மொத்தம் 17 நாட்கள்... 400 மணி நேரம்... 41 தொழிலாளர்கள்... காற்றுப்புகவும் சிரமமான சுரங்கத்தினுள் மாட்டிக்கொண்டு வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்கள். இப்போதுதான் ஒட்டுமொத்த இந்தியர்களும் நிம்மதிப்பெருமூச்சு விடுகிறார்கள்!
உத்தராகண்ட் மாநிலத்தில் சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கிலோமீட்டர் நீளத்துக்கு மலையை குடைந்து 4.5 கிலோமீட்டர் நீளத்துக்கு மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதையை உருவாக்கும் பணியில் ஹைதராபாத்தை சேர்ந்த நவயுகா இன்ஜினியரிங் என்ற நிறுவனம் ஈடுபட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி, சில்க்யாராவிலிருந்து கட்டப்பட்ட சுரங்கப்பாதையில், 200 முதல் 260 மீட்டர் வரையிலான சுமார் 60 மீட்டர் நீளமுள்ள பகுதி இடிந்துவிழுந்ததில் சுரங்கப்பாதை இடையில் துண்டிக்கப்பட, உள்ளே பணியிலிருந்த 41 தொழிலாளர்கள், 260 மீட்டருக்கு அப்பால் சிக்கிக்கொண்டனர். மிகவும் கடினமான பாறைகள் சுரங்கத்தை மூடிவிட்டன. இந்த விபத்து குறித்து தெரியவந்ததும், தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு, மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக, உள்ளேயிருக்கும் தொழிலாளர் களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்படாதபடி 6 இன்ச் அகலமுள்ள சிறு குழாய் நுழைக்கப்பட்டு, ஆக்சிஜன், உணவுப்பொருட்கள் அதன்மூலமாக அனுப்பப்பட்டன. பின்னர், தொழிலாளர்களை மீட்பதற்கு, பக்கவாட்டில் சுரங்கத்தில் துளையிட முடிவெடுக்கப்பட்டது. மலைப்பாறைகளில் துளையிடுவதற்காக ஐந்துக்கும் மேற்பட்ட ராட்சத இயந்திரங்கள் தோல்வி யடைந்த நிலையில்... இறுதியாக அமெரிக்க தயா ரிப்பான ஆகர் இயந்திரம் மூலம் துளையிடப்பட்டு மீட்புப்பணி வேகமெடுத்தது. இந்த இயந்திரத்தின் மூலமாக பாறை உடைப்புகள் இஞ்ச் இஞ்சாக துளையிடப்பட்டு, 47 மீட்டர் தொலைவுக்கு துளையிடப்பட்டு இரும்புக்குழாய்கள் பொருத்தப் பட்ட நிலையில், மீட்புப்பணி வெற்றியை நெருங்கிவிட்டதாகக் கருதப்பட்டது. அந்நேரத்தில் பேரிடியாக, அந்த இயந்திரத்தின் தகடு உடைந்த தோடு, பாறைகளுக்கிடையே சிக்கிக்கொண்டதால் மேற்கொண்டு அதன்வழியே துளையிடுவது தடைப்பட்டது. பின்னர், இயந்திரக்கழிவுகளை அகற்றும் நிபுணர்களை மும்பையிலிருந்து வர வழைத்து கழிவுகள் இரவுபகலாக அகற்றப்பட்டன.
எலிவளை சுரங்கத் தொழிலாளர்கள்
அதன்பின்னர் சுரங்கப்பாதையின் மிச்சமுள்ள 13 மீட்டர் தூரத்துக்கு இயந்திரத்திற்கு பதிலாக, எலிவளைத் தொழிலாளர்களைப் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது. ஒல்லியான தேகமும், குறை வான உயரமும் கொண்ட இவர்கள், மணிப்பூர், மேகாலயா மலைப்பகுதியில் கைகளால் உபகரணங் களைப் பயன்படுத்தி எலி வளை போல குடைந்து சிறிய அளவிலான நிலக்கரி சுரங்கம் தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள். 47 மீட்டர் நீள இரும்பு குழா யினுள் 2 தொழிலாளர்கள் நுழைந்து, சிறிய ரக இயந்திரத்தால் சுரங்கத்தை தோண்ட, மற்ற தொழி லாளர்கள் அந்த கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தோண்டத்தோண்ட குறுக லான வழி ஏற்படுத்தப்பட்டு பைப்லைன் வெற்றிகர மாக செருகப்பட்டது. நவம்பர் 28ஆம் தேதி இரவில், குறுகலான பைப்லைன் வழியாக 41 தொழிலாளர்களும் ஒருவர் பின் ஒருவராக வெற்றிகர மாக மீட்கப்பட்டனர். அமெ ரிக்காவின் 25 டன் எடையுள்ள நவீன ஆகர் இயந்திரத்தால் செய்யமுடியாமல் போன தை இந்த ‘எலிவளை’ சுரங்கத் தொழிலாளர் கள் செய்து சாதித்துக் காட்டியுள்ளனர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்களை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி மாலை அணிவித்து வரவேற்றார். மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் தலா 1 லட்ச ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று கூறினார். மீட்கப்பட்ட தொழிலாளர் களோடு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.
