ராங்கால் குடித்துச் செத்தவர்களுக்கு 10 லட்சமா? செந்தில் பாலாஜி பதவிக்கு சிக்கல்.! ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்குமா?

33

"ஹலோ தலைவரே, மரக்காணம் பகுதியில் அரங்கேறிய விஷச்சாராயச் சாவுகளால், முதல்வர் ஸ்டாலின் கடும் அப்செட்டில் இருக்கிறார்.''”

"ஆமாம்பா, காவல்துறை இவ்வளவு நாளா அங்கே குறட்டை விட்டுக்கிட்டிருந்ததா?''”

"இதே கேள்வியைத்தான் காவல்துறை அதிகாரிகளைப் பார்த்து, முதல்வர் ஸ்டாலினும் கேட்டிருக்கார். சட்டத்துக்குப் புறம்பான போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தீவிரமாகக் கண் காணித்து, அவற்றை முழுதாகத் தடுக்கவேண்டும்னு முதல்வர் ஏற்கனவே காவல்துறைக்கு உத்தரவிட்டி ருந்தார். இருந்தும்கூட, இப்படி பெரிய அளவில் சாராயச் சாவுகள் ஏற்பட்டிருப்பதால், முதல்வர் பெரும் மனஉளைச்சலில் இருக்கிறாராம். சாராயச் சாவுகளைப் பற்றிய செய்திகள் ஒவ்வொண்ணா வரத் தொடங்கியபோதே, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, வடக்கு மண்டல காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் மாநில உளவுத்துறை உயரதிகாரிகள் என அனை வரையும் தொடர்புகொண்ட அவர், "அங்கே என்ன நடந்துக்கிட்டிருக்கு காவல்துறை இத்தனை நாள் என்ன பண்ணுச்சு?'ன்னு கறார் குரலில் பதட்டத்தோடு விசாரிச்சிருக்கார். அந்த நேரத்தில் அவரை எப்படி சமாதானப்படுத்துறதுன்னு அதிகாரி கள் தரப்பே திணறியதாகச் சொல்கிறார்கள். மிகுந்த வருத்தத்திலும் கோபத்திலும் இருந்த ஸ்டாலின், உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, இது குறித்து விவாதிச்சிருக்கார்.''”

rr

"அந்த ஆலோசனைக் கூட்டத்திலும் அதி காரிகளை முதல்வர் ஒரு பிடி பிடித்திருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர் ஸ்டாலின், ஒட்டுமொத்த காவல்துறையையும் கடுமையாக எச்சரித்திருக்கிறார். "காவல்துறையும் கலால் துறையும் நினைத் திருந்தால் கள்ளச் சாராயம் இங்கே ஒரு சொட்டு கூட இருந்திருக்காது. உங்களுக்கெல் லாம் தெரிந்தே தான், சட்டவிரோத சாராய விநியோகம் நடந்திருக்கிறது. உங்கள் எல்லோரையும் முழுதாக நம்பினேன். ஆனால், ஏமாற்றிவிட்டீர்கள்' என முதல்வர் கலக்கத் தோடு சொன்னபோது, அத்தனை அதிகாரி களும் வெலவெலத்துப் போய்விட்டார்களாம். இருந்தும், "அவர்கள், இறந்து போனவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல, மெத்தனால் என்கிற விஷச்சாராயம். தொழிற்சாலைகளில் உள்ள இந்த மெத்தனாலை சிலர் திருடிக் கொண்டு வந்து, நீரில் கலந்து குடித்துள்ளனர். அதனால்தான் இறப்பு நிகழ்ந்துள்ளது’' என்று விளக்கம் தந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர் களின் பதிலில் முதல்வர் திருப்தி அடைய வில்லை. அதனால் தமிழகம் முழுவதும் இப்ப டிப்பட்ட ஆபத்தான சாராயம் பரவியுள்ளதா? என்று தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்டவர் களோடு 17 ஆம் தேதியும் கலந்தாய்வு நடத்தி இருக்கிறார். அப்போது ஸ்டாலின், "இனி தமிழ் நாட்டில் சாராய மரணம்னு ஒண்ணு நடக்கவே கூடாது'ன்னு அழுத்தமாகவும் அதிகாரிகளை எச்சரிக்கும் வகையிலும் சொல்லி இருக்கிறார்.''”

