வாக்குப்பதிவு தேதி அக்டோபர் 21 என்பதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் முத்தமிழ்ச் செல்வனும் தி.மு.க.வின் நா.புகழேந்தியும் பரீட்சை எழுத முழுவீச்சாக ஆயத்தமாகிவருகிறார்கள். பரீட்சை எழுதுபவர்களுக்காக இரு கழகங்களும் செய்யும் ஹோம்வொர்க்கை தொகுதியெங்கும் காணமுடிந்தது.

அ.தி.மு.க.வினருக்கு தினசரி சாப்பாடு தயார்செய்து அனுப்ப விழுப்புரம் -திருக்கோவிலூர் சாலையிலுள்ள எம்.கே. மகால் திருமண மண்டபத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த மண்டபத்திலிருந்து சாப்பாடு ஐட்டங்கள் தினசரி தயார் செய்யப்பட்டு கார்களிலும் வேன்களிலும் தொகுதியிலுள்ள ஒவ்வொரு முக்கிய பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து கிராமத்தில் பணியிலுள்ள கட்சியினருக்கு கொண்டுபோய் சேர்க்கப்படுகிறது.

vv

தி.மு.க. தரப்பில் முன்னாள் மந்திரி எ.வ.வேலு ஆலோசனைப்படி காணை ஒன்றியத்தில் 15-ஆம் தேதியே வாக்காளர் பட்டியலில் உள்ளபடி வீடு வீடாக ஓட்டுக்கு ஆயிரம் விநியோகமாகி யுள்ளதாம். அதேபோல் அ.தி.மு.க. தரப்பிலும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஓட்டு சிலிப் கொடுத் துக்கொண்டே சிலர் முன்னே செல்கிறார்கள். அவர்கள் பின்னாடியே ஒரு குழு ஓட்டுக்கு 2000 ரூபாய் என தாராளமாக வழங்கி வருகிறது. முன்பெல்லாம் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது இரவு நேரத்தில் ஒருவித பதட் டத்துடன் சத்தமில்லாமல் நடக்கும். விக்கிர வாண்டியில் பட்டப்பகலிலேயே எந்தவித பயமுமின்றி பண விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அத்தியூரில் நாம் போய் நின்றபோது ஒரு கட்சிக்காரர் ஓடிவந்து நம்மை யாரென விசாரித்தார். பின், “"இங்கெல்லாம் எதுவும் பிரச்சனை இல்லை, நீங்க கிளம்புங்க'’என்று நம்மை துரத்தாத குறையாக அனுப்பிவைத்தார். பண விநியோகத்தை நாம் படம் எடுத்துவிடு வோமோ என்ற அச்சம் அவர் முகத்தில் தெரிந்தது. பேரூரில் சில கட்சியினர் நம்மிடம் ஓடிவந்து "ஏதாவது விசேஷமா' என்று கேட்டனர். "பத்திரிகையாளர்' என்றதும் அவர்கள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.

பண விநியோகத்தின்போது இரு கட்சிகளுமே லோக்கல் கட்சியினரை மட்டும் நம்பாமல் லோக்கல் கட்சி பொறுப்பாளர்களுடன், அந்தந்த கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளன. இந்த குழுவுக்கு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த கட்சிப் பொறுப்பாளர் ஒருவர் கையில் பணத்தை ஒப்படைத்து அந்த பணத்தை அந்த குழுவுடன் சேர்ந்து வீடு வீடாக கொடுத்துள்ளனர். அ.தி.மு.க. தரப்பில் வாக்காளர்களுக்கு முறையாகப் பணத்தை கொண்டுபோய் சேர்க்கவேண்டிய பொறுப்பு ஒன்றிய அளவில் உள்ள நிர்வாகிகளுக்கு இருப்பதால் அவர்களுக்கென தனிப்பட்ட அளவில் பணக் கவனிப்பு செய்ததாம் தலைமை. ஓட்டுக்கு 2000 ரூபாய் என்பதை அனைத்து வாக்காளர்களுக்கும் கொடுக்காமல் அ.தி. மு.க.வினருக்கும் நடுநிலை வாக்காளர்களுக்கும் என பாகுபாடு பார்த்து கொடுத்துள்ளதாகவும் "தி.மு.க.வில் அனைத்து தரப்பினருக்கும் தலா ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்' கூறுகிறார் சிறுவாலையைச் சேர்ந்த ஒருவர்.

vvv

Advertisment

தி.மு.க.வினர் செய்த திண்ணைப் பிரச்சாரம் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றுள்ளது. மேலும் சாதாரண மக்களோடு ஸ்டாலின் செல்பி எடுத்துக்கொண்டு பேசியதும் ப்ளஸ் பாயின்ட். காணை ஒன்றியம் செம்மேடு ஊராட்சியில் அமைச்சர் கருப்பணனும் பதிலடியாக பறையிசைக்கு ஆட்டம்போட்டு வாக்காளர்களை ஈர்த்திருக்கிறார்.

தி.மு.க., அ,தி.மு.க. இரு கட்சிகளுமே கடுமையாக உழைத்துள்ளன. எனவே வெற்றி, தோல்வி என்பது சில ஆயிரம் வாக்குகளில்தான் இருக்கும். அ.தி.மு.க. தரப்பில் இன்னும் கூடுதலாக பணம் எதிர்பார்த்தார்கள் மக்கள்,’என்கிறார்கள் நடுநிலை வாக்காளர்கள்.

ஆசூர் கிராமத்தில் சந்தித்த தேவேந்திரன் என்ற இளைஞர்,

“""பொதுமக்கள் இரு கட்சி அலு வலகங்களிலும் போய் உட்கார்ந்து சந்தோஷமாகப் பேசுகிறார்கள். ஒரு ஊரில் இரு வீடுகளில் திருமணம் நடந்தால் ஊர்மக்கள் இரு வீடுகளுக்கும் சென்று மொய் வைத்து விருந்து சாப்பிட்டு விட்டு வருவார்கள். அதுபோன்று கிராமங்களில் இரு கட்சி வேட்பாளர் களையும் தலைவர்களையும் பொதுமக்கள் வரவேற்கிறார்கள். மக்கள் யாருக்கு தாங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை அவரவர் மனதளவில் தீர்மானித்து வைத்துள்ளனர். அதனால் கூடும் கூட்டத்தை வைத்து ரிசல்டை எடை போட்டுவிட முடி யாது''’என்கிறார்.

மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதால் ஆளுந்தரப்பு தனது அதிகார பலத்தை முழுமையாகப் பயன்படுத்த நினைக்கிறது. வாக்கு எண்ணிக்கையின்போது அ.தி.மு.க.வுக்கு லீடிங் வரும் வகையில் 15 ஆயிரம் ஓட்டுகளை ரெடிபண்ண வேண்டும் என கலெக்டர் சுப்ரமணியம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அமைச்சரும் ஆளுங்கட்சி நிர்வாகமும் அசைன்மெண்ட் கொடுத்துள்ளனர். அதிகாரிகளின் செயல்பாட்டைப் பொறுத்து தேர்தல் முடிவு ஊசலாடலாம்.

-எஸ்.பி.சேகர்