"மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!' என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலைக் கிளப்பியிருக்கிறது.
தூத்துக்குடியின் முகவரியும், அடையாளமு மான வ.உ.சி. துறைமுகம் தற்போதைய பா.ஜ.க. அமைச்சர் நிதின் கட்கரியின் பொறுப்பில் வருகிறது. 1996-ன்போது ஆரம்பிக்கப்பட்ட வ.உ.சி. போர்ட் டிரஸ்டில், பெர்த்களில் சரக்குப் பெட்டகங்கள் என்கிற கன்டெய்னர்களை கப்ப லில் லோடிங், அன்லோடிங் கையாள்கிற யூனிட் டில் நடந்த, பெட்டகங்களுக்கான நிர்ணயிக்கப் பட்ட ராயல்டி தொகையை துறைமுகத்திற்குச் செலுத்தாமல் நிலுவையாக வைத்ததுதான் விவகாரமே!
1996-ன்போது 7 பெர்த்களுடன் அமைக்கப் பட்ட துறைமுகம், 2024-ல் 1600 சரக்குக் கப்பல்கள் வந்து செல்கிற அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. மத்திய அரசுக்கான தொழில்முறை வருமான அடிப்படையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக சபை முக்கிய காரணியாகவும் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
ஆரம்ப காலங்களில் 4 லட்சம் கன்டெய்னர் கள் கையாளப்பட்டு சரக்குக் கப்பல்களில் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், வளர்ச்சி காரணமாக மாதம் ஐந்தரை லட்சம் சரக்குப் பெட்டகங்கள்வரை கையாளப்பட்டுவருகிறது. இப்படியான சரக்குப் பெட்டகங்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர், சிலோன், மலேசியா, துபாய், தெற்காசிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்துள்ளன.
"இதுபோன்ற சரக்குப் பெட்டகம் கையாளுதல், பிற வர்த்தக அலகுகள் துறைமுக சபையால் நேரடியாக நடத்தவியலாத சூழலால்,
"மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!' என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலைக் கிளப்பியிருக்கிறது.
தூத்துக்குடியின் முகவரியும், அடையாளமு மான வ.உ.சி. துறைமுகம் தற்போதைய பா.ஜ.க. அமைச்சர் நிதின் கட்கரியின் பொறுப்பில் வருகிறது. 1996-ன்போது ஆரம்பிக்கப்பட்ட வ.உ.சி. போர்ட் டிரஸ்டில், பெர்த்களில் சரக்குப் பெட்டகங்கள் என்கிற கன்டெய்னர்களை கப்ப லில் லோடிங், அன்லோடிங் கையாள்கிற யூனிட் டில் நடந்த, பெட்டகங்களுக்கான நிர்ணயிக்கப் பட்ட ராயல்டி தொகையை துறைமுகத்திற்குச் செலுத்தாமல் நிலுவையாக வைத்ததுதான் விவகாரமே!
1996-ன்போது 7 பெர்த்களுடன் அமைக்கப் பட்ட துறைமுகம், 2024-ல் 1600 சரக்குக் கப்பல்கள் வந்து செல்கிற அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. மத்திய அரசுக்கான தொழில்முறை வருமான அடிப்படையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக சபை முக்கிய காரணியாகவும் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
ஆரம்ப காலங்களில் 4 லட்சம் கன்டெய்னர் கள் கையாளப்பட்டு சரக்குக் கப்பல்களில் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், வளர்ச்சி காரணமாக மாதம் ஐந்தரை லட்சம் சரக்குப் பெட்டகங்கள்வரை கையாளப்பட்டுவருகிறது. இப்படியான சரக்குப் பெட்டகங்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர், சிலோன், மலேசியா, துபாய், தெற்காசிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்துள்ளன.
"இதுபோன்ற சரக்குப் பெட்டகம் கையாளுதல், பிற வர்த்தக அலகுகள் துறைமுக சபையால் நேரடியாக நடத்தவியலாத சூழலால், அதுபோன்ற வர்த்தக அலகுகளை தனியாருக்கு வாடகை, ராயல்டி அடிப்படையில் துறைமுக சபை அக்ரிமெண்டுடன் விட்டுள்ளது' என்கிறார்கள் துறைமுக சபை சார்ந்த அதிகாரிகள்.
அந்தக் கணக்கில்தான் சிங்கப்பூரை சென்டராகக் கொண்ட ட.ந.ஆ. நஒஈஆக எனப்படும் போர்ட் ஆஃப் சிங்கப்பூர் அதாரிட்டி, சிகால் என்கிற தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கென்று சரக்குப் பெட்டகம் கையாள்கிற வகையில் பெர்த்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
டெர்மினலில் ஒரு சரக்குப் பெட்டகம் (கன்டெய்னர்) கையாள்வதற்கு சரக்கு அனுப்புகிற பார்ட்டியிடமிருந்து இவ்வளவு தொகைதான் வசூல் செய்யவேண்டும். அப்படி கையாள்கிற சரக்குப் பெட்டகங்களுக்கு இவ்வளவு தொகை என ராயல்டியாக மாதந்தோறும் அனுப்பப்படுகிற மொத்த சரக்குப் பெட்டகங்களுக்கான ராயல்டி தொகையை நிறுவனம் துறைமுக சபைக்குச் செலுத்தியாக வேண்டும், வர்த்தக ரீதியாக இந்தந்த வருடங்களில் ராயல்டி தொகை உயர்த்தப்படும் என்பது அக்ரிமெண்ட்டின் ஷரத்துகளில் ஒன்று.
