ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரைவைகோ, கடந்த சில ஆண்டுகளாகவே கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டிவந்த நிலையில், அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட வேண்டுமென்று தொண் டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், கட்சியின் பொதுக்குழு மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே தனது மகனுக்கு கட்சிப் பதவி கொடுப்பது சரியாக இருக்கு மென்று கருதிய வைகோ, கட்சியின் பொதுக் குழுவைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தியதில், பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்தனர். எனவே துரை வைகோவுக்கு தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
துரை.வைகோவுக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, "கட்சிக்குள் வாரிசு அரசியலை ஊக்குவிக்க வேண்டாம் என ஒன்றரை மணிநேரம் வைகோவிடம் பேசினேன், அவர் கேட்க வில்லை'' என்று வைகோ மீது விமர்சனம் வைத்தார். மேலும், "நான்தான் ம.தி.மு.க.வின் அவைத் தலைவர். என்னை அவரால் ஒன்றும் செய்யமுடியாது. பொடா சட்டத்தில் வைகோவுடன், அழகு சுந்தரமும், செவந்தியப் பன
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரைவைகோ, கடந்த சில ஆண்டுகளாகவே கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டிவந்த நிலையில், அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட வேண்டுமென்று தொண் டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், கட்சியின் பொதுக்குழு மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே தனது மகனுக்கு கட்சிப் பதவி கொடுப்பது சரியாக இருக்கு மென்று கருதிய வைகோ, கட்சியின் பொதுக் குழுவைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தியதில், பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்தனர். எனவே துரை வைகோவுக்கு தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
துரை.வைகோவுக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, "கட்சிக்குள் வாரிசு அரசியலை ஊக்குவிக்க வேண்டாம் என ஒன்றரை மணிநேரம் வைகோவிடம் பேசினேன், அவர் கேட்க வில்லை'' என்று வைகோ மீது விமர்சனம் வைத்தார். மேலும், "நான்தான் ம.தி.மு.க.வின் அவைத் தலைவர். என்னை அவரால் ஒன்றும் செய்யமுடியாது. பொடா சட்டத்தில் வைகோவுடன், அழகு சுந்தரமும், செவந்தியப் பனும், 19 மாதங்கள் சிறையில் இருந்தனர். சிறைக்குள் தனக்குத் தேவையான வசதிகளை வைகோ செய்துகொண்டார்'' என்றும் குற்றச்சாட்டு வைத்தார்.
வைகோவின் சிறைவாசம் குறித்து திருப்பூர் துரைசாமியின் குற்றச்சாட்டை ம.தி.மு.க. ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் பேட்ரிக் மறுத்துள்ளார். "வைகோ குறித்த திருப்பூர் துரைசாமியின் கருத்து, வைகோவைக் களங்கப் படுத்தும் நோக்கத்தோடு சொல்லப்பட்டது. சிறைச்சாலையில் வைகோ பட்ட கஷ்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி. ஒருவர் எழுதிய புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்'' என்கிறார் அவர்.
1994-ஆம் ஆண்டில் ம.தி.மு.க.வை வைகோ தொடங்கியபோது வைகோவுடன் இணைந்து செயல்பட்டதோடு, ம.தி.மு.க.வின் தொழிற்சங்கமான மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளரானார் துரைசாமி. தற்போது திருப்பூர் துரைசாமி கடுமையாக வைகோவைக் குற்றம் சுமத்துவதற்கு வேறு பல புதிய காரணங்களை ம.தி.மு.க.வினர் கூறுகிறார்கள்.
துரைவைகோவின் வருகைக்கு எதிர்ப்பென் பது காரணமில்லையென்றும், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் இணைப்பான கோவை பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்துக்கு சொந்தமான 270 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீதான ஆர்வமே முக்கிய காரணமென்றும் திருப்பூர் துரைசாமி மீது குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.
