திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் அருகேயுள்ள நம்பேடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியரின் நான்கு வயது மகள் காவ்யா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சேத்பட்-ஆரணி சாலையிலுள்ள கங்கைசூடா மணி கிராமத்திலுள்ள ஸ்ரீசாந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் யூ.கே.ஜி. படித்துவருகிறார். கடந்த மாதம் பள்ளிப் பேருந்தில் பள்ளிக்குச் சென்ற குழந்தை திரும்பி வரும்போது அழுதுகொண்டே வந்துள்ளது. தனது அம்மாவிடம் அடி வயிறு வலிக்கிறது எனச் சொன்ன காவ்யாவை உடனே சேத்பட்டில் உள்ள தனியார் கிளினிக்குக்கு அழைத்துச் சென்று காட்டியபோது, அங்கிருந்த மருத்துவர் குழந்தைக்கு புட்ஃபாய்ஸன் ஆகியிருக்கும் என நினைத்து சிகிச்சை அளித்துள்ளார்.
குழந்தை உடல்நிலை தேறி 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு அனுப்பியுள்ளார்கள். பள்ளிக்குச் சென்ற காவ்யா மீண்டும் அழுது கொண்டே திரும்பிவந்து வயிறு வலிப்பதாக கூறியுள்ளது. அதிர்ச்சியான பெற்றோர் மீண்டும் சேத்பட்டில
திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் அருகேயுள்ள நம்பேடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியரின் நான்கு வயது மகள் காவ்யா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சேத்பட்-ஆரணி சாலையிலுள்ள கங்கைசூடா மணி கிராமத்திலுள்ள ஸ்ரீசாந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் யூ.கே.ஜி. படித்துவருகிறார். கடந்த மாதம் பள்ளிப் பேருந்தில் பள்ளிக்குச் சென்ற குழந்தை திரும்பி வரும்போது அழுதுகொண்டே வந்துள்ளது. தனது அம்மாவிடம் அடி வயிறு வலிக்கிறது எனச் சொன்ன காவ்யாவை உடனே சேத்பட்டில் உள்ள தனியார் கிளினிக்குக்கு அழைத்துச் சென்று காட்டியபோது, அங்கிருந்த மருத்துவர் குழந்தைக்கு புட்ஃபாய்ஸன் ஆகியிருக்கும் என நினைத்து சிகிச்சை அளித்துள்ளார்.
குழந்தை உடல்நிலை தேறி 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு அனுப்பியுள்ளார்கள். பள்ளிக்குச் சென்ற காவ்யா மீண்டும் அழுது கொண்டே திரும்பிவந்து வயிறு வலிப்பதாக கூறியுள்ளது. அதிர்ச்சியான பெற்றோர் மீண்டும் சேத்பட்டிலேயே ஒரு கிளினிக்கில் காட்டி யுள்ளனர். பரிசோதித்த டாக்டர்கள் வயிறு வலி சரியாகாததால் யூரினல் இன்பெக்ஷன் இருக்கும் என நினைத்து சிசிக்சை அளித்துள்ளனர். அப்போதும் குழந்தை வலி தாங்காது அழுததால் குழந்தையின் பெற்றோர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு காவ்யாவை முழுமையாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். குழந்தையிடம் யாரோ பாலியல்ரீதியான துன்புறுத்தல் முயற்சி செய்துள்ளார்கள் என பெற்றோரிடம் தெரிவிக்க, அதிர்ச்சியாகியுள்ளனர் காவ்யாவின் பெற்றோர்.
இதுகுறித்து உடனே சைல்ட் ஃலைன் அமைப்புக்கு தகவல் தெரிவிக்க சேவை மனப்பான்மை கொண்ட அவர்கள் அங்கு வந்து குழந்தையின் மொழியிலேயே மனோதத்துவ ரீதியில் உரையாடத் துவங்கியுள்ளார்கள். "சார் ஒருத்தர் சாக்லேட் தந்து ரூமுக்குள் அழைத்துச் சென்று இப்படி, அப்படி செய்தார்''’என்று குழந்தை சொல்லியுள்ளது. என்ன நடந்திருக்கும் என யூகித்துக்கொண்ட அதிகாரிகளுக்கு அது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனை அணுகி யுள்ளனர். குழந்தையிடம் பள்ளியில் பணியாற்றும் சிலரின் புகைப்படங்களைக் காட்ட... குழந்தை, காமராஜை அடையாளம் காட்டியுள்ளது. அவர் திருச்செந்தூர் டூர் சென்றுள்ளதாகத் தெரியவர... துரித நடவடிக்கையாக மொபைல் ட்ராக்கிங் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் மொபைல் எண் கொடுத்து "போனுக்குச் சொந்தமானவரைக் கைது செய்ய வேண்டும்' என கேட்டுக்கொண்டார். அந்த நம்பர் ஜி.பி.எஸ் மூலமாக ட்ராக் செய்யப்பட்டு அந்த ஆசிரியர் வந்த காரை எட்டையபுரம் போலீஸார் மடக்கினர். காமராஜ் யார் என விசாரித்து அவரை காரிலிருந்து இறக்கி ரோட்டிலேயே நிறுத்தி போட்டோ எடுத்து வாட்ஸ்-ஆப்பில் அனுப்பினார்கள். அவர்தான் என்பதை உறுதி செய்ததும் அவரை கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போளுர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போளூர் டி.எஸ்.பி. குமார், அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா இருவரும் விசாரணை நடத்திவருகின்றனர்.
கைதான காமராஜ் அந்த பள்ளி தாளாளர் பிரபாவதியின் கணவர். வயது 51. அந்தப் பள்ளியைப் பொறுத்தவரை பெயருக்குதான் பிரபாவதி தாளாளர். நிர்வாகம் செய்வது முழுக்க காமராஜ்தான். உலகம்பட்டு கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கணக்கு ஆசிரியரான காமராஜ், தினமும் சிலமணி நேரம் பள்ளியில் இருந்துவிட்டு மற்ற நேரங்களில் தனது சொந்த பள்ளிக்குச் சென்று நிர்வாகம் செய்துவந்துள்ளார். அவர்தான் மிகமிக மோசமான இந்த பாலியல் சில்மிஷத்தை காவ்யாவிடம் செய்துள்ளார் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது மனைவி பிரபாவதியும் கணவரின் செயல்களுக்கு உதவியாக இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
நாம் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் கேட்ட போது, “"குழந்தைக்கு சரியாக நடந்ததை சொல்ல வரவில்லை. அதனால் குழந்தையிடம் பேசிக் கொண்டு வருகிறார்கள். முதல்கட்டமாக தெரியவந்த ஆதாரங்களின் அடிப்படையில் பள்ளித் தாளாளரின் கணவரை கைது செய்துள் ளோம். விசாரணை நடக்கிறது, இதுபோன்ற தவறுகள் வேறு ஏதாவது செய்துள்ளாரா என்பது குறித்தும் விசாரிக்கிறோம். அந்த ஆசிரியருக்கு பலவிதங்களில் உடந்தையாக இருந்துள்ளார் அதேபள்ளியில் பணியாற்றும் 51 வயது கார்த்தீபன். இவருக்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் 4 மனைவிகள் எனச் சொல்வதால் அது குறித்தும் விசாரிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் தரவேண்டும் என்கிற அளவுக்கு எங்கள் பணி இருக்கும்''’என்றார் மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன்.
மாவட்ட பள்ளிக் கல்வித்துறை காமராஜை பணியிடை நீக்கம் செய்துள்ளது. நூறு போலீஸாரை பள்ளியைச் சுற்றி நிறுத்தி தகுந்த பாதுகாப்பு வழங்கிவருகிறது காவல்துறை. திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் ஸ்கெட்ச் போட்டு குற்றவாளியை கைது செய்த விதத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.