சி.எம்.கிட்ட பேசிட்டார் அமைச்சர் போஸ்டிங்குக்கு 2 லட்சம் முதல்வர் செக்யூரிட்டி ஆஃபீஸர் மனைவியின் ஆடியோ அம்பலம்!

dd

ண் நர்ஸுகளின் பணி நிரந்தரத்துக்காக தலா 4 லட்ச ரூபாய் என 8 கோடி ரூபாய் வசூல்வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் பிரத்யேக தகவலை நக்கீரன் ஆவணங்களுடன் அம்பலப்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே, "பெண் நர்ஸ் பணியிடத்துக்காக 2 லட்ச ரூபாய்வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். அமைச்சர்கிட்ட பேசிட்டேன், அவர் சி.எம்.கிட்ட பேசிட்டாரு'’என்று முதலமைச்சரின் செக்யூரிட்டி ஆபீஸர் செல்வத்தின் மனைவியும், தமிழ்நாடு யுனைடெட் எம்.ஆர்.பி. நர்சஸ் அசோசியேஷனின் செயலாளருமான ஐஸ்வர்யா பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

m

இந்த ஆடியோவில் திருச்சியைச் சேர்ந்த நர்ஸ் ஏஞ்சல் மேரியின் கணவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஐஸ்வர்யாவிடம் பேசுகிறது ஆண் குரல். அதில், எம்.ஆர்.பி. (Medical Services Recruitment Board) எனப்படும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியமே தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறுகிறார் ஐஸ்வர்யா. நர்ஸிங் பணியை விட முழுக்க முழுக்க லஞ்சப்பணம் வசூல்வேட்டையில் இருப்பதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். மேலும், அமைச்சருக்கு நெருக்கமானவர் என்றும் கூறுகிறார்.

இதுகுறித்து, விசாரணை நடத்தினாலே யார், யாரெல்லாம் புரோக்கர்களாக செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். அந்த நீண்ட ஆடியோவில் உள்ள உரையாடலின் முக்கியப் பகுதிகள் இவை...…

ஐஸ்வர்யா: ஹலோ...

ஏஞ்சல் மேரியின் கணவர் என்று சொல்லும் ஆண் குரல்: மேடம் வணக்கம் மேடம் சாரி, மேடம் கால் கட் ஆகிடுச்சு.

ஐஸ்வர்யா: சொல்லுங்க யாரு?

ஆண் குரல்: திருச்சியிலேர்ந்து பேசுறேன் மேடம்

ஐஸ்வர்யா: சொல்லுங்க

ஆண் குரல்: வைஃப் பேரு ஏஞ்சல் மேரி மேடம். எம்.ஆர்.பி. செலக்ட் ஆகிட்டாங்க. அதான், முன்னுக்கூட்டியே கொஞ்சம் இடம் வேணும் மேடம்.

ஐஸ்வர்யா: எங்க வேணும் திருச்சியில?

ஆண் குரல்: திருச்சி ஜி.ஹெச் மேடம்

ஐஸ்வர்யா: எனக்கு ஒரு லெட்டர் எழுதிக் கொடுக்கிறீங்களா? ஒண்ணேகால் இல்ல ஒன்றரை அந்தமாதிரி ஆகும்

ஆண்

ண் நர்ஸுகளின் பணி நிரந்தரத்துக்காக தலா 4 லட்ச ரூபாய் என 8 கோடி ரூபாய் வசூல்வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் பிரத்யேக தகவலை நக்கீரன் ஆவணங்களுடன் அம்பலப்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே, "பெண் நர்ஸ் பணியிடத்துக்காக 2 லட்ச ரூபாய்வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். அமைச்சர்கிட்ட பேசிட்டேன், அவர் சி.எம்.கிட்ட பேசிட்டாரு'’என்று முதலமைச்சரின் செக்யூரிட்டி ஆபீஸர் செல்வத்தின் மனைவியும், தமிழ்நாடு யுனைடெட் எம்.ஆர்.பி. நர்சஸ் அசோசியேஷனின் செயலாளருமான ஐஸ்வர்யா பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

m

இந்த ஆடியோவில் திருச்சியைச் சேர்ந்த நர்ஸ் ஏஞ்சல் மேரியின் கணவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஐஸ்வர்யாவிடம் பேசுகிறது ஆண் குரல். அதில், எம்.ஆர்.பி. (Medical Services Recruitment Board) எனப்படும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியமே தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறுகிறார் ஐஸ்வர்யா. நர்ஸிங் பணியை விட முழுக்க முழுக்க லஞ்சப்பணம் வசூல்வேட்டையில் இருப்பதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். மேலும், அமைச்சருக்கு நெருக்கமானவர் என்றும் கூறுகிறார்.

