Advertisment

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு எங்கு இருந்தால் என்ன நடக்கும்.... (04.07.25)

sun

ந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், கெட்ட எண்ணங்கள் இருக்கும். ஜாதகர் மோசமான மனிதராக இருப்பார். அதன் காரணமாக விரோதிகள் அதிகமாக இருப்பார்கள். நண்பர்களிலேயே பலர் பகைவர்களாக இருப்பார்கள். நல்ல பண வசதி இருக்கும்.

Advertisment

சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் கஷ்டங்கள் இருக்கும். பின்னர் பணம் வரும். ஜாதகர் கடுமையாக பேசுவார். பல தொழில்கள் கையில் இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். அடிக்கடி பயணம் இருக்கும். தைரிய குணம் இருக்கும். ஜாதகர் யாரையும் மதிக்கமாட்டார். அனைவரிடமும் சண்டை போடுவார். சகோதரர்களுடன் பிரச்சினை இருக்கும்.

Advertisment

சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார். அனைவரிடமும் கடுமையாக நடப்பார். பல தொழில்களைச் செய்வார். சரீரத்தில் விபத்து காரணமாக தழும்பு இருக்கும். அடிக்கடி பயணம் இருக்கும். சீதளம் பிடிக்கும். நல்ல மனைவி இருப்பாள். மனதில் எப்போதும் பிரச்சினைகள் இருக்கும்.

சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். ஜாதகர்  கடுமையாக பேசுவார். பல தொழில்கள் இருக்கும். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும். ஜாதகர் தன் பேச்சு காரணமாக பகைவர்களைச் சம்பாதிப்பார். 

சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஆணவ குணம் இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். 

நல்ல வாரிசு இருக்கும். சிலர் உயர்ந்த பதவிகளில் இருப்பார்கள். வீட்டில் நாய், பூனை போன்ற பிராணிகளை வளர்ப்பார்கள்.

சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். விபத்து காரணமாக காலில் பாதிப்பு உண்டாகும். மனைவியுடன் விவாதம் இருக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு மனநோய் இருக்கும். சிலர் தாங்கள் வாங்கும் கடனைத் திருப்பித்தர மாட்டார்கள். வாழ்க்கை நன்றாக இருக்கும்.

சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும்‌. சிலருக்கு மறுமணம் நடக்கும்‌. நல்ல மனைவி அமைவாள். எனினும், ஜாதகர் மனைவியிடம் அன்புடன் நடக்கமாட்டார். பல தொழில்கள் இருக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார்.

சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், உடல் நலத்தில் பிரச்சினை இருக்கும். பல நோய்கள் இருக்கும். இல்வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். சிலருக்கு தீராத நோய் இருக்கும். 

சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார். பணக்காரராக இருப்பார். முதுகில் பிரச்சினை இருக்கும். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும். ஜாதகர் தர்மச் செயல்களுக்காக பணத்தைச் செலவழிப்பார். பயணம் இருக்கும்.

சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். சிலர் அரசியல்வாதி யாக இருப்பார்கள். சிலர் அரசு பதவிகளில் இருப்பார்கள். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள். ஜாதகர் யாரையும் மதிக்கமாட்டார். அனைவரிடமும் கோபமாக பேசுவார். ஆணவ குணம் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி  11-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பல பிரச்சினைகள் இருக்கும். 30 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். ஜாதகர் நல்ல பண வசதியுடன் இருப்பார். தைரிய குணம் இருக்கும். பல தொழில்களின் மூலம் பணம் வரும். பயணங்கள் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். ஜாதகர் வெளியே நல்லவரைப்போல நடிப்பார். வீட்டில் சண்டை இருக்கும். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும். வாரிசுகள் வெளிமாநிலத்தில் அல்லது வெளிநாட்டில்  வாழ்வார்கள்.

செல்: 98401 11534

bala040725
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe