திருச்சியில், 11 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டி, நகைகளை கொள்ளையடித்த கும்பல் தனிப்படை போலீசாரிடம் சிக்கியது. அவர்களிடமிருந்து 9.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. சென்னை, சவுகார்பேட்டை யிலுள்ள ஆர்.கே.சில்வர் என்ற நகைக்கடை மேலாளர் குணவந்த் என்பவர், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி, தங்க பிஸ்கட் மற்றும் நகைகளுடன் கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் மாவட் டங்களில் தங்க நகைகளை சில்லரை விற்பனை செய்வதற்காக சென்றார். இவருடன் காரில் கடை ஊழியர் மகேஷ் ராவல் மற்றும் ஜோத்பூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பிரதீப் ஜாத் ஆகியோர் பயணித்த நிலையில், திண்டுக்கல்லில் சில்லரை விற்பனை செய்த பிறகு மீதமுள்ள நகைகளுடன் சென்னை திரும்பும்போது, திருச்சி சமயபுரம் இருங்களூர் அருகே நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டது. இது தொடர்பாக சமயபுரம் போலீஸார் வழக்கு பதிந்து மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் தலைமையிலான 5 தனிப்படையினர் அமைத்து துரித தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கடந்த ஐந்தா
திருச்சியில், 11 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டி, நகைகளை கொள்ளையடித்த கும்பல் தனிப்படை போலீசாரிடம் சிக்கியது. அவர்களிடமிருந்து 9.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. சென்னை, சவுகார்பேட்டை யிலுள்ள ஆர்.கே.சில்வர் என்ற நகைக்கடை மேலாளர் குணவந்த் என்பவர், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி, தங்க பிஸ்கட் மற்றும் நகைகளுடன் கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் மாவட் டங்களில் தங்க நகைகளை சில்லரை விற்பனை செய்வதற்காக சென்றார். இவருடன் காரில் கடை ஊழியர் மகேஷ் ராவல் மற்றும் ஜோத்பூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பிரதீப் ஜாத் ஆகியோர் பயணித்த நிலையில், திண்டுக்கல்லில் சில்லரை விற்பனை செய்த பிறகு மீதமுள்ள நகைகளுடன் சென்னை திரும்பும்போது, திருச்சி சமயபுரம் இருங்களூர் அருகே நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டது. இது தொடர்பாக சமயபுரம் போலீஸார் வழக்கு பதிந்து மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் தலைமையிலான 5 தனிப்படையினர் அமைத்து துரித தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கடந்த ஐந்தாம் தேதி நகைகளை மீட்ட தனிப்படையினர், கொள்ளையில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்து, திருச்சி செய்தியாளர்கள் மத்தியில் காட்சிப்படுத்தினர். திருச்சி எஸ்.பி. செல்வநாகரத்தினம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"ஆர்.கே.சில்வர் நகைக்கடை மேலாளர் குணவந்த், 10 கிலோ தங்க நகைகளோடு காரில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது, திருச்சி, சமயபுரம், இருங்களூர் எஸ்.ஆர்.எம். மருத்துவமனை அருகே இரவு 8.20 மணிவாக்கில், இயற்கை உபாதை கழிப்பதற்காக, காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த கருப்பு நிறக் காரிலிருந்த நபர்கள், குணவந்த் உட்பட மூவரின் கண்களிலும் மிளகாய்ப்பொடியை தூவிவிட்டு, 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை வழிப்பறி செய்து தப்பினர்.
குணவந்த் கொடுத்த புகாரில், சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனைத்து டோல் பிளாசாக்கள் மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைகளுக்கும் தகவல் தெரிவித் தனர். சமயபுரம் டோல் பிளாசாவில் ஆய்வு செய்தபோது தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றவர்கள் பயன்படுத்திய கார் டி.என்.06-வ் 0608 பதிவு எண் கொண்ட கருப்பு நிற ஹூண்டாய் கார் என தெரியவந்தது. தொடர்விசாரணையில் பதிவு எண் போலியென்றும், அதன் உரிமையாளர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, எனது உத்தரவின் பேரில் லால்குடி டி.எஸ்.பி. தினேஷ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கருணாகரன், ரகுராமன், முத்தையன், குணசேகரன், கண்ணதாசன் ஆகி யோர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடகா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, பீகார் மற்றும் மத்தியப்பிரதேச மாநில காவல்துறைக்கு தகவல் தெரிவித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குணவந்த்தின் கார் ஓட்டுனர் பிரதீப் ஜாத்க்கும் இதில் பங்கிருப்பது தெரிய வந்து, தீவிரமாக விசாரித்ததில், அவரோடு தொடர்பி லிருந்த மனோகர் ராமை கைதுசெய்து, தொலை பேசி எண்கள், வங்கிக்கணக்குகள், டோல்பிளாசாக் களை ஆய்வுசெய்ததில், கடந்த மாதம் கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியில் கொள்ளையர்கள் தப்பிச்சென்ற காரை கண்டுபிடித்தோம்.
அதனைத் தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வுசெய்து, மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலையில், பர்வானிக்கு சென்ற பஸ்ஸிலிருந்த, இக்கொள்ளை சம்பவத்தின் மூளையான ராஜஸ்தானை சேர்ந்த ஜோத் மங்கிலால், விக்ரம் ஜாட் ஆகியோரை கைது செய்து விசாரித்ததில் மீதமுள்ள அனைவரும் சிக்கினர்.
இதையடுத்து, பன்னாராம் தேவாசி என்கிற வினோத், சொகைல்கான் என்கிற முகமது சொகைல், கைலாஷ், ஹனுமான் ஜாட், மனிஷ் சிரோகி, பரத் ராம், ராகேஷ் மற்றும் அவரது மனைவி லட்சுமிதேவி ஆகியோரை கடந்த ஐந்தாம் தேதி மும்பையில் வைத்து கைது செய்தோம். அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.6 லட்சம், 9.432 கிலோ தங்க நகைகளை மீட்டோம். மேலும், ஒரு நாட்டுத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஸ்மார்ட் போன் 7, சிம் கார்டுகள் 40 ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். இந்த கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்ட டி.எஸ்.பி.க்கள் தினேஷ்குமார், ராஜமோகன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் மனதார பாராட்டுகின்றேன்'' என்றார்.
மேலும், "இந்த தங்க நகைகளை உரிய அனுமதியின்றி கொண்டுசென்றது குறித்து வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விலையுயர்ந்த தங்க, வைர ஆபரணங்களை வாகனங்களில் எடுத்துச்செல்லும்போது உரிய பாதுகாப்புடன், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எடுத்துச் செல்லவேண்டும். பொதுமக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இருள் சூழ்ந்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. அவசர உதவிக்கு தமிழ்நாடு காவல்துறையின் காவல் உதவி மொபைல் செயலியை பயன்படுத்த வேண்டும். மேற்காணும் வழிநடைமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் இணைந்து கொள்ளைச் சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களை மீட்ட காவல் அதிகாரிகள் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.