மிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற உத்தரவு பிறப்பித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த உத்தரவு நேர்மறை -எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

இட ஒதுக்கீட்டின் சமூக நீதிக்காக வன்னியர் அமைப்புகளும் பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்திய போராட்டங்கள் நீண்ட நெடியவை. இதற்காக நடந்த தொடர் போராட்டங்களில் 23 வன்னியர்கள் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். இதனையடுத்து, 1989-ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு, வன்னியர் சமூகம் உள்ளிட்ட 107 சாதிகளை மிகவும் பிற்படுத்தப் பட்டோர் என வகைப்படுத்தி அவர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத் தியது. ஆனாலும் வன்னியர்களுக்கென தனி இட ஒதுக்கீடு கேட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிவருகின்றனர். விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு என தி.மு.க. வாக்குறுதி அளித்தும் வெற்றிபெற முடியவில்லை.

reservation

இப்படிப்பட்ட சூழலில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தினார். அதேசமயம், வன்னியர் குல சத்திரியர் கூட்டியக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இத்தகைய சூழல்களுக்கு மத்தியில்தான், சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக சட்டமன்றத்தைக் கூட்டி, வன்னியர்களுக் கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்றினார் எடப்பாடி பழனிசாமி. அதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர் எம்.பி.சி. (வி) சமூகத்துக்காக 10.5 சதவீதமும், சீர்மரபினருக்கு 7 சதவீதமும், வண்ணார் -நாவிதர் -நரிக்குறவர் -போயர் உள்ளிட்ட மற்ற மிகவும் பிற்படுத்தப் பட்டோர் சமூகத்தினருக்காக 2.5 சதவீதமும் என பிரித்து வகைப்படுத்தப்பட்ட உள் இடஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் நடந்து தி.மு.க. ஆட்சியின் முதல்வ ராக பொறுப்பேற்றார் மு.க.ஸ்டாலின். தி.மு.க. ஆட்சி வந்ததால், இந்த சட்டம் நடைமுறைக்கு வருமா? என்கிற சந்தேகம் வன்னியர் சமூகத்துக்கு இருந்தது. இந்த நிலையில்தான், அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உத்தரவுகளைப் பிறப்பித் திருக்கிறார் ஸ்டாலின். இது, மிகவும் பிற்படுத்தப் பட்டோர் சமூகத்தினரிடையே விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

முதல்வர் ஸ்டாலினின் உத்தரவை வரவேற் றுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பொறியியல், கலை -அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வந்துள்ள நிலையில், வன்னியர் சமூகத்துக்கான 10.50 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை செயல்படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மாணவர் சேர்க்கையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது. இடஒதுக்கீடு வழங்கும் புதிய அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி யிருந்தேன். எனது அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் சம்பந்தப்பட்ட துறை களின் அமைச்சர்கள், மூத்த அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தி இட ஒதுக்கீட்டினை செயல்படுத்துவதற்கான அரசாணையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட செய்திருக்கிறார். இதனை வரவேற்கிறோம். தமிழகத்திலுள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தருவதுதான் எனது இலக்கு''’ என்கிறார் டாக்டர் ராமதாஸ்.

Advertisment

ff

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தலை வர் வேல்முருகனிடம், இதுகுறித்து நாம் பேசிய போது... "மாநிலத்தில் 20 சதவீதம், மத்தியில் 2 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் ராமதாசின் கோரிக்கை. உள் இடஒதுக்கீடுக்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லை. ஆனால், இந்த சட்டம், பா.ம.க.வால்தான் நடந்ததுபோல அவர் பேசுவது நாடகம்.

வாழ்வுரிமைக் கட்சியின் தலைவராகிய நான், சி.என்.ராமமூர்த்தி கண்ணன்ஷத்திரியர், சி.என். ராஜன் ஆகியோர் எடுத்த rrமுயற்சியால்தான் உள் இடஒதுக்கீடு சாத்தியமானது. விக்கிரவண்டி இடைத்தேர்தல் சமயத்தில் தி.மு.க.வின் தலைவரும் இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, மற்ற மாநிலங்களைச் சேர்ந்த பலரும் தமிழகத்தில் எம்.பி.சி. என சாதி சான்றிதழை வாங்கிக்கொண்டு எங்களுக்கு கிடைக்கவேண்டிய இடஒதுக்கீட்டை அபகரித்து வரு கிறார்கள். இந்த அநீதியை களைய வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு தான் ஒரே வழி என நானும் வன்னியர் அமைப்பு களும் வலியுறுத்தினோம்.

Advertisment

இதனையடுத்து, நாங்கள் ஆட்சிக்கு வந் தால், உள் இடஒதுக்கீடு வழங்குவோம் என அறிவித்தார் ஸ்டாலின். வன்னியர்களின் நலன்களுக்காக தொடர்ச்சியாக பாடுபட்டு வரும் தி.மு.க.வின் இந்த அறிவிப்பு, சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என நினைத்து அதனை தடுக்கும் வகையில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, உள் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை அவசரம் அவசரமாக கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இதன் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்ட தமிழக மக்கள், அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் அமர வைத்திருக்கிறார்கள்.

