில் தமிழக ஆவின்தான் சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதல்வர் முதல் பால்வளத்துறை அமைச்சர் வரை புளகாங்கிதம் அடைந்துவந்தாலும், நிஜத்தில் இந்நிறுவனம் ஏகப்பட்ட நிர்வாகச்சீர்கேடு, ஊழல் முறைகேட்டில் சிக்கிச் சீரழிந்துவருவதாக புலம்புகிறார்கள் ஆவின் ஊழியர்கள்.
இதுதொடர்பாக ஒரு வாரத்திற்கும் மேலாக நாம் நடத்திய கள விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 9-10-2020-ஆம் தேதி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் வரை பால் பணம் பட்டுவாடா செய்யப்படாமல் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. சேலம், திருச்சி, ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ண கிரி, வேலூர்,
ஆவின் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கி வரும் விவசாயிகளுக்கு கடந்த 60 நாள்களாக பால் பணம் பட்டுவாடா செய்யாமல், வயிற்றிலடித்திருப்பதாக குமுறுகிறார்கள் பால் உற்பத்தியாளர்கள்.
நாட்டிலேயே பால் விநியோகம், கொள்முதலில் தமிழக ஆவின்தான் சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதல்வர் முதல் பால்வளத்துறை அமைச்சர் வரை புளகாங்கிதம் அடைந்துவந்தாலும், நிஜத்தில் இந்நிறுவனம் ஏகப்பட்ட நிர்வாகச்சீர்கேடு, ஊழல் முறைகேட்டில் சிக்கிச் சீரழிந்துவருவதாக புலம்புகிறார்கள் ஆவின் ஊழியர்கள்.
இதுதொடர்பாக ஒரு வாரத்திற்கும் மேலாக நாம் நடத்திய கள விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 9-10-2020-ஆம் தேதி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் வரை பால் பணம் பட்டுவாடா செய்யப்படாமல் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. சேலம், திருச்சி, ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ண கிரி, வேலூர், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட பத்து முன்னணி ஆவின் நிறுவனங்களில் மட்டும் பால் உற்பத்தியாளர்களுக்கு 391 கோடி ரூபாய் வரை பாக்கி உள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க சட்ட ஆலோசகர் வாழப்பாடி ராஜேந்திரன், ""தமிழ் நாட்டில் 25 இடங்களில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஒன்றியத்திலுமே 30 நாள் முதல் அதிகபட்சமாக 60 நாள்கள் வரையிலான பால் பணம் வழங்கப்படா மல் உள்ளது. அதிகபட்சம் பத்து நாள்களுக்குள் பால் பணம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் கூட்டுறவு சங்க துணை விதிகளில் சொல்லப்பட்டுள்ளது. அதையெல்லாம் ஆவின் நிர்வாகம் கண்டுகொள்வதே இல்லை. அக்டோபர் 12-ம் தேதி நிலவரப்படி, ஆவின் நிறுவனங்களில் 15 ஆயிரம் டன், வெண்ணெய் 5 ஆயிரம் டன் பால்பவுடர் விற்பனை செய்யமுடியாமல் கிடங்குகளில் பல மாதங்களாக இருப்பு வைக்கப் பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பல முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதலை நிறுத்தி வைத்திருந்தன. அந்த காலக்கட்டத்தில், சென்னையில் உள்ள நுகர்வோர்களின் தேவையை சமாளிக்க, தனியாரிடம் இருந்தும் பால் கொள்முதல் செய்யப்பட்டது. இப்படி பால்வரத்து அதிகரித்ததால், பால் பவுடர், வெண்ணெய், நெய் தயாரிப்பில் தீவிரம் காட்டியது. இன்றைய நிலையில் பால் பவுடர், வெண்ணெய் இந்த இரண்டு புராடக்ட்களில் மட்டுமே 590 கோடி ரூபாய் முடக்கப் பட்டு உள்ளது.
ஆவின் இப்படி என்றால், தனியார் பால் நிறுவனங்களாலும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டி, ஒரு லிட்டர் பாலை 15 ரூபாய் வரை கொள்முதல் செய்கிறார்கள். ஆவின் நிர்ணயம் செய்த கொள்முதல் விலைக்கு குறையாமல் தனியாரும் பால் கொள்முதல் செய்யவேண்டும் என்று முதல்வர் அவசர சட்டம் பிறப்பிக்கவேண்டும்.
கர்நாடகாவில் பால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளதுபோல் தமிழகத்திலும் ஆவின் நிறுவனத்தை தன்னாட்சி நிறு வனமாக அறிவிக்கவேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக ஆவின் இணையத்திற்கு தலைவர் தேர்தல் நடத்தப்பட வில்லை. அதனால் பால் கொள்முதலை அதிகரித்தல், பால் பணம் பட்டுவாடா ஆகியவற்றில் உடனடியாக நடவடிக்கை எடுக்கமுடியாமல் அதிகாரிகள் தடுமாறுகின்றனர்'' என்கிறார் வாழப்பாடி ராஜேந்திரன்.
முதல்வரின் மாவட்டம் என்பதால் எல்லாவற்றி லும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய சேலம் மாவட்டத்திலும் ஆவின் நிர்வாகம் பால் பணம் வழங்க முடியாமல் தடுமாறிவருகிறது. பால் பவுடர், வெண் ணெய் ஆகியவற்றை தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்ததால் அவற்றை தொடக்கநிலை பால் கூட்டுறவு சங்கங்களுக்கு வம்படியாக அனுப்பிவைத்திருக்கிறது சேலம் ஆவின். பால் ஊற்ற வரும் விவசாயிகளிடம் குறைந்தபட்சம் 115 ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் நெய்யாவது வாங்கியே தீரவேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள் கூட்டுறவு சங்கச் செயலாளர்கள்.
இதுகுறித்து, சேலம் ஆவின் பொதுமேலாளர் நர்மதா தேவியிடம் விளக்கம் கேட்டபோது, ''பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை பணம் பட்டுவாடா செய்யப் பட்டுவிட்டது. கொரோனா காலத்தில் பால் கொள்முதல் அதிகரித்ததால் பால் பணமும் கூடுதலாக வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பால் பணம் நிலுவையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
நீண்ட காலமாகவே பால் பணம் 40 நாள்களுக்குள் செட்டில் செய்யப் பட்டு வருகிறது. இந்தமுறை கூடுதலாக பத்து நாள்கள் தாமதம் ஆகிவிட்டது. சரக்கு இருப்பின்மீது கடன் வாங்க முயற்சிகளை எடுத்துவருகிறோம். கடன் கிடைத்தால் பால் பணம் பட்டுவாடா பிரச்னை தீர்ந்துவிடும்'' என்றார்.
ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசைகட்டி நிற்கின்றன. இந்நிலையில், மக்களுக்கு பால் வார்க்கும் விவ சாயிகளுக்கு பால் பணம் நிலுவையையும் உடனடியாக வழங்கு வாரா 'விவசாயி' எடப்பாடி?
-இளையராஜா