56 மணி நேரத்தில் கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவாகும் என எதிர்பார்க்காத பிரதமர் மோடி, தனது நம்பிக்கைக்குரிய பார்ட்னர் அமித்ஷா மீதே கடும் அதிருப்தியடைந்திருக்கிறார்.
பா.ஜ.க.வுக்கு போதுமான மெஜாரிட்டி இல்லாத நிலையில், அமித்ஷாவிடமிருந்து வந்த உத்தரவின்பேரில் அவசரம், அவசரமாக எடியூரப்பாவிற்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் கவர்னர். எடியூரப்பாவும் சரசரவென திட்டங்களுக்கு கையெழுத்துப்போட, அவரது இந்த வேகத்தை ரசிக்காத ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர்கள் பா.ஜ.க.வின் மேலிடத்திடம் எச்சரிக்கையும் செய்திருக்கிறார்கள்.
பா.ஜ.க.வின் அறிவுஜீவிகள் குழுவிலுள்ள டெல்லியிலிருக்கும் தமிழக பிரமுகர்களிடம் நாம் பேசியபோது, ‘""கர்நாடக தேர்தல் முடிவுகளை ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர்கள்- குறிப்பாக, இயக்கத்தின் தலைவர் மோகன்பகவத், சுரேஷ்பாய்யாஜோஷி, சுரேஷ் சோனி, டாக்டர் மன்மோகன் வைத்யா, டாக்டர் கிருஷ்ணகோபால், தத்தாத்ரேயா ஹோசபெல் உள்ளிட்ட பலரும் ஆலோசித்தார்கள். அதில், தனிப்பெரும் கட்சியாக வந்திருப்பது பா.ஜ.க.வுக்கு சாதகம்தான் என்றாலும், எதிர்த்தரப்பில் (காங்கிரஸ் + ம.ஜ.த.) மெஜாரிட்டிக்கான இடங்கள் இருக்கும்போது ஆட்சி அமைப்பதில் அவசரம் காட்டாமல் திட்டமிடுவதுதான் புத்திசாலித்தனம் என கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் பேசினர். அதனை பிரதமர் மோடியிடம் ராஜ்நாத் தெரிவித்த நிலையில், ஒரு அவசர மீட்டிங்கை ஏற்பாடு செய்தார் மோடி. இதில் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நிதின்கட்கரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
அப்போது,’""மெஜாரிட்டிக்கான இடங்கள் இல்லையென்றாலும் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்துவிட முடியும். நம்மை ஆட்சியமைக்க விடக
56 மணி நேரத்தில் கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவாகும் என எதிர்பார்க்காத பிரதமர் மோடி, தனது நம்பிக்கைக்குரிய பார்ட்னர் அமித்ஷா மீதே கடும் அதிருப்தியடைந்திருக்கிறார்.
பா.ஜ.க.வுக்கு போதுமான மெஜாரிட்டி இல்லாத நிலையில், அமித்ஷாவிடமிருந்து வந்த உத்தரவின்பேரில் அவசரம், அவசரமாக எடியூரப்பாவிற்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் கவர்னர். எடியூரப்பாவும் சரசரவென திட்டங்களுக்கு கையெழுத்துப்போட, அவரது இந்த வேகத்தை ரசிக்காத ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர்கள் பா.ஜ.க.வின் மேலிடத்திடம் எச்சரிக்கையும் செய்திருக்கிறார்கள்.
