20 ஆண்டுகால தீண்டாமைச்சுவர்! 2 மணி நேரத்தில் தகர்த்த கனிமொழி!

wall

ரு சமூகத்தைப் பிரிக்கும் வகை யில் எழுப்பப்பட்ட தீண்டாமைச் சுவரை 2 மணி நேரத்தில் இடித்து, 20 ஆண்டுகால பிரச்சனையை சரிசெய்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி.

பிப்ரவரி 10, மாலை நேரம். திருப்பூர் அவிநாசி சாலையிலுள்ள பப்பிஸ் திருமண மண்டபத்தில் டையிங் தொழில் செய்பவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தது எம்.பி. கனிமொழி தலைமையிலான தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு. அப்போது, "அரசாங்க ரோட்டில் சுவரைக் கட்டி வச்சுட்டு எங்களை சுற்றி நடக்கவிடுறாங்க.. 6 அடி உயர தீண்டாமைச் சுவரை ஏறிக் குதித்துதான் போகணும். அதிகார

ரு சமூகத்தைப் பிரிக்கும் வகை யில் எழுப்பப்பட்ட தீண்டாமைச் சுவரை 2 மணி நேரத்தில் இடித்து, 20 ஆண்டுகால பிரச்சனையை சரிசெய்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி.

பிப்ரவரி 10, மாலை நேரம். திருப்பூர் அவிநாசி சாலையிலுள்ள பப்பிஸ் திருமண மண்டபத்தில் டையிங் தொழில் செய்பவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தது எம்.பி. கனிமொழி தலைமையிலான தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு. அப்போது, "அரசாங்க ரோட்டில் சுவரைக் கட்டி வச்சுட்டு எங்களை சுற்றி நடக்கவிடுறாங்க.. 6 அடி உயர தீண்டாமைச் சுவரை ஏறிக் குதித்துதான் போகணும். அதிகாரிகள் முதல் அத்தனை பேரும் இந்த சுவருக்கு முட்டுக்கொடுக்குறாங்க.. இந்த தீண்டாமைச் சுவருக்கு ஒரு வழி செய்யுங்க அக்கா'' என எம்.பி. கனிமொழியிடம் சேயூர் தேவேந்திரன் நகர் மனோன் மணி கோரிக்கை வைக்க, "இந்தக் காலத்திலும் தீண்டாமையா?'' என உறைந்த கனிமொழி, நிதான மாக கோரிக்கையினைக் கேட்க லானார்.

ww

ww

திருப்பூர் மாவட்டம் சேயூர் - குன்னத்தூர் சாலையின் ஓரத்தில் அமைந் திருக்கின்றது தேவேந்திரன் நகர். இந்த நகரின் ஒரு பக்கமாய் இருக்கின்றது 2006-ல் லேஅவுட் போடப்பட்டு கட்டப் பட்ட வி.ஐ.பி. கார்டன் நகர். தங்களுடைய பாதுகாப்பிற்கு வேண்டுமென வி.ஐ.பி. நகர் குடியிருப்பு வாசிகளால் கட்டப்பட்டது 1 கி.மீ. நீளமும் 6 அடி உயரமுள்ள நவீன தீண்டாமைச் சுவர்.

எம்.எல்.ஏ. நிதியிலிருந்து கட்டப் பட்ட ஊராட்சி சாலையைக் கிழித்துப் போட்டாற்போல் சாலையிலேயே சுவரை எழுப்பியிருக்கின்றனர் வி.ஐ.பி. கார்டன் நகர் மனைவாசிகள்.

"இங்க இருக்கின்ற 90 சதவிகிதத் தினர் இங்குள்ள பனியன் கம்பெனி தொழி லாளர்களே. வேலைக்குப் போக இந்த சுவரைச் சுற்றித்தான் போகவேண்டும். ஒரு கிலோமீட்டர் என்பது சாதாரண தொலைவா என்ன? அப்படி இல்லை என்றால் இந்த சுவரை ஏறிக் குதித்துதான் செல்லவேண்டும். பக்கத்துல இருக்கின்ற ரவுண்டானா விற்கு போய் பஸ் ஏறணும்னா 2 நிமி ஷம்தான். அது போல் எட்டிப் பார்க்கின்ற அளவில் இருக்கின்ற ரேஷன் கடைக்கு சுற்றித்தான் போகணும். கடந்த நவம்பர் மாதத்தில் இது நவீன தீண்டாமைச் சுவர்தான் என உறுதி செய்த மாவட்ட நிர்வாகம் அதனை இடிக்க உத்தர விட்டது. உத்தரவு ஏட்டளவில்தான் இருக் கின்றது. 20 வருஷமாகப் போராடி வர்றோம். பலனில்லை'' என்பது தேவேந்திரன் நகர் மக்களின் 20 வருட கோரிக்கை.

உடனடியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை அழைத்து, "அவிநாசி ஒன்றியம் சேயூர் ஊராட்சியில் தீண்டாமைச் சுவர் இருப்பதை நீங்களே உறுதி செய்திருக் கீங்க! அப்புறம் ஏன் அதனை அகற்றவில்லை. உடனே அதனை அகற்றணும். நாளைக்கு என சாக்குப்போக்கு வேண்டாம்'' என கனிமொழி கூறிய நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத் தில் நீண்ட சுவரில் 20 அடி நீள அளவில் சுவர் இடிக்கப்பட் டது. "சுவர்கள் அனைத்தும் முழுமை யாக இடிபடணும். தொடர்ந்து பாருங்க. இதில் மாறுதல் இருந் தால் உடனே என்னை அழை யுங்கள்'' என தன்னைச் சுற்றி இருந்த சேயூர் தேவேந்திரன் நகர் மக்களிடம் கூறி நம்பிக்கையுடன் அவர்களை அனுப்பி வைத்தார் எம்.பி. கனிமொழி.

20 ஆண்டு காலமாக வேறு வழியில்லாமல் சகித்துக்கொண்டு தீண்டாமைச் சுவரை சுற்றிச் சுற்றிச் சென்ற அப்பகுதி மக்கள், "தற்போது நிம்மதியுடன் நடமாட இரண்டே மணி நேரத்தில் வழி ஏற்படுத்தியுள்ளார் கனிமொழி எம்.பி.' என்று மகிழ்வோடு கூறுகின்றனர்.

ww

nkn170224
இதையும் படியுங்கள்
Subscribe