னிதாபிமானத்தை மறந்து, வருமானத்துக்காகவே பெரும்பாலான டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதால் தற்போது பல உயிர்கள் பறிபோகின்றன.

சிட்டி ஆஸ்பத்திரி என்றாலே பணம் பறிக்கக்கூடிய ஆஸ்பத்திரி என்று திண்டுக்கல் மாநகரிலுள்ள பெரும்பாலான மக்கள் மத்தியில் பெயரெடுத்துள்ள 'சிட்டி எலும்பு முறிவு மருத்துவனை' திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் செயல்பட்டு வருகிறது. கடந்த 12ஆம் தேதி இரவு வழக்கம்போல் ஆஸ்பத்திரியிலுள்ள உள்நோயாளிகளை உறவினர்கள் பார்த்துவிட்டு வெளியே திரும்பிக்கொண்டி ருந்த சமயத்தில், முதல் தளமான வரவேற்பு அறையின் அருகிலிருந்து திடீரெனப் புகை யுடன் தீ பரவுவதைக் கண்ட ஊழியர்களும், பார்வையாளர்களும் பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். இதுகுறித்து தகவ லறிந்து தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் தீ மளமளவென முதல் தளம் வரை பரவியது.

ss

முதல் தளம் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிவதால் எழும் புகைமூட்டத்தில் சிக்கிக்கொண்டு மருத்துவமனையில் மூன்று தளத்திலிருந்த நோயாளிகளும் "ஐயோ! எங்களைக் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்'' என அழுதவாறே குரல் கொடுத்தனர். சிறிது நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஸ்பாட்டுக்கு வந்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியிலும், மருத்துவமனையினுள் சிக்கிக்கொண்ட நோயாளிகள் அனைவரையும் பாதுகாப் புடன் மீட்கும் முயற்சியிலும் இறங்கினர். தீயணைப்பு வீரர்கள், உயிருக்கு போரா டிக்கொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளைக் காப்பாற்றி, 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல்லிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விஷயம் காட்டுத்தீ போல் நகர் முழுவதும் பரவியதால் உள்நோயாளிகளின் உறவினர்களும், பொதுமக்களும் ஆஸ்பத்திரிக்கு பதட்டத்தோடு படையெடுத்தனர். வெகுவிரைவாக தீயணைப்புப் படை யினர் ஒட்டுமொத்த தீயையும் கட்டுப் படுத்திவிட்டு அனைத்து வார்டுகளையும், மருத்துவமனை லிஃப்டையும் ஆய்வு செய்த போது தான் அதிர்ச்சியடைந்தனர். லிஃப்ட் மூலம் தப்பி வெளியேற முயன்ற ஒரு சிறுமி உள்ளிட்ட ஆறு பேர் பரிதாபமாக லிஃப்டுக்குள் உயிரிழந்து கிடந்தது பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Advertisment

தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்தவுடனே மாவட்ட எஸ்.பி. பிரதீப், கலெக்டர் பூங்கொடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோரும் உடனடியாக இரவோடிரவாக ஸ்பாட்டுக்கு வந்தனர். திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்கள், தீவிர சிகிச்சையளிக்குமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டனர்.

dd

ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ஐ.பி.செந்தில்குமார், காந்திராஜன் மற்றும் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஆகியோரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். இந்த தீ விபத்து குறித்து மன வேதனை அடைந்ததாகக்கூறிய தமிழக முதல்வர், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரமும் வழங்கப்படும் என அறிவித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமும் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு, இந்த தீவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் முதல்வர் உத்தரவின்பேரில் நிவாரண நிதியை, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கி ஆறுதல் கூறினார்கள்.

Advertisment

"இரண்டு நாளைக்கு முன்புதான் என் தம்பி சவடமுத்து விற்கு முதுகு வலி என்று இந்த ஆஸ்பத்திரியில் சேர்த்ததின் பேரில் முதுகுத்தண்டில் நேற்று தான் ஆபரேசன் நடந்தது. இந்த ஆஸ்பத்திரியில் ஆபரேசன் என்று சொன்னாலே பணம் பிடுங்குவார்கள் என்று ஏற்கெனவே சொன்னார்கள். அப்படி யிருந்தும் வேறு வழியில்லாமல்தான் நாங்களும் இங்கு சேர்த்து பல ஆயிரக்கணக்கில் செலவழித்து ஆபரேஷன் செய் தோம். பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்துகொண்டு, தீ விபத்து ஏற்பட்டவுடனே மருத்துவமனையிலுள்ள ஊழியர்கள் அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டு ஓடி விட் டார்களே தவிர, நோயாளிகளைக் கண்டுகொள்ளவேயில்லை. நாங்கள் உயிருக்கு பயந்து சத்தம் போடுவதைக் கண்டு தீயணைப்புத்துறையினர் தான் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வார்டுக்குள் நுழைந்து என் தம்பியையும், எங்க ளையும் காப்பாற்றினார்கள். இப்படிப்பட்ட ஆஸ்பத்திரியின் மேல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி எங்க ளுக்கு ஆறுதல் கூற வந்த அமைச்சர் ஐ.பி. ஐயாவிடமும் சொல்லி யிருக்கிறோம்'' என்றார் எரியோட் டைச் சேர்ந்த சவுண்டீஸ்வரி.

