முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038,
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: உத்திராடம்- 3.
சந்திரன்: பூராடம்- 4.
செவ்வாய்: உத்திராடம்- 2.
புதன்: உத்திராடம்- 2.
குரு: புனர்பூசம்- 2 (வ).
சுக்கிரன்: உத்திராடம்- 3.
சனி : பூரட்டாதி- 4.
ராகு: சதயம்- 4.
கேது: பூரம்- 2.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: தனுசு
18-1-2026 மாலை 4.41 மணிக்கு மகரம்.
21-1-2026 அதிகாலை 1.35 மணிக்கு கும்பம்.
23-1-2026 காலை 8.33 மணிக்கு மீனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய்- சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கௌரவ பதவிகள் தேடிவரும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக மறைந்து குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். உங்களுக்கு இருந்துவந்த சட்ட சிக்கல்கள் தற்போது மறைந்து மனமகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் சாதகமாக இருப்பதால் பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நேரமாகும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு எதிர்பார்த்ததைவிட நல்ல மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது, கால பைரவரை வழிபாடு செய்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20, 21, 22.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- புதன் சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதாலும் எல்லாவகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த உடம்பு பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு இருந்த மருத்துவ செலவுகள் குறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த தேவையற்ற பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு படிப்பில் சிறந்து விளங்கமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வருகின்ற நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவதற்கு பெருமாள் வழிபாட்டையும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டையும் மேற்கொள்வதன்மூலமாக உங்களுக்கு இருக்கக்கூடிய சின்ன சின்ன பிரச்சினைகள்கூட குறைந்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23, 24.
மிதுனம்
(மி
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038,
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: உத்திராடம்- 3.
சந்திரன்: பூராடம்- 4.
செவ்வாய்: உத்திராடம்- 2.
புதன்: உத்திராடம்- 2.
குரு: புனர்பூசம்- 2 (வ).
சுக்கிரன்: உத்திராடம்- 3.
சனி : பூரட்டாதி- 4.
ராகு: சதயம்- 4.
கேது: பூரம்- 2.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: தனுசு
18-1-2026 மாலை 4.41 மணிக்கு மகரம்.
21-1-2026 அதிகாலை 1.35 மணிக்கு கும்பம்.
23-1-2026 காலை 8.33 மணிக்கு மீனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய்- சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கௌரவ பதவிகள் தேடிவரும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக மறைந்து குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். உங்களுக்கு இருந்துவந்த சட்ட சிக்கல்கள் தற்போது மறைந்து மனமகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் சாதகமாக இருப்பதால் பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நேரமாகும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு எதிர்பார்த்ததைவிட நல்ல மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது, கால பைரவரை வழிபாடு செய்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20, 21, 22.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- புதன் சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதாலும் எல்லாவகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த உடம்பு பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு இருந்த மருத்துவ செலவுகள் குறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த தேவையற்ற பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு படிப்பில் சிறந்து விளங்கமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வருகின்ற நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவதற்கு பெருமாள் வழிபாட்டையும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டையும் மேற்கொள்வதன்மூலமாக உங்களுக்கு இருக்கக்கூடிய சின்ன சின்ன பிரச்சினைகள்கூட குறைந்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23, 24.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் சிறப்பு. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டிய நேரம் ஆகும். ஒருசிலருக்கு வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் கூட தடைப்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வு நேரம் குறையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. ஒருசில நேரங்களில் அதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகலாம் என்பதால் பேச்சில் சற்று கவனமாக இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு ஞாபக மறதி ஏற்படலாம் என்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் பாக்கிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதாலும் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பணவரவுகள் சாதகமாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. குரு வக்ரகதியில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை எளிதில் பூர்த்தி செய்யக்கூடிய நேரமாகும். வேலைக்கு செல்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் பிறரால் முடிக்க முடியாத காரியத்தைகூட நீங்கள் குறித்த நேரத்தில் முடித்து நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் கடினமான விஷயத்தைகூட எளிதில் புரிந்து கொண்டு படிப்பில் சிறந்து விளங்கமுடியும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் வரும் நாட்களில் நடக்கும். சூரியன், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துசெல்வது நல்லது. வரும் நாட்களில் அனுகூல பலன்களை பெறுவதற்கு அம்மன் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவதன்மூலம் நன்மை கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன்- செவ்வாய் சேர்க்கைப்பெற்று ருண, ரோக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் தைரியத்தோடு கையாண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் சற்று குறையும். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நேரமாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல் வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலமான பலன்களைப் பெறுவதற்கு காலபைரவரை வழிபாடு செய்வது, ராகு கால நேரத்தில் அம்மனுக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் ஏற்றங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20, 21, 22.