மகிந்த ராஜபக்சேவின் ராஜினாமாவைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை நியமித்திருக்கிறார் அதிபர் கோத்தபாய ராஜபக்சே. பிரதான எதிர்க்கட்சித் தலைவரான சமாகி ஜனபலவேகயா கட்சியின் தலைவர் சஜீத் பிரேமதாசவை ஆட்சி அமைக்க கோத்தபாய அழைத்தார். ஆனால், "உங்களுடைய ராஜினாமாவைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்'’என்று சொல்லி பிரதமர் பதவியை ஏற்க சஜித் மறுக்கவே, ரணிலை தேர்ந்தெடுத்தார் கோத்தபாய.
ரணிலை தவிர அவரது ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு எம்.பி. கூட நாடாளுமன்றத்தில் இல்லை. கோத்தபாயவிடம் உள்ள பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவில் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் ரணில். அவரது அமைச்சரவையில் 20 பேர் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய அமைச்சரவையை அமைக்க ரணில் விரும்பியதும், அதற்கு எதிர்க் கட்சிகள் ஒத்துழைக்காததுமே கேபினெட்டை முழுமையாக அமைப்பதில் சறுக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித், எதிர்க்கட்சி வரிசையிலிருக்கும் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன ஆகியோருடன் ரணில் விவாதிக்க, ஆதரவளிக்க மறுத்தார் சஜித். மைத்ரிபால சிறிசேனா மட்டும் தற்போது ஆதரவளிக்க முன்வந்துள்ளார். இந்த நிலையில், கேபினெட்டை விரிவாக்கம் செய்வதில் ஈடுபட்டுள்ளதோடு, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளைக் களைந்து அமைதியை நிலைநாட்டுவேன் என சூளுரைத்திருக்கிறார் ரணில்.
இது ஒருபுறமிருக்க, இலங்கையின் பொருளாதார சீரழிவுக்கு ராஜபக்சே குடும்பமே
மகிந்த ராஜபக்சேவின் ராஜினாமாவைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை நியமித்திருக்கிறார் அதிபர் கோத்தபாய ராஜபக்சே. பிரதான எதிர்க்கட்சித் தலைவரான சமாகி ஜனபலவேகயா கட்சியின் தலைவர் சஜீத் பிரேமதாசவை ஆட்சி அமைக்க கோத்தபாய அழைத்தார். ஆனால், "உங்களுடைய ராஜினாமாவைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்'’என்று சொல்லி பிரதமர் பதவியை ஏற்க சஜித் மறுக்கவே, ரணிலை தேர்ந்தெடுத்தார் கோத்தபாய.
ரணிலை தவிர அவரது ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு எம்.பி. கூட நாடாளுமன்றத்தில் இல்லை. கோத்தபாயவிடம் உள்ள பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவில் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் ரணில். அவரது அமைச்சரவையில் 20 பேர் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய அமைச்சரவையை அமைக்க ரணில் விரும்பியதும், அதற்கு எதிர்க் கட்சிகள் ஒத்துழைக்காததுமே கேபினெட்டை முழுமையாக அமைப்பதில் சறுக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித், எதிர்க்கட்சி வரிசையிலிருக்கும் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன ஆகியோருடன் ரணில் விவாதிக்க, ஆதரவளிக்க மறுத்தார் சஜித். மைத்ரிபால சிறிசேனா மட்டும் தற்போது ஆதரவளிக்க முன்வந்துள்ளார். இந்த நிலையில், கேபினெட்டை விரிவாக்கம் செய்வதில் ஈடுபட்டுள்ளதோடு, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளைக் களைந்து அமைதியை நிலைநாட்டுவேன் என சூளுரைத்திருக்கிறார் ரணில்.
இது ஒருபுறமிருக்க, இலங்கையின் பொருளாதார சீரழிவுக்கு ராஜபக்சே குடும்பமே காரண மென்கிற கோபம் சிங்களவர்களிடம் இன்னும் குறைந்த பாடில்லை. நாட்டை சீரழித்து விட்டு ராஜபக்சே குடும்பம் கோடி கோடியாகக் கொள்ளையடித்து பல்வேறு நாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் ராஜபக்சே குடும்பம் செய்துள்ள முதலீடுகள் மலைக்க வைப்பதாக இருக்கின்றன.
