முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026.
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 
Advertisment
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: மூலம்- 4.
சந்திரன்: உத்திரட்டாதி- 4.
செவ்வாய்: பூராடம்- 1. 
புதன்: கேட்டை- 4. 
குரு: புனர்பூசம்- 3 (வ). 
சுக்கிரன்: மூலம்-  4. 
சனி: பூரட்டாதி- 4. 
ராகு: சதயம்- 4.
கேது: பூரம்- 2.  

thisweekrasi1

கிரக மாற்றம்: 
29-12-2025 தனுசு புதன் காலை 7.24 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: மீனம்
29-12-2025 காலை 7.41 மணிக்கு மேஷம்
31-12-2025 காலை 9.23 மணிக்கு ரிஷபம்
2-1-2026 காலை 9.26 மணிக்கு மிதுனம்.
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும் குரு தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராசியாதிபதி செவ்வாய், சுக்கிரன், சூரியன் சேர்க்கை பெற்றிருப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் தற்போது குறைந்து எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருந்து சுறுசுறுப்பாக செயல்படமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும். அதிகாரியிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது மறைந்து பணியில் மன நிம்மதியுடன் செயல்படமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர், ஆசிரியர்களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 2, 3.
ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டிய நேரம் ஆகும். உங்களது தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். உடனிருப்பவரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும், சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதையும் திறம்பட கையாண்டு போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களைபொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. முடிந்தவரை தேவையற்ற தூரப் பயணங்களைத் தவிர்ப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது தற்போதைக்கு உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக உங்களது ஓய்வுநேரம் குறையும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் பழகக் கூடியவர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 28, 31, 1.
மிதுனம் 
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பாகும். திங்கட்கிழமைமுதல் 7-ல் புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவுகள் சாதகமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் பிறர் உதவியை எதிர்பார்க்காமல் சில விஷயங்களில் நீங்களே நேரடியாக தலையிட்டு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான முக்கியமான விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தனி திறமையுடன் செயல்பட்டு பணியில் நல்ல பெயர் எடுக்க முடியும். மாணவ- மாணவியர்கள் நல்ல ஞாபக சக்தியுடன் செயல்பட்டு எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப் பாடோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவதன் மூலம் நல்லது நடக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 30, 2, 3.
கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்கள் ராசிக்கு 9-ல் சனி சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குரு வக்ரகதியில் இருப்பதால் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்பட்டு மற்றவர்களால் முடிக்கமுடியாத காரியத்தைகூட நீங்கள் சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் நல்லது நடக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 31, 1.
சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும், திங்கட்கிழமைமுதல் பஞ்சம ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய நேரமாகும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல வளர்ச்சியை அடையக்கூடிய நேரமாகும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது உத்தமம். வேலையாட்களை அனுசரித்துசெல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு சின்ன சின்ன நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் நீங்கள் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப்பெற காலபைரவரை வழிபாடு செய்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 31, 1, 2, 3.
கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் என வர்ணிக்கப் படக்கூடிய 4-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், 7-ல் சனி சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் ஆகும். 10-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் தற்போது வக்ர கதியில் இருப்பதால் பணவரவுகள் சற்று சாதகமாக இருந்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். சுக்கிரன், புதன் 4-ல் இருப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பெண்கள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதுமூலமாக ஒரு சில ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற தூரப் பயணங்களைத் தற்கா-கமாக தள்ளி வைப்பது நல்லது. திருமண சுப காரியங்களைத் தற்போது மேற்கொண்டால் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. வேலைக்கு செல்பவர்களுக்கு மற்றவருடைய வேலையும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் அதன்மூலம் பொருளாதார அனுகூலங்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் கால நேரம் பார்க்காமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 28, 2, 3.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உற்சாகத்தோடு செயல் படுவீர்கள். சனிபகவான் 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். நீண்டநாட்களாக தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் தற்போது கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உடன்பிறந்தவர்கள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதிகளை உரிய நேரத்தில் காப்பாற்றக்கூடிய அளவுக்கு உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். ஒருசிலருக்கு அலர்ஜி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய பதவி உயர்வுகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் முன்புவிட தற்போது எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் நன்மை கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 30.
விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், திங்கட்கிழமைமுதல் 2-ல் புதன் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் தகுந்த நேரத்தில் பணவரவுகள் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, முன்கோபத்தை குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டால்தான் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலை ஆட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் சிறப்பு. வேலைக்கு செல்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக நெருக்கடிகள் குறைந்து ஏற்றங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 31, 1
தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய், 4-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். கணவன்- மனைவியிடையே எதிர்பாராத வகையில் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. குருபகவான் தற்போது வக்ர கதியில் இருப்பதால் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைபடக்கூடிய நேரமாகும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக உடல் அசதி உண்டாகும். வேலை நிமித்தமாக தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பிறர் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப்பெற லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 31, 1, 2, 3.
மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதும், 6-ல் சஞ்சரிக்கக்கூடிய குரு வக்ரகதியில் இருப்பதாலும் உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உங்களுக்கு இருக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற தூரப்பயணங்களைத் தள்ளிவைக்க வேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும் என்றாலும் உடனிருப்பவர்களால் சிறு சிறு பிரச்சினைகள் இருக்கும் என்பதால் சூழ்நிலை புரிந்து நடந்துகொண்டால் அடையவேண்டிய அனுகூலத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய நேரமாகும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் தற்போது ஆதாயத்தை அடையக்கூடிய காலமாகும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத் துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப்பெற சிவன் வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 28, 2, 3.
கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். பெண்கள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய அதிர்ஷ்டமானது இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல வளர்ச்சியை அடையக்கூடிய நேரமாகும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் நீங்கள் எதிர்கொண்ட தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30.
மீனம் 
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் கேது, 10-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உடன்பிறந்தவர்கள்மூலமாக அனுகூலமான பலன்களை அடைய முடியும். வெளியூர் தொடர்புகள்மூலமாக எதிர்பார்க்கின்ற உதவிகள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சட்டத்துக்கு உட்பட்டு நடந்தால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நேரமாகும். குடும்பத்தில் தடைபட்டுவந்த சுபகாரியங்கள் தற்போது கைகூடக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். காலபைரவரை வழிபாடு செய்வதன்மூலமாகவும், ராகு கால நேரங்களில் அம்மனுக்கு அர்ச்சனை செய்வதன்மூலமாகவும் அனுகூலங்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 28, 31, 1.