"சரிப்பா, முதல்வர் கவலைப்பட்டு என்ன ஆகுறது? இந்த விவகாரத்தில் பிராயச்சித்தமா அரசு செய்துவரும் நிவாரண உதவிகள் கூட விமர்சனத்துக்கு ஆளாகுதே?''”

ff

"ஆமாங்க தலைவரே, கள்ளச்சாராயம் குடித்து பலியான 22 பேரின் குடும்பங்களுக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்ச ரூபாய் வீதம் வழங்கப்படுவதாக முதல்வர் அறிவித்ததைக்கூட பலரும் ஆதங்கத்தோடுதான் பார்க்கறாங்க. "சட்டவிரோதமாக

"ஹலோ தலைவரே, மரக்காணம் பகுதியில் அரங்கேறிய விஷச்சாராயச் சாவுகளால், முதல்வர் ஸ்டாலின் கடும் அப்செட்டில் இருக்கிறார்.''”

"ஆமாம்பா, காவல்துறை இவ்வளவு நாளா அங்கே குறட்டை விட்டுக்கிட்டிருந்ததா?''”

"இதே கேள்வியைத்தான் காவல்துறை அதிகாரிகளைப் பார்த்து, முதல்வர் ஸ்டாலினும் கேட்டிருக்கார். சட்டத்துக்குப் புறம்பான போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தீவிரமாகக் கண் காணித்து, அவற்றை முழுதாகத் தடுக்கவேண்டும்னு முதல்வர் ஏற்கனவே காவல்துறைக்கு உத்தரவிட்டி ருந்தார். இருந்தும்கூட, இப்படி பெரிய அளவில் சாராயச் சாவுகள் ஏற்பட்டிருப்பதால், முதல்வர் பெரும் மனஉளைச்சலில் இருக்கிறாராம். சாராயச் சாவுகளைப் பற்றிய செய்திகள் ஒவ்வொண்ணா வரத் தொடங்கியபோதே, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, வடக்கு மண்டல காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் மாநில உளவுத்துறை உயரதிகாரிகள் என அனை வரையும் தொடர்புகொண்ட அவர், "அங்கே என்ன நடந்துக்கிட்டிருக்கு காவல்துறை இத்தனை நாள் என்ன பண்ணுச்சு?'ன்னு கறார் குரலில் பதட்டத்தோடு விசாரிச்சிருக்கார். அந்த நேரத்தில் அவரை எப்படி சமாதானப்படுத்துறதுன்னு அதிகாரி கள் தரப்பே திணறியதாகச் சொல்கிறார்கள். மிகுந்த வருத்தத்திலும் கோபத்திலும் இருந்த ஸ்டாலின், உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, இது குறித்து விவாதிச்சிருக்கார்.''”

rr

"அந்த ஆலோசனைக் கூட்டத்திலும் அதி காரிகளை முதல்வர் ஒரு பிடி பிடித்திருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர் ஸ்டாலின், ஒட்டுமொத்த காவல்துறையையும் கடுமையாக எச்சரித்திருக்கிறார். "காவல்துறையும் கலால் துறையும் நினைத் திருந்தால் கள்ளச் சாராயம் இங்கே ஒரு சொட்டு கூட இருந்திருக்காது. உங்களுக்கெல் லாம் தெரிந்தே தான், சட்டவிரோத சாராய விநியோகம் நடந்திருக்கிறது. உங்கள் எல்லோரையும் முழுதாக நம்பினேன். ஆனால், ஏமாற்றிவிட்டீர்கள்' என முதல்வர் கலக்கத் தோடு சொன்னபோது, அத்தனை அதிகாரி களும் வெலவெலத்துப் போய்விட்டார்களாம். இருந்தும், "அவர்கள், இறந்து போனவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல, மெத்தனால் என்கிற விஷச்சாராயம். தொழிற்சாலைகளில் உள்ள இந்த மெத்தனாலை சிலர் திருடிக் கொண்டு வந்து, நீரில் கலந்து குடித்துள்ளனர். அதனால்தான் இறப்பு நிகழ்ந்துள்ளது’' என்று விளக்கம் தந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர் களின் பதிலில் முதல்வர் திருப்தி அடைய வில்லை. அதனால் தமிழகம் முழுவதும் இப்ப டிப்பட்ட ஆபத்தான சாராயம் பரவியுள்ளதா? என்று தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்டவர் களோடு 17 ஆம் தேதியும் கலந்தாய்வு நடத்தி இருக்கிறார். அப்போது ஸ்டாலின், "இனி தமிழ் நாட்டில் சாராய மரணம்னு ஒண்ணு நடக்கவே கூடாது'ன்னு அழுத்தமாகவும் அதிகாரிகளை எச்சரிக்கும் வகையிலும் சொல்லி இருக்கிறார்.''”

"சரிப்பா, முதல்வர் கவலைப்பட்டு என்ன ஆகுறது? இந்த விவகாரத்தில் பிராயச்சித்தமா அரசு செய்துவரும் நிவாரண உதவிகள் கூட விமர்சனத்துக்கு ஆளாகுதே?''”

ff

"ஆமாங்க தலைவரே, கள்ளச்சாராயம் குடித்து பலியான 22 பேரின் குடும்பங்களுக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்ச ரூபாய் வீதம் வழங்கப்படுவதாக முதல்வர் அறிவித்ததைக்கூட பலரும் ஆதங்கத்தோடுதான் பார்க்கறாங்க. "சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தைத் தேடிப்போய் குடிக்கிறவங் களும் குற்றவாளிகள்தானே? அவர்கள் மீது அர சாங்கம் ஏன் இவ்வளவு பரிதாபம் காட்டவேண் டும்? அவர்களுக்கு இப்படி தாராளமாக நிதியுதவி செய்வது, அவர்களை உற்சாகப்படுத்தி, தைரியப் படுத்துவதுபோல் ஆகாதா?' என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பறாங்க. தாய்க்குலங்கள் ஒருபடி மேலே போய், "அரசுக்கு புத்திகெட்டுப் போச்சா?'ன்னு அர்ச்சனை பண்றாங்க. அரசு அதிகாரிகளும் கூட "10 லட்ச ரூபாய் நிதி உதவிங் கிறது டூ மச்' என்று விமர்சிக்க, நடுநிலையாளர் களும், "இதெல்லாம் தவறான அதிகாரிகளின் மோசமான அறிவுரையில் எடுக்கப்படும் முடிவு'ன்னு வெறுத்துப்போய் சொல்றாங்க.''”

"உண்மைதான். முதல்வர் நேரில் சென்று சொன்ன ஆறுதலும் இந்த விசயத்தில் பெரிதாகப் பார்க்கப்படவில்லை.''”

"ஆமாங்க தலைவரே, சமூக அநீதிகளைத் தட்டிக்கேட்கப் போய், மரண ஆபத்தைச் சந்திக்கிறவங்க குடும்பங்களுக்கு உரிய உதவிகள் போய் சேரமாட்டேங்குது. அதேபோல் அரசுக்கு அரணாக நின்று உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல, அமைச்சர்கள் கூட போக யோசிக்கிறாங்க. குறிப்பாக, "அண்மையில் மணல் கடத்தலைத் தடுக்க தனது கடமையை செய்ய முயற்சித்த கிராம நிர்வாக அதிகாரியான தூத்துக் குடி மாவட்ட லூர்து படுகொலை செய்யப்பட் டார். அந்த குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல, அவர்கள் வீட்டுக்குப் போகமுடியாத முதல்வர், கள்ளச்சாராய சாவுகளுக்கு ஆறுதல் சொல்ல போகலாமா?' என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பறாங்க. இதுக்கிடையில், "இந்த கள்ளச் சாராயச் சாவுகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்துதான் உதவித்தொகையைக் கொடுக் கிறார் முதல்வர். அந்த முதல்வரின் நிவாரண நிதி என்பது பொதுமக்கள், தொழிலதிபர்கள் இவர்களோடு, அரசு ஊழியர்கள் தரும் நிதியும் இருக்கிறது. இவற்றை வழங்கும்போது குறைந்தபட்ச நியாயத்தையாவது அரசு யோசிக்கக் கூடாதா?'ன்னு அரசு ஊழியர்களே கேட்கறாங்க. ஆக, நிவாரண உதவிகளில்கூட இன்னும் அரசு கவனம் செலுத்தணும்னு தெரியுது. இந்த நிலையில் கள்ளச்சாராய விவகாரம் குறித்து கவர்னர், அரசிடம் விளக்கம் கேட்டு, தன் பங்கிற்கு பரபரப்பூட்டி வருகிறார்.''”