இதுகுறித்து, விசாரணை நடத்தினாலே யார், யாரெல்லாம் புரோக்கர்களாக செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். அந்த நீண்ட ஆடியோவில் உள்ள உரையாடலின் முக்கியப் பகுதிகள் இவை...…

ஐஸ்வர்யா: ஹலோ...

ஏஞ்சல் மேரியின் கணவர் என்று சொல்லும் ஆண் குரல்: மேடம் வணக்கம் மேடம் சாரி, மேடம் கால் கட் ஆகிடுச்சு.

ஐஸ்வர்யா: சொல்லுங்க யாரு?

ஆண் குரல்: திருச்சியிலேர்ந்து பேசுறேன் மேடம்

ஐஸ்வர்யா: சொல்லுங்க

ஆண் குரல்: வைஃப் பேரு ஏஞ்சல் மேரி மேடம். எம்.ஆர்.பி. செலக்ட் ஆகிட்டாங்க. அதான், முன்னுக்கூட்டியே கொஞ்சம் இடம் வேணும் மேடம்.

ஐஸ்வர்யா: எங்க வேணும் திருச்சியில?

ஆண் குரல்: திருச்சி ஜி.ஹெச் மேடம்

ஐஸ்வர்யா: எனக்கு ஒரு லெட்டர் எழுதிக் கொடுக்கிறீங்களா? ஒண்ணேகால் இல்ல ஒன்றரை அந்தமாதிரி ஆகும்

ஆண் குரல்: ஓகே மேடம். எடம் கிடைச்சதுன்னா டிரான்ஸ்ஃபருக்கு எவ்ளோ ஆகும்?

ஐஸ்வர்யா: ஆக்ஷுவலா இன்னும்கூட போகும். ஸ்ட்ரெயிட்டா போகும்போது போட்டீங்கன்னா இந்த அமவுண்ட் வரும். அதுக்கப்புறம் ஒண்ணேமுக்கால் ரெண்டுக்கு போகும்.

mm

ஆண் குரல்: ஓ.கே. மேடம்... அதான் முன்கூட்டியே கிடைக்கும்ங்களா?

ஐஸ்வர்யா: போடுறப்பவே, நேரடியா அந்த ப்ளேஸ்க்கே வர்ற மாதிரி பண்ணிடலாம். அட்வான்ஸ் மட்டும் 20,000 ரூபாய் வரும். அதைக் குடுத்து வெச்சிட்டா, ஆர்டர் போட்டு ஒரு காப்பி உங்களுக்கு அனுப்பும் முன்னாடியே, என் மூலமா பண்ணுனீங்கன்னாவே நானே ஒரு காப்பி உங்க ளுக்கு தந்துருவேன். ஆர்டர் போட்டு தந்ததுக்கப்புறம் காசை கட்டணும். உங்களுக்கு வேணாம்னு சொன்னீங்கன்னா, பிராசஸ் ஆகும்போதே சொல் லிடணும். இல்ல…நீங்க கேட்ட இடம் அவங்களுக்கு கம்ஃபோர்ட்டபுளா இல்லங்கன்னா, இந்த இடத்த கொடுக்க முடியலைன்னா அந்த இடத்துக்கு ஆர்டர் போட முடியலைன்னா கொடுத்த அட்வான்ஸை (20,000 ரூபாய்) ரீஃபண்ட் பண்ணிடுவாங்க.

ஆண் குரல்: சார்கூட ஏதோ பண்றாருன்னு சொன்னாங்க. பேரு தெரில சீதா ராமனா...?