பி.எஸ்.ஏ. சிகால் இந்த சரக்குப் பெட்டகக் கையாளும் வர்த்தகத்தில் சுமார் இருநூறு தொழிலாளர்களை ஒப்பந்தக் கூலி, சம்பளம், முறையான பி.எஃப்., இ.எஸ்.ஐ. போன்றவற்றுடன் தொழிலாளர்கள் நலச் சட்டத்தின் அடிப்படையில் அமர்த்தியிருக்கிறது.
இப்படியான சரக்குப் பெட்டக கையாளு தலில் ஏற்றவும் இறக்கவும் செய்வதற்கான கட்டணங்களாக ஒரு சரக்குப் பெட்டகத்திற்கு இவ்வளவு தொகை என்று வசூல் செய்வதில், துறைமுகத்திற்கு செலுத்த வேண்டிய ராயல்டியை செலுத்திவிடும் பி.எஸ்.ஏ.சிகால். ஆரம்பத்தில் முறையாக ராயல்டியை செலுத்திவந்திருக்கிறது. அந்த வகையில் பி.எஸ்.ஏ.சிகாலின் வருமானமும் கோடிகளில் உயர்ந்திருக்கிறது.
1996-களிலிருந்து துறைமுகத்துக்கு வந்து செல்கிற கப்பல்களிலிருந்து மாதம், 4 முதல் 5 லட்சம் கன்டெய்னர்களை லோடிங், அன்லோடிங் என்ற லெவலில் கையாண்டிருக்கிறது பி.எஸ்.ஏ.சிகால். தொடர்ந்து கையாண்ட சரக்குப் பெட்டகங் களின் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் வந்திருக்கிறது.
துறைமுக சபையின் ஆரம்ப காலங்களில் பி.எஸ்.ஏ.சிகால் கையாள்கிற மொத்த சரக்குப் பெட்டகங்களுக்கான ராயல்டியை முறையாக போர்ட் டிரஸ்டிற்கு செலுத்திவந்திருக்கிறது. காலப் போக்கில் சரக்குக் கப்பல்களின் வரத்து அதிக மாகவே துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டு 7 பெர்த்திலிருந்தது 16 பெர்த்களாக உயர்ந்திருக்கிறது. இதில் மொத்த பெர்த்களையும் பி.எஸ்.ஏ.சிகால் நிறுவனத்தால் கையாள இயலாதென்பதால் துறை முக நிர்வாகம் கன்டெய்னர்களை கையாள்வதற் காக, டி.சி.டி.பி., ஜே.எம். என்கிற இரண்டு நிறுவனங் களுக்கு அக்ரிமெண்ட் விட்டிருக்கிறது. அந் நிறுவனங்கள் தற்போதுவரை கன்டெய்னர் ராயல்டியை முறையாகச் செலுத்திவருகிறதாம். ஆனால் கார்ப்பரேட் நிறுவனமோ துவக்கத்திலிருந்தே போர்ட் டிரஸ்டிற்கான ராயல்டி தொகை யை முழுமையாகச் செலுத்தாமல் பகுதியாகச் செலுத்தியதன் விளைவு, ராயல்டி பாக்கி 2,200 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இதனிடையே ராயல்டி விவகாரத்தில் பி.எஸ்.ஏ.சிகால் கோர்ட்டிற்குச் சென்றுவிட்டது. அங்கும் தங்களால் ராயல்டி செலுத்தவியலாது என்று தெரிவிக்க, இருதரப்பும் உயர்நீதிமன்றத்தில் வழக்கை நடத்த, ஒருசில வருடங்களுக்குப் பிறகு பொறுப்பை போர்ட் டிரஸ்டிடம் ஒப்படைத்து, உங்களுக்கான நிலுவைத் தொகையை வசூல் செய்துவிட்டு அவர்களை விடுவியுங்கள் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டதாகச் சொல் கிறார்கள் போர்ட் டிரஸ்டிகள். மேலும் 2,200 கோடி கடன் நிலுவையை போர்ட்டி டிரஸ்டிற்கு செலுத்தாத பி.எஸ்.ஏ.சிகால் கடந்த மாதத்திலிருந்து தனக்கான பெர்த்களின் பெட்டகக் கையாளல் தொழிலை நிறுத்திக்கொண்டதுடன், மேற்படி பெர்த்களை போர்ட் டிரஸ்டிடம் சரண்டர் செய்துவிட்டு கூடாரத்தைக் காலிசெய்வதில் தீவிரமாகிவிட்டதாம். இந்நிறுவனத்தில் வேலைசெய்த 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலையின்றியும், முறையான சம்பளம், பணக்கொடைகள் கிடைக்காமலும் திண்டாடிவருகிறார்கள்.
