ட ஒதுக்கீடு என்பதன் நோக்கமே, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அவர்களுக்கான பங்களிப்பை உறுதிசெய்து, வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதோடு, சமூகத்திலும் அவர்களின் மதிப்பை மேம்படுத்தி, சமநிலை சமூகத்தைக் கட்டமைப்பதாகும். இந்த அடிப்படை யில்தான், ஜாதிரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்கு படிநிலைப்படி இட ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

dd

இந்த அடிப்படை நோக்கத்தையே சிதைக்கும் வகையில் ஒன்றிய அரசு, கடந்த 2019ஆம் ஆண்டு, அரசியலமைப்புச் சட்டத்தின் 103-வது திருத்தத்தின் மூலமாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப் பில் 10% இட ஒதுக்கீடு வழங்கவேண்டு மென்ற சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நாடாளுமன்றத் தில் தாக்கலானபோதே தி.மு.க., ஆர்.ஜே.டி., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி, தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், சமூக நீதி அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நடந்தது.

Advertisment

தி.மு.க. சார்பில் ஆஜரான வில்சன் எம்.பி., "உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே 50% வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைவிட அதிகமாகச் செல்லக்கூடாது என்று ஏற்கெனவே பல வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கிறது. அப்படியிருக்கையில், இந்த 10% இட ஒதுக்கீடு, அந்த வரம்பை மீறுகிறது. வறுமை என்பது அனைவருக்கும் சமமானது. இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் கிடையாது. பொருளாதார நிலையை அடிப்ப டையாகக் கொண்டதும் கிடையாது. சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை மேம்படுத்துவதற்கான ஓர் ஏற்பாடு தான் இட ஒதுக்கீடு. இதில், முன்னேறிய வகுப் பினருக்கு மட்டும் அசாதாரண சூழலுக்காக வறுமையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதாகக் கூறுவது எப்படி நியாயமாகும்? இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கே இன்னமும் முழுமையாக அரசுப் பணிகள் கிடைப்பதில்லை. இந்நிலையில், முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கி யோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது, இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களை மேலும் பின்னோக்கிக் கொண்டு செல்லக் கூடும்'' என்று வாதிட்டார். மத்திய அரசு சார்பில் இந்த சட்டத்துக்கு ஆதர வான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. செப்டம்பர் 27-ஆம் தேதி, அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, தேதி குறிப்பிடப் படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நவம்பர் 7-ஆம் தேதி, ஐந்து நீதிபதிகளும் தனித்தனியே தீர்ப்பினை வாசித்தனர்.

dd

நீதிபதிகள் தினேஷ் மகேஷ் வரி, பெலா எம்.திரிவேதி மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர், பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு, அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படைக் கட்டமைப்பை மீறவில்லை என்று 10% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தனர்.

Advertisment

"இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பு என்பது நெகிழ்வானது. அது சாதி அடிப்படையி லான இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமே பொருந்தும்'' என்றும் தெரிவித்தனர்.

தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் நீதிபதி எஸ்.ரவீந்திரபட் ஆகியோர், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தைப் பதிவுசெய்தனர். "இந்த திருத்தம் அரசமைப்பு ரீதியாக தடை செய்யப்பட்ட பாகுபாட்டை பின்பற்றுவதுபோல உள்ளது. சமத்துவத்தின் ஆன்மாவை இது தாக்குவதாக உள்ளது. இட ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட 50% வரம்பை மீறுவது, மேலும் பல சிக்கலுக்கு வழிவகுக்கும்'' என்று நீதிபதி எஸ்.ரவீந்திர பட் தெரிவித்தார். மெஜாரிட்டி ஆதரவு காரணமாக இந்த சட்டம் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, பிரதமர் மோடியின் சமூக நீதித் திட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்று பா.ஜ.க. தெரி வித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10% இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்திவந்தது. இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு, சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூறாண்டு காலப் போராட்டத்தில் ஒரு பின்னடைவு'' என்று கவலையுடன் தெரிவித்தார்.

ம.தி.மு.க. தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், சி.பி.ஐ. மாநில செயலாளர் இரா.முத்தரசன், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.

dd

இந்த தீர்ப்பு குறித்து, தி,மு.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன் கூறுகையில், "இந்த தீர்ப்பே அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. "இது நம் அரசியல் சாசனத்துக்கு ஏற்புடையது அல்ல. அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாக இருக்கிறது' என்று இரண்டு நீதிபதிகள் தெளிவான கருத்தைச் சொல்லியிருக்காங்க. இதுதான் உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க.வின் வாதமாகவும் இருந்தது. நூறாண்டு கால சட்டப்போராட்டத்துக்கு பின்னடைவு என்று முதல்வர் சொல்லியிருக்காங்க. ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்கு கீழிருப்பவர்களை ஏழைகள் என்று கூறுகிறார்கள். இந்தியாவின் வறுமைக்கோட்டை கணக் கீடாக எடுத்து, வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களைக் கணக்கீடு செய்திருந்தால்கூட அதிலொரு அர்த்தமிருப்பதாகச் சொல்லலாம். ஆக இந்த இட ஒதுக்கீடு, குறிப்பிட்ட உயர் ஜாதியின ருக்கு மட்டுமேயானதாக இருக்கிறது. யார் நம்மை ஆண்டாண்டுகாலமாக ஒடுக்கி னார்கள் என்று கூறுகிறோமோ, அவர்களுக்கே இட ஒதுக்கீடு கொடுப்போம் என்பது பா.ஜ.க.வின் சதி வேலை. இந்தியாவில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பட்டியலின மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவில்தான் பா.ஜ.க.வின் செயல்பாடு இருக்கிறது.

நீதிமன்றத் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்துவிட்டு, அடுத்த கட்டமாக என்ன செய்வதென்பதை முடிவு செய்வோமென்று முதல்வர் கூறியிருக்கிறார். இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் பார்க்கவேண்டியிருக்கிறது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றம், 50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாதென்று குறிப்பிட்டிருந்தது. தற்போது இந்தத் தீர்ப்பின்மூலம் அந்த உச்ச வரம்பு உடைக்கப்பட்டுள்ளது. இனி, ஜாதி வாரியாகக் கணக்கீடு நடத்தப்பட்டு அதற்கடுத்து விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டுமென்று அரசியல் கட்சிகளிடமிருந்து கோரிக்கைகள் வருவதற் கான வாய்ப்பு இருக்கிறது. இதில் ஒரு ஆறுத லான விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டில் சமூக நீதி பேசக்கூடிய அனைத்துக் கட்சிகளும் இந்த சட்டத்துக்கு ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித் திருக்கிறார்கள். சமூக நீதிக்கான சட்ட மாற்றமே தமிழ் நாட்டிலிருந்துதான் எழுந்தது. அதற்காக அனைவரும் இணைந்து பாடுபட வேண்டுமென்று முதல்வர் ஓர் அறைகூவல் விடுத்திருக்கிறார். இது, கண்டிப்பாக மாற்றத்துக்கான அச்சாரமாக இருக்கும்'' என்றார்.

பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், "எங்கள் தலைவர் இந்த தீர்ப்பை வரவேற்றிருக்கிறார். வருவாய் அடிப்படையில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு இருக்கணும்னு எம்.ஜி. ஆர்.தான் முதன்முதலில் சொன் னார். இதில் முதலியார், பலிஜா நாயுடு, லெப்பை முஸ்லீம், பிராமணர்கள், நகரத்தார் செட்டியார்கள் என தமிழ்நாட்டிலிருக்கும் நிறைய சமுதாயங்கள் வருகின்றன. மொழிச் சிறு பான்மையினர் இதில் வருகிறார் கள். ஏழைகளுக்கு இட ஒதுக்கீட்டை உச்சநீதி மன்றத்திலிருக்கும் மூன்று நீதிபதிகள் உறுதிப் படுத்தி யிருக்கும்போது நாம் அதை வரவேற்க வேண்டும்'' என்றார்.

இஸ்லாமியர்களில் லெப்பை, மரைக்காயர், ராவுத்தர் போன்ற பிரிவினர், முன்னேறிய பிரிவில் வருவதாக திட்டமிட்டு தவறான செய்தி பரப்பப்படுவதாகவும், இந்த பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உள் ஒதுக்கீடு பெறுவதாகவும் இஸ்லாமிய அமைப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்று கூறப்பட்டாலும், உண்மையில் ஏழ்மை நிலையிலிருக்கும் முன்னேறிய வகுப்பினருக்கு அதன் பலன் கிடைக்காமல், 8 லட்சம் ஆண்டு வருமானம் என்ற வசதியான நிலையிலிருப்பவர்களே இதற்கான பலன்களையும் அனுபவிக் கக்கூடுமெனத் தெரி கிறது. ஆக, இந்த தீர்ப்பின் மூலம், இட ஒதுக்கீடு என்ற சமூக நீதிச் செயல்பாடு நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது என்பதே உண்மை.

-தெ.சு.கவுதமன்