ஐஸ்வர்யா: அப்படியா? அவங்க எல்லோருமே இண்டிஜிவல்ஸ் (தனிப்பட்டவர்கள்) புரியுதுங்களா? உங்களுக்கு அவங்க எல்லாம் தனி ஆட்கள். சீதாராமன் சாதாரண ஸ்டஃப் நர்ஸு.

ஆண் குரல்: ஓ.கே. மேடம்.

mm

ஐஸ்வர்யா: இப்போ அவன், ஒருவேளை அவரு காசை திருப்பிக் கொடுக்கலைன்னாலோ ஆர்டர் போடலைன்னாலோ அவனை நீங்க கேட்க முடியாதில்ல. இப்போ, நாங்கன்னு வெச்சுக் கோங்களேன். அசோசியேஷன் இருக்கு. கவர்ன்மெண்ட் கூட லிங்குல இருக்கிறவங்க. நான், ஒரு லீடரு. இங்கேதான் இருக்கப்போறேன். டோட்டல் எம்.ஆர்.பிக்கு இன்சார்ஜா ஒர்க் பண்ணிக்கிட்டுதான் இருக்கப்போறோம். நாளைக்கே, ஒர்க் ப்ளேஸ்ல பிரச்சனைன்னாக்கூட எங்களால சால்வ்பண்ணிக் கொடுக்கமுடியும். ஆனா, அவங்க பிரைவேட்டா இருப்பாங்க. அப்போ, அவங்களுமே பேப்பரைக் கொண்டுவந்து எங்ககிட்டதான் கொடுப்பாங்க. கொடுத்து, எங்ககிட்ட போட்டுத் தரச் சொல்லுவாங்க. சீதாராமன் பிரதர் எங்கிட்டதான் கொண்டுவரு வாரு. செந்தில்நாதன் பாதி எங்கிட்ட தான் கொண்டு வருவாரு. அப்போ, அவங்க கொஞ்சம்கூட காசு வெச்சு ஒண்ணேமுக்கா ரெண்டுக்கு முடிச்சுத் தருவாங்க.

ஆண் குரல்: அவங்களுக்கு கொஞ்சம் கன்ஃபியூஷன் இருந்துச்சு. டைரக்டா பண்றாங்களா? எப்படி?

ஐஸ்வர்யா: டைரக்ட் டுன்னா இன்னும் ரெண்டு மூணு நாள்ல லிஸ்ட் வந்துடும். ஆர்டர் பிரிப் பேர் பண்ணுவாங்க. அதுக்கப்புறம் இன் னைக்குத்தான் போயி பேசிட்டு வந்திருக்குது அமைச்சர்கிட்ட. அவரு, சி.எம்.கிட்ட பேசிட் டாப்பல. ஓ.கே. சொல்லிட்டாரு. ஃபங்ஷனா வெச்சு மொத்தமா அத்தனை பேரையும் உள்ளதான் வரசொல்லப் போறாங்க. அந்த, 2500 பேரையும் நாங்கதான் ரேங் லிஸ்ட் பண்ணப் போறோம்.

ஆண் குரல்: ஓ.கே. மேடம். நீங்க சென்னையில ஒர்க்குல இருக்கீங்களா?

ஐஸ்வர்யா: ஆமா, நாங்க சென்னைதான். 2500 பேரு வர்றீங்கன்னா, அவங்க எல்லாரையும் டி.எம்.எஸ்ஸுக்கு கூட்டிக்கிட்டு வந்து. மொத்தமா நாங்கதான் கூட்டிக்கிட்டுப் போவோம்.

ஆண் குரல்: ஓ.கே. மேடம். வந்துடுறேன் மேடம். எந்த இடத்துல மேடம் ஒர்க் பன்றீங்க? நேராகூட வந்து பார்த்துடலாம்.

ஐஸ்வர்யா: நானா, நான் டிஸ்பென்சரி. என்னை ஜாப்புல நீங்க பார்க்கவே முடியாது. அங்கங்க போற வேலைதான் பார்ப்பேன்.

ஆண் குரல்: அப்படீங்களா?