பா.ஜ.க.வின் அறிவுஜீவிகள் குழுவிலுள்ள டெல்லியிலிருக்கும் தமிழக பிரமுகர்களிடம் நாம் பேசியபோது, ‘""கர்நாடக தேர்தல் முடிவுகளை ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர்கள்- குறிப்பாக, இயக்கத்தின் தலைவர் மோகன்பகவத், சுரேஷ்பாய்யாஜோஷி, சுரேஷ் சோனி, டாக்டர் மன்மோகன் வைத்யா, டாக்டர் கிருஷ்ணகோபால், தத்தாத்ரேயா ஹோசபெல் உள்ளிட்ட பலரும் ஆலோசித்தார்கள். அதில், தனிப்பெரும் கட்சியாக வந்திருப்பது பா.ஜ.க.வுக்கு சாதகம்தான் என்றாலும், எதிர்த்தரப்பில் (காங்கிரஸ் + ம.ஜ.த.) மெஜாரிட்டிக்கான இடங்கள் இருக்கும்போது ஆட்சி அமைப்பதில் அவசரம் காட்டாமல் திட்டமிடுவதுதான் புத்திசாலித்தனம் என கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் பேசினர். அதனை பிரதமர் மோடியிடம் ராஜ்நாத் தெரிவித்த நிலையில், ஒரு அவசர மீட்டிங்கை ஏற்பாடு செய்தார் மோடி. இதில் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நிதின்கட்கரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
அப்போது,’""மெஜாரிட்டிக்கான இடங்கள் இல்லையென்றாலும் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்துவிட முடியும். நம்மை ஆட்சியமைக்க விடக்கூடாது என முடிவுகட்டி, இரண்டு எதிரிகளும் (காங்கிரஸ், ம.ஜ.த.) திடீரென ஒன்றாக சேர்ந்திருப்பதை மக்கள் ஏற்கமாட்டார்கள். திடீர் கூட்டணி அமைத்ததில் இப்போதே அதிருப்தியடைந்திருக்கும் இரண்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலரும் தம்மிடம் பேசி வருவதாக எடியூரப்பா சொல்கிறார். அதனால், சபையில் மெஜாரிட்டியை நிரூபித்துவிட முடியும். எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க கவர்னருக்கு அறிவுறுத்தலாம்'' என அந்த கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார் அமித்ஷா. உடனே ராஜ்நாத்சிங், இதில் அவசரம் காட்ட வேண்டாம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இதனால், கருத்து வேறுபாடுகள் எழுந்ததால், கர்நாடக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவை போனில் பிடித்து பல கேள்விகளைக் கேட்டிருக்கிறார் அமித்ஷா. ""மெஜாரிட்டியை நிரூபித்துவிட முடியும் என முரளிதரராவும் சொல்கிறார். எனக்கு நம்பிக்கை இருக்கு. கர்நாடகாவில் பிரச்சனையே இல்லை. நான் பார்த்துக்கொள்கிறேன்''‘ என அழுத்தமாக சொல்லியிருக்கிறார் அமித்ஷா.
அந்த சமயத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடமிருந்து ராஜ்நாத்சிங்கிற்கு போன் வந்திருக்கிறது. அதில், ""ஆட்சி அமைக்க உரிமை கோராதீர்கள். காங்கிரஸ்-ம.ஜ.த. திடீர் கூட்டணியில் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியடைந்திருந்தாலும் அந்த கூட்டணியை ஆட்சி அமைக்க வழிவிடுங்கள். அமைச்சரவையை உருவாக்குவதில் தொடங்கி அனைத்திலும் பிரச்சனை வெடிக்கும். ம.ஜ.த. எம்.எல்.ஏ.க்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதையும் மீறி ஆட்சி அமைத்துவிட்டால் 3 மாதங்களிலேயே ஆட்சியை காங்கிரசே கவிழ்த்துவிடும்.
அப்போது இரண்டு கட்சிகளிடமுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் அதிருப்தி அதிகரித்திருக்கும். அதனை அறுவடை செய்வதுதான் பா.ஜ.க.விற்கு சரியாக இருக்கும். பட்டவர்த்தனமாக அதிருப்தி உருவான சூழலில் எம்.எல்.ஏ.க்களை வளைக்கும்போது உருவாகும் ஆட்சிக்குத்தான் சிக்கல் வராது. மேலும், காங்கிரசுக்குள் அதிருப்தியை சித்தராமையாவே உருவாக்குவார். காங்கிரஸ் தலைமையின் பல முடிவுகள் தமக்கு எதிராக எடுக்கப்பட்டிருப்பதாக அவர் நினைப்பதால் அந்த அதிருப்தி சீக்கிரம் தெரியும். அதனால், எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியடையும்போது அவர்களை வளைப்பதுதான் சாதகமானது. தனிப்பெரும் கட்சியாக ஜெயிக்காத மாநிலங்களிலேயே ஆட்சியை அமைத்திருக்கிறோம் என்கிற அதீத நம்பிக்கையில் ஓடாதீர்கள். ஒருவேளை, இலக்கு தவறிப்போனால், மோடியின் இமேஜ் டேமேஜ் ஆகும் என்பதை மறந்துவிடாதீர்கள்’ எனவும் எச்சரிக்கை செய்துள்ளனர். அதனை ராஜ்நாத்சிங் சொன்னபோது, அமித்ஷா ஏற்கவில்லை. மாறாக, அவர் கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில், எடியூரப்பாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு டெல்லியிலிருந்து உத்தரவு பறந்தது'' என விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள்.
பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டதிலிருந்து 19-ந்தேதி மதியம் 2 மணி வரை பெரும்பான்மைக்கான ஆதரவைக்கேட்டு காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகளிலுள்ள தமது சமூக எம்.எல்.ஏ.க்களிடம் மன்றாடினார் எடியூரப்பா. பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் மூத்த தலைவர்களில் ஒருவரான அனந்தகுமார் தலைமையில் எடியூரப்பா உருவாக்கிய குழுவினரும் போராடினார்கள். 19-ந்தேதி நள்ளிரவிலிருந்தே எடியூரப்பாவையும், முரளிதரராவையும் விரட்டியபடியே இருந்துள்ளார் அமித்ஷா. அவர்களும் தூக்கமில்லாமல் பல முயற்சிகளை எடுத்து களைத்துப்போனார்கள். அதேசமயம், "என்னாச்சு' என அமித்ஷாவிடம் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கேட்டபடி இருந்துள்ளார் பிரதமர் மோடி. அவருக்கு சாதகமான பதிலை சொல்லமுடியாமல் தவித்த அமித்ஷா, "இனி எனக்கு நம்பிக்கை இல்லை. அவசரப்பட்டது தவறு என உணர்கிறேன்' என ஒப்புக்கொண்டிருக்கிறார்.
மதியம் 2 மணிக்கு "முயற்சி தோற்றுப்போய் விட்டது. இனியும் நம்பிக்கை இல்லை. ராஜினாமா செய்வது மட்டுமே கௌரவமாக இருக்கும்' என அமித்ஷாவை தொடர்புகொண்டு, எடியூரப்பாவும் முரளிதரராவும் சொன்னபோது அதை ஜீரணிக்கமுடியாத அமித்ஷா, அவர்களை கடுமையாக கடிந்துகொண்டிருக்கிறார். மோடியின் கவனத்துக்கு இதனை கொண்டு சென்றபிறகு, மோடியின் அனுமதியுடன், பெரும்பான்மைக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலே ராஜினாமா செய்வது குறித்த கடிதத்தை தயாரித்தார் எடியூரப்பா.
இந்தச் சூழல் குறித்து டெல்லி பா.ஜ.க. தொடர்பாளர்களிடம் நாம் விசாரித்தபோது, ""அமித்ஷா, எடியூரப்பா, முரளிதரராவ் ஆகிய மூவர் கூட்டணி கொடுத்த நம்பிக்கையில்தான் இந்த விளையாட்டுக்கு ஒப்புக்கொண்டார் மோடி. ஆர்.எஸ்.எஸ்.சின் எச்சரிக்கையையும் அலட்சியப்படுத்தினார். தற்போது காரியம் நடக்கவில்லையென்பதில் மூவர் மீதும் கடும் கோபம் கொண்ட மோடி, அவர்களிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது, "அப்செட் ஆக வேண்டியதில்லை. தார்மீக அடிப்படையில் உரிமை கோரினோம். ஜனநாயகத்தையும் சட்ட நெறிமுறைகளையும் நாம் மீறவில்லை. இன்னும் 3 மாசத்தில் கர்நாடகத்தில், பா.ஜ.க. ஆட்சி அமையும். அதுக்கு நாங்கள் பொறுப்பு. அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது' என உறுதி தந்திருக்கிறார் அமித்ஷா'' என்கின்றனர்.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான மோகன்ராஜுலுவிடம் நாம் பேசியபோது, ""கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லைங்கிற வருத்தம் எங்களுக்கு உண்டு. இந்த விசயத்தில் காங்கிரஸ் தமது கலாச்சாரத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அதிகாரத்திற்காக அரசியல் அநாகரிகத்தை உருவாக்க காங்கிரஸ் நினைத்ததை வெளிப்படுத்தத்தான் தார்மீக உரிமைகோரினோம்'' என்கிறார்.
கர்நாடகத்தில் தேர்தல் பணியாற்றியவரும் தமிழக பா.ஜ.க.வின் பொதுச்செயலர்களில் ஒருவருமான நரேந்திரனை தொடர்புகொண்டபோது, ‘""தேர்தல் ஜனநாயகத்தின்படியே உரிமை கோரினோம். பரம எதிரிகளாக தேர்தலை எதிர்கொண்ட காங்கிரசும் ம.ஜ.தளமும் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்ததுதான் ஜனநாயக கேலிக்கூத்து. அதனைத் தடுக்கும் முகமாகவே சட்டப்படி எடியூரப்பா உரிமை கோரினார். காங்கிரஸ் முதல்வராக இருந்த சித்தராமையாவையே தோற்கடித்தது ம.ஜ.தளம். அப்படியிருக்க அக்கட்சியுடன் கூட்டணி; அதுவும் குமாரசாமிக்கு முதல்வர் பதவி என்பதை எம்.எல்.ஏ.க்கள் பலரும் ஜீரணிக்கவில்லை. அவர்களில் பலரும் இதனை எடியூரப்பாவிடமே சொல்லி வருத்தப்பட்டதுடன், "இப்படி ஒரு ஆட்சி அமைவதற்கு பதில் நீங்கள் (எடியூரப்பா) ஆட்சி அமைக்கலாம். நாங்கள் ஆதரிக்கிறோம்' என தகவலும் அனுப்பினார்கள். அதன்பிறகுதான் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா. ஆனால், இதனை அறிந்துகொண்ட காங்கிரசும், ம.ஜ.த.வும் தங்களது எம்.எல்.ஏ.க்களை பல பேரங்கள் மூலம் பாதுகாத்தனர். அதனால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக, கௌரவமாக ராஜினாமா பண்ணிட்டோம்'' என்கிறார் மிக அழுத்தமாக.
ஆர்.எஸ்.எஸ்.காரரும் தமிழக பா.ஜ.க. பொ.செ.வுமான கருப்பு முருகானந்தத்திடம் பேசியபோது, ""எதிரெதிர் துருவங்களாக இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட ம.ஜ.தளத்தை ஆட்சி அமைக்க இரண்டாவது பெரியகட்சியான காங்கிரஸ் அவசரம் அவசரமாக ஆதரவு தருகிறது. இது எந்த வகையிலான ஜனநாயகம்? இவர்களது ஆட்சி 5 ஆண்டுகாலம் நிலையான ஆட்சியாக நீடிக்காது. விரைவில் கவிழும். மைனாரிட்டி கட்சி ஆட்சியிலிருப்பது ஜனநாயக விரோதம்தான். பா.ஜ.க இதில் அவசரம் காட்டியது என்பதோ, இமேஜ் குறைச்சல் ஏற்படவோ இல்லை'' என்கிறார் மிக இயல்பாக.
தென்னகத்தின் நுழைவாயிலாக கர்நாடகாவைக் கணக்கிட்ட பா.ஜ.க., அங்கு கணக்கு தவறிய நிலையில், 3 மாதத்தில் ஆட்சியைக் கலைப்பதுடன், அடுத்தகட்டமாக தமிழகத்தையும் லாவகமாக வளைப்போம் என மோடியிடம் உறுதி தந்திருக்கிறாராம் அமித்ஷா.
-இரா.இளையசெல்வன்