ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் சட்டவிரோத மாக எடுக்கப்பட்ட கருமுட்டை வியாபாரம், தமிழகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோடு சூரம்பட்டி பகுதியில் கணவனைப் பிரிந்து வசித்து வரும் 35 வயது இந்திராணியின் மகள்தான் அந்த 16 வயது சிறுமி. இந்திராணி ஏற்கெனவே சில வருடங்களாக தனியார் மருத்துவமனைகளில் கரு முட்டை விற்பனையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அதற்குத் துணையாக இருப்பவன்தான் சையத் அலி. இந்நிலையில், சிறுமியென்றும் பாராமல் தனது மகளின் கருமுட்டையையே விற்பனை செய்ய முடிவு செய்த இந்திராணி, மகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்ததாக சூரம்பட்டியைச் சேர்ந்த ஜான் என்ற புரோக்கர் மூலம் தயாரிக்கப்பட்ட போலி ஆவணத்தின் மூலம் ஆதார் அட்டை எடுத்து, கரு முட்டை புரோக்கராகவுள்ள மாலதி என்ற பெண் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்குத் தனது மகளை அழைத்துச் சென்றிருக்கிறார்.
முதலில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை யிலும், அடுத்து பெருந்துறை, சேலம், கிருஷ்ணகிரி, கோவை என மொத்தம் 8 மருத்துவமனைகளிலும் 16-க்கும் மேற்பட்ட தடவை சிறுமியின் கரு முட்டை எடுக்கப்பட்டிருக்கிறது. தாயின் கள்ளக்காதலனாக இருந்துகொண்டு, வளர்ப்புத் தந்தை எனக் கூறிக்கொண்ட சையத் அலியின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி, ஒரு கட்டத்தில் இவற்றையெல்லாம் வெளிப்படுத்தியதால் இவ்விவகாரம் அம்பலமாகியுள்ளது. தற்போது தாய் இந்திராணி, சையத் அலி, புரோக்கர்கள் மாலதி, ஜான் ஆகிய நால்வரும் சிறையில் உள்ளார்கள். சிறுமி காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறாள்.
"நமது பழக்க வழக்கங்கள், உணவு எல்லாமே கடந்த 30 வருடங்களாக மாறிக்கொண்டே வருகிறது. ஆண், பெண் என எல்லோரது உடல் நலனும் இப்போது ஆரோக்கி
ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் சட்டவிரோத மாக எடுக்கப்பட்ட கருமுட்டை வியாபாரம், தமிழகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோடு சூரம்பட்டி பகுதியில் கணவனைப் பிரிந்து வசித்து வரும் 35 வயது இந்திராணியின் மகள்தான் அந்த 16 வயது சிறுமி. இந்திராணி ஏற்கெனவே சில வருடங்களாக தனியார் மருத்துவமனைகளில் கரு முட்டை விற்பனையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அதற்குத் துணையாக இருப்பவன்தான் சையத் அலி. இந்நிலையில், சிறுமியென்றும் பாராமல் தனது மகளின் கருமுட்டையையே விற்பனை செய்ய முடிவு செய்த இந்திராணி, மகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்ததாக சூரம்பட்டியைச் சேர்ந்த ஜான் என்ற புரோக்கர் மூலம் தயாரிக்கப்பட்ட போலி ஆவணத்தின் மூலம் ஆதார் அட்டை எடுத்து, கரு முட்டை புரோக்கராகவுள்ள மாலதி என்ற பெண் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்குத் தனது மகளை அழைத்துச் சென்றிருக்கிறார்.
முதலில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை யிலும், அடுத்து பெருந்துறை, சேலம், கிருஷ்ணகிரி, கோவை என மொத்தம் 8 மருத்துவமனைகளிலும் 16-க்கும் மேற்பட்ட தடவை சிறுமியின் கரு முட்டை எடுக்கப்பட்டிருக்கிறது. தாயின் கள்ளக்காதலனாக இருந்துகொண்டு, வளர்ப்புத் தந்தை எனக் கூறிக்கொண்ட சையத் அலியின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி, ஒரு கட்டத்தில் இவற்றையெல்லாம் வெளிப்படுத்தியதால் இவ்விவகாரம் அம்பலமாகியுள்ளது. தற்போது தாய் இந்திராணி, சையத் அலி, புரோக்கர்கள் மாலதி, ஜான் ஆகிய நால்வரும் சிறையில் உள்ளார்கள். சிறுமி காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறாள்.
