ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர் தல் களம் பரபரப்பாகியிருக்கும் சூழலில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்குள்ளே யார், யாரை ஆதரிப்பது என்பது இழுபறியாக இருந்த நிலையில், எடப்பாடியின் தேர்தல் வியூகம் குறித்து ஆராயத்தொடங்கியிருக்கிறது தி.மு.க. கூட்டணி.
அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதியில் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்ட ஜி.கே. வாசனின் த,மா.கா., இடைத்தேர்தலிலும் போட்டி யிட ஆர்வம் காட்டியது. இதற்காக, எடப்பாடியை சந்தித்து 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினார் ஜி.கே.வாசன். அந்த சந்திப்பில், "த.மா.கா.வுக்கு விட்டுத்தருவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், தி.மு.க. கூட்டணியை ஜெயிக்கணும்னா எவ்வளவு செலவாகும்னு யோசிச்சிக்குங்க. அந்த அளவுக்கு செலவு செய்ய த.மா.கா.விடம் வேட்பாளர் இருக்கிறாரா? அல்லது உங்களால்தான் முடியுமா?''” என்று கேள்வி எழுப்பியிருந்தார் எடப் பாடி. அதிலுள்ள உண்மைகளை உணர்ந்து, அ.தி.மு.க.வுக்கு விட்டுக்கொடுத்தார் ஜி.கே.வாசன்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி தரப்பு போட்டி யிடுவது என முடிவாகி வேட்பாளரை அறிவிப் பதில் சீரியஸ் காட்டினார்கள். கூட்டணிக் கட்சி களின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டது எடப்பாடி தரப்பு. குறிப்பாக, "இடைத்தேர்தலில் நாங்கள்தான் போட்டியிடுவோம்' என உதார்காட்டி வந்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை, எடப் பாடி தரப்பிலான சீனியர் லீடர்ஸ் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "தேசிய கட்சியான காங்கிரஸ் களமிறங்குவதால் தேசிய கட்சியான பா.ஜ.க.வும் போட்டியிடும் என நீங்கள் யோசிப்பது சரியல்ல. தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு வாக்கு வலிமை என்னவென்பது உங்களுக்குத் தெரி யும். அதேசமயம், பா.ஜ.க.வுக்கு என்ன செல்வாக்கு என்பதும் தெரியும். பூத் கமிட்டி அமைக்க கூட பா.ஜ.க.வால் முடியாது. அதனால்,
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர் தல் களம் பரபரப்பாகியிருக்கும் சூழலில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்குள்ளே யார், யாரை ஆதரிப்பது என்பது இழுபறியாக இருந்த நிலையில், எடப்பாடியின் தேர்தல் வியூகம் குறித்து ஆராயத்தொடங்கியிருக்கிறது தி.மு.க. கூட்டணி.
அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதியில் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்ட ஜி.கே. வாசனின் த,மா.கா., இடைத்தேர்தலிலும் போட்டி யிட ஆர்வம் காட்டியது. இதற்காக, எடப்பாடியை சந்தித்து 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினார் ஜி.கே.வாசன். அந்த சந்திப்பில், "த.மா.கா.வுக்கு விட்டுத்தருவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், தி.மு.க. கூட்டணியை ஜெயிக்கணும்னா எவ்வளவு செலவாகும்னு யோசிச்சிக்குங்க. அந்த அளவுக்கு செலவு செய்ய த.மா.கா.விடம் வேட்பாளர் இருக்கிறாரா? அல்லது உங்களால்தான் முடியுமா?''” என்று கேள்வி எழுப்பியிருந்தார் எடப் பாடி. அதிலுள்ள உண்மைகளை உணர்ந்து, அ.தி.மு.க.வுக்கு விட்டுக்கொடுத்தார் ஜி.கே.வாசன்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி தரப்பு போட்டி யிடுவது என முடிவாகி வேட்பாளரை அறிவிப் பதில் சீரியஸ் காட்டினார்கள். கூட்டணிக் கட்சி களின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டது எடப்பாடி தரப்பு. குறிப்பாக, "இடைத்தேர்தலில் நாங்கள்தான் போட்டியிடுவோம்' என உதார்காட்டி வந்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை, எடப் பாடி தரப்பிலான சீனியர் லீடர்ஸ் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "தேசிய கட்சியான காங்கிரஸ் களமிறங்குவதால் தேசிய கட்சியான பா.ஜ.க.வும் போட்டியிடும் என நீங்கள் யோசிப்பது சரியல்ல. தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு வாக்கு வலிமை என்னவென்பது உங்களுக்குத் தெரி யும். அதேசமயம், பா.ஜ.க.வுக்கு என்ன செல்வாக்கு என்பதும் தெரியும். பூத் கமிட்டி அமைக்க கூட பா.ஜ.க.வால் முடியாது. அதனால், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுங்கள். தி.மு.க. கூட்டணியை நாங்கள் ஜெயித்துக் காட்டுகிறோம்''’என்று களநிலவரத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார் கே.பி.முனுசாமி.
