""என்கிட்ட சாட்டிங் பண்ணலன்னா… நீ சொன்ன சீக்ரெட்டை உன் கணவன்கிட்ட சொல்லிடுவேன்.''

""நான், லவ் பண்ணின பொண்ணுங்ககிட்டயெல்லாம் நான்தான் கெஞ்சி கதறுவேன். அதனால, நீதான் சாட்டிங்ல கெஞ்சணும். நீ என்னை உருகி உருகி லவ் பண்ணனும்.''

rr

""நீ சாட் பண்ணினதை உன் கணவன்கிட்ட காண்பிச்சேன்னா அவ்ளோதான். நான், எப்போப்பல்லாம் ஆசைப்படுறோனோ அப்போப்பல் லாம் என்கூட இருக்கணும்.''

Advertisment

""ஒழுங்கா உன்னோட நிர்வாண ஃபோட்டோவ அனுப்பு. என்னது பயமா இருக்கா? முகம் இல்லாம அனுப்பு.''

""நான், லவ் பன்ற பொண்ணுங்க எப்படி யெல்லாம் நிர்வாண ஃபோட்டோக்களை அனுப்பியிருக்காளுங்க பாரு. ஒழுங்கா, இதேமாதிரி முகம் தெரியுறமாதிரி அனுப்பு. இல்லைன்னா...''

""போட்டோக்களையேப் பார்த்து போர் அடிக்கிது. இனிமே, உன்னோட நிர்வாண வீடியோக்களை அனுப்பு.''

Advertisment

-கேட்கும்போதே பகீரிடவைக்கும் அளவுக்கு அந்தரங்க புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துவைத்துக்கொண்டு ப்ளாக்மெயில் செய்ய ஆரம்பித்தது ஆயிஷாவிடம் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) மட்டுமல்ல. சுதா, ஜோதி, கீர்த்தனா, தேஜு, மஞ்சு என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. காவல்துறை விசாரணையில், காதலிகளின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் மட்டுமல்ல. மனைவியின் அந்தரங்க புகைப்படங்களைக்கூட இப்படித்தான் எடுத்துவைத்திருக்கிறேன். அதுதான், எனக்கு பிடிக்கும் என்று மகளிர் காக்கிகளையே அதிரவைத்திருக்கிறான்.

tt

யார் இவன்? இளம்பெண்களை ப்ளாக்மெயில் செய்து வீடியோ எடுத்தது எப்படி? என்று விசாரித்தோம். மதுரை நாவினிப் பட்டியைச் சேர்ந்த ரத்தினக் குமார்தான் அந்த சைக்கோ வில்லன் என்பது தெரியவந்தது. 2015ஆம் ஆண்டு சென்னை முகப்பேரிலுள்ள ஆயிஷா மற்றும் ஆயிஷாவின் கணவர் நடத்தி வரும் பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சேல்ஸ் எக்ஸி க்யூட்டிவ்வாக பணியில் சேர் கிறான். இளம்பெண் ஆயிஷாவுக் கும் அவரது காதல் கணவருக்கும் அடிக்கடி பணி ரீதியான பிரச்சனைகள் இருந்ததை தனக்கு சாதக மாக்கிக்கொண்டு ஆயிஷாவுக்கு ஆறுதல் சொல்வதுபோல் நட்பாக பழகியிருக்கிறான் ரத்தினக்குமார்.

அதற்குப்பின் என்ன நடந் தது என்பது பற்றி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆயிஷா கண்ணீ ரோடு பேச ஆரம்பித்தார். ""என் னோட சொந்த ஊர் அந்தமான். நானும் எனது கணவரும் ஒரே ஃபீல்டுல இருந்ததால லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட் டோம். வெவ்வேறு மதம்ங்கிறதால இரண்டு பேர் வீட்டிலேயும் எதிர்ப்பு. அதனால, எனது கண வர்தான் கஷ்டப்பட்டு இரண்டு இன்சூரன்ஸ் சேவை நிறுவனங்களைத் தொடங்கி அதுல ஒரு நிறுவனத்துல என்னை ஓனராகவும் இன்னொரு நிறுவனத்துக்கு அவரும் நானும் சேர்ந்து ஓனர் களாகவும் இருக்கோம்.

