"ஹலோ தலைவரே, ஆர்.எஸ்.எஸ். தரப்பே பா.ஜ.க. அண்ணாமலை மீது அதிருப்தியில் இருக்குது.''”
"ஆமாம்பா, அவரை கிரிமினல்களின் காட்ஃபாதர்ன்னு அவங்க தரப்பே விமர்சிக்குதே.''”
"அது மட்டுமில்லைங்க தலைவரே. அவர் ஒரு பக்கா ’ஃபோர் டுவெண்டின்னு பா.ஜ.க. தரப்பினரும் வர்ணிக்கிறாங்க. அதுக்கு அவங்க ரீசன்ட்டா சொல்லும் காரணம் என்னன்னா.. பொதுமக்களிடம் இருந்து 2500 கோடி ரூபாய் வரை, மோசடி செய்த ஆருத்ரா நிதி நிறுவன நிர்வாகிகள் பலரையும், இன்னும் காவல்துறை தேடிக்கிட்டு இருக்கு. அந்தக் குற்றவாளிகளில் ஒருவரான ஹரிஷுக்கு பா.ஜ.க.வில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின், மாநிலப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் அண்ணாமலை. அதோடு, அந்த ஹரீஷை, டெல்லிப் பக்கம் தன் பாதுகாப்பில் தங்கவும் வச்சிருக்காராம். இதுக்காக ஹரீஷிடம் அண்ணாமலை 100 கோடி ரூபாய் வரை அன்பளிப்பு வாங்கிதாகவும் ஆர்.எஸ்.எஸ். தரப்பிலேயே புகார் வலுத்திருக்கு. இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அந்த ஹரீஷ் வாயைத் திறந்தால், நம் கட்சிக்கே ஆபத்துன்னு சொல்லி அண்ணாமலை சமாளிக்க முயல்கிறாராம். இந்த நிலையில் ஆருத்ரா போலவே பொதுமக்களிடம் 800 கோடிவரை மோசடி செய்த ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகளில் ஒருவரான நேரு, இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.''”
"அதுசரிப்பா, பா.ஜ.க.வில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேரப்போகிறார்னு ஒரு டாக் அடிபடுதே?''”
"நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் இருந்தபோது, சிறுத்தைகள் கட்சியினரை பலமுறை மிகவும் கடு மையாக விமர்சித் திருக்கிறார். அப் படிப்பட்டவர், பா.ஜ.க.வில் இருந்து விலகிய பின், சிறுத்தைகள் கட்சி யின் செய்தித் தொடர்பாளர் பாவலன் மூலமாக திருமாவைச் சந்திக்கணும்னு அப்ரோச் பண்ணியிருக்கிறார். திருமாவும் அவரை வரச்சொல்ல, உற்சாகமாக காயத்ரியும் போய்ச் சந்தித்திருக்கிறார். அப்போது அவரை, அன்போடு வரவேற்ற திருமா, ’"உலக வரலாற்றில் பெண்கள்'’ எனும் புத்தகத்தைப் பரிசளித்துவிட்டு, "அன்னை சாவித்ரி புலேயின் சகிப்புத் தன்மையும் ஜெயலலிதாவின் போர்க் குணமும் பெண்களுக்குத் தேவை' என்று அன்புரை வழங்கியிருக்கிறார். மேலும், காயத்ரி தொடங்கவிருக்கும் பா.ஜ.க.வுக்கு எதிரான யாத்திரைக்கு தன் மனம் நிறைந்த வாழ்த்துகளையும் திருமா சொன்னாராம். இதில் நெகிழ்ந்துபோன காயத்ரி, "ரொம்பவும் நன்றி அண்ணா' என்று பலமுறை சொல்லி உருகினாராம். பா.ஜ.க.வுக்கும் அண்ணாமலையின் அடாவடிகளுக்கும் எதிராக, பிரச்சார யாத்திரை நடத்த இருக்கும் காயத்ரி, அது நிறைவடைந்ததும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைவார் என்கிற பேச்சு இப்போதே பரவலாக அடிபடுகிறது.''”
"தி.மு.க.வுக்கு எதிராக எப்போது? என்ன அஸ்திரம் கிடைக்கும்னு பா.ஜ.க. அண்ணாமலை ஆர்வம் காட்டுகிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வுக்கு எதிராக எதையாவது செய்து, கட்சிக்குள் சரிந்து போயிருக்கும் தனது இமேஜை நிமிர்த்திக்கொள்ளப் பார்க்கிறார் அண்ணாமலை. அண்மையில் கிருஷ்ண கிரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரபு, படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் திமுக.வைச் சேர்ந்த கவுன்சிலர் சின்னச்சாமி உள்பட 9 பேரைக் கைது செய்திருக்கிறது போலீஸ். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது என விசாரணை யில் தெரியவந்த நிலையிலும், இதை அரசியலாக்கி வரும் அண்ணாமலை, இந்த கொலைக்கு நீதிகேட்டு பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் நடத்தினார். அதில் கலந்து கொண்ட அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டினார். போராட்டத்தின் முடிவில் சிவானந்தா சாலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தும் பேரணியையும் நடத்தினார். பின்னர் கவர்னர் ரவியை சந்தித்து, அந்த கொலை பற்றி புகார் சொன்னதோடு, தி.மு.க. அரசு வந்தபின் நிறைய கொலை, கொள்ளை நடக்குது. இங்கு சட்டம் ஒழுங்கே குலைந்துவிட்டதுன்னு ஒரு பட்டியலை ஒப்பித்தாராம். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட கவர்னர் ரவி, இது குறித்து அரசிடம் விளக்கம் கேட்கிறேன்னு சொன்னாராம்.''”
"பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் அந்தரங்கப் படங்கள் கர்நாடக மாநிலத்தையே தகிக்க வைக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, கர்நாடக சிறைத்துறை அதிகாரியாக இருந்த ரூபா ஐ.பி.எஸ். பெயரை யாரும் மறந்திருக்க முடியாது. சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, கோடிக்கணக்கில் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, சிறையையே உல்லாசபுரியாக ஆக்கிக் கொண்டதை, பகிரங்கப்படுத்தியவர்தான் ரூபா ஐ.பி.எஸ். அவர், இப்போது கர்நாடக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ரோகினி சிந்தூரியின், அந்தரங்கப் படங்கள் சிலவற்றை அம்பலப்படுத்தி, இதுதான் அவர் லட்சணம் என்று சொல்லி இருக்கிறார். மேலும் கோலாரில் கலெக்டராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி, 2015-ல் தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணமாக இருந்ததும் இந்த ரோகினிதான் என்று கூறியிருப்பதோடு, தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரோடும் அவர் நெருக்கமாக இருக்கிறார் என்றும் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். இந்தப் பிரச்சினை கர்நாடக அரசுக்குப் பெரும் தலைவலியை உண்டாக்கி இருக்கிறது. இந்த விவகாரத்தை ரூபா கையில் எடுக்கக் காரணம், அவர் கணவரோடும் ரோகினி நெருக்கமான நட்பில் இருந்ததுதான் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.''
"ராகுல்காந்தி கொடுத்த ஒரு பேட்டி பரபரப்பாக ஆகிவருதே?''”
"ஆமாங்க தலைவரே, கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரையிலான ராகுலின் பாத யாத்திரையை சமீபத்தில் நிறைவு பெற்றது. அதில் கிடைத்த அனுபவங்களை அவர், அண்மையில் ஒரு தனியார் யு-டியூப் சேனலுக்குக் கொடுத்த பேட்டியில் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார். அப்போது பாதயாத்திரையின் போது பெரிய அளவில் வளர்ந்துவிட்ட அந்த தாடியோடுதான் அவர் இருந்தார். அவரை நாடாளுமன்றத்தில் பார்த்த பிரதமர் மோடியும் அமித்ஷாவுமே, தாடியில் நீங்கள் லுக்காக இருக்கிறீர்கள் என்று பாராட்டியதால், அவர் தாடியை எடுக்க யோசிக்கிறாராம். அவர் கொடுத்திருக்கும் பேட்டியின் போது, 52 வயதாகியும் நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? என்று கேட்கப்பட, எனக்கு வருகிற மனைவி என் அம்மா மற்றும் பாட்டி இந்திராகாந்தி ஆகியோரின் கலவை போல் இருக்கவேண்டும். அப்படி ஒரு பெண் கிடைப்பாரா? என்று தன் ஏக்கத்தை வெளியிட்டிருக்கிறார். அதோடு, எனக்கு குழந்தைகள் வேண்டும் என்று தோன்றுகிறது என்றும் சொல்லி இருக்கிறார். இதுபோன்ற அப்பட்டமான பதில்களோடு அமைந்த ராகுலின் பேட்டியை, காங்கிரஸ் தரப்பைத் தாண்டி பா.ஜ.க.வினரும் ரசிக்கிறார்களாம்.''”
"கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் ஒரு தீம்பார்க் நிறுவனம் சர்ச்சையில் சிக்கி இருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோலோச்சும் மூன்று எழுத்து பொழுதுபோக்கு நிறுவனத்தின் மீது நில ஆக்கிரமிப்புப் புகார்கள் ஏகத்துக்கும் வெடித்தபடி இருக்கின்றன. இந்த நிறுவனம் உழைப்பால் உயர்ந்த சகோதரர்களுக்குச் சொந்தமானது. தங்கள் தீம் பார்க்கை விரிவு செய்ய நினைக்கும் இந்த நிறுவனம், அந்தப் பகுதியில் பிரபலங்களுக்குச் சொந்தமான நிலங்கள் மூலமும், சுடுகாட்டுப் பகுதி மூலமும் அரசுக்கு ஒதுக்கப்பட்ட ஓ.எஸ்.ஆர். நிலங்களை எல்லாம், போர்ஜரி டாகுமெண்டுகள் வழியாக வளைத்து வருகிறதாம். ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்களின் நட்பும், உயர் அதிகாரிகளின் ஆசியும் இருப்பதால் அந்த நிறுவனம் எதற்கும் கவலைப்படவில்லையாம். இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகள் சில கையில் எடுக்கத் தயாராகிவிட்டன. எனவே, அது விரைவில் பெரிய அளவில் வெடிக்கப் போகிறது என்கிறார்கள். இதையறிந்த உளவுத்துறை, அந்த நிறுவனத்தின் செயலால் ஆட்சிக்குக் கெட்ட பெயர் வரலாம் என்று முதல்வருக்கு நோட் போட்டிருக்கிறதாம்.''”
"ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், கடைசி நேரத் தட்பவெப்பம் எப்படி இருக்கிறது?''”
"கடைசிநேரக் களநிலவரம் பதட்டம் நிறைந்ததாகவே இருக்கிறது. அங்கே இருக்கும் தேர்தல் அதிகாரிகள், தி.மு.க. தரப்பைத் தீவிரமாகக் கண்காணித்து, அதை சுதந்திரமாக செயல்பட முடியாதபடி செய்வதோடு, அ.தி.மு.க. தரப்புக்கு மட்டும் முழு சுதந்திரத்தைத் தருகிறார்கள். அதனால், அவர்கள் தரப்பு, சரளமாக கரன்சியையும் பரிசுப் பொருட் களையும் வாக்காளர்களுக்கு விநியோக்கிக்கிறது. இதைத் தடுக்க முடியாமல் தி.மு.க. தரப்பு கைபிசைகிறது. காரணம், நட வடிக்கை எடுக்க வேண்டிய பெரும்பாலான ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பா.ஜ.க.வின் கைப் பாவைகள் போல் இருந்துகொண்டு, அ.தி.மு.க. தரப்புக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்களாம். தி.மு.க. வினரிடம் பம்மியும் தங்களிடம் தோழமையாக நெருங்கியும் இருக்கும் அதிகாரிகளால் அ.தி.மு.க. தரப்பு மகிழ்ச்சியில் திளைக்கிறது. இப்படி இருந்தும், உட்கட்சி விவகாரத்தில் அளவு கடந்து மூக்கு நுழைக்கும் பா.ஜ.க. மீது கடும் எரிச்சலில் இருக்கும் அ.தி.மு.க.வினர்., பிரச்சாரத்துக்கு அண்ணா மலையை வரவேண்டாம் என்று மறைமுகமாகத் தடுக்க முயன்றார்களாம். ஆனாலும் விடாப் பிடியாக பிரச்சாரத்துக் காக ஈரோடு சென்ற அண்ணாமலையை, மணிக்கணக்கில் காக்க வைத்து அ.தி.மு.க. தரப்பு டென்சன் ஆக்கியதாம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துக்கிறேன். சி.எம்.டி.ஏ. எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளராக இருக்கும் அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ்.ஸுக்கும், அமைச்சர் சேகர்பாபுவுக்கும் இடையில் உரசல் என்கிற செய்தி கோட்டை வட்டாரத்தில் பரபரப் பாக அடிபடுகிறது. காரணம், அன்சுல் அண்மை யில் சி.எம்.டி.ஏ.வில் நிகழும் செயல்கள் அனைத் தையும் அனைவரும் அறிந்துகொள்ள வகை செய்யும் ஒரு வெப்சைட்டை அறிமுகப்படுத்தி னார். இதையறிந்த அமைச்சர் சேகர்பாபு, இது முதல்வரால் தொடங்கி வைக்கப்பட வேண்டிய அரசின் சாதனைத் திட்டம். அப்படிப்பட்ட இதை நீங்கள் எப்படி சிம்பிளாக தொடங்கிவைக்கலாம் என்று காட்டம் காட்ட, அதற்கு அவரும் விளக்கம் சொல்லியிருக்கிறார். அதுதான் இவர்கள் இருவருக்கும் இடையில் புகைச்சலாய் மாறிவிட்டதாம்.''”
____________
சிதம்பரத்தில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவில் கலந்துகொள்வதற்காக 22 ஆம் தேதி மாலை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருகைதந்தார். பின் மறுநாள் 23-ஆம் தேதி வியாழன் காலை 7 மணிக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். அவரை கோவில் தீட்சிதர்கள் கும்பமரியாதையுடன் மேள தாளம் முழங்க வரவேற்றனர். ஆளுநர் நந்தனார் மடத்திற்குச் செல்லும்போது, தெற்குவீதியில் 30-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றுகூடி கருப்புக்கொடி ஏந்தி காரல்மார்க்ஸ் கொள்கைகளை கொச்சைப்படுத்திய ஆளுநரைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ராஜாராமன் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் இவர்களை கைது செய்தனர்.
-காளிதாஸ்