இந்த நிலையில்,”"இலங்கையை விட்டு ராஜபக்சே குடும்பம் 14 நாட்களில் வெளியேற வேண்டும்; இல்லையேல் அவர்கள் மறைத்து வைத் துள்ள சொத்துக்களை அம்பலப்படுத்துவோம்' என்று கெடு விதித்திருந்தது அனானிமஸ் ஹேக் கர்ஸ் குழு. ராஜேபக்சேக்கள் வெளியேறாததால் இணையதளங்களின் இருட்டு வலைத்தளத்தில் (டார்க் வெப்) அவர்களின் சொத்துக்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள் ஹேக்கர்ஸ்.
இலங்கையின் உள்ளே, இலங்கைக்கு வெளியே என இரண்டு பாகங்களாக இந்த சொத்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்த 2 பாகங்களை உள்ளடக்கிய ராஜபக்சேக்களின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் என்கிறார்கள் ஹேக்கர்ஸ்.
வெளிநாடுகளில் ராஜபக்சேக்களின் சொத்துக்கள் கணக்கில் அடங்காதவைகளாக இருக் கிறது. இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ராணுவமற்ற ரகசிய உபகரணங்களின் நிறுவனமான தேல்ஸ் நிறுவனத்தில் 29 சதவீத பங்குகளை மகிந்த ராஜபக்சே வைத்திருக்கிறார். இந்த நிறுவனத்தின் முதல் உரிமையாளர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சிலின் மகன். இரண்டாவது பெரிய உரிமை யாளர் மகிந்தா. அந்த 29 சதவீத பங்குகளின் மதிப்பு சுமார் 1,500 கோடி ரூபாய் என்கிறார்கள். மேலும், இங்கிலாந்தின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் நிறுவனத்தில் 11 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது ராஜபக்சே குடும்பம்.
அதேபோல, உகாண்டா ஏர்லைன்ஸில் 800 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதுடன் 2 விமானங்களையும் ராஜபக்சே குடும்பம் வைத்திருக்கிறது. சர்வதேச அளவில் ஹோட்டல் பிசினெஸ் நடத்தும் பெரேரா அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் மகிந்தாவின் மகன் நாமல் ராஜபக்சே 500 மில்லியன் டாலரை முதலீடு செய்திருக்கிறார்.
இந்தியாவில் அதானி குழுமத்தில் 20 சதவீத பங்குகள் நாமல் ராஜபக்சேவுக்கு இருக்கிறது. கொழும்பில் உள்ள ஒரு ஆடம்பர பிரபலமான உணவகம் பட்டர் பூட்டி. இதன் மறைமுக உரிமையாளர் மகிந்தாவின் மற்றொரு மகனான யோஷித ராஜபக்சே. மேலும் ஹோட்டல் கொலம்பாவில் 70 சதவீத பங்குகளும், பிஸி பீன் கஃபே உணவு விடுதியில் 35 சதவீத பங்குகளும் இவருக்கு இருக்கிறது. இந்தியாவின் பாலிவுட் திரைப்படத் துறையில் பிரபல நடிகர் சல்மான்கான் மூலமாக 2 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது ராஜபக்சே குடும்பம்.
சீனாவில் பைடு நிறுவனத்தில் 7 பில்லியன் டாலர், தைவானில் செமிகண்டக்டர் நிறுவனத்தில் 40 பில்லியன் டாலர் முதலீடுகள் யோஷித ராஜபக்சே பெயரில் இருக்கிறது. மகிந்தாவின் மற்றொரு மகனான ரோஹித ராஜபக்சே ரிதம் அண்ட் ப்ளூஸ் என்ற இரவு கேளிக்கை விடுதியில் 200 மில்லியன் டாலர் முதலீட்டில் மதுபான உரிமங்களைப் பெற்றுள்ளார். இந்த இரவுநேர விடுதிதான் இலங்கையின் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தூதர்கள் ஆகியோரின் சொர்க்க பூமி.
சீஷெல்ஸ் லா டியாகோ தீவில் ஒரு பகுதியை தனது மனைவியின் பெயரில் வாங்கியிருக்கிறார் ரோஹித ராஜபக்சே. மேலும், மாலத்தீவில் மிரிஹி ஐலேண்ட் ரிசார்ட் வைத்துள்ள ராஜபக்சே குடும் பம், மரதூ என்ற தீவு ஒன்றையும் வாங்கியுள்ளது. பாலி மற்றும் மாலத்தீவுகளில் 7 சொகுசுக் கப்பல்கள் ராஜபக்சே குடும்பத்தினரால் இயக்கப்படுகிறது. இதன் மதிப்பு 850 மில்லியன் டாலர்கள்.