கம்பெனியை டெவலப் பன்றதால எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வந்துக் கிட்டே இருக்கும். எங்களுக் குள்ள நடந்த சண்டைகளைப் பயன்படுத்திக்கிட்டு எனக்கு ஆறுதல் சொல்றமாதிரி நட்பானான் ரத்தினக்குமார். அவனோட, கடந்தகால வாழ்க்கை யைப் பற்றியெல்லாம் என்கிட்ட ஷேர் பண்ணியிருக்கான்.

rr

அதாவது, சுதான்னு ஒரு பொண்ணை லவ் பண்ணினேன். அவக்கிட்ட ரொம்ப கெஞ்சுவேன். கெஞ்சி கெஞ்சி பேசினதால என்னை ரொம்ப உதாசீனப்படுத்திட்டுப் போயிட்டா. அதுக் குப்பிறகு, ஒவ்வொரு பெண்ணும், நான் கெஞ்சிறது கதறுறது பிடிக்காம விட்டுட்டுப் போயிட்டாளுங்க'ன்னு அழுது ரொம்ப சிம்பதியை கிரியேட் பண்ணினான். அப் போதான், அவனுக்கு ஆறுதல் சொல்றதுக் காக என்னோட பழைய காதலையும் தெரியாத்தனமா சொல்லிட்டேன்.

ஒரு கட்டத்துக்குமேல என்னையே அப்ரோச் பண்ண ஆரம்பிச்ச ரத்தினக்குமார், "நீ மட்டும் என்கிட்ட சாட் பண்ண லைன்னா, உன்னோட பழைய காதலை உன் கணவன்கிட்டே சொல்லிடுவேன்'னு சொல்லியே மிரட்ட ஆரம்பிச்சான். என்னோட கணவர், ரொம்ப கோபக்காரர். இந்த, விஷயம் அவருக்கு தெரிஞ்சதுன்னா வீட்டைவிட்டே துரத்திடுவார். சொந்த வீட்டுக்கும் போகமுடியாது. இந்த, நெருக்கடிகளால வேற வழியில்லாம அவனோட ப்ளாக்மெயில்களுக்கு பயந்து அவன்கிட்ட லவ் பன்றமாதிரி சாட் பண்ணவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்.

"இதுவரைக்கும் எந்த பொண்ணும் என் பேச்சை கேட்டதில்லை. நான்தான், தொங்கிக்கிட்டிருந்தேன். அதனால, நான் சொல்றமாதிரிதான் நீ இருக்கணும். என்கிட்ட நீ கெஞ்சணும். அப்போதான், உன்னை விடுவேன்'னு சைக்கோ மாதிரி பிஹேவ் பண்ண ஆரம்பிச்சான்.

dd

"நீ என்கிட்ட பண்ணின சாட்டிங் கை எல்லாம் உன் கணவர்க்கிட்ட காண்பிச்சிடுவேன். அதனால, ட்ரெஸ் இல்லாத உன் ஃபோட்டோவை அனுப்பிட்டா விட்டுட்டுறேன்'னு ப்ளாக்மெயில் பண்ணினான். முடியவே முடியாது. எனக்கு ரொம்ப பயமா இருக்குன்னு அழுதேன். முகம் தெரியாம கழுத்துக்குக்கீழ உடம்பை மட்டும் எடுத்து அனுப்புன்னு மிரட்டினான். வேற வழியில்லாம முகம் தெரியாம ஃபோட்டோக்களை எடுத்து அனுப்பினேன். ஃபோட்டோக்கள் வேணாம் வீடியோ எடுத்து அனுப்புன்னு மிரட்டினான். ஆனா, அவனோட ப்ளாக்மெயில் அதோடு நிற்கல''’என்று அதிரவைக்கிறார் ஆயிஷா.