பலனில்லாமல் இருந்த அந்த சட்டத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில், புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அழுத்தம் கொடுத்தோம். அதனை ஏற்றுக்கொண்ட முதல்வர், உள் இடஒதுக்கீடு சட்டத்தை ஒழுங்குபடுத்தி அதனை நிறைவேற்ற தற்போது உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சாதிவாரி கணக் கெடுப்பை நடத்தி அனைத்து சாதிகளின் மக்கள் தொகைக்கேற்ப அனைவருக்குமான இட ஒதுக்கீடு வழங்க முதல்வர் முயற்சிக்க வேண்டும்'' என்கிறார் அழுத்தமாக.

இதற்கிடையே இந்த சட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது தமிழ்நாடு சீர்மரபினர் சங்கம். வன்னியர் அல்லாத மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பிலுள்ள மற்ற சாதிகளை ஓரணியில் ஒன்று சேர்க்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு சீர்மரபினர் சங்கத்தின் செயல்தலைவர் முனுசாமியிடம் நாம் பேசியபோது, "வன்னியர் சமூகம் எங்களுக்கு எதிரியில்லை. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த சட்டம், எங்களுக்கு அநீதி இழைத்துள்ளது. அதனால்தான் எதிர்க்கிறோம். தேர்தல் சமயத்தில் தென்மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த ஸ்டாலினை சந்தித்து இந்த சட்டத்திற்கு எதிராக கோரிக்கை வைத்தோம். அவரும் தனது பிரச்சாரத் தில், ஆட்சிக்கு வந்தால் உள் இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்வோம் என சொன்னார். ஆனா, அதற்கு மாறாக தற்போது ஸ்டாலின் நடந்து கொள்வது அநீதியானது'' என்கிறார் கோபமாக.

வன்னியர் குல சத்திரியர் கூட்டியக்கத்தின் தலைவர் நாகரத்தினத்திடம் நாம் பேசியபோது, "வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி சட்டரீதியாகப் போராடியது நாங்கள். நாங்கள் போட்ட வழக்கில்தான் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது நீதிமன்றம். அதனை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்தில் இதற்கான சட்டத்தை கொண்டு வந்தார். கண் துடைப்பாக கொண்டு வந்ததுதான் அந்த சட்டம். காரணம், நீதிமன்றத் தில் நாங்கள் பெற்ற உத்தரவின் அடிப்படையில் சட்டத்தை பாஸ் பண்ணவேண்டியதை தவிர எடப்பாடிக்கு வேறு வழியில்லை. அதனால் நிறைவேற்றப்பட்டது. உண்மை இப்படியிருக்க, அதனை சொந்தம் கொண்டாட ராமதாசுக்கோ, பா.ம.க.வுக்கோ தகுதி கிடையாது.

ff

அதேபோல, இதனை மற்ற சாதியினர் எதிர்க்க வேண்டியதில்லை. சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் தமிழகத்தில், எந்த சாதியின் உரிமைகளையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை. 20 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக 23 உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம். ஆனால், இட ஒதுக்கீட்டின் பலன்களை வன்னியர்களை விட மற்ற சமூகத்தினர்தான் அதிகம் அனுபவித்தார்கள். இது அநீதி இல்லையா? அவரவர்களின் உரிமைகளை அவரவர்கள்தான் போராடி பெறவேண்டுமே தவிர, வன்னி யர்களுக்கு கிடைப்பதால் எதிர்க்க வேண்டியதில்லை. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்திருக்கிறார் ஸ்டாலின். எந்த சாதிக்கும் தி.மு.க. அரசு அநீதி இழைக்கவில்லை'' என்கிறார் மிக இயல்பாக.

இப்படிப்பட்ட விமர்சனங்கள் எதிரொலிக்கும் நிலையில் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரிடம், நாம் பேசியபோது...’

"வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு விசயத்தில் முந்தைய அ.தி.மு.க. அரசு, ஓட்டு அரசியலுக்காக அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தமாதிரி ஒரு சட்டத்தை நிறைவேற்றிவிட் டது. ஒரு அரசு என்பது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும். அதன்படி, அந்த சட்டம் குறித்து வல்லுநர்களிடம் ஆராய்ந்துள்ளார் முதல்வர். குறைகளை களைந்திருக்கிறார். அதன்படி சட்டத்தை நிறைவேற்ற ஆணை பிறப்பித் திருக்கிறார். அனைத்து சமூகத்தினருக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. சமுக நீதியை உயிர்மூச்சாக கொண் டுள்ள முதல்வர் அவர்கள், யாருக் கும் அநீதி யிழைக்க மாட்டார்'' ‘’ என்கிறார் மிக உறுதி யாக.