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும், ருண, ரோக ஸ்தானமான 6-ல் ராகு சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் வளமான பலன்களைப் பெறுவீர்கள். குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். தொழில், வியாபாரத்தில் படிப்படியான வளர்ச்சியை நீங்கள் பெறக்கூடிய நேரம் என்றாலும் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களைப்பெறமுடியும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் வரும் நாட்களில் உங்களுக்கு கிடைக்கும். பயணங்கள் மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து செயல்படுவதன்மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுக்க முடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23, 24.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன்- புதன் சேர்க்கைப்பெற்று கேந்திர ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் சனி சஞ்சரிப்பதாலும் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அசையும், அசையா சொத்து வகையில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் செயல்படுவார்கள். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்ப தால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய பொருளாதார உதவிகள் எளிதில் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் ஒரு கௌரவமான நிலை ஏற்படும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான காரியங்களைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலமான பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 23, 24.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய்- சூரியன் சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு இருந்த கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் தற்போது விலகி நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய நேரமாகும். சனிபகவான் 5-ல் சஞ்சரிப்பதாலும், குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். கணவன்- மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலமாக ஒருசில அனுகூலமான பலன்களை பெறக்கூடிய நேரம் ஆகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய நெருக்கடிகள் தற்போது விலகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் பணியில் சுறுசுறுப்பாக செயல்பட்டு எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிக்கக் கூடிய பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு கடினமான விஷயத்தைகூட எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். வரும் நாட்களில் அனுகூல பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்க்கையம்மனை வழிபாடு செய்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக ஏற்றங் கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய், 4-ல் சனி சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். நீங்கள் விளையாட்டுத்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளலாம் என்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, வீண் பேச்சை குறைப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்கள் பொருட்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த விலை கிடைப்பதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். வேலையாட்கள் செய்யக்கூடிய சின்ன சின்ன செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகப்படியாக இருப்பதால் ஓய்வுநேரம் குறையும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் சக நண்பர்கள் உங்கள்மீது வீண்பழிச் சொற்களை சொல்லலாம் என்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பிற்காக நேரத்தை செலவிடுவது மிகவும் நல்லது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனை செய்வதன்மூலம் ஏற்றங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 21, 22.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன், 3-ல் சனி சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்த பணவரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகக்கூடிய நேரமாகும். ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய், 2-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் நல்ல லாபத்தை அடையக்கூடிய நேரமாகும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் படிப்படியான வளர்ச்சிகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலைக்குச் செல்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல் மேற்படிப்புக்காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20, 23, 24. .
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சனி 2-ல் சஞ்சரிப்பதாலும், 12-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும். சக்திக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடனிருப்பவர்களால் நிம்மதி குறைவு ஏற்படலாம். வயது மூத்தவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருக்க வேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் தேவையில்லாத தடங்கல்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தக்கநேரத்தில் கிடைக்காது. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டிய நேரமாகும். முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது கூடுதல் பணிசுமை காரணமாக மன நிம்மதி குறைவது மட்டுமில்லாமல் உடல்ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு தற்போது ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது உத்தமம். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதன்மூலமாக அனுகூலங்களை அடைய முடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 21, 22. .
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய நேரமாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நல்லவாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உங்களுக்கு உடல்ரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நண்பர்கள்மூலமாக ஒருசில வளமான பலன்களைப் பெறக்கூடிய காலமாகும். பணம் கொடுக்கல்- வாங்கல்ரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை பெறக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்ட நாளைய பிரச்சினைக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். உத்தியோகரீதியாக ஒரு வளமான பலன்களை பெறக்கூடிய நேரமாகும். சிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் எதையும் எளிதில் புரிந்து கொண்டு பெரியோர்களிடம் நல்ல பெயர் எடுக்கக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வதும் விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன் மூலம் வளமான பலன்களைப் பெறலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20, 23, 24.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us