மிழகத்தின் முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் என்கிற அளவிற்கு பெயர் பெற்றிருக் கிறார். கடுமையான நிதி நெருக்கடியிலும் கொரோ னா பேரிடரை வென்றது, பெண்கள் நலன்- கல்வித்துறை-மருத்துவம்-தொழில் முதலீடு ஆகியவற்றில் தனி அக்கறை செலுத் தியது என மக்களிடம் நற்சான்றிதழ் பெற்றுள்ளார். சமூக வலைத்தளங் களில் வெளியாகும் செய்திகள்- வீடியோக்களையும் கவனித்து எளிய மக்களைத் தேடிச் சென்று குறைகளைக் களைகிறார். மக்களோடு நெருங்கி, அவர்களின் நம்பிக்கை பெற்ற முதல்வராகத் திகழ்கிறார். கடுமையாக உழைக்கிறார்.

dmk1year

தேர்தல் நேர வாக்குறுதிகளில் நிறைவேறியவையும் உண்டு, காத்திருப்பவையும் உண்டு. அதன் மீதான எதிர்பார்ப்பு பொதுமக்களுக்கு உள்ள நிலையில், பத்தாண்டு காலத்திற்குப் பிறகு தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கட்சி நிர் வாகிகள், தொண்டர்களின் எதிர்பார்ப்பு அதிகம். ஆளுங்கட்சியான தி.மு.க. அதனை எந்தளவு நிறைவேற்றியுள்ளது?

"இப்பவும் அ.தி.மு.க ஆட்சி நடப்பதுபோலத்தான் அதிகாரிகள் நடந்துக்குறாங்க. வடதமிழகத் தில் உள்ள திருப்பத்தூர் மாவட் டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழாசிரியர் தி.மு.க.வின் தீவிரப் பற்றாளர். எதிர் பார்ப்புகளின்றி தேர்தல் வேலை பார்த்தவர். திடீரென போலீஸ் அவர் வீட்டுக்கு வந்து, தோட்டத்தில் ஒரு செடியைப் பிடுங்கி, கஞ்சா செடி வளர்க்குறியான்னு வழக்கு போட்டு ஜெயிலில் தள்ளிட் டாங்க. தமிழாசிரியரின் நற்பண்புகள் பற்றி சொல்வதற்காக ஸ்டேஷனுக்குப் போன கட்சி நிர்வாகிகளை போலீசார் திருப்பி அனுப்பிட்டாங்க.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. ஆதரவாளர்களைத் திட்டமிட்டுப் புறக்கணித்தார்கள். அ.தி.மு.க.வினருக்கு மட்டுமே வேலையும் சம்பளமும் தந்தார்கள். அ.தி.மு.க ஆட்சியில் நிய மிக்கப்பட்ட பணித்தளப் பொறுப்பாளர்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் பணித்தளப் பொறுப்பாளர்களாக உள்ள அ.தி.மு.க. வினரை மாற்றிவிட்டு புதியவர்களை நியமிக்க ஊராட்சிமன்றத் தலைவர்கள் முடிவு செய்தனர். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருந்தும், யாரையும் மாற்றக்கூடாது என கலெக்டர் மூலமாக கடிவாளம் போடப்பட்டுவிட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திலும் இதே நிலைதான். 100 நாள் வேலைகூட கட்சிக்காரர்களுக்கு கொடுக்க முடியாதபடி அதிகாரிகள் ராஜ்ஜியம் நடக்கிறது'' என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.

Advertisment

stalin

சுகாதாரத்துறையின் சார்பில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மஸ்தூர் பணியாளர்கள் என பல ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் வேலை வேண்டாம் என ஒதுங்கிவிட்டார்கள், நின்றுவிட்டார்கள். மிகக்குறைந்த சம்பளத்துக்கான இந்த வேலைக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. 12-ஆவது வரை படித்திருந்தால் போதும். ஊராட்சி மன்றத் தலைவர்கள், கட்சி பிரமுகர்கள் சிபாரிசில் பி.டி.ஓ.க்கள் நியமிக்கும் இந்த வேலையில் தி.மு.க.வினர் சொன்னால் யாரையும் நியமிக்க மறுக்கும் அதிகாரிகள், 50 ஆயிரம், ஒரு லட்சம் என பணம் வாங்கிக்கொண்டு அவர்களே நியமிக்கிறார்கள். வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு உதவியாளர்களை நியமிப்பதிலும் இதே நிலைதான். அரசு நிர்வாகத்தில் தி.மு.க.வினர் தலையிடக்கூடாது என தலைமை கண்டிக்கிறது. ஆனால், அ.தி.மு.க.வினரின் தலையீடு இன்னமும் தொடர்கிறது என்பதே ஆளுந்தரப்பு நிர்வாகிகளின் குமுறல்.

வேளாண்துறையால் மானியத்தில் வழங்கப்படும் விவசாய இயந்திரங்களை கடந்த ஓராண்டு காலத்தில் அதிகம் பெற்றவர்கள் அ.தி.மு.க.வினர்தான். தி.மு.க. விவசாய சங்கத்தினர் சிபாரிசு செய்தவர்களை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

1989 தி.மு.க., ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நேருவிடம், சேப்பாக்கம் பகுதி கட்சியின் சாதாரண தொண்டர் ஒருவர், பால்பூத் கேட்டு மனு தந்தார். அமைச்சர் கடிந்து கொண்டார். அந்த தொண்டர் நேராக தலைவர் கலைஞர் வீட்டுக்கு போய் முறை யிட்டார். இதுப்பற்றி ரகுமான் கானை விசாரிக்கச் சொன்னார் கலைஞர். அதன்பின் அமைச்சர் அந்த தொண்டரை சமாதானப் படுத்தி, பால்பூத் வைக்க அனுமதி தந்தார். இப்போதோ பெரும் பாலான அமைச்சர்களிடம் தொண்டர்களோ, நிர்வாகிகளோ உரிமையுடன் கேட்டால், கட்டம் கட்டி விடுகிறார்கள் என்ற வேதனைக் குரல் வெளிப்படுகிறது.

Advertisment

stalin

கறுப்பு -சிவப்பு கரை வேட்டி என்றால் அமைச்சர் அலுவலகத்தில் ஒரு மரியாதை தந்த காலம் உண்டு. தன்னுடைய துறை என்றால் டிரான்ஸ்பர் போன்ற சிபாரிசுகளைப் பரிசீலித் துச் செய்வதும், வேறு துறை என்றால் சிபாரிசுக் கடிதம் தருவதும் வழக்கமாக இருந்தது. இப்போது எந்த மாவட்டம், எந்த கோஷ்டி என்று பார்த்து நடந்துகொள்கிறார்கள்.

இங்க எதுக்கு வர்றீங்க, மா.செ. சிபாரிசு லட்டர் எங்கன்னு பெரும்பாலான அமைச்சர்களின் உதவியாளர்கள் வேண்டா வெறுப் பாய் கேட்கறாங்க. கட்சியில் எங்க உழைப்பை தெரியாதவங்கல்லாம் அமைச்சர்களின் உதவியாளரா இருந்துக்கிட்டு இன்சல்ட் செய்யறதை சுயமாரியாதை உள்ள தொண்டன், நிர்வாகிகள் ஏத்துக்க முடியாம ஒதுங்கறாங்க. தெம்புள்ள கட்சி நிர்வாகிகள் அ.தி.மு.க., ஆட்சி யிலும் செல்வாக்கா இருந்தாங்க. கட்சிக்காகவே உழைக்கிறவங்க புறக்கணிக்கப்படுறாங்க.

ஜெயலலிதா ஆட்சியில் 100 ரூபாய் கொள்ளையடித்தால், 80 ரூபா தான் எடுத்துக்கிட்டு, மீதி 20 ரூபாயை அமைச்சர், மா.செ முதல் கி.செ. வரை பங்கு பிரிச்சித் தருவாங்க. ஏன்னா, அதுக்கு முந்தைய தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கீழ்மட்ட நிர்வாகிகளை, தொண்டனை சின்னச் சின்னதா திருப்தி அடைய வச்சாங்க. கட்சிக்காரன் குடும்பத்தில் யாராவது படிச்சியிருந்தா ஏதோ ஒரு துறையில் வேலை போட்டுத் தந்தாங்க. அவன் கட்சிமீது தீவிர விசுவாசமா இருந்தான். அதுக்கு போட்டியா அப்படியொரு சிஸ்டத்தை அந்தம்மா கொண்டுவந்தார். இப்போ எங்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அதற்கு நேர்எதிரா இருக்காங்க.

சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர், ஊட்டச்சத்து அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களில் கட்சிக்காரன் மனைவி யையோ, மகளையோ நியமிக்கக்கூட வேலூர் மாவட்டத்தில் கறாரா ரேட் பேசப்படுது. தமிழ்நாடு முழுக்கவே இப்படித்தான். இதனால் கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் விரக்தியில் இருக்காங்க.

கோடைகாலத்தை முன்னிட்டு பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர்ப் பந்தல் திறக்கச் சொல்லி தலைமை உத்தரவிட்டது. அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் பந்தாவாக தண்ணீர்ப் பந்தல்களை திறந்துவைத்தார்கள். அந்த தண்ணீர்ப் பந்தல்களில் இப்போது எத்தனை இடங்களில் தினமும் பானையில் தண்ணீர் ஊற்றி வைத்துள்ளார்கள் என்பதைப் பார்த்தாலே கட்சியினரின் விரக்தி புரிந்துவிடும். அ.தி.மு.கவினரோ எதிர்கட்சியாகி ஓராண்டாகியும் தண்ணீர்ப் பந்தல் வைத்து ஒழுங்காகப் பராமரிக்கிற அளவுக்கு செலவு செய்கிறார்கள். இப்போதும் அவர்கள் சம்பாதிக்கிறார்கள். டாஸ்மாக் பார் கூட தி.மு.க.வினருக்கு கிடைக்கவில்லை.

கலெக்டரிடமோ, எஸ்.பி.யிடமோ ஏதாவது ஒரு கோரிக்கை யோடு தி.மு.க.வினர் போனால், தலைமைக்கு சொல்லட்டுமா எனக் கேட்கிறார்கள். ஆனால், எங்களின் கோரிக்கையை தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லத்தான் யாரும் இல்லை. தலைவர் ஸ்டாலின் இப்போது முதல்வராகிவிட்டார். மக்களுக்காக அல்லும் பகலும் பாடுபடுகிறார். நெருக்கடியான பொருளாதாரச் சூழலிலும் திட்டங்களைச் செயல்படுத்துகிறார். அவர் இப்படி முதல்வராக வேண்டும் என்பதற்காகத்தான் கடந்த 10 ஆண்டுகளாகப் போராட் டம், ஆர்ப்பாட்டம், கட்சிக்கூட்டங்கள், தலைவர்களின் பிறந்தநாள் விழாக்கள் எல்லாவற்றுக்கும் ஒருங்கிணைப்பு, செலவு, அலைச்சல் எனப் பாடுபட்டோம். எங்கள் குறைகளை மட்டுமல்ல, மகிழ்ச்சியைத் தலைமையிடம் பகிர்ந்துகொள்ளக் கூட வழியில்லை.

நேரில் பார்க்க முடிய வில்லை என்பதால் புகாராக அனுப்புகிறோம். மக்கள் அனுப்பும் புகார்களுக்கு அதிகாரி கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கிறார் முதல்வர். கட்சி நிர்வாகிகள் பற்றி தலைமைக்கு அனுப்பப்படும் புகார்களில் பலவும், புகாருக்குள்ளாகும் அமைச்சர்கள், மா.செ.க்களுக்கே வாட்ஸ்ஆப்பில் வந்துவிடுகிறது. அதை வைத்து, புகார் சொன்ன நேர்மையான தொண்டனை மாவட்ட நிர்வாகம் பழி வாங்குகிறது.

மக்களின் மனநிலை தேர்தலுக்குத் தேர்தல் மாறும். கட்சித் தொண்டன்தான் இயக்கத் தின் ரத்த ஓட்டம். உண்மையான தொண்டனின் மனநிலை ஒரு போதும் மாறாது. அவன்தான் தி.மு.க. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் போராடி மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்தான். எங்கள் தலைவரை இந்தியாவின் தலைவராக 2024 நாடாளுமன்றத் தேர்தல் எதிர் பார்க்கிறது. ஆனால், அந்தத் தேர்தலுக்கு இப்போதைய தொண்டன் தயாராக இருக் கிறானா என்பதை உளவுத்துறை மூலம் முதல்வர் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

முதல்வராக மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடியாகக் களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவராக தொண்டர் களின் குறைகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்பதே கட்சியினரின் எதிர்பார்ப்பு.