dd

"இந்த சாராய விவகாரத்தில் அடுக்கடுக் கான அதிர்ச்சித் தகவல்களும் கிடைக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, இந்த சட்ட விரோத சாராய விற்பனையைச் செய்துவந்த சமூக விரோதிகள், அந்த சாராயத்தைக் குடிக்க தலித்துகளுக்கும், அங்குள்ள ஆதிக்க சாதியினருக்கும் தனித்தனி இடத்தை ஒதுக்கி, அங்கேயும் சாதித் துவேசத்தைக் காட்டியிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் இப்போது தெரிய வந்திருக்கிறது. அதேபோல் தமிழகத்திற்கு பெரும்பாலும் பக்கத்தில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் இருந்துதான் அதிக அளவில் கலக்கல் சாராயம் கடத்திவரப்படுவதாக உளவுத்துறை யினரே சொல்கிறார்கள். குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங் களில் கனஜோராக இப்படிப்பட்ட சட்டவிரோத சரக்குகள் விற்பனையாகி வருகின்றன. இதில் சாராய வியாபாரி, அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி சர்ச்சையானது. இவ்விவகாரங்களை முதல்வருக்கு தெரியாமல் உளவுத்துறை இவ்வளவு நாளாய் மழுப்பி மறைத்து வந்திருக்கிறதாம். எனினும் இந்த விவகாரத்தைக் கையிலெடுக்கும் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள், இதை பூதாகரமாக்கத் திட்டமிடுகின்றன.''”

"இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது எடுக்கப் பட்டுவரும் நடவடிக்கைகளும் சர்ச்சைகளை ஏற்படுத்துதே?''”

"சாராயச் சாவுகள் நடந்திருப்பதைக் காரணம் காட்டி செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப்பை டிரான்ஸ்பர் செய்திருக்கும் அரசு, விழுப்புரம் எஸ்.பி. ஸ்ரீநாதாவை தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கிறது. இவர்களில் செங்கல்பட்டு எஸ்.பி. பிரதாப், சம்பவம் நடந்தபோது பணியில் இல்லை. அவரது மனைவிக்கு குழந்தை பிறந்திருப்பதால் ஒரு வாரத்திற்கு முன்பே விடுப்பில் சென்றுவிட்டாராம். அப்படிப்பட்டவரை சம்பவத்தைக் காரணம் காட்டி டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்களாம். இதேபோல் சட்டவிரோத சரக்குகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய, மாநில மதுவிலக்குப் பிரிவு ஏ.டி.ஜி.பி.யான மகேஷ்குமார் அகர்வால் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லையாம். காரணம், இவர் பா.ஜ.க. மேலிடங்களுக்கு நெருக்கமானவராம். போதாக்குறைக்கு இவருடைய சகோதரர் அக்கட்சியின் தேசிய ஐ.டி.விங் பொறுப்பாள ராக இருப்பதால் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவும், உளவுத் துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசிர்வாதமும், அவரை நடவடிக்கையில் இருந்து காப்பாற்றி வருவதாக அதிகாரிகள் தரப்பிலேயே சலசலப்பு எழுந்திருக்கிறது.''”

"அரசு நெருக்கடியைச் சந்தித்துவரும் இந்த நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பெரும் சட்ட நெருக்கடியில் சிக்கி இருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை போட்டுத் தர பணம் வாங்கினார்னு நிறைய புகார்கள் குவிந்தன. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த அமலாக்கத்துறை அவருக்கு சம்மனை அனுப்ப, அதைச் சட்ட ரீதியாக ஒன்றும் இல்லாமல் ஆக்கினார் செந்தில். இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் தான், தற்போது அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன் றம், செந்தில்பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவுசெய்து, விசாரணையை நடத்தலாம் என்றும், விசாரணை மந்தமானால், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிடு வோம் என்றும் அதிரடியாகத் தெரிவித்துவிட்டது. இந்த நிலையில், செந்தில் அமைச்சராக இருப்பதால், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப் பிருப்பதால் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று அ.தி.மு.க., பா.ஜ.க. தரப்புகள் கோரிக்கை வைக்கத் தொடங்கிவிட்டன.''”

"இந்தத் தீர்ப்பு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன மன நிலையில் இருக்கிறார்?''”