"எங்க டாக்டர் முரளிதரன் இங்கு வரும் நோயாளிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சையளித்து வந்தாலும் கூட, பணம் கூடுதலாக வாங்குகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதோடு நிர்வாகமும் சரிவர இல்லை. தற்போது தீ விபத்துக்கு காரணமே, வரவேற்பறை அருகே ஒரு சின்ன ரூம் இருக்கு. அதில் மின்சாரமும் யு.பி.எஸ். ஸும் இருக்கிறது. அப்படிப்பட்ட ரூமுக்குள்ளேயே கம்ப்யூட்டர் பேப்பர்களையும் அடுக்கி வைத்து வந்தனர். அந்த பேப்பரில் தான் மின்கசிவுபட்டு தீப்பிடித்தது. நாங்கள் உடனே அதை அணைக்கப் பார்த்தும் தீத்தடுப்பு உபகரணங்கள் இல்லை. அதோடு பேப்பர்கள் அதிகமாகவும், சீலிங்கில் பிளேட்டுகள் போட்டும் இருந்ததால் தீ பயங்கரமாக எரிந்து, மின்சார வயர்களும் வெடிக்க ஆரம்பித்தன. அதைக்கண்டு தான் மின்சார மெயின் போர்டை கட் பண்ணிவிட்டோம். அதனால் லிஃப்ட் நின்றுவிட்டது. அதில் தான் ஆறு பேர் புகையில் சிக்கி மூச்சுத்திணறி இறந்துவிட்டனர். இதில் மணிமுருகன் மட்டும் தான் நோயாளி. குழந்தை கோபிகா, அவருடைய தந்தை ராஜன், சுருளி, விஜயலட்சுமி, மாரியம்மாள் ஆகிய ஐந்து பேருமே உறவினர்களைப் பார்க்க வந்தவர்கள். இப்படி மூன்று குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இந்த தீ விபத்தில் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதற்கு முழுக்காரணமே எங்க ஆஸ்பத்திரி நிர்வாகம்தான்'' என்றனர் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர்.

dd

இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் தமிழ்ச் செல்வனிடம் கேட்டபோது, "இந்த தனியார் மருத்துவமனை பணம் பறிக்கும் கூடாரமாக இருப்பதால், பலமுறை பாதிக்கப்பட்ட பொதுமக்களால் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது. அதுபோல் இந்த மருத்துவமனையில் அவசர வழி, தீயணைப்பு உபகரணங்கள் உள்பட எதுவுமே சரியில்லை. பணியாளர்கள் எண்ணிக்கையும் போதுமானதாக இல்லை. அரசு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் அழகுக் காக பிளைவுட்டுகளை அடித்தும், குப்பைக் கூடா ரங்களாக ஆஸ்பத்திரியை வைத்திருந்ததனாலும் தான் இப்படிப்பட்ட விபத்து ஏற்பட்டு, விலைமதிக்க முடியாத ஆறு உயிர்களும் பறிபோயிருக்கிறது. இதற்கு இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் முரளிதரன் தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். அவர்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் திண்டுக்கல்லிலுள்ள பெரும்பாலான ஆஸ்பத்திரிகள் வருமானம் பார்ப்பதில்தான் குறிக்கோளாக இருந்துகொண்டு, அரசு விதிமுறை களைக் கண்டுகொள்வதில்லை. அதனால் இந்த தனியார் மருத்துவமனைகளை ஆய்வு செய்து அரசு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கிறார் களா என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் இதுபோல் பல அப்பாவிகள் உயிர்களும் பறிபோகும் நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது'' என்றார்.

இந்த குற்றச்சாட்டுகளைப் பற்றி விளக்கம் கேட்க சிட்டி மருத்துவமனையின் நிர்வாகியும், டாக்டருமான முரளிதரனை சந்திக்க பலமுறை மருத்துவமனைக்கு சென்றும்கூட அவர் தலை மறைவாக இருப்பதாகக் கூறினார்கள். அதைத் தொடர்ந்து போனில் தொடர்புகொண்டும் கூட லைனில் பிடிக்க முடியவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தனியார் மருத்துவ மனைக்கு உள்ள விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருந்தால் இந்த மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் உறுதியாக!

விபத்து என்பது வேறு, அஜாக்கிரதை என்பது வேறு. இனியும் இதுபோன்ற தீ விபத்துகளும், உயிரிழப்புகளும் நேராதிருக்க வேண்டுமென்றால், மருத்துவமனைகளில் தீ விபத்து தடுப்பு உபகரணங்கள் அனைத்தும் பராமரிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து, அப்படி இல்லாத மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.