"உன்னோட, முன்னாள் காதலன் வினய் கல்யாண் கிட்ட திரும்பவும் பேசு. அவனை வீட்டுக்கு வரவெச்சு அவன்கூட நீ அந்தரங்கமா இருக்கிற வீடியோவை அனுப்பணும்' என்று மிரட்டி அதிர்ச்சி கொடுத்திருக்கிறான். வேறு வழியில்லாமல் முட்டாள்தனத்துடன் அதையும் செய்திருக்கிறார் ஆயிஷா.

கணவருக்கு தெரியாமல் ரத்தினக்குமாரிடம் ஆயிஷா செய்த சாட்டிங்குகள், அந்தரங்க ஃபோட்டோ, வீடியோக்கள் அனைத்தையும் எடுத்து மெயிலில் சேவ் பண்ணி வைத்திருக்கிறான் ரத்தினக்குமார். ஆயிஷாவிடம், எல்லாவற்றையும் டெலிட் செய்துவிட்டதாக பொய் சொல்லியிருக்கிறான். அதாவது, பிரச்சனையாகி மாட்டிக்கொண்டால் ஆயிஷாதான் எடுத்து அனுப்பினார் என்று தப்பித்துவிடலாம் என்பது அவன் திட்டம்.

உன் மனைவியோட அந்தரங்க ஃபோட்டோ வீடியோக்கள் இருக்கு என்று ஆயிஷாவின் கணவனையும் ப்ளாக்மெயில் செய்யலாம் என்று ப்ளான் பண்ணி எல்லா வற்றையும் செய்திருக்கிறான். மேலும், ஆயிஷாவே உரிமையாளராக இருப்பதால் மற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இன்சூரன்ஸ் கமிஷன் தொகைகளையும் தன் பெயருக்கு மாற்றி பணம் கொழித்திருக்கிறான் ரத்தினக்குமார்.

அதுமட்டுமல்ல, இனிமேல் உன் கணவனுடன் நெருக்கமாக இருக்கக்கூடாது. அடுத்தக் குழந்தை எனக்கும் உனக்கும்தான் பிறக்கவேண்டும் என்பதுதான் ரத்தினக்குமா ரின் அடுத்த கட்டளை. ஆனால், இதற்கு ஆயிஷா உடன் படவில்லை. உன்னோட ஃபோட்டோக்கள் வீடியோக்கள் என்னோட ஃப்ரெண்ட்ஸ் சதீஷ், லோகேஷ், டில்லி, அயோத்தி குப்பம் சசி எல்லோர்க்கிட்டேயும் இருக்கு. நான், யார்கிட்ட சொல்றேனோ அவங்ககூடல்லாம் நீ உறவு வெச்சுக்கணும் என்று மிரட்ட ஆரம்பித்திருக்கிறான்.

திடீரென்று, ஒருநாள் கணவர் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த ஒருவன், ரத்தினக்குமார் அனுப்பினான். என்னோடு நெருக்கமாக இருக்கவேண்டும் என்று வற்புறுத்தி அதிரவைத்திருக்கிறான். ரத்தினக்குமாரோடு ப்ளாக்மெயில் டார்ச்சர் நிற்கவில்லை. இன்னும் பல ஆண்களின் பாலியல் டார்ச்சருக்கு ஆளாக வேண்டும் என்பதை மிகவும் லேட்டாக உணர ஆரம்பித்த ஆயிஷா, ‘பிரச்சனையிலிருந்து காப்பாத்துங்க’ என்று 2020 ஏப்ரல் மாதம் தனது கணவரிடம் நடந்த கொடுமைகளையெல் லாம் சொல்லி கண்ணீர்விட்டு கதறியிருக்கிறார்.

rr

ரத்தினக்குமாரின் லேப்டாப் மற்றும் செல்ஃபோன்களை ஆராய்ந்தபோது 1000-க்கும் மேற்பட்ட அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இவ்வளவையும் செய்த மனைவியை தனது குழந்தைகளுக்காக மன்னித்து ஏற்றுக்கொண்ட கணவர், அம்பத்தூர் துணை ஆணையரிடம் ஆதாரங்களுடன் 2020 ஆகஸ்ட்-10ந் தேதி புகார் கொடுத்தார்.