"தனக்கு எதிரான இந்த வழக்கின் தீர்ப்பு வரவிருப்பதை அறிந்த செந்தில்பாலாஜி, ஒரு வாரத்துக்கு முன்பே தனது சகோதரர் அசோக்கை டெல்லிக்கு அனுப்பியிருந்தார். அங்கே உள்ள தனது லாபி மூலம் பா.ஜ.க. தரப்பில் சில முயற்சிகளை எடுத்தார். அதனால் இந்த வழக்கில் தனக்குப் பாதகமாக தீர்ப்பு வராது என்ற நம்பிக்கைக்கு அவர் வந்திருந்தார். இந்த வழக்கு குறித்து முதல் வர் ஸ்டாலின் விசாரித்தபோதுகூட, "பாதகமாக எதுவும் வராதுங்க தலைவரே! ஆட்சிக்கும் கட்சிக்கும் என்னால் எந்தவிதமான நெருக்கடியும் வராது' என்றே சொல்லி இருந்தாராம். ஆனால், தீர்ப்பு பாதகமாக வந்துவிட்டதால் அவர் பலமாக அப்லிசெட் ஆகிவிட்டாராம். அமலாக்கத்துறையின் விசாரணை நடக்கும்போது ஒரு கட்டத்தில் அவர் கைது செய்யப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று வழக்கறிஞர்கள் தரப்பு சொன்னதால், அமைச்சரின் பி.பி. எகிறி இருக்கிறது என்கிறார்கள். எனினும் அவர், ’என்னை முற்றுகை இடும் அத்த னை சோதனைகளும் சட்டென விலகிப்போய்விடும்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.''”

"அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம் நடந்திருக்குதே?''”

rr

"எடப்பாடியை அ.தி.மு.க.வின் பொதுச்செய லாளராக தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் நிலையில், கடந்த ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அவற்றையும் தனது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதன்மூலம், அ.தி.மு.க. என்றால் அது, எடப்பாடி தலைமையி லான கட்சிதான் என அதிகாரப்பூர்வமாக அது அங்கீகரித்திருக்கிறது. இதனால், ஓ.பி.எஸ்.ஸுக்கான அனைத்துக் கதவுகளும் முழுதாக மூடப்பட்டு விட்டன. எனினும், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் முடிவுக்காக பாலை மணலில் சுனை தோண்டும் நம்பிக்கையில் காத்திருக்கிறார் ஓ.பி.எஸ். இந்த நிலையில் அ.தி.மு.க.வின் மா.செ.க்கள் கூட்டத்தை 17 ஆம் தேதி கூட்டிய எடப்பாடி, தங்கள் தரப்புக்குக் கிடைத்திருக்கிற அங்கீகாரம் குறித்து அதில் மகிழ்ச்சியைத் தெரிவித்ததோடு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வைத் தோற்கடிக்க முழுமூச்சாக செயல்பட வேண்டும் என்று ஆவேசமாகப் பேசி, தொண்டர்களை உசுப்பிவிட்டிருக்கிறார்.''”

"கர்நாடக மாநிலத்தில் காங் கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில், தமிழக காங்கிரஸ் கூடாரத்தில் அதிக சலசலப்பு கேட்குதே?''”

rr

"ஆமாங்க தலைவரே, கர்நாடகாவில் பெரும்பான்மை பலத்துடன் பா.ஜ.க.விடமிருந்து ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. இதை அக்கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், தனியார் சேனல் ஒன்றில் பேசிய கார்த்திக் சிதம்பரம், "கர்நாடகத்தில் கிடைத்திருக்கும் இந்த தேர்தல் இந்த முடிவு, நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று சொல்ல முடியாது' என்று கருத்து தெரிவித்திருக் கிறார். இதுதான் தமிழக காங்கிரஸ் பிரமுகர்களை ஏகத்துக்கும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதனால் அவர்கள், ’"அப்பா சிதம்பரத்தின் சிபாரிசில் எம்.பி. பதவியை அனுபவிக்கும் கார்த்திக்கு, தொண்டர்களின் உழைப்போ, அதன் மூலம் கிடைத்த வெற்றியோ பெரிதாகத் தெரியாது. அவரது இந்த தெனாவெட்டை எங்களால் இனியும் சகிக்க முடியாது. அவர் மீது நடவடிக்கை எடுங்கள்'’ என்று ராகுலுக்கும் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கும் புகார்களை அனுப்பி வருகின்றனர். இன்னும் சிலரோ, எதிர்வரும் தேர்தலில் கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் சீட் ஒதுக்கினால், நாங்கள் கட்சியில் இருந்து வெளியேறுவோம் என்றும் அதிரடி காட்டி இருக்கிறார்களாம்.''”

"கோவையில் இருக்கும் மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையினர் மீதும் குற்றச்சாட்டுகள் கிளம்புதே?''”

