1000 கோடி பட்ஜெட்! மிரட்டிய எடப்பாடி! - கை கொடுக்குமா மதுரை மாநாடு?

eps

டப்பாடி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வானபிறகு, எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்குப் பிறகு தான்தான் அசைக்கமுடியாத தலைவர் என்பதை நிரூபித்துக் காட்டவும் தென்மாவட்டத்தைப் பொறுத்த வரை ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா கைதான் ஓங்கியிருக்கும் என்ற பிம்பத்தை உடைக்கவும், தென் மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரையில் மாபெரும் மண்டல மாநாட்டை ஏற்பாடு செய்தார் எடப்பாடி.

eps

தென்மாவட்டச் செயலாளர்கள் கொஞ்சம் சுணக்கம்காட்டவே, தனது சமுதாயத்தைச் சேர்ந்த பெரும் மில் தொழிற்சாலைகளின் முதலாளிகளிடம், தென்மாவட்டத்தில் ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலாவின் சமுதாய செல்வாக்கை எப்படியும் இந்தமுறை உடைத்தால்தான் அ.தி.மு.க.வின் தனிப்பெரும் தலைவனாக உருவாகமுடியும் என்று விளக்கிப் பேசினார். அவர்களும் பணத்தை தண்ணியாக செல வழித்ததுடன், தங்களது தொழிற்சாலைகளின் ஆட்களையும், தாங்கள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளின் பேருந்துகளையும் கொடுத்துதவ மாநாட்டுக்கு ஆட்கள் திரட்டப்பட்டனர். செலவும் 500 கோடியிலிருந்து 1000 கோடியாக அதிகரித்தது.

இன்னொரு பக்கம், அ.தி.மு.க.வின் மதுரை மாநாடு ஆகஸ்ட் 20-ஆம் தேதி என்று அறிவித்தது முதலே பல்வேறு பிரச்சனைகள். முதலில் காரைக்குடியை சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் விமான நிலையத்திற்கு அருகில் மாநாடு நடைபெறுவதால் பாதுகாப்பு இல்லை என்று வழக்கு போட்டார். அடுத்த சில நாட்களில், வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீட்டால் எடப்பாடி துரோகம் செய்துவிட் டார் என 64 முக்குலத்தோர் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து போராட்டம் அறிவித்தன. தி.மு.க.வினர் நீட்டிற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை அதேநாளில் அறிவித்த னர். இதையெல்லாம் தாண்டி ஒருவழியாக ஆகஸ்ட் 20-ஆம் தேதி காலை முதலே மாநாடு களைகட்ட ஆரம்பித் தது. 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன. உள்ளரங்கத்தில் மட்டும் 70,000

டப்பாடி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வானபிறகு, எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்குப் பிறகு தான்தான் அசைக்கமுடியாத தலைவர் என்பதை நிரூபித்துக் காட்டவும் தென்மாவட்டத்தைப் பொறுத்த வரை ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா கைதான் ஓங்கியிருக்கும் என்ற பிம்பத்தை உடைக்கவும், தென் மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரையில் மாபெரும் மண்டல மாநாட்டை ஏற்பாடு செய்தார் எடப்பாடி.

eps

தென்மாவட்டச் செயலாளர்கள் கொஞ்சம் சுணக்கம்காட்டவே, தனது சமுதாயத்தைச் சேர்ந்த பெரும் மில் தொழிற்சாலைகளின் முதலாளிகளிடம், தென்மாவட்டத்தில் ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலாவின் சமுதாய செல்வாக்கை எப்படியும் இந்தமுறை உடைத்தால்தான் அ.தி.மு.க.வின் தனிப்பெரும் தலைவனாக உருவாகமுடியும் என்று விளக்கிப் பேசினார். அவர்களும் பணத்தை தண்ணியாக செல வழித்ததுடன், தங்களது தொழிற்சாலைகளின் ஆட்களையும், தாங்கள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளின் பேருந்துகளையும் கொடுத்துதவ மாநாட்டுக்கு ஆட்கள் திரட்டப்பட்டனர். செலவும் 500 கோடியிலிருந்து 1000 கோடியாக அதிகரித்தது.

