Advertisment

இந்த வார ராசிபலன் 7-9-2025 முதல் 13-9-2025 வரை

thisweekrasi
முனைவர் முருகுபாலமுருகன்
தொலைபேசி: 044 24881038, 2483 9532. 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்:  பூரம்- 3.
சந்திரன்: சதயம்- 2.
செவ்வாய்: சித்திரை- 1. 
புதன்: பூரம்- 1. 
குரு: புனர்பூசம்- 2. 
சுக்கிரன்: ஆயில்யம்- 2. 
சனி: உத்திரட்டாதி- 1 (வ).
ராகு: பூரட்டாதி- 2.
கேது: பூரம்- 4. 

thisweekrasi1

கிரக மாற்றம்: 
இல்லை
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: கும்பம்
8-9-2025 பகல் 2.29 மணிக்கு மீனம்.
10-9-2025 மாலை 4.03 மணிக்கு மேஷம்.
12-9-2025 மாலை 5.30 மணிக்கு ரிஷபம். 
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
Advertisment
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. பண வரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் நெருங்கியவரின் உதவியால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடையமுடியும். சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடந்தகாலங்களில் இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையும். மாணவ- மாணவியர்கள் தற்போது எதிலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். வரும் நாட்களில் வளமான பலன் களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பதுமூலமாக அனுகூலமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8, 11, 12.
ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 4-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. 4-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அசையும், அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில்,  வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைக்கும் என்றாலும் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது. சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் நிலைமையை சமாளித்து வளமான பலன்களைப் பெறமுடியும். முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிறரால் முடிக்கமுடியாத பணியைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் வரும் நாட்களில் முழுமையாக விலகும். மாணவ- மாணவியர்கள் நல்ல ஞாபக சக்தியுடன் செயல்பட்டு எதிர்பார்த்ததை விட அதிகப்படியான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப்பெற சிவன் வழிபாடு மேற்கொள்வது, துர்கையம்மனுக்கு தீபமேற்றுவதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8, 9, 10, 13.
மிதுனம் 
Advertisment
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால்
முனைவர் முருகுபாலமுருகன்
தொலைபேசி: 044 24881038, 2483 9532. 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்:  பூரம்- 3.
சந்திரன்: சதயம்- 2.
செவ்வாய்: சித்திரை- 1. 
புதன்: பூரம்- 1. 
குரு: புனர்பூசம்- 2. 
சுக்கிரன்: ஆயில்யம்- 2. 
சனி: உத்திரட்டாதி- 1 (வ).
ராகு: பூரட்டாதி- 2.
கேது: பூரம்- 4. 

thisweekrasi1

கிரக மாற்றம்: 
இல்லை
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: கும்பம்
8-9-2025 பகல் 2.29 மணிக்கு மீனம்.
10-9-2025 மாலை 4.03 மணிக்கு மேஷம்.
12-9-2025 மாலை 5.30 மணிக்கு ரிஷபம். 
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
Advertisment
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. பண வரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் நெருங்கியவரின் உதவியால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடையமுடியும். சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடந்தகாலங்களில் இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையும். மாணவ- மாணவியர்கள் தற்போது எதிலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். வரும் நாட்களில் வளமான பலன் களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பதுமூலமாக அனுகூலமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8, 11, 12.
ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 4-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. 4-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அசையும், அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில்,  வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைக்கும் என்றாலும் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது. சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் நிலைமையை சமாளித்து வளமான பலன்களைப் பெறமுடியும். முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிறரால் முடிக்கமுடியாத பணியைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் வரும் நாட்களில் முழுமையாக விலகும். மாணவ- மாணவியர்கள் நல்ல ஞாபக சக்தியுடன் செயல்பட்டு எதிர்பார்த்ததை விட அதிகப்படியான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப்பெற சிவன் வழிபாடு மேற்கொள்வது, துர்கையம்மனுக்கு தீபமேற்றுவதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8, 9, 10, 13.
மிதுனம் 
Advertisment
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயது அடைந்த ஆண்- பெண்களுக்கு நல்ல செய்தி ஒன்று கிடைக்கக்கூடிய யோகம் வரும் நாட்களில் இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் அடையவேண்டிய லாபத்தை அடைவீர்கள். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலங்கள் உண்டு. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்புக்காக நேரத்தை செலவிடுவது மிகவும் நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11, 12
கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன் 2-ல் புதன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதிலும் தைரியத்தோடு செயல் படுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் கேது, 12-ல் குரு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. ஒருசிலருக்கு சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் சிறப் பாக செயல்பட்டாலும் அதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய ஒரு நேரமென்பதால் வீண் பேச்சை குறைத்துவிட்டு உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மாணவ- மாணவியர்கள் ஞாபக மறதி ஏற்படலாம் என்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 13.
சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் புதன், லாப ஸ்தானமான 11-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். பூர்வீக சொத்துவகையில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக் கவலைகள் எல்லாம் வரும் நாட்களில் மறைந்து மன நிம்மதி ஏற்படும். ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் முன்பைவிடை தற்போது எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வரும் நாட்களில் அனுகூல பலன்களை நீங்கள் அடைவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 7, 13.
கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன், கேது, புதன் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத் தோடு இருக்கவேண்டும். உங்களது முன்கோபத்தை குறைத்துக்கொண்டு ஒவ்வொரு செய-லும் சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத ஒருசில உதவிகள் கிடைப்பதால் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். பொதுவாக வீண் பேச்சை குறைத்தாலே எதையும் சமாளிக்கக்கூடிய பலம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்துகொண்டு நடந்து கொண்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்லலாம் என்பதால் எதிலும் கவனத்தோடு இருக்க வேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர் களுக்கு உடன் இருப்பவர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடிய நேரமென்தால் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவதுடன் எதிலும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8, 9.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் தற்போது தீர்ந்து மனதில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உறவினர்களிடமிருந்து வந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது விலகி சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு லாபகரமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த போட்டிகள் எல்லாம் தற்போது குறைந்து தொழில்ரீதியாக நல்ல வளர்ச்சியினை அடையக் கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்தகால உழைப்புக்கு தற்போது நல்ல ஒரு சன்மானம் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்களை எடுப்பது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை பெறுவார்கள். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப்பெற துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11.
விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெற்றோர்கள்மூலமாக வரும் நாட்களில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு சஞ்சரிப்பதாலும், சனி வக்ரகதியில் இருப்பதாலும் தேவையற்ற அலைச்சல்கள் இருக்கும். மற்றபடி எதையும் எதிர்கொண்டு ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவீர்கள். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். உத்தியோகரீதியாக நல்ல ஒரு வளர்ச்சியும் விரும்பிய பதவி உயர்வையும் அடையக்கூடிய நேரமாகும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் முன்பைவிட தற்போது எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களைப்பெற காலபைரவரை வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 13.
தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குரு ஜென்ம ராசியை பார்ப்பதும், உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சனி தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்துவந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது நல்ல ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீண்ட நாட்களாக இழுபறிகளில் இருந்துவந்த ஒரு பணி தற்போது முடிந்து மனதில் மகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் எதையும் எளிதில் புரிந்துகொண்டு படிப்பில் சிறந்து விளங்கக்கூடிய நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதுமூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்:  7, 8, 13.
மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 8-ல் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்கவேண்டும். கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிப்பதால் போட்ட முதலை எடுப்பதில் தேவையற்ற தடங்கல்கள் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஒருசிலருக்கு சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருப்பது மட்டுமில்லாமல் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்லலாம் என்பதால் பணியில் கவனத்தோடு இருக்கவேண்டும். மாணவ- மாணவியர்களுக்கு கஷ்டப்பட்டு படித்தாலும் ஞாபக மறதி காரணமாக எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் எடுப்பதில் சில இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தற்போதைக்கு தவிர்ப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதுமூலம் அனுகூலப் பலனை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள்:  9, 10.
கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், 7-ல் புதன் சஞ்சரிப்பதாலும் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். ஒருசிலருக்கு பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமாக தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருந்தாலும் வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பணியில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8, 11, 12.

மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், 6-ஆம் வீட்டில் சூரியன், கேது சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சிக்கலான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறையும். உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாயும், 4-ல் குரு இருப்பதால் பண விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத் துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகரீதியாக பார்க்கின்ற பொழுது மற்றவர்களால் முடிக்கமுடியாத பணியை கூட நீங்கள் சிறப்பாக செய்துமுடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலங்களும் கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் கடந்தகால செயல்பாட்டை ஒப்பிடுகின்றபொழுது தற்போது சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் முன்னேற்றத்தை அடைய முருகப் பெருமானை தரிசிப்பது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 13.
bala060925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe