லகக் கோப்பை 20:20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் களைகட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. கோடிக்கணக் கான கிரிக்கெட் ரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்த தேர்தலில், முன்னாள் தலைவர் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் ஆலோசனையில் தமிழக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தலைமையிலான ஒரு அணியும், பிராமணர்கள் அல்லாத சமூகத்தினரின் ஆதரவுடன் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் தலைமையில் ஒரு அணியும் களத்தில் குதித்திருக்கின்றன.

சாதிய பின்புலமும், அரசியல் பின்புலமும் விளையாடும் இந்த தேர்தலில் மிரட்டல்கள், பண ஆசைகள் என ஏகத்துக்கும் வரிந்து கட்டுவதால் தேர்தல் குறித்த அச்சமும் பதட்டமும் அதிகரித்தபடி இருக்கிறது.

cc

Advertisment

இந்த தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்ற வாக்காளர்கள் பலரிட மும் தேர்தல் குறித்து நாம் விசாரித்தபோது, "தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கோலோச்சியவர் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன். சிலபல காரணங்களால் அவர் பதவி யிழந்த நிலையில், தனது மகள் ரூபா குருமூர்த்தி யை தலைவராக்கினார் சீனிவாசன். இதற்கிடையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூபாவும் தலைவர் பதவியிலிருந்து விலகிய நிலையில், தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் காலியாக இருந்தன. இந்த சூழலில்தான், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

cccதேர்தல் அதிகாரியாக சீனிவாசனுக்கு மிக நெருக்கமானவரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதிப் பட்டியலை 29-ந்தேதி வெளியிட்டிருக்கிறார் சந்திரசேகரன்.

இந்த சங்கத்தில் 27 மாவட்ட கமிட்டிகளும், துணை க்ளப்புகளும் இருக்கின்றன. இவற்றி லுள்ள 177 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள். இதில் சுமார் 50 பேர் பிராமணர் சமூகத்தினர். மற்ற 127 பேர் பிராமணரல்லாதவர்கள். இருப்பினும் அந்த 50 பிராமணர்களின் ஆதிக்கத்தில் தான் நீண்ட வருடங்களாக இந்த சங்கம் இயங்கி வருகிறது.

மாநில தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளுக்கு இதுவரை பிராமணரல்லாதவர்களை வரவிடுவதே இல்லை. முறைப்படி தேர்தலே நடத்தா மல் சீனிவாசனின் கை அசைவில்தான் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டே வந்திருக் கிறார்கள். அதாவது, போட்டியே வரவிடாமல் பார்த்துக் கொள்வார் சீனிவாசன். பி.சி.சி.ஐ. எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கம் அனைத்துக்கும் முறைப்படி குறிப்பிட்ட காலத்தில் தேர்தல் நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியஷனுக்கு மட்டும் தேர்தலையே நடத்தவிடாமல் பார்த்துக் கொண்டார் சீனிவாசன்.

நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரம் கோடிகள் வருமானம் உள்ளதாக இந்த சங்கம் இருப்பதால், தேர்தல் நடத்து வதன் மூலம் தங்களின் ஆதிக்கம் சங்கத்தில் குறைந்து விடுமே என்ற யோசனையில்தான் ஜனநாயகரீதியாக தேர்தலை நடத்தாமல் தங்களின் கட்டுப்பாட்டிலேயே இத்தனை ஆண்டுகாலமும் வைத்திருக்கிறார் சீனிவாசன்.

இந்த சங்கத்தில் இவரது நிர்வாகத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்ததால் அது குறித்த புகார்கள் மத்திய மாநில அரசுகளுக்கு பறந்தன. அதனையொட்டி அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. மற்றும் மாநில அரசின் வணிகவரித்துறை ஆகியவை ரெய்டுகள் நடத்தின. உச்சநீதிமன்றம் வரை பல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. இப்படிப்பட்ட சூழல்களில்தான், இந்திய கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என பலர் மீது மேட்ச் ஃபிக்ஸிங், நிதி முறை கேடுகள் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எதிரொலித்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கலானது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கிரிக்கெட் சங்கங்களை சீர்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது.

அதன்படி புலனாய்வு செய்த லோதா கமிட்டி, மாநில சங்கத்திலும் மாவட்ட கமிட்டியிலும் நடந் துள்ள ஊழல்கள், நிதிமுறைகேடுகள், முறைப்படி தேர்தலே நடத்தாமல் சங்கம் இயங்குவது, திறமை யுள்ள கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை கண்டறிந்த துடன், முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என் றும் சுட்டிக்காட்டி பல்வேறு பரிந்துரைகளுடன் தனது அறிக்கையை உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்தது லோதா கமிட்டி.

அதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் சங்கங்கள் தேர் தலை நடத்த வேண்டும் என்றும், சீர்கேடுகள் களையப்பட வேண்டும் என்றும், லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசையும், பி.சி.சி.ஐ.யையும் வலியுறுத்தியது உச்சநீதிமன்றம். லோதா கமிட்டியின் பரிந்துரைகளை ஆரம்பத்தில் பி.சி.சி.ஐ. ஏற்க மறுத்தாலும் ஒருகட்டத்தில் அதனை ஏற்று நடைமுறைப்படுத்தியது. அதேபோல, பல மாநில கிரிக்கெட் அசோசியேஷன்களும் இதனை கடைப்பிடித்து தேர்தலை நடத்தியிருக்கின்றன.

cc

Advertisment

மாநில கிரிக்கெட் சங்கங்களின் செலவினங் களுக்காக ஒவ்வொரு மாநில கமிட்டிக்கும் ஆண்டுக்கு 250 கோடி ரூபாயை வழங்கி வருகிறது பி.சி.சி.ஐ! தேர்தல் நடத்துவது உட்பட லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்திய மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு மட்டும்தான் இந்த தொகையை பி.சி.சி.ஐ. அனுப்பியது. ஆனால், லோதா கமிட்டியின் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் முறையாக இயங்காததால் வருடாந்திர தொகை 250 கோடியை சமீபகாலமாக பி.சி.சி.ஐ. நிறுத்திவிட்டது.

இதைப்பற்றி தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் கவலைப்படவில்லை. காரணம், இங்கு தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரம் கோடிகள் கொட்டுறதே என்பதால் தான். இந்த நிலையில்தான், லோதா கமிட்டியின் பரிந்துரைகளை தமிழ்நாடு கிரிக்கெட் அசோசி யேசன் பின்பற்றுவதில்லை சீனிவாசனின் முறையற்ற ஆதிக்கம் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பி.சி.சி.ஐ.-க்கும் மத்திய அரசுக்கும் பிராமணரல்லாத மாவட்ட நிர்வாகிகள் சிலர் புகார்களை அனுப்பினர்.

இதனையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசனை ஆய்வு செய்தார் பி.சி.சி.ஐ.யின் செயலாளரான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா. முறைகேடுகளைக் கண்டறிந்த ஜெய் ஷா, தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு சங்கத்தின் தலைவரான ரூபா குரு மூர்த்திக்கு உத்தரவிட்டார். அதன்படி ரூபாவும் பதவி விலக, தலைவர் பதவி காலியானதை அடுத்து தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள் ளது. இதிலும் பல்வேறு விதிமீறல்கள் இருக்கிறது. ஆனால், அதனைக் கண்டுகொள்ள மறுக்கிறார் தேர்தல் அதிகாரி சந்திரசேகரன்''’ என்று விரிவாக சுட்டிக்காட்டினார்கள்.

மேலும் நாம் விசாரித்த போது,”ஜெய்ஷா எடுத்த நடவடிக்கையால்தான் தேர்தலை நடத்த சீனி வாசன் சம்மதித்தார். இந்த முறை நேரடி யாக பிராமணர் ஒரு வரை தலைவ ராக நிறுத்தி னால் மீண்டும் சர்ச்சை கள் கிளம்பும் என்பதை உணர்ந்து, அமைச்சர் பொன் முடியின் மகன் அசோக்சிகாமணியை தலைவர் பதவிக்கு போட்டியிட வைத்துள்ளார் சீனிவாசன். அரசியல் பின்புலத்துடன் களமிறங்கினால்தான் தமிழக அரசின் ஆதரவும் கிடைக்கும்; அமித்ஷா வின் மகனையும் ஹேண்டில் பண்ணமுடியும் என திட்டமிட்டு பொன்முடியின் மகன் தலைமையில் ஒரு அணியை களமிறக்கியுள்ளார்.

சீனிவாசனின் ஆதிக்கத்தை முறியடிக்க, பிரபு தலைமையில் பிராமணரல்லாதவர்கள் சிலர், தலைவர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கு போட்டியிட களத்தில் குதித்தவர்களை சீனிவாசன் தரப்பு நிர்வாகிகள் மிரட்டினர். அதற்கெல்லாம் அஞ்சாமல் மனுத்தாக்கல் செய்தனர். மனுக்களை வாபஸ் பெறுகிற கடைசிநாள் வரை மிரட்டலும் பணபேரமும் தொடர்ந்துள்ளது. இதனை தேர்தல் அதிகாரி சந்திரசேகரனிடம் புகார் கொடுத்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. ஆனால், பிரபு தரப்பு உறுதியாக களமிறங்கிவிட்டது.

சங்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் 9 ஆண்டுகள் தொடர்ந்து ஒருவர் ஒரே பதவியிலோ அல்லது வெவ்வேறு பதவிகளிலோ இருந்தால் அவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது என சில முக்கிய பரிந்துரைகளை வலியுறுத்தியுள்ளது லோதா கமிட்டி. இதனை பி.சி.சி.ஐ.யும் ஏற்றுக்கொண்டது. ஆனால், சீனிவாசன் ஆதரவில் போட்டியிடும் அசோக்சிகாமணி, விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேசனின் தலைவராகவும், மாநில துணைத் தலைவராகவும் 9 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பதவியில் இருந்து வருகிறார். இதனை சுட்டிக்காட்டி அசோக்கின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டுமென சந்திரசேகரனிடம் முறையிடப் பட்டது. அதனை புறந்தள்ளியதுடன் அசோக் சிகாமணியை போட்டியிட அனுமதித்துள்ளார் சந்திரசேகரன்'' என்று விவரிக்கின்றனர் ரகசியமறிந்தவர்கள்.

விதிமுறை மீறல்களை எதிர்த்து பிராமணரல்லாதவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளதால், தேர்தல் நடக்குமா? நடந்தாலும் செல்லுமா? என்கிற விவாதங்கள் கிரிகெட் உலகில் நடந்து வரும் நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒரு ஓட்டுக்கு தலா 10 லட்சம் ரூபாய் என சுமார் 120 வாக்காளர்களை விலைபேசும் வலையை விரித்திருப்பதுடன், இதற்காக, 12 கோடி ரூபாயை களத்தில் இறக்கியிருக்கிறதாம் ஆதிக்க வர்க்கம்.