அதற்கு அண்ணாமலை, "பா.ஜ.க. போட்டி யிட்டால் நாங்கள் ஆதரிப்போம்; இல்லையெனில் எங்கள் தரப்பில் வேட்பாளரை நிறுத்துவோம். எங்களை பா.ஜ.க. ஆதரிக்க வேண்டும் என ஓ.பி.எஸ். சொல்வதால், யாரை ஆதரிப்பது என்கிற சங்கடம் வரும். அதனால் பா.ஜ.க. போட்டியிட நீங்கள் விட்டுக்கொடுக்கலாமே?'' என்று அண்ணா மலை கேட்டுள்ளார்.
அப்போது, "ஓ.பி.எஸ்.ஸுக்குன்னு எந்த பலமும் தொகுதியில் இல்லை. அதனாலேயே அவர் பா.ஜ.க.வை துணைக்கு அழைத்துக்கொள்கிறார். உங்களை மையப்படுத்தி அவர் அரசியல் செய்கிறார். ஓ.பி.எஸ்.ஸை நீங்கள் ஆதரித்தால் தேர்தல் ரிசல்ட் ஓ.பி.எஸ்.ஸை மட்டுமல்ல; பா.ஜ.க.வின் இமேஜையும் பாதிக்கும். பிறகு உங்கள் முடிவு''’என்று கேபி.முனுசாமி உள்ளிட்டவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
இதனையெல்லாம் யோசித்த அண்ணாமலை, "மேலிடத்தில் இதனை தெரிவிக்கிறேன். தவிர, தொகுதிக்குள் சில சர்வேக்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு முடிவும் தெரிந்த பிறகு எங்கள் முடிவை அறிவிக்கிறோம்''’என்று சொல்லி எடப்பாடி தரப்பை அனுப்பி வைத்தார்.
எடப்பாடி தரப்பினர் சென்றதும் அண்ணா மலையை சந்தித்தார் ஓ.பி.எஸ். அந்த சந்திப்பின் போது, "நம்பியவர்களுக்கும் துரோகம் செய்பவர் எடப்பாடி. கூட்டணி அரசியலில் குறைந்தபட்ச மாவது நம்பகத்தன்மை இருக்கவேண்டும். அது சுத்தமாக எடப்பாடியிடம் கிடையாது. உங்களின் ஆதரவே எங்களின் பலம் என பா.ஜ.க.வை நம்பியே நாங்கள் இருக்கிறோம். அதனால் எடப்பாடியை எதிர்த்து நாங்கள் நிறுத்தும் வேட்பாளரை பா.ஜ.க. ஆதரிக்க வேண்டும். ஒருவேளை பா.ஜ.க. போட்டி யிடுவதாக இருந்தால் பா.ஜ.க.வை ஆதரிக்கிறோம்'' என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் ஓ.பி.எஸ். அதற்கு எடப்பாடியிடம் சொன்ன, அதே பதிலை சொல்லி அனுப்பியுள்ளார் அண்ணாமலை. இந்த நிலையில், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் தேர்தல் வியூகம் குறித்து தீவிரமாக ஆலோசித்தார் எடப்பாடி.