இன்னொரு பக்கம், அ.தி.மு.க.வின் மதுரை மாநாடு ஆகஸ்ட் 20-ஆம் தேதி என்று அறிவித்தது முதலே பல்வேறு பிரச்சனைகள். முதலில் காரைக்குடியை சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் விமான நிலையத்திற்கு அருகில் மாநாடு நடைபெறுவதால் பாதுகாப்பு இல்லை என்று வழக்கு போட்டார். அடுத்த சில நாட்களில், வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீட்டால் எடப்பாடி துரோகம் செய்துவிட் டார் என 64 முக்குலத்தோர் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து போராட்டம் அறிவித்தன. தி.மு.க.வினர் நீட்டிற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை அதேநாளில் அறிவித்த னர். இதையெல்லாம் தாண்டி ஒருவழியாக ஆகஸ்ட் 20-ஆம் தேதி காலை முதலே மாநாடு களைகட்ட ஆரம்பித் தது. 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன. உள்ளரங்கத்தில் மட்டும் 70,000 பேர் அமரக்கூடிய அளவுக்கு இருக்கைகள் போடப்பட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது. வெளியில் 50,000 பேர் கூடுமளவுக்கும் அடுத்து வெளி சுற்றுச்சுவர் அமைத்து திறந்தவெளியில் பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். மலைபோல் அரணாக இருக் கும்படி மிகப்பிரம்மாண்டமாக முகப்பு அமைக்கப்பட்டு, அதில் அ.தி.மு.க. கொடி ஊன்றப்பட்டிருந்தது. 1 லட்சம் பேர் நிற்கக்கூடிய வெட்டவெளி அரங்கமும், அதையடுத்து உணவு பரிமாறும் கொட்டகையும், தொண்டர் களுக்கு உணவு, குடிநீர் மற்றும் 200 கழிவறைகள் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

eps

மாநாட்டிற்கு காலை 8.30-க்கு வந்த எடப்பாடி, கழகக் கொடியை ஏற்றிவைத்து தொண் டர்களைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார். அப்போது ஹெலிகாப்டரிலிருந்து எடப்பாடி மீது மலர்கள் தூவி பிரமிக்க வைத்தார்கள். வெளிஅரங்கில் மட்டும் 1 லட்சம் தொண்டர்கள் குவிந்திருந்தனர். உற்சாகமாகிய அவர் அருகிலிருக்கும் நட்சத்திர விடுதிக்குச் சென்றார். வெவ்வேறு ஊர்களிலிருந்தும் தொண்டர்கள் சாரை, சாரையாக வந்தவண்ணம் இருந்தனர். பெரும்பாலும் சேலம், தர்மபுரி, கோவை, ஈரோடு, கோபிசெட்டிபாளையம் போன்ற கொங்கு பெல்ட்டைச் சார்ந்தவர்களே அதிகமாக தென்பட்டனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த சேதுராமன் நம்மிடம், "இனி அ.தி.மு.க. என்றால் எடப்பாடிதான் என்ற நிலையை உருவாக்கிவிட்டோம். எங்க கொங்கு பெல்ட்டில் இருந்து மட்டும் லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருக்கோம். நாங்க வந்த பேருந்துகூட எங்க ஸ்டார் மில் முதலளியோடதுதான்''’என்றார். “

"தென்மாவட்டத்தில் இருக்கும் முக்குலத்தோர் சமுதாயம் ஒன்றுபட்டு எதிர்க்கிறார்களே''’என்றதும், "அப்படியெல்லாம் இல்லை. இதே மதுரையில் உதயகுமார், ராஜன்செல்லப்பா, செல்லூர் ராஜூ இவங்க எல்லாம் யாரு'' என்றார்.