நாமக்கல் நிறுவனம்
வீடுகளுக்கான போர்வெல் இயந்திரங் கள், சுரங்கங்கள் தோண்டுவதற்கான ரிக் இயந்திரங்களை பி.ஆர்.டி. டிரில் நிறுவனம் தயாரித்து வருகிறது. இவர்களது முக்கிய வாடிக்கையாளரான ’தரணி ஜியோடெக்’ நிறுவனம்தான் தற்போது உத்தரகாண்ட் சுரங்கத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டது. தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் திருச்செங் கோட்டைச் சேர்ந்த சேர்ந்த தரணி ஜியோ டெக் இன்ஜினியரிங் நிறுவனம், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களைத் தொடர்பு கொண்டு உணவுப்பொருட்களை அனுப்பு வதற்கான முயற்சியில் வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கிறது. டதஉ ஏஉ 5 ரிக் இயந்தி ரத்தின் மூலம் 6 இன்ச் அளவுள்ள குழாயை வெற்றிகரமாகப் பொருத்தியது. அதன்வழி யாகத்தான் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு ஆக்ஸிஜன், உணவு, மருந்து மற்றும் அவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் செய்திகளையும் மீட்புக் குழுவினர் உள்ளே அனுப்பி வந்தனர்.
ஆஸ்திரேலியர் அர்னால்டு டிக்ஸ்
இந்த மீட்புப்பணியில் அனைவராலும் பாராட்டப்பட்ட மனிதநேயர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அர்னால்டு டிக்ஸ். இவர், ஜெனீவாவிலுள்ள சர்வதேச சுரங்கப்பாதை தொழிலாளர்கள் அமைப்பின் தலைவராக உள்ளார். உலகெங்கும் சுரங்கப்பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் நலனுக்காக, அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வுகாண பாடுபடக்கூடிய சுரங்கத்தொழில் நிபுணர். உத்தரகாண்டில் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட செய்தி தெரிந்ததுமே இந்தியாவுக்கு வந்தவர், மீட்புப்பணியின் இறுதி வரை அதே பகுதியில் தங்கியிருந்து, ஆலோசனைகளை வழங்கிவந்தார். சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலா ளர்களின் குடும்பத்தினருக்கும் மன தளவில் தைரியத்தை வழங்கிவந்தார். 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்ட பின்னரே மன நிம்மதியோடு ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பினார். அவரது மனிதாபிமான செயலை சமூக வலைத்தளங் களில் அனைவரும் வெகுவாக புகழ்ந்துவருகிறார்கள்.
ஒருவழியாக 17 நாள் போராட்டம்... வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது!
-ஆதவன்
சட்டவிரோதமான எலி வளை சுரங்கம்
வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மேகாலயாவில் ‘எலி வளை' சுரங்கம் தோண்டுவது சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது. மேகாலயா வில் ஜெயந்தியா மலைப்பகுதியில் நிலக்கரி அதிக அளவில் கிடைப்பதால், இதில் 4 அடி அகலத்தில் 100 அடி ஆழம்வரை குழி தோண்டி நிலக்கரி படிமம் இருக்குமிடத்துக்குச் சென்றதும், அங்கே ஒருவர் நிலக்கரியை வெட்டியெடுக்க, இன்னொருவர் கூடையில் நிரப்ப, அதனை பக்கவாட்டில் பாதை தோண்டி, அதன்வழியாக வெளியே சட்டவிரோதமாக நிலக்கரியை கடத்திவருகிறார்கள். இப்படி சட்டவிரோதமாக எலிவளை சுரங்கங்களில் மண் சரிவில் சிக்கி அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுவ துண்டு. கடந்த 2019ஆம் ஆண்டில் மேகாலயாவில் ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்திலுள்ள நிலக்கரி சுரங்கத்தில், 360 மீட்டர் ஆழம் வரை எலி வளை சுரங்கம் தோண்டிய 15 தொழிலாளர்கள், சுரங்கத்துக்கு அருகிலுள்ள லிட்டின் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியதில் அனைவரும் உயிரிழந்தனர். அவர்களில் இருவர் மட்டும் எலும்புக் கூடுகளாக மீட்கப்பட்டனர். இவ்வளவு அபாயகரமாக இருப்பதால் எலிவளை சுரங்கம் தோண்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், சட்டவிரோதமான இந்த் எலி வளை முறை, 41 தொழிலாளர்களின் மீட்புக்கு பேருதவி செய்துள்ளது!