அது குறித்து எடப்பாடி தரப்பில் விசாரித்த போது, "பா.ஜ.க. என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால், போட்டியிடுவ திலிருந்து நாம் பின்வாங்கப் போவதில்லை. இரட்டை இலை சின்னம் பெறுவதில் ஓ.பி.எஸ். பிரச்சினை செய்வார். பிரச்சினை செய்யட்டும். அது நமக்கு ப்ளஸ்பாயிண்ட்தான். அவரால் சின்னம் முடக்கப்பட்டால் அவரது துரோகத்தை தொண்டர்களிடம் எடுத்துச் செல்லலாம்'' என சொல்லியிருக்கிறார் எடப்பாடி. இதை சீனியர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து, தேர்தல் செலவு பற்றி விவாதம் நடந்தது. அப்போது, "முந்தைய தேர்தலில் சுமார் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் த.மா.கா. தோல்வியை சந்தித்தது. அ.தி.மு.க. போட்டியிட்டிருந்தால் ஜெயித்திருப்போம். அதனால் செலவுகளை இறுக்கிப் பிடிக்காமல் விளையாடினால் காங்கிரசை ஜெயித்துவிட முடியும்' என சீனியர்கள் அனைவரும் ஒரே குரலில் சொல்ல, தேர்தல் செலவுகள் குறித்து கூட்டிக்கழித்து கணக்குப் பார்த்தார்கள். அப்போது, "இரட்டை இலை சின்னம் கிடைத்தால் 50 கோடி போதும். சின்னம் இல்லையெனில் 100 கோடி தேவை என தீர்மானித்தார் எடப்பாடி. இதுதான் எடப்பாடி யின் தேர்தல் வியூகமாக இருக்கிறது'’என்று விவரிக்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.
இந்தச் சூழலில், ஓ.பி.எஸ். தரப்பில் என்ன நடக்கிறது? என விசாரித்தபோது, ‘"எடப்பாடியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவதில் ஓ.பி.எஸ். ஸுக்கு குழப்பம் இருக்கிறது. தொகுதியில் கொங்கு வேளாளர் அல்லாத செங்குந்த முதலியார், அருந் ததியர் உள்ளிட்ட பிற சமூகத்தினரின் ஆதரவை குறிவைத்துத்தான் ஓ.பி.எஸ். பிரச்சாரம் செய்ய முடியும். ஆனால், அந்த பிற சமூகத்தினரின் வாக்கு கள் தி.மு.க. கூட்டணிக்குத்தான் போகும். ஓ.பி.எஸ். ஸுக்கு கிடைக்காது. தவிர, எடப்பாடிக்கு இணை யாக செலவு செய்யக்கூடிய வேட்பாளர் நம்மிடம் இருக்கிறார்களா? என்பதி லும் அவருக்கு சந்தேகம் இருந்தது.
இந்த எதார்த்த சூழ லில், "எடப்பாடி தரப்பை விட நம் வேட்பாளர் குறைந்த வாக்குகளை வாங்கினால் நமது இமேஜ் என்னவாவது? என்கிற குழப்பம்தான் ஓ.பி.எஸ்.ஸுக்கு இருக்கிறது. இதனால், சின்னத்தை முடக்கும் திட்டம் எனக் கில்லை. வேட்பாளராக யாரை நிறுத்தப் போகிறீர் கள் என சொல்லுங்கள். சின்னம் ஒதுக்கப்படும் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட்டுத் தரு கிறேன்' என எடப்பாடிக்கு தூதுவிட்டார் ஓ.பி.எஸ்.
ஓ.பி.எஸ்.ஸின் இந்த மூவை எடப்பாடி ஏற்றுக்கொண்டால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.தான் என்பதை எடப்பாடி ஏற்பதாகிவிடும் என கணக்கிட்டு, ஓ.பி.எஸ்.ஸின் மூவை நிராகரித் தார் எடப்பாடி. இந்த நிலையில்தான், "பா.ஜ.க. போட்டியிட வேண்டும் அல்லது எங்களை ஆத ரிக்கவேண்டும்' என்ற திட்டத்தில் அரசியல் செய்து வரும் ஓ.பி.எஸ்., இதுகுறித்து பா.ஜ.க. தலைமை யிடம் பேசுவதற்காக குஜராத் சென்றார். பா.ஜ.க. தலைமை ஏற்கனவே சிலரின் அறிமுகத்தை ஓ.பி.எஸ்.ஸுக்கு ஏற் படுத்தித் தந்திருக்கிறது. அந்த நபர்களை சந்தித்து விவாதித்தார்.