"நமது பழக்க வழக்கங்கள், உணவு எல்லாமே கடந்த 30 வருடங்களாக மாறிக்கொண்டே வருகிறது. ஆண், பெண் என எல்லோரது உடல் நலனும் இப்போது ஆரோக்கியமாக இல்லை. உயிரை உருவாக்க முடியாத தன்மை அதிகரித்து விட்டது. குழந்தைப் பேறு என்பது இயற்கையாக இருக்க வேண்டும் ஆனால், இப்போதைய தலை முறையில், 20 முதல் 25 சதவீத கணவன் மனைவி, பல ஆண்டுகளாகக் குழந்தைப்பேறு இல்லாமல் உள்ளார்கள். அவர்களுக்கு வரமாக அமைந்ததுதான் செயற்கை கருவூட்டல் எனப்படும் டெஸ்ட் ட்யூப் பேபி. பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள பல் வேறு பிரச்சனைகளால் அதில் கரு கூடுவதில்லை. எனவே வேறு பெண்ணிடம் கரு முட்டை தானம் பெற்று அதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவ ரின் உயிரணுவைச் செலுத்தி, இன்குபேட்டரில் வைத்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை கருவை வளர்ச்சியடைய வைத்து, பிறகு அந்த கருவை சம் பந்தப்பட்ட பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து கரு வளர்ப்பு நடக்கும். இது மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியில் மிகப்பெரிய சாதனையென்றா லும், கடந்த பத்து ஆண்டு காலமாக இது மிகப்பெரிய வணிகமாக மாறிவிட்டது'' என வேதனையுடன் கூறுகிறார் கோவையைச் சேர்ந்த மூத்த மகப்பேறு மருத்துவர்.
டெஸ்ட் ட்யூப் பேபி மருத்துவத்தில் நிபுணராக உள்ள மற்றொரு பெண் மருத்துவர், "வெளிப்படையாகவே சொல்கிறோம். நாங்கள் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்வதில்லை. ஒரு கணவன், மனைவி பல ஆண்டுகளாகக் குழந்தையில்லை என எங்க ளிடம் வந்தால், முழுமையான அனைத்துப் பரிசோதனைகளையும் செய்வோம். இறுதியாக, குறிப்பிட்ட பெண்ணின் கரு முட்டை, கரு வாக வளர வாய்ப்பில்லை என்றால் அவர்களிடம் வேறு ஒரு பெண்ணின் கருமுட்டையை தானம் பெற்று, அதில் கணவரின் உயிரணுவைச் செலுத்தி, அது வளர்ந்த பிறகு கர்ப்பப்பையில் வைத்து வளர்க்கலாம். முதலில் அந்த தம்பதிகளிடம், "உங்க ளின் உறவினர்கள் யாராவது கரு முட்டை தானம் கொடுப்பார்களா?' எனக் கேட்போம். பெரும் பாலும் உறவினர்களுக்குத் தெரியக்கூடாது என நினைப்பதால் தம்பதியினர் மறுத்துவிடுவார்கள்.
வேறு வழியில்லாததால் வேறு பெண்களிடமிருந்து கரு முட்டையை எடுப்போம். இதுதான் நடந்துவருகிறது. கரு முட்டை தானம் கொடுக்கும் பெண்ணிற்குத் தேவையான பணம், மருத்துவ செலவு அனைத்துக்கும் கரு முட்டை தானம் தருபவர்களே பணம் செலுத்திவிடுவார்கள்'' என்றார்.
"ஈரோடு சம்பவம் முழுக்க முழுக்க சட்ட விரோதச் செயல். 16 வயது உள்ள ஒரு சிறுமியிடம் கருமுட்டை எடுத்த மருத்துவர்களுக்கு அவர் சிறுமி என நன்கு தெரியும். இதில் முக்கியமான மருத்துவக் காரணம் இருக்கிறது'' என்பதை நம்மிடம் விளக்குகிறார் ஈரோடு அரசு மருத்துவ மனையின் பெண் மருத்துவர்.
அவர் மேலும் கூறுகையில், "30, 35 வயதுப் பெண்களின் கரு முட்டைக்கும், பருவமடைந்த இளம் பெண்களின் கரு முட்டைக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. நடுத்தர வயதுப் பெண்களின் கரு முட்டை, உயிரணுவை இணைத்து வளர்வதில் 30 முதல் 40 சதவீதம்தான் சக்சஸ் ரேட் இருக்கும். அதுவே 16 வயது பருவமடைந்த இளம் பெண்களின் கரு முட்டை, உயிரணுவுடன் இணைந் ததும் 90 சதவீதத்திற்கு மேல் அதன் வளர்ச்சியும் சக்சஸ் ரேட்டும் இருக்கும். இதையறிந்துதான் சில தனியார் மருத்துவமனைகள் பெரும் வியாபாரமாக இதைச் செய்கிறார்கள். அதிலும் நல்ல ஸ்போர்ட்ஸ் மேன் போன்ற குழந்தை, மல்யுத்தம் போன்ற போட்டிகளுக்குச் செல்லக்கூடிய வகையில் குழந்தை என எந்த வகையில் வேண்டும் எனக் கேட்டு, அதற்கேற்ப கருமுட்டை எடுப்பதும் நடக்கிறது.