eps

வால்பாறை விஜய்ராணி, "தம்பி நேத்தே வந்துட் டோம்''’என்றவரிடம், "அப்ப ரொம்ப செலவாயிருக் குமே''’என்றதும், "அதெல்லாம் இல்லை. நான் வேலை பார்க்கும் மில்லில் லீவு கொடுத்து மில் வண்டியிலேதான் வந்தோம். எங்க மாவட்டச் செயலாளர் தலைக்கு 2000 ரூபாய் கொடுத்திருக்கார். நானும் என் வீட்டுக் காரரும் வந்தோம். சாப்பாடு, தங்கும் இடம் எல்லாம் கொடுத்துவிட்டார்கள். கல்யாண மண்டபத் தில் தங்கினோம். தம்பி ஒரு பைசா செலவில்லை'' என்றார். ஈரோட்டைச் சேர்ந்த ஜீவாவோ, "எனக்கும் என் கணவருக்கு வேட்டி, சேலை கொடுத்துக் கூப்பிட்டார்கள். அப்புறம் நானே 65 பேரை காண்பித்து, அவங்களுக்கும் ஏதோ பிரயோஜனமா இருக்கட்டுமே என்று ஒரு கூட்டமா வந்தோம். எம்.ஜி.ஆர். அடுத்து ஜெயலலிதாதான். இப்ப என்னடானா எடப்பாடி தலைவரு என்கிறார்கள். அம்மா இடத்தில் இவரைப் பார்க்க முடியாதுதான். என்ன செய்ய எங்க சாதியாச்சே விட்டுக்கொடுக்க முடியுமா?''’என்று சிரிக்கிறார்.

தொண்டர்களிடம் பேசியதைப் பார்த்த அந்த அ.தி.மு.க. நிர்வாகி, "சார் நான் இராம்நாட்டுல கட்சியில முக்கிய பொறுப்பில் இருக்கேன். தென்மாவட்டத்திலிருந்து அவ்வளவாக ஆட்கள் வரவில்லை. எங்க சமுதாய மக்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருக்கிறாங்க. இப்படி மோடியோட சேர்ந்துகிட்டு ஆடுறாய்ங்க. சசிகலாவை முதல்வராகவிடாம தடுத்தது பா.ஜ.க. அடுத்து ஓ.பி.எஸ்.ஸை வெட்டிவிட்டுவிட்டு இப்ப எடப்பாடியை கையிலெடுக்கிறாங்க''’என்றார். உள்ளரங்கில் காலையில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. இசையமைப்பாளர் தேவாவின் கச்சேரி, அடுத்து ரோபோசங்கரின் காமெடி நிகழ்ச்சி, மதுரை முத்து, சின்னத்திரை நடிகர் நடிகைகளின் காமெடி நிகழ்ச்சிகள், பாட்டுக் கச்சேரி, ஒயிலாட்டம் என முற்றிலும் கலை நிகழ்ச்சியாகவே நேரத்தை ஓட்டினார்கள். எஸ்.பி.வேலுமணி, திடீரென மேடையேறி ஒயிலாட்டக் குழுவின ரோடு நடனமாட... அரங்கமே உற்சாக மானது. கடைசியாக எடப்பாடி மாலை 5 மணிக்கு மேடைக்கு வந்தவுடன் முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி, உதயகுமார், ஜெயக்குமார், நத்தம் விஸ்வ நாதன், திண்டுக்கல் சீனிவாசன், பொள் ளாச்சி ஜெயராமன், தமிழ்மகன் உசேன், அன்வர் ராஜா, செல்லூர் ராஜூ போன்றோர் எடப்பாடியைப் புகழ்ந்து பேசியமர்ந்தனர்.

eps

அ.தி.மு.க. நிர்வாகி வைகைச்செல் வன், “எடப்பாடி பழனிசாமிக்கு, "புரட்சித் தமிழர்' என்ற பட்டம் சர்வசமய பெரியோர் களால் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேடையிலேயே புரட்சித் தமிழர் என வைகைச் செல்வன் மூன்று முறை உச்சரித்தார். இனி அ.தி,மு,க.வினர் இந்தப் பட்டம் சொல்லியே அழைக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அப்போது நாற்காலியிலிருந்து எழுந்த எடப்பாடி ரெட்டை விரலைக் காட்டி போஸ் கொடுத்தார்.

அ.தி.மு.க. மாநாட் டில் 32 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக எடப்பாடியார் திகழ்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியாரை தமிழக முதல்வராக்க சபதம் ஏற்போம் என அந்தத் தீர்மானங்கள் நீண்டன.

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "மதுரை மண் ராசியான மண். இங்கு எதைத் தொட்டாலும் துலங்கும். நான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் எழுச்சி மாநாட்டை இங்கு நடத்தியுள்ளோம். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இன்று தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. எங்கும் கொலை கொள்ளை. இன்று நீட் தேர்வுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரத நாடகம் ஆடுகிறார். 2010ல் காங்கிரஸ் ஆட்சியின்போது நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அப்போது குலாம் நபி ஆசாத் மத்திய சுகாதார அமைச்சர், தி.மு.க. காந்திச்செல்வன் சுகாதார இணையமைச்சர். நீட் தேர்வைக் கொண்டுவந்தது தி.மு.க. அதை ரத்துசெய்ய போராடுவது அ.தி.மு.க. 2021-ல் ஆட்சி ஏற்ற பிறகு நீட் தேர்வை முதல் கையெழுத்தில் ரத்துசெய்வதாக சொல்லிவிட்டு இன்று நாடகமாடுகிறார்கள்.

முறைகேடான டாஸ்மாக் பார்களால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஸ்டாலினுக்குச் சென்றிருக்கிறது. இந்த மாநாடு ஒரு சரித்திர சாதனை. 15 லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டிற்கு வந்து ஒரு சகாப்தத்தை உருவாக்கிவிட்டீர்கள்''’என்று முடித்துக் கொண்டு கிளம்பிய எடப்பாடி, உதயகுமாரையும் செல்லூர்ராஜுவையும் அருகில் அழைத்து "மதுரைக்காரங்க சொன்னமாதிரி காலை வாரிட்டீங்க''’என்று கடிந்துகொண்டார்.

மாநாட்டிலிருந்து கிளம்பும்போது, கூட்டத்திலிருந்த தொண்டர் இராமநாதபுரம் முத்துசாமி நம்மிடம், "அ.தி.மு.க. கழக மாநில மாநாடு என்றால் காலையிலிருந்து பல்வேறு தலைப்புகளில் பேச்சாற்றல்மிக்க, அறிவார்ந்த தலைவர்கள் கருத்தாழத்துடன் பேசுவார்கள். கொள்கை விளக்க பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள் நடைபெறும், கடைசியில் மாநாட்டு தீர்மானம் போடப்படும். இந்த முறை எதுவுமே இல்லை. முகப்பில் பெரியார், அண்ணா என்று படத்தைப் போட்டுவிட்டு பகுத்தறிவுக் கொள்கைக்கு மாறாக பா.ஜ.க. கட்சியைப் போன்று ராமர், கிருஷ்ணன், சீதை வேடமிட்டு வரவேற்று ஆடியது, திராவிட கட்சி மாநாடு மாதிரி இல்லை'' பொருட்காட்சிக்கு வந்தது போலிருந்தது” என்று நொந்துகொண்டார்..

மாநாட்டுப் பாதுகாப்புக்காக வந்திருந்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “"உள் அரங்கில் 70 ஆயிரம் சீட் போட்டிருக்கிறார்கள் அதுவே எடப்பாடி பேசுறப்ப 10 ஆயிரம் சீட் காலியாகதான் இருந்தது. வெளி அரங்கில் 1 லட்சம் பேர் இருக்கலாம். ஆனால் அது முழுமையாக நிரம்பவில்லை. எல்லாம் சேர்த்து கூட்டம் 3 லட்சத்தைத் தாண்டாது''’என்றவர், “"தென்மாவட்ட வண்டிகள் மிகவும் குறைவா இருக்கு.. நீங்க என்ன சொல்றீங்க?''” என்றார். “"அதுதான் நீங்களே சொல் லிட்டீங்களே''’என்றவாறு அங்கி ருந்து நடையைக் கட்டினோம்.

nkn230823
இதையும் படியுங்கள்
Subscribe