மடகாஸ்கர் நாட்டில் இலாக்கா பகுதியில் நீலக்கல் சுரங்கம் ஒன்றை வாங்கியுள்ளார் கோத்தபாய. இதன் மதிப்பு 3 மில்லியன் டாலர். அதேபோல தான்சானியாவில் 7 மில்லியன் டாலர் மதிப்பில் சின்சியாங் வைரச் சுரங்கம் ஒன்று கோத்தபாயவுக்கு சொந்தமாக இருக்கிறது.
ரிச்சி டீ என்கிற தேயிலை உற்பத்தி நிறுவனம் சமல் ராஜபக்சேவிற்கு சொந்தமானது. இதன் முதலீடு 350 கோடி ரூபாய். இலங்கையின் வர்த்தக நிறுவனங்களில் பிரபலமானது பிரமிட் வில்மர் நிறுவனம். ராஜபக்சே குடும்பத்தினரின் பணத்தை முதலீடு செய்வதற்காகவே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
இலங்கையின் ஐ.டி.நிறுவனங்களில் ஒன்றான ஹெலகுரு அண்ட் ஹெலபே கம்பெனியில் ரோஹித ராஜபக்சேவுக்கு 80 மில்லியன் முதலீடு இருக்கிறது. மாஸ் ஹோல்டிங்ஸ் என்கிற இலங்கையின் முன்னணி ஏற்றுமதி நிறுவனத்தில் 18 சதவீத வர்த்தகத்தை வைத்திருக்கிறார் மகிந்த ராஜபக்சே. வங்கதேசத்தில் ரோர் மீடியா நெட் வொர்க் என்ற பெயரில் மீடியா உலகிலும் இன் வெஸ்ட்மெண்ட் செய்துள்ளார் நாமல் ராஜபக்சே.
துபாயில் 7 மில்லியன் டாலர் மதிப்பில் மேரியட் நட்சத்திர ஹோட்டல், புர்ஜ் கலிஃபாவில் மூன்று அதிநவீன ஹோட்டல்கள் ஆகியவற்றை மகிந்தா வாங்கியுள்ளார். உலகின் மிகப்பெரிய ஒப்பந்த நிறுவனமான அருப் நிறுவனத்தின் மறைமுக பார்ட்னராக இருக்கிறது ராஜபக்சே குடும்பம். இந்த நிறுவனத்தைத்தான் தங்களின் கறுப்பு பணம் முழுவதையும் வெள்ளையாக்க பயன்படுத்தி வந்துள்ளனர்.
சர்வதேச அளவில் பலவகையான சொத்துக் களை குவித்து வைத்துள்ள ராஜபக்சே குடும்பம், ஆபாச உலகத்தையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவின் பிரபல செக்ஸ் பட தயாரிப்பு நிறுவனமான நாட்டி அமெரிக்க போட்ர்னோ கிராஃபி கம்பெனியில் 20 மில்லியன் டாலரை முதலீடு செய்திருக்கிறார் ரோஹித ராஜபக்சே. மேலும், ஆபாச படங்களை தயாரிக்கும் துஷி நிறுவனத்தில் 11 மில்லியன் டாலர்களையும், டார்செல் கிளப் ஆபாச திரைப்பட நிறுவனத்தில் 5 மில்லியன் டாலர்களையும் இவர் முதலீடு செய்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல், ராஜபக்சே குடும்பத்தினருக்கு நெருக்கமான சசீந்திரா என்பவர் இலங்கையில் விபச்சார விடுதி ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன் வரவு செலவுகளை கவனித்து வருபவர் சமல் ராஜபக்சே. உக்ரைனில் பிரபலமான மிதக்கும் விபச்சார விடுதியான ரிவர் பேலசின் உரிமையாளரும் மகிந்தாவின் நண்பருமான உதயங்க வீரதுங்க மூலம் இந்த விடுதிக்கு உக்ரைனிலிருந்து விபச்சார அழகிகள் இறக்குமதி செய்யப்படுகின்றனர். மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் விபச்சார அழகிகளை இலங்கைக்குள் கொண்டுவர உடோபியா என்ற வலையமைப்பையும் வீரதுங்கா மூலம் நடத்துகிறது ராஜபக்சே குடும்பம். உதயங்க வீரதுங்காவை உரிமையாளராக வைத்து லா பெல்லா என்ற விபச்சார அழகிகள் விடுதியை தாய்லாந்தில் துவக்கியிருக்கிறார்கள். உலகின் மூன்றாவது பெரிய விபச்சார விடுதி என அழைக்கப்படுகிறது லா பெல்லா. இதன் மதிப்பு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
சுமார் 1 லட்சம் கோடிகள் மதிப்பிலான இந்த சொத்து விபரங்களை கண்டு அதிர்ச்சியடைந்திருக் கிறார்கள் சிங்களவர்கள்.