ஐஸ்வர்யா: அதுதான் சொல்றேன்ல... எம்.ஆர்.பி. இருக்காங்கள்ல? எம்.ஆர்.பி.யில இருக்கிறவங்க எல்லாத்துக்கும் சேர்த்து அசோசியேஷன்தான். அசோசியேஷன் ஸ்டேட் செகரட்டரி. அதனால, ரெகுலர் பையன்களுக்கு ஆர்டர் போட்டுக்கிட்டிருக்கேன். உங்க வேலை மட்டுமில்ல. எல்லா வேலையும் நாங்க பார்ப்போம். எட்டாயிரத்துக்கு மேல இருக்கிறவங்கள வெளியில போகச் சொல்லியிருக்காங்க. கேஸ் நடத்துறோம்.

ஆண் குரல்: வைஃபோட ஃப்ரெண்ட்ஸ் சொல்லிக்கிட்டாங்களாம். அமைச்சருக்கு ரொம்ப வேண்டப் பட்டவங்க. கரெக்டா பண்ணிக்கொடுப் பாங்கன்னு சொன்னாங்களாம்.

ஐஸ்வர்யா: ஆமாம்... ஆல்ரெடி எம்.ஆர்.பியா இருக்காங்க பார்த்தீங்களா? ஸ்டாஃப் நர்ஸு. அவங்கக்கிட்ட விசாரிச் சீங்கன்னாவே சொல்லுவாங்க.

ஆண் குரல்: அதான் மேம். டைரக்ட்டா பண்ணுவீங்கன்னு சொல்லித் தான் நம்பர் வாங்கி ஃபோன் அடிச்சேன்.

ஐஸ்வர்யா: எங்களுக்கு எதுவும் பயம் கிடையாது. ஏன்னா, என் ஹஸ்பண்டே சி.எம். ஆபீஸ்தான்.

ஆண் குரல்: சி.எம். ஆபீஸுல ஒர்க் பண்றாருங்களா.

ஐஸ்வர்யா: ஆமாம், சி.எம். ஆபீஸுலதான் ஸ்குவாடு.

ஆண் குரல்: ஏன்னா உங்கள நான் பார்த்தது கிடையாது. அதனாலதான், சரி...…

ஐஸ்வர்யா: ஆமாம், அதுதான் சொல்றேன். ஆக்சுவலா சொல்றீங்கள்ல்ல. நீங்க பார்க்காட்டி. யாராவது ஒரு இண்டிஜிவல். கவர்ன்மெண்ட் ஒரு ஃபங்ஷன் வெச்சா நர்ஸிங் என்ன பிரச்சனைன் னாலும் முன்னாடி வந்து நிற்கப்போறோம். யார்கிட்ட என்னைய பற்றி கேட்டாலும் தெரியும். டி.எம்.எஸ்ஸுல கேட்டாலும் என்னைய தெரியும். மினிஸ்டர் ஆபீஸ்ல கேட்டாலும் தெரியும். நர்ஸிங் சம்பந்தமா எங்க கேட்டாலும் என்னைய தெரியும். அதுக்காக, சொல்றேங்க.

ஆண் குரல்: நம்ப சாரு, சி.எம்.கிட்ட இருக்கிறாருன்னு சொன்னீங்களே.

ஐஸ்வர்யா: ஆமாம். ஆக்சுவலா டென் இயர்ஸா இருக்காங்க.

ஆண் குரல்: ஓ.கே. தேங்க்யூ மேடம்.

ஐஸ்வர்யா: அவுங்க எஸ்.பி.சி.ஐ.டி.

ஆண் குரல்: செந்தில்நாதன் சார் எல்லாம் பண்றதா சொன்னாங்க மேடம்.

ஐஸ்வர்யா: இல்ல இல்ல... அவருக்கும் இதுக்கும் சுத்தமா ஒரு துளிகூட சம்பந்தம் கிடையாது. அதான் சொல்றேனே, அவர் வேணும்னா பேப்பரை எங்கிட்ட கொண்டு வந்துதான் பண்ணமுடியும்.

ஆண் குரல்: அட்வான்ஸு எவ்ளோ தரணும்னு சொன்னீங்க?

ஐஸ்வர்யா: 20,000 ரூபாய்தான். அதுவும், உங்களுக்கு ரிட்டர்ன் அமவுண்ட்தான். இந்த டுவெண்டி தவுசன்ட் நான் உங்களுக்கு ரெஸ் பான்ஸ்பிலிட்டி. ஆர்டர் போட லைன்னா ரிட்டர்ன் பன்றதுக்கு நான் ரெஸ்பான்ஸ் எடுத்துப்பேன். ப்ரூஃபோடதான் வாங்குவாங்க. மணி கொடுக்கணும்னா, ஆர்டர் போட்ட துக்கப்புறம் அடுத்து மணிய பற்றி பேசுவாங்க. திருச்சி டிஸ்ட்ரிக்ட்ல அவங்களுக்கு ஜாயிண்ட் பண்றதுக்கு என்ன ப்ளேஸ் வேணும்னு சொல்லுங்க. எங்க அசோசி யேஷன்காரங்க அங்க இருப்பாங்க. எல்லா டிஸ்ட்ரிக்லேயும் நாங்க வெச்சிருக்கோம். எந்த டி.டி. ஆபீஸ் போகணும். என்னா பண்ணணும்? என்ன புரஸீடிங்ஸ்? எல்லா டிஸ்ட்ரிக்லேயும் ஒரு இன்சார்ஜ் வெச்சிருப்போம். 32 டிஸ்ட்ரிக்லேயும் 32 பேரும் நிற்பாங்க.

ஆண்குரல்: சரிங்க மேடம்..

ஐஸ்வர்யா: எம்.ஆர்.பி. இருக்காங்கல்ல... அவங்கக்கிட்ட விசாரிச்சாலே தெரிஞ்சுடும்.

ஆண் குரல்: ஓ.கே. மேடம், மணி அனுப்பணும்னா எப்படி மேடம்? அக்கவுண்ட் நம்பரா? டைரக்ட்டா மேடம்?

ஐஸ்வர்யா: அக்கவுண்ட் நம்பர்தான். 20,000 ப்ரூஃபோடதான். அது, என் அக்கவுண்டுக்கு வராது. அங்கதான் போகும். ரெசிப்ட்டை நீங்க கையில வெச்சுக்கிட்டீங்கன்னா வாட்ஸ்-அப்புல போட்டோ எடுத்து அனுப்பிச்சு விட்டுடுங்க. அக்கவுண்ட் நம்பர் அவங்கக்கிட்ட கேட்டுதான் வாங்கித்தர முடியும். ஆக்சுவலா எங்க அசோசியேஷனிலிருந்து மெம்பர்ஷிப் போடுவோம். எப்போ, சி.எம். ஃபங்ஷன் நடக்குதில்லையா? அன்னைக்கு எல்லாருமே எங்கடீம் அங்கதான் இருப்போம் டோட்டலா. அங்கேயே, மெம்பர்ஷிப்புக்காக ஃபார்ம் கொடுக்கிறது, இவங்கள கெய்டு பண்றது... எல்லா வேலையும் நாங்க அப்பவே பண்ணிடுவோம்.

ஆண் குரல்: ஓ.கே., ஓ.கே. மேடம்.

....இப்படித்தான் போன் உரையாடல் முடிகிறது.

இதுகுறித்து, நாம் சி.எம்.செக்யூரிட்டி ஆபீஸரின் மனைவியும் யுனைட்டட் எம்.ஆர்.பி. நர்சஸ் அசோஸியேஷன் செயலாளருமான ஐஸ்வர்யாவைத் தொடர்பு கொண்டபோது அவரிடமிருந்து எந்த விளக்கமும் கிடைக்கவில்லை. அவர், விளக்கம் அளித்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறது நக்கீரன்.

மருத்துவப் பணியாளர் தேர்வாணையமே தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஒரு நர்ஸ் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார் என்றால் எம்.ஆர்.பி.யில் இன்னும் டாக்டர், நர்ஸ், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் நியமனங்கள், பணி மாறுதல்களில் எவ்வளவு லஞ்சம் விளையாடிக்கொண்டிருக்கிறது என்பதை டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகளை விசாரிப்பதுபோல சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தவேண்டும். ஆனால், முதல்வர் அலுவலகம் வரை லஞ்சப்பணம் செல்வதால் விசாரிக்க உத்தரவிடுவார்களா?

-மனோசௌந்தர்

nkn241020
இதையும் படியுங்கள்
Subscribe