பி.எஸ்.ஏ.சிகால் போர்ட் டிரஸ்டிற்கு செலுத்தவேண்டிய மொத்த நிலுவைத் தொகையைச் செலுத்தாமல் ஒதுங்கப் பார்க்கிறது. தொழிலாளர்களான தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, கேள்வி கேட்பாரில்லை என்ற ஆதங்கத்தில் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதை விரிவான கண்டனப் போர்டுகளில் வெளிப்படுத்தி துறைமுகமும், தாங்களும் பன்னாட்டு நிறு வனத்தால் ஏமாற்றப்படுவதையும், மத்திய அரசு தலையிடக் கோரியும் தொழி லாளர்கள் அம்பலப்படுத்தினர்.
ஒரு சரக்குப் பெட்டகத்திற்கு துறைமுக சபை நிர்ணயித்த தொகையைத் தாண்டி நிறுவனம் அதிகப்படியாக வசூலித்த தொகை எல்லாம் எங்கே, கோடிக்கணக்கான பாக்கி ராயல்டி தொகை எங்கே போனது என்றெல்லாம் தொழி லாளர்கள் கேள்வியெழுப்பியது துறைமுக சபையில் புயலைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய வ.உ.சி. போர்ட் அதாரிட்டி, டிரஸ்டி அமைப்பின் தலைவரான பாலகிருஷ்ணன், “"பி.எஸ்.ஏ.சிகால் நிறுவனம் தரவேண்டிய ராயல்டி தொகையான 2,200 கோடியை வசூல்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று அதில் பணியாற்றிய தொழிலாளர்களின் உரிமைத் தொகை, ஊதிய நிலுவை கள், பணப் பலன்களின் தொகையும் தரப்படவேண்டும். மேலும் பி.எஸ்.ஏ.சிகால் நிறுவனம் சென்னை, விசாகப்பட்டினம் போன்ற துறைமுகங்களில் இதேபோன்று சரக்குப் பெட்டகம் கையாள்வதை மேற்கொண்டிருக்கிறது. எனவே அந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைக்க வேண்டும், மத்திய அரசு தலையிடவேண்டும், துறைமுக சபையின் நிதி இழப்பீடு சரிசெய்யப்பட வேண்டும் என்று சபைக்கும், சபையின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரிக்கும் 15-11-2024ல் விரிவான கடிதம் அனுப்பியுள்ளோம்''’என்றார்.
பி.எஸ்.ஏ.சிகால் நிறுவனத்தின் தொழி லாளர்களில் ஒருவரும் சி.ஐ.டி. யூனியனின் நிர்வாகியுமான பாஸ்கர், "சரக்குப் பெட்டகம் கையாள்வதில் சிகாலுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. ஒரு கப்பலில் 1200 முதல் 1800 சரக்குப் பெட்டகங்கள் வரை வரும். அதை நாங்கள் இரண்டரை நாட்களில் இறக்கி டெர்மினலில் வைத்துவிடுவோம். தொழிலாளர் நலச் சட்டப்படி, பி.எஃப். உள்ளிட்ட அனைத்தும் உண்டென்றாலும் சம்பளம் மட்டும் காண்ட்ராக்ட் அடிப்படைதான். என்போன்ற பல தொழிலாளர்கள் 22 வருடமாக வேலைபார்ப்பவர்கள். ஆறு வருடமாக ஊதிய உயர்வு தரப்படலை. வேலையின்போது அரைமணி நேரம் அனுமதியின் பேரில் வெளியே சென்றாலும் 2 நாள் சம்பளத்தைப் பிடித்துவிடுவார்கள். இப்ப கம்பெனி தன், செயல்பாட்ட நிப்பாட்டிருச்சு. எங்க பி.எஃப்., பண பலன் கிராஜூட்டி தொகைகள், ஊதிய பாக்கிகள் கிடைக்குமா என்கிற சந்தேகம். இதை நம்பி பல தொழிலாளர்கள் வீடுகளில் சரியா அடுப்பெரியலை. கடன்காரன் களா தெருவுல நிக்கோம். கோர்ட் வரைக்கும் போயிட்டோம். நீதி யில்லை''’என்றார் வலியும் வேதனையு மாய்.
நாம் இதுகுறித்து பி.எஸ்.ஏ.சிகால் நிறுவனத்தின் அட்மின் சிவன்ராஜைத் தொடர்புகொண்டு கேட்டதில், ஆரம்பத்தில் தமிழில் பேசி யவர், பின்னர் ஆங்கிலத் திற்கு மாறினார். “"கேஸ், சுப்ரீம் கோர்ட் லீகல் புரொசீடிங்கிலிருக் கிறது... அதைப் பற்றிப் பேசக்கூடாது''” என்று முடித்துக்கொண்டார்.
-ப.இராம்குமார்