இதைத் தடுக்க, அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கமிட்டி அமைத்து, தனியார் மருத்துவமனைகளின் அனைத்துச் செயல்பாடுகளையும் தொடர்ந்து ஆய்வுக்குட் படுத்த வேண்டும். கரு முட்டை தானம் என்பது திருமணமான பெண்கள், குழந்தை பெற்றவர்கள் மட்டுமே வழங்க முடியும் என்பதையும் சட்ட விதியாக உருவாக்க வேண்டும்'' என்றார்.
"டெஸ்ட் ட்யூப் பேபி மருத்துவமனைகள் தமிழகம் முழுக்க இருக்கின்றன. அதிலும் ஈரோடு, சேலம், கரூர், கோவை, கிருஷ்ணகிரி போன்ற மேற்கு மாவட்டங்களில்தான் அதிக மருத்துவமனைகள் இருக்கின்றன. தினமும் இங்கு டெஸ்ட் ட்யூப் பேபி மருத்துவச் சிகிச்சை நடக்கிறது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் குழந்தை வேண்டி நூற்றுக்கணக்கான தம்பதிகள் வந்து போகிறார்கள். உயிர்க்காப்பு மருத்துவத்தை விட செயற்கை கருவூட்டல் மருத்துவம் தான் மிகப் பெரிய வணிகமாக இருக் கிறது. இவற்றிற்கு மிகப்பெரிய தேவை கரு முட்டைதான். ஒரு பெண் ஒருமுறை கரு முட்டை கொடுக்க அவருக்கு 20 ஆயிரமும் அப்பெண் ணை அழைத்து வரும் புரோக்கருக்கு 5 ஆயிரம் முதல் பத்தாயிரம் வரையும் கொடுக்கிறார்கள்.
ஈரோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு, திருப்பூர், கோவை என வறுமையில் உள்ள ஏழைப் பெண்களில், ஐநூறுக் கும் மேற்பட்டோர் இந்த கரு முட்டை விற்பனையில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக, கொரோனா பொது முடக்கம், அதனால் ஏற்பட்ட வேலை இழப்புக்குப் பிறகு குடும்ப வறுமையால் கரு முட்டை விற் பனையில் பெண்கள் ஈடுபடும் அவலம் ஏற்பட்டுள்ளது. அரசு இதைத் தீவிர மாகக் கவனம் செலுத்தி முறைப்படுத்த வேண்டும்'' என்றார் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாநில செயலாளர் சின்னுச்சாமி. செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பிறக்க 50 லட்சம் வரை வசூலிக்கும் மருத்துவமனைகளும் உண்டு.
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத் தலைவர் டாக்டர் விஸ்வநாதன் தலைமையிலான விசாரணைக் குழு, மூன்று நாட்களாக பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாய், ஈரோடு, பெருந்துறை, சேலம், ஒசூர் என தனியார் மருத்துவமனைகளில் விசாரணை செய்துள்ளது.
"இங்கு மட்டுமல்ல கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கும் அந்தச் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆகவே அங்கும் சென்று விசாரணை செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிப் போம்'' என்றார் டாக்டர் விஸ்வநாதன்.
சிறுநீரக தானம் கொடுப்பதில் இருக்கும் அரசாங்க நடைமுறைகளைப் போல், கரு முட்டை தானம் வழங்குவதி லும் அரசிடம் முறையான அங்கீகாரம் பெறும்படி சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும். சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் மருத்துவமனைகளைக் கண்டறிந்து சீல் வைக்க வேண்டும். அப்போதுதான் ஏழைச் சிறுமிகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.
குற்றச்சாட்டுக்குள்ளான ஈரோடு தனியார் மருத்துவமனையின் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், "அரசு சட்டப்படி 21 வயது நிரம்பியதாக சான்றிதழ் கொடுத் தால்தான் நாங்கள் சிகிக்சை மேற்கொள் வோம். தமிழகம் முழுவதும் உள்ள எங்கள் கிளைகளில் முறைப்படிதான் சிகிச்சை யளிக்கப்படுகிறது. எங்களுக்கு வேண் டாதவர்கள் சிலபேர் வேண்டுமென்றே எங்கள் மீது வீண் புகார் அளித்துள்ளனர். நாங்கள் அரசின் விதிமுறைகள்படிதான் சிகிச்சையளிக்கிறோம்'' என தெரிவித்தனர்.
மருத்துவம் காலத்திற்கேற்ப வளர்ச்சி அடைகிறது. உடல் உறுப்புத்தானம் கூட அண்மைக்கால மருத்துவம்தான். அதனை முறைப்படுத்திய அரசு, யாருக்கு யார் தானம் செய்யலாம் என்பதை வரை யறுத்து, அதனை முறையாகப் பதிவு செய்து, முன்னுரிமை யாருக்கு என்பதை வெளிப்படைத்தன்மையுடன் கடைப்பிடிப்பதால்தான் உடல்உறுப்பு தானம் வியாபாரமாவது கட்டுப்படுத்தப் பட்டது. கரு முட்டைக்கும் அந்த நிலை வரவேண்டும் என்கிறார்கள்.