"கோவை கவுண்டம்பாளைத்தில் வி.ஜி.எம். டூர்ஸ் & டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வெங்கடேசன் என்பவர், ’"உங்கள் கார்களை என்னிடம் விடுங்கள்! வங்கிக் கடன் போக மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் தருகிறேன்'’என்றபடி 29 கார்களை அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து வாங்கி மோசடி செய்திருக்கிறார். புகார் களை வாங்கிய மாவட்டக் குற்றப்பிரிவு அவரைக் கைது செய்தது. அதில் சில கார்களை திருப்பூர் கார் வியபாரிகளான முகமது சையது அன்சாரி, காதர் அப்துல் ரகுமான் ஆகியோரிடம் கொடுத் திருப்பதாக வெங்கடேஷ் வாக்குமூலம் கொடுத் திருந்தார். அவர்கள் அந்தக் கார்களுக்கு போலி ஆர்.சி.புக் தயாரித்து அவற்றை விற்று விட்டதாகச் சொல்லி இருக்கிறார் கள். இந்த கும்பலிடம் இருந்து முழுதாக கார்களை மீட் காத போலீஸ் டீம், இவர்களிடம் இருந்து ஏறத்தாழ 12 லட்ச ரூபாயைப் பறிமுதல் செய்திருக்கிறதாம். இதை விசாரணை டீமே பதுக்கிவிட்டதாம். குறிப்பாக, மாவட்ட க்ரைம் பிராஞ்சை சேர்ந்த ஒரு ராஜ அதிகாரிதான் இந்த பண மோசடியில் அதிகமாகப் புகுந்து விளையாடினாராம்.''”

tt

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த விவகாரம், தமிழகத்தையே உலுக்கியது. இதை விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ், இப்போது குற்றப்பத்திரிகையை விழுப்புரத்தில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக் கிறது. அதில் அனுமதியின்றி மாணவர் விடுதியை நடத்தியதாக பள்ளி நிர்வாகி ரவிக்குமார், அவர் மனைவி சாந்தி உள்ளிட்டவர்கள் மீது குற்றச் சாட்டு வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் ஸ்ரீமதி தற்கொலைதான் செய்துகொண் டார் என்ற கோணத்திலேயே அவர்களின் விசாரணைக் கோணம் இருந்ததை அந்த அறிக்கை உணர்த்துகிறது என்கிறார்கள் சில வழக்கறிஞர்கள். குற்றப்பத்திரிகை சந்தேகத்தை எழுப்பிவரும் நிலையில்... மாணவியின் தரப்போ, டிரையலின்போது பள்ளி நிர்வாகத்தின் சாயம் வெளுத்துவிடும் என்கிறது காட்டமாய்.''’

இறுதிச் சுற்று!

கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு!

கடந்த சில நாட்களாக இருந்துவந்த இழுபறி, மே 18, வியாழனன்று முடிவுக்கு வந்தது. கர்நாடகா முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமாரை நியமிக்க கட்சி மே-டம் முடிவு செய்தது. டெல்-யில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அளித்த பேட்டியில் இதனை உறுதிசெய்தார். துணை முதல்வர் பதவியோடு டி.கே.சிவக்குமார் மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பார். டி.கே.சிவகுமாருக்கு அமைச்சரவையில் நிதி அமைச்சகம் உட்பட முக்கிய துறைகள் அவருக்கு கொடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக, காங்கிரஸ் மே-டத்தின் முடிவை இருவரும் ஒருமித்து ஏற்றுக்கொண்டதை வெளிப்படுத்தும்விதமாக, இருவரும் ஒரே காரில் சென்று, காங்கிரஸ் தலைவர் மல்-கார்ஜூன் கார்கேவை சந்தித்தனர்.

ஜல்-க்கட்டு! உச்ச நீதிமன்றம் அதிரடி!

ஜல்-க்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லும் என்று மே 18, வியாழனன்று காலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. 100 ஆண்டுகளாக நடந்துவரும் ஜல்-க்கட்டு தொடர்பாக தமிழக அரசு அளித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. ஜல்-க்கட்டு கலாச்சார அடையாளம் என சட்டப்பேரவையில் சட்டம் இயற்றும் போது நீதிமன்றத்தால் மறுக்க முடியாது. தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தம் அடிப்படை உரிமைகளை மீறவில்லை எனக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்துள்ள வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளது.

-கீரன்

nkn200523
இதையும் படியுங்கள்
Subscribe