இதனால், அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் காவல்நிலைய எஸ்.ஐ. நாட்டாளு அம்மையிடம் பொய்யான முகவரியில் புகார் கொடுத்து ஆயிஷாவின் கணவரை மிரட்டியிருக்கிறான் ரத்தினக்குமார். அதுவும், 2020 செப்டம்பர்-3 ந்தேதி ஸ்டேஷனுக்கு வருகிறேன் என்று ஆயிஷாவின் கணவர் சொன்னபிறகும்கூட ரஜினிகாந்து என்ற போலீஸை ஆயிஷாவின் கணவரை தேடுவதாக அலுவலகத்துக்கு அனுப்பி மிரட்டியிருக்கிறார் எஸ்.ஐ. நாட்டாளு அம்மை.

இதுகுறித்து, எஸ்.ஐ. நாட்டாளு அம்மையை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, ""ஆயிஷாவின் கணவர் தனது லேப்டாப், செல்ஃபோனை எல்லாம் பிடுங்கிவைத்துக்கொண்டு மிரட்டுகிறார் என்று ரத்தினக்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் ஆயிஷாவின் கணவரை விசாரணைக்கு அழைத்தேன். அவர், ஏற்கனவே புகார் கொடுத்ததை சொல்லவில்லை. விசாரணைக்கு வராததால்தான் அவரது அலுவலகத்துக்கு போலீஸை அனுப்பினேன்'' என்றார் விளக்கமாக.

இந்நிலையில், ஜே.ஜே. நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பெருந்துரை முருகன் விசாரித்து, உண்மை என்ன என்பது தெரியவர, பணமோசடி புகாரை ஏற்றுக்கொண்டு, பெண்கள் புகாரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு பரிந்துரை செய்தார். புகாரை கேட்டு அதிர்ந்துபோன எஸ்.ஐ. ஜானகி உள்ளிட்ட மகளிர் போலீஸார் 2020 ஆகஸ்ட் 30 ந்தேதி ஆயிஷாவின் புகாரை ஏற்று விசாரணையைத் தொடங்க, இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி உள்ளே எண்ட்ரி ஆனதும் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆயிஷாவுக்கு எதிராக மாறுகிறது வழக்கு.

எஃப்.ஐ.ஆர்கூட பதிவுசெய்யாமல் கட்டப்பஞ்சாயத்து பேசுவதிலேயே குறியாக இருந்திருக்கிறார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியை பார்க்கச் சொல்லியிருக்கிறார். அவரும், எந்த நடவடிக்கையும் எடுக்க உத்தரவு இடவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறது ஆயிஷா தரப்பு.

இவ்வளவு பெரிய பாலியல் புகாருக்கு எஃப்.ஐ.ஆர்கூட போடாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு என்ன காரணம்? திருமங்கலம் அனைத்து மகளிர் இன்ஸ் பெக்டர் உமாமகேஸ்வரியை தொடர்புகொண்டு கேட்ட போது, ""விசாரணையில் உள்ளது'' என்றவர், அதற்கு மேல் பேச மறுத்துவிட்டார்.

குற்றச்சாட்டுக்குள்ளான ரத்தினக்குமாரைத் தொடர்புகொண்டபோது ஸ்விட்ச் ஆஃப்பில் இருந்தது செல்போன். அவரது தரப்பில் விளக்கமளித்தாலும் பிரசுரிக்க தயாராக இருக்கிறது நக்கீரன்.

பழகும் பெண்களை ப்ளாக்மெயில் செய்து அவர்களை வைத்தே ஆபாசப்படங்கள், வீடியோக்கள் எடுத்து பல ஆண்களுக்கு விருந்தாக்க முயற்சித்திருக்கிறான் ரத்தினக்குமார்.

இன்னும் ஆபாச தளங்களில் இந்த ஃபோட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டிருக்கிருக்கிறானா? யார் யாருக்கெல்லாம் இந்த ஃபோட்டோ வீடியோக்களை அனுப்பியிருக்கிறான்? இவனுக்கு பின்னால் யார் யாரெல்லாம் இருந்துகொண்டு இளம்பெண்களை ப்ளாக்மெயில் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காவல்துறை உயரதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால், இதுபோன்ற பாலியல் கொடூரங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

-மனோசௌந்தர்