எடப்பாடி பழனிச்சாமியின் பினாமி காண்ட்ராக்டர்களான செய்யாதுரை, ஈரோடு ராமலிங்கம், கோவை கே.சி.பி. கன்ஸ்ட்ரக் சன் வரிசையில் பாண்டித்துரையை தற்போது வளைத்திருக்கிறது ஒன்றிய அரசின் வருமானவரித் துறை. பாண்டித்துரையின் காண்ட்ராக்ட் விவகாரங்கள் குறித்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமே விரிவாக நக்கீரனில் எழுதியிருந்தோம். ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது ரெய்டு நடத்தியிருக்கிறார்கள் வருமானவரித்துறையினர்.
தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டரான பாண்டித்துரையை குறி வைத்து அவர் தொடர்புள்ள இடங் களில் வருமானவரித்துறையினர் நடத்திய 3 நாள் தொடர் ரெய்டில் 3,000 கோடிக்கும் அதிகமான டாகுமெண்டுகள், கணக்கில் காட்டப்படாத கோடிகள் சிக்கியிருப்பது எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இதுகுறித்து வருமானவரித்துறை, நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்களில் தீவிர விசாரணையில் இறங்கினோம்.
நம்மிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ’"நெடுஞ்சாலைத் துறையில் சாதாரண ஒரு ஊழியராக வேலை பார்த்து வந்த பாண்டித்துரையின் அப்பா மரண மடைந்ததால், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் வேலை பாண்டித்துரைக்கு கிடைத்தது. வேலை கிடைத்த சில மாதங்களிலேயே காண்ட்ராக்டர்கள் பலரின் நெருக்கம் கிடைத்தது.
அவர்கள் மூலம் காண்ட்ராக்ட்டின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொண்ட பாண்டித்துரை, தனக்கு நெருக்க மான காண்ட்ராக்டர்களை வைத்து, சாலைகளுக்கு வர்ணம் பூசுதல், சாலைகளுக்கு நடுவே கேட்ஸ் ஐ மற்றும் ஸ்டட் பொருத்துதல் உள்ளிட்ட வேலை களை எடுத்தார். கணிசமான லாபம் கிடைக்க, நெடுஞ் சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் நெருங்கும் வாய்ப்பும் ஒரு கட் டத்தில் பாண்டித்துரைக்கு கிடைத்தது. அதன் மூலம் காண்ட்ராக்
எடப்பாடி பழனிச்சாமியின் பினாமி காண்ட்ராக்டர்களான செய்யாதுரை, ஈரோடு ராமலிங்கம், கோவை கே.சி.பி. கன்ஸ்ட்ரக் சன் வரிசையில் பாண்டித்துரையை தற்போது வளைத்திருக்கிறது ஒன்றிய அரசின் வருமானவரித் துறை. பாண்டித்துரையின் காண்ட்ராக்ட் விவகாரங்கள் குறித்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமே விரிவாக நக்கீரனில் எழுதியிருந்தோம். ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது ரெய்டு நடத்தியிருக்கிறார்கள் வருமானவரித்துறையினர்.
தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டரான பாண்டித்துரையை குறி வைத்து அவர் தொடர்புள்ள இடங் களில் வருமானவரித்துறையினர் நடத்திய 3 நாள் தொடர் ரெய்டில் 3,000 கோடிக்கும் அதிகமான டாகுமெண்டுகள், கணக்கில் காட்டப்படாத கோடிகள் சிக்கியிருப்பது எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இதுகுறித்து வருமானவரித்துறை, நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்களில் தீவிர விசாரணையில் இறங்கினோம்.
நம்மிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ’"நெடுஞ்சாலைத் துறையில் சாதாரண ஒரு ஊழியராக வேலை பார்த்து வந்த பாண்டித்துரையின் அப்பா மரண மடைந்ததால், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் வேலை பாண்டித்துரைக்கு கிடைத்தது. வேலை கிடைத்த சில மாதங்களிலேயே காண்ட்ராக்டர்கள் பலரின் நெருக்கம் கிடைத்தது.
அவர்கள் மூலம் காண்ட்ராக்ட்டின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொண்ட பாண்டித்துரை, தனக்கு நெருக்க மான காண்ட்ராக்டர்களை வைத்து, சாலைகளுக்கு வர்ணம் பூசுதல், சாலைகளுக்கு நடுவே கேட்ஸ் ஐ மற்றும் ஸ்டட் பொருத்துதல் உள்ளிட்ட வேலை களை எடுத்தார். கணிசமான லாபம் கிடைக்க, நெடுஞ் சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் நெருங்கும் வாய்ப்பும் ஒரு கட் டத்தில் பாண்டித்துரைக்கு கிடைத்தது. அதன் மூலம் காண்ட்ராக்ட் பணிகளை விரிவுபடுத்திக் கொண்டார். எடப்பாடி பழனிச் சாமி கொடுத்த தைரி யத்தில் நெடுஞ்சாலைத்துறையின் வேலையை உதறி விட்டு, 2017-ல் ஹரிவே லைன்ஸ் பிரைவேட் லிமி டெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார் பாண்டித் துரை. முழுநேர காண்ட்ராக் டரானார். பாண்டித்துரை காட்டில் பணம் கொட்டோ கொட்டென கொட்டியது.
நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கான டெண்டர் களை எடுப்பதற்கு தமி ழகத்தை சில மண்டலங் களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு பினாமி காண்ட்ராக்டரை உருவாக்கி வைத்திருந்தார் எடப்பாடி. அதாவது, பினாமி களின் ராஜ்ஜியமாகவே இருந்தது நெடுஞ்சாலைத் துறை. ஆனால், மண்டலவாரியான பினாமிகளை விட பாண்டித்துரைக்கு கூடுதல் புரமோசன் கொடுத்திருந்தார் எடப்பாடி.
அதாவது, சாலைப்பணிகள் மற்றும் அதன் பராமரிப்புப் பணிகளுக்கான டெண்டர்களை தனது பினாமிகளுக்கு பிரித்துத் தந்தார் எடப்பாடி. ஆனால், அதே சாலைகளில் சைன் போர்டுகள் அமைத்தல், எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் அமைத்தல், ஒளிரும் விளக்குகள் பொருத்துதல், சாலைகளின் நடுவே வண்ணக்கோடுகள் வரைதல், சாலைகளின் ஓரங்களில் உலோகத்திலான தகர தடுப்பு வேலிகள் அமைத்தல் உள்ளிட்ட உபகரண டெண்டர்களை ஒரே குடையின் கீழ் ஒருங் கிணைத்து அதனை ஒட்டுமொத்தமாக பாண்டித் துரையின் ஹரிவே லைன்ஸ் நிறுவனத்துக்கு கிடைக்கச் செய்தார் எடப்பாடி. இந்த டெண்டரை தமிழகத்தில் எடுக்கும் ஒரே காண்ட்ராக்டர் பாண்டித்துரைதான்.
இந்த உபகரண டெண்டர் மட்டும் மண்டலவாரியாக பிரிக்கப்படாமல் பாண்டித் துரையிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது. இந்த பணிகளுக்கான டெண்டரில் பாண்டித்துரையின் ஹரிவே லைன்ஸ் நிறுவனமும், வேறு சில 3 காண்ட்ராக்ட் கம்பெனியும் கலந்து கொள்ளும். அந்த 3 காண்ட்ராக்டர்களும் பாண்டித்துரையின் ஆட்கள் தான்.
டெண்டரில் குறிப்பிட்ட ஒரு விலைப் புள்ளியை பாண்டித்துரை கோட் பண்ணியிருப் பார். பாண்டித்துரையின் விலையை விட மற்ற 3 காண்ட்ராக்டர்களும் கொஞ்சம் அதிகமாக விலை கோட் பண்ணியிருப்பார்கள். டெண்டர் முடிவில் குறைந்த விலைப்புள்ளி கோரியிருந்த பாண்டித் துரையின் நிறுவனத்துக்கே டெண்டர் ஒதுக்கப்படும். டெண்டர் பெற்றதற்கு பிறகு அந்த 3 காண்ட்ராக்டர்களுக்கு சில பணிகளை ஒதுக்கித் தந்துவிடுவார் பாண்டித்துரை.
இப்படித்தான் பாண்டித்துரைக்கு காண்ட் ராக்ட் கிடைக்கும். இதற்கான பங்குத்தொகையை எடப்பாடி பழனிச்சாமியின் விருப்பத்திற்கேற்ப சேர வேண்டிய இடத்தில் சேர்த்துவிடுவார். மேலும், பங்கின் ஒரு பகுதி தொகையை பாண்டித்துரையிடமே இருக்க வைத்து அந்த தொகையை டெண்டரின் முதலீடாகவும் செய்யவைப்பார் எடப்பாடி. அந்த வகையில், பாண்டித்துரை எடப்பாடியின் பினாமியாகவும் செயல்பட்டிருக்கிறார்''’என்று சுட்டிக்காட்டு கிறார்கள் நெடுஞ்சாலைத்துறையினர்.
மேலும் நாம் விசாரித்தபோது,”"சாலை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் ஆண்டுக்கு 5,000 கோடி என அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில் 50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், சாலைப் பாதுகாப்புக்காக மட்டும் 4,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த 4,000 கோடியில் 50 சதவீதம் கூடுதல் மதிப்பீடு என்பதால் 2,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
அதாவது, சாலை உபகரணங்களின் விலையை சந்தை மதிப்பை விட இரு மடங்கு அதிகமாக, எடப்பாடியின் தலைமையில் இயங்கிய நெடுஞ் சாலைத் துறையின் தலைமைப் பொறியாளர்களான சாந்தி, கோதண்டராமன், கீதா, பாலமுருகன் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுவினர்தான் நிர்ண யித்துள்ளனர். குறிப்பாக, சாலைகளில் அமைக்கப் படும் எச்சரிக்கை பலகைகள் வெளிச்சந்தையில் அதிகபட்சம் 3,000-த்திற்கு கிடைத்தது. அதனை 8,000 முதல் 10,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர்.
சாலைகளில் 1 மீட்டருக்கு வண்ணக் கோடுகள் வரைய 300-க்கு பதிலாக 800 ரூபாய் கொடுத்துள்ளனர். சாலையின் நடுவே பொருத்தும் ஒளிரும் விளக்கு ஒன்று 50 ரூபாய். இதற்கு 200 ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இது மட்டுமல்லா மல், 1 கிலோமீட்டருக்கு 200 விளக்கு கள் பொருத்தப்பட வேண்டியிருந்தால் அதில் 100 விளக்குகள்தான் பொருத்தினர்.
உபகரணங்கள் அனைத்தும் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட தரம் குறைந்த பொருட்கள். இதனால் குறைந்தது 10 ஆண்டுகள் வரை ஒளிரும் தன்மையுடன் இருக்க வேண்டிய பலகைகள் ஒரே வருடத்தில் ஒளிரும் தன்மையை இழந்தன. மேலும், பொருட்களை வழங்கிய நிறுவனத்திடமிருந்து 10 ஆண்டுகளுக்கான தரச்சான்றிதழ் பெரும்பாலும் பெறப்படவில்லை. ஆனால் பணப்பட்டுவாடா மட்டும் பாண்டித்துரை நிறுவனத்துக்கு செய்துள்ளது நெடுஞ்சாலைத்துறை.
ஆக, உபகரண டெண்டரில் இப்படித்தான் எல்லா வகையிலும் பாண்டித்துரையின் ஊழல்கள் எடப்பாடி ஆட்சியில் பெருத்திருந்தன. எடப்பாடி யின் ஊழல்களுக்கு துணைபோன தலைமைப் பொறியாளர்களாக, கண்காணிப்புப் பொறியாளர் களாக, கோட்டப் பொறியாளர்களாக இருந்த அதிகாரிகள் யாருமே தி.மு.க. ஆட்சியிலும் தண்டிக் கப்படாமல் உயர் பொறுப்பில் இருப்பதுதான் துரதிர்ஷ்டம். இந்த சூழலில், பாண்டித்துரைக்கு எதிராக ரெய்டு நடத்தியிருக்கிறது ஒன்றிய அரசின் வருமானவரித்துறை''’என்றும் விவரிக்கின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்காக நீதிமன்றங்களில் போராடிவரும் சமூக ஆர்வலரும் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவருமான வழக்கறி ஞர் ரவியிடம் இது குறித்து கேட்டபோது, ’"வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த் திருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில்தான் பாண்டித்துரைக்கு எதிராக ரெய்டு நடந்திருக்கிறது. ஐ.டி. ரெய்டில் கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கினால் அதற்குரிய தண்ட கட்டணத்தை கட்டிவிட்டால் போதும். வேறு எந்த நட வடிக்கையும் எடுக்கமாட்டார்கள்.
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் வளர்க்கப் பட்டவர்தான் பாண்டித்துரை. இந்த ரெய்டில் சிக்கிய ஆவணங்கள், கோடிகள் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று பரவலாக சொல் லப்பட்டாலும், வெறும் ஐ.டி. ரெய்டு மட்டுமே எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தாது. பாண்டித் துரையின் தொடர்புள்ள இடங்களில் கிடைத்த ஆவணங்களை வைத்து, ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை, ஜி.எஸ்.டி. இயக்குநரகம், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவை இதில் கவனம் செலுத்தினால் மட்டுமே எடப்பாடி சிக்குவார். எடப்பாடி தண்டிக்கப்பட வேண்டும் என உண்மையாகவே தி.மு.க. அரசு நினைத்தால் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முறையான டைரக்ஷன் கொடுக்கப் பட வேண்டும். அத்தகைய டைரக் ஷனை முதல்வர் ஸ்டாலின் கொடுப் பாரா?'' என்கிறார் மிக அழுத்தமாக ரவி.
வருமான வரித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "எடப்பாடிக்கு செக் வைக்கவே பாண்டித்துரை வளைக்கப்பட்டிருக்கிறார். சுமார் 2,000 கோடி ரூபாய் விவகாரம் இதில் உள்ளது. ஐ.டி. ரெய்டோடு இந்த விவகாரம் முடிந்துவிடாது. ரெய்டில் சிக்கிய டாகுமெண்டுகளையும் கணக்கில் காட்டப்படாத கோடிகளையும் வருமானவரித் துறையோடு இணைந்து அமலாக்கத்துறையும் ஆராய்ந்து வருகிறது. இது குறித்து தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து பாண்டித்துரையை விசா ரணைக்கு அழைக்க அமலாக்கத்துறை திட்டமிட் டுள்ளது. அந்த விசாரணையின் முடிவில் எடப்பாடி சிக்குவார். பாண்டித்துரை விவகாரத்தில் தி.மு.க. அரசுக்கு எதிரான சில வில்லங்கங்களும் இருக் கின்றன''’என்கிறார்கள் வருமானவரித்துறையினர்.