கோவை -பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்துக்கு சொந்தமாக, டாடாபேட் தொழிற்சங்கக் கட்டிடம், வீட்டு மனைகள், உடுமலைப்பேட்டையில் தொழிற்சங்கக் கட்டிடம், திருப்பூரில் தொழிற்சங்கக் கட்டிடம், வணிக வளாகம் என சுமார் 270 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. 2010-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில், கோவை பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்துக்கு சொந்த மான கோவை டாடாபேட் பகுதியிலிருந்த அலுவலகத்தை தொ.மு.ச. நிர்வாகிகள் கைப்பற்றிக்கொண்டார்கள். இந்த சொத்துக் களை மீட்பதற்காக 12 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, 2021-ஆம் ஆண்டில் வழக்கில் வென்ற திருப்பூர் துரைசாமி, "மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியில் இணைக்கப்பட்ட சங்கத்தின் சொத்துக்களை, தன் பெயரில் ஓர் அறக்கட்டளையைத் தொடங்கி அதன் பெயருக்கு மாற்றிவிட்டார்' என்று கூறப்படுகிறது.
அவரது தவறான செயல்பாட்டை, பஞ்சாலைத் தொழிற்சங்கத்திற்கு பெருமளவு நிதி திரட்டித் தந்தவரும், கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவருமானகோவை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் மூ.கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்ததோடு, திருப்பூர் துரைசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வைகோவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் திருப்பூர் துரைசாமியோ, ம.தி.மு.க.வுக்கும், கோவை -பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழி லாளர் முன்னேற்ற சங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், இதுகுறித்து வைகோ கேள்வி கேட்கக்கூடாதென்றும் கூறியிருக்கிறார்.
ஏற்கெனவே அவர் தி.மு.க.வில் இருந்தபோது, பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்துக்கான சொத்துக்களை 1992-ம் ஆண்டில் தி.மு.க. அறக்கட்டளைக்கு மாற்றித்தருமாறு தலைமை கேட்டதால் அறிவாலயம் பக்கமே செல்லாமல் இருந்தவர், வைகோ தனிக்கட்சி தொடங்கியதும், ம.தி.மு.க.வில் ஐக்கியமாகியதாகக் கூறுகிறார்கள். எனவேதான் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க.வோடு உடன்பாடு கண்டதை ஏற்காமல், அ.தி.மு.க.வுடன் பேசி அதிக சீட்டுகளைப் பெற்றுத்தருகிறேன் என்றெல்லாம் நாடக மாடியதாகக் கூறுகிறார்கள். அதேபோல, சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்புக் கிடைக்காத ம.தி.மு.க.வினரை வைகோவுக்கு எதிராகக் கொம்பு சீவிவிடும் உள்ளடி வேலைகளிலும் ஈடுபட்டி ருக்கிறார்.
கடந்த ஜூன் 28-ந் தேதி நடைபெற்ற ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு அவைத் தலைவர் என்ற முறையில் திருப்பூர் துரைசாமிக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. தலைவர் வைகோவின் பொடா சிறைவாசம், ஈழத் தமிழர் ஆதரவு செயல்பாடுகள்மீது களங்கம் கற்பித்த அவர், கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என தொண்டர்கள் கொந்தளிப்புடன் அவரை வாச-லேயே வழி மறித்ததால், அரங்கினுள் வராமல் திரும்பிச் சென்றிருக்கிறார்.
இதுகுறித்து தகவலறிந்த வைகோ, அவைத் தலைவரை செல்பேசியில் தொடர்பு கொண்டு வரவழைத்து, வாச--ருந்தே உரிய மரியாதையுடன் அழைத்து வந்து விழா மேடையில் அமரச் செய்தார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவைத் தலைவர் துரைசாமி, தொண்டர்களின் எழுச்சியைக் கண்டு, வைகோமீது எவ்வித குற்றச்சாட்டையும் கூறாமல், பொத்தாம்பொதுவாக பேசிவிட்டு அமர்ந்ததாக ம.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.