அவர்களிடத்தில், தி.மு.க. கூட் டணியில் காங்கிரஸின் மூத்த தலைவர் இளங்கோவன் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஒரு தேசிய கட்சியை எதிர்த்து இன்னொரு தேசிய கட்சியான பா.ஜ.க. நிற்பதுதான் சரியாக இருக்கும். பா.ஜ.க. சார்பில் அண்ணாமலையை கேண்டிடேட்டாக அறிவியுங்கள். எடப்பாடியே கூட வேட்பாளரை அறிவிக்காமல் தவிர்த்து பா.ஜ.க. அண்ணாமலையை ஆதரிக்க முன்வரலாம். அ.தி.மு.க. ஒன்றுபடணும்னு நீங்கள் நினைத்தால் இதை செய்யலாம். தே.மு.தி.க., அ.ம.மு.க. கட்சிகளும் ஆதரிக்கும். தேர்தலை புறக் கணித்துள்ள பா.ம.க.வையும் கூட பா.ஜ.க.வை ஆத ரிக்க வைத்துவிடலாம். ஆக, இளங்கோவனை எதிர்த்து அண்ணாமலையை நிறுத்தினால் போட்டி பலமாகும். வெற்றியும் பெறலாம் என தனது கருத்தை சொல்லியிருக்கிறார் ஓ.பி.எஸ். இதுகுறித்து தீவிர மாக ஆலோசித்துள்ளது பா.ஜ.க. தேசிய தலைமை.
"அண்ணாமலையை போட்டியிட வைப்பதன் மூலம், எடப்பாடியை முடக்கி விடலாம் என்கிற திட்டத்தில் பா.ஜ.க. தலைமையிடத்தில் அரசியல் செய்திருக்கிறார் ஓ.பி.எஸ். அவரது திட்டம் நிறை வேறுமா? என்பது பா.ஜ.க. தலைமையின் முடிவில் தான் இருக்கிறது. பா.ஜ.க.வின் முடிவு திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை தெரிந்துவிடும்'’என்று சுட்டிக்காட்டுகிறார்கள் ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கமான அ.தி.மு.க.வினர். இதற்கிடையே, "பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும்' என சில மாதங்களாகவே உதார் விட்டுக்கொண்டிருந்த அண்ணாமலை, "தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடலூரில் நடக்கும் மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்படும்' என சொல்லியிருந்தார். ஆனால், போட்டியிடுவது பற்றி எந்த முடிவையையும் சொல்லாமல், எல்லாம் அவன் செயல் பாணியில் மேலிடத்தை கைகாட்டிக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை.
இடைத்தேர்தலைப் மையப்படுத்தி அ.தி.மு.க. கூட்டணியில் இத்தகைய களேபரங்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில்... பா.ஜ.க. போட்டியிட் டால் எடப்பாடி என்ன முடிவெடுப்பார் என்கிற தவிப்பில் அ.தி.மு.க.வினரும், தன்னை வேட்பாள ராக அறிவித்தால் என்ன செய்வது என்கிற தடுமாற்றத்தில் அண்ணாமலையும் இருக்கின்றனர்.
________________
இறுதிச்சுற்று!
போட்டி வேட்பாளர் பற்றி அண்ணாமலை அபிப்ராயம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜனவரி 23-ஆம் தேதி காலை கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தபோது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "இடைத்தேர்தலைப் பொருத்தவரை அ.தி.மு.க.தான் பெரிய கட்சி. ஓ.பி.எஸ். என்னைச் சந்தித்தபோதும் நான் அவரிடம் கூறியது எதிர்த்து போட்டியிடக்கூடிய காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக மூன்று அமைச்சர்கள், பணபலம் உள்ளிட்ட வற்றை சமாளிக்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன். இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தும் வேட்பாளர் பொதுவானவராக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளோம்''’என்றார்.
-துரை.மகேஷ்