M R Vijayabaskar

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். தொழிலதிபரான இவர், கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பது, "அ.தி.மு.க.வை சேர்ந்த நான் நாமக்கல் மற்றும் பரமத்திவேலூரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறேன். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், எனக்கும் இடையே பல ஆண்டுகளாக பணம் கொடுக்கல், வாங்கல் இருந்தது. இந்த நிலையில் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் உள்ள எனது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அவர் சொல்லும் நான்கு பேருக்கு எழுதித் தரும்படி கேட்டு மிரட்டினார். இதனால் கடந்த பிப்ரவரி மாதம் எனது மகள் ஷோபனா பெயருக்கு எனது சொத்துக்களை தான செட்டில்மெண்ட் எழுதி வைத்தேன். ஆனால், விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், எனது மகள் ஷோபனா மற்றும் என் மனைவியை மிரட்டி, போலி ஆவணங்களை வழங்கி மோசடியாக சொத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சார்பதிவாளர் அலுவலகத்தில பத்திரப்பதிவை ரத்து செய்ய மனு அளித்தேன்.

Advertisment

எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபொழுது அவரது உத்தரவின்பேரில் அவருடைய பினாமிகள் மூலம் எடுக்கப்பட்ட அரசு கான்ட்ராக்ட்களுக்கு எலக்ட்ரிக்கல் மெட்டீரியல் நிறைய அனுப்பினேன். அவர் அமைச்சராக இருந்தபொழுது அவரது குடும்ப உறுப்பினர்கள் நடத்திவந்த தஹண்ய்க்ஷர்ஜ் க்ஹ்ங்ழ்ள், தஹண்ய்க்ஷர்ஜ் இப்ன்ங் ம்ங்ற்ஹப்ள், தஹண்ய்க்ஷர்ஜ் ஒய்ச்ழ்ஹற்ங்ஸ்ரீட், ஆழ்ண்ஹ்ன்ழ் நங்ப்ப்ஹய்க்ண்ஹம்ம்ஹய் பழ்ஹய்ள்ல்ர்ழ்ற்ள் ஆகிய நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் கோடி ரூபாயையும், மேலும் அவருக்கும், அவரது தம்பி சேகருக்கும் நேரடியாகப் பணமாக 10 கோடி ரூபாயை வட்டிக்கு கடனாகக் கொடுத்திருந்தேன்.

மேற்படி கடனாகக் கொடுக்கப்பட்ட தொகைக்கான மாத வட்டி ரூ.15 லட்சத்தை, கடந்த 2023ஆம் வருடம் ஜூன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் தராமல் இருந்து வந்தனர். எனவே அவர்களிடம் 2024ஆம் வருடம் ஜனவரி மாதத்தில், கொடுத்த பணத்தை வட்டியுடன் சேர்த்து கண்டிப்பாக திரும்பக் கொடுக்க வேண்டுமென்று கரூரில் அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது, எனது பணத்தை திரும்பத் தர முடியாது என மிரட்டலாகச் சொன்ன எம்.ஆர்.விஜயபாஸ்கர், என்னை மிக மோசமான வார்த்தைகளால் திட்டி அனுப்பிவிட்டார்.

Advertisment

அதன்பின் எனது மகள் சோபனா மற்றும் மனைவி சசிகலா ஆகியோரை மிரட்டி, நான் எனது மகள் சோபனாவுக்கு எழுதிக்கொடுத்த தோரணக்கல் பட்டி (மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகம் ஆவண எண். 884/2024) மற்றும் காக்காவடி கிராமம், குன்னம்பட்டியிலுள்ள (வெள்ளியணை சார்பதிவாளர் அலுவலகம் ஆவண எண்கள்.556/2024 மற்றும் 557/2024) சொத்துக்களை எனது மகள் சோபனாவிடமிருந்து 06-04-2024ஆம் தேதி வாங்கியதாக,

1. காஞ்சிபும் மாவட்டம் தேவராஜ் மகன் ரகு

2. ஈரோடு மாவட்டம் முத்துச்சாமி மகன் சித்தார்த்தன்

3. கரூர் மாவட்டம் நாச்சியப்பன் மகன் மாரப்பன்

4. சுரூர் மாவட்டம் செல்லமுத்து மகன் செல்வராஜ்

ஆகியோர்களின் பெயரில் மோசடியாக ஒரு கிரையப் பத்திரம் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் (ஆவண எண்.ட/38/2024) பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரால் எனது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடலாம். காவல்துறையினர் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, என்னையும், எனது குடும்பத்தாரையும் ஏமாற்றி மோசடியாக அபகரிக்கப்பட்ட 100 கோடி மதிப்புள்ள சொத்தை மீட்டுத்தர வேண்டும்' என்று தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த மனுவினை அடிப்படையாகக் கொண்டு மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் முன் ஜாமீன் கேட்டு விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், வருகிற 19ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இதனிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கிடைக்காத நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.