முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, 
Advertisment
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532. 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
Advertisment
கிரக பாத சாரம்:
சூரியன் : புனர்பூசம்- 1.
செவ்வாய்: பூரம்- 1. 
புதன்: பூசம்- 4. 
குரு: திருவாதிரை- 2. 
சுக்கிரன்: கிருத்திகை- 4. 
சனி: உத்திரட்டாதி- 2. 
ராகு: பூரட்டாதி- 3.
கேது: உத்திரம்- 1
கிரக மாற்றம்:
இல்லை
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: துலாம்
6-7-2025 மாலை 4.01 மணிக்கு விருச்சிகம்.
9-7-2025 அதிகாலை 3.15 மணிக்கு தனுசு.
11-7-2025 பகல் 12.08 மணிக்கு மகரம்.
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 4-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு மிகச்சிறப் பாக இருப்பதால் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் கைகூடும். லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலை ஆட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் தேவையற்ற நெருக்கடிகளைத் தரக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பிறர் விஷயத்தில் தலையிடாமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 11, 12. 
ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். உடனிருப்பவர்கள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய நேரமாகும். உங்களது பேச்சுத்திறமை காரணமாக உங்களுக்கு இருந்த வீண் பிரச்சினைகள் எல்லாம் குறையும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சிறப்பான லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி யைத்தந்து மனமகிழ்ச்சி உண்டாகும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணையக்கூடிய நேரமாகும். வேலைக்கு செல்பவர்கள் மற்றவர்களால் முடிக்கமுடியாத பணியை கூட நீங்கள் தலையிட்டு குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் எதையும் எளிதில் புரிந்துகொண்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்கமுடியும். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று நிதானத்தோடு செல்வது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8.
மிதுனம் 
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் 2-ல் சஞ்சரிப்பதாலும், 3-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உடனிருப்பவர்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசியில் சூரியன், குரு சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருப்பது, உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் பெரிய வாய்ப்புகளை எதிர்பார்க்காமல் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. பெண்கள்மூலமாக தேவையில்லாத வீண்செலவுகள் உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் அதிகாரியிடம் தேவை யற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, சூழலுக்கு ஏற்றவாறு நடந்துகொள்வது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்புக்காக நேரத்தை செலவிடுவது மிகமிக நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களைப் பெறலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8, 9, 10.

rasipalan1

கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், கேது, 12-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்துப் பேசவேண்டும். உங்களது முன்கோபத்தால் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடிய நேரமாகும். முடிந்தவரை சூழ்நிலையை புரிந்துகொண்டு நடந்துகொண்டால் ஒரு வளமான பலன்களைப் பெறலாம். பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் தொழில், வியாபாரத்தில் சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் அடையவேண்டிய லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடைய முடியும். முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, தேவையற்ற இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் பெரியோர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மிகவும் உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11, 12.
சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன்- குரு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதாலும், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஒருசில நேரங்களில் கோபத்தை குறைத்துக்கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோக ரீதியாக பார்க்கின்றபொழுது உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது குறைவதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். நீங்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்த ஒரு வாய்ப்பானது தற்போது உங்களுக்கு கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக விளங்குவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 6, 11, 12.
கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப்பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் தற்போது விலகி வளமான பலன்களைப் பெறுவீர்கள். பெண்கள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலமாக ஒரு நல்ல செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மாணவ- மாணவியர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் தேவையற்றவகையில் ஞாபக மறதி ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது, ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது. இந்த வாரத்தில் ஏற்றமிகுந்த பலன்களை அடைய தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், குரு, லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். சனி 6-ல் இருப்பதால் உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்களை அடையக்கூடிய நேரமாகும். பணம் கொடுக்கல்- வாங்கல்ரீதியாக நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய நேரமாகும். நண்பர்கள்மூலமாக ஒருசில வளமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்து வகையில் உறவினர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் சூழலுக்கு ஏற்றவாறு நடந்துகொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் முன்பைவிட எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுக்கமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற அம்மன் வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11.
விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும். உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உடனிருப்பவர்களால் மனநிம்மதி குறைவு ஏற்படலாம். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. அதிக அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ஒருசிலருக்கு வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு மற்றவர்களுடைய வேலையும் இணைத்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்படும். பொதுவாக அதிகாரியிடம் பேசுகின்றபொழுது பேச்சில் பொறுமையோடு இருந்தால் நிலைமையை சமாளிக்கலாம். ஒருசிலருக்கு தேவையற்ற பயணங்களும் அதன்மூலம் வீண்செலவுகளும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் வீண் பேச்சை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8, 12.
தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு என்றாலும் எதிலும் சற்று பொறுமையோடு இருந்தால் வளமான பலன்களைப் பெறலாம். உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஒருசிலருக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டு கையிருப்பு குறையலாம். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய நேரமென்றாலும் வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது மற்றவர்களால் முடிக்க முடியாத பணியைக்கூட நீங்கள் சிறப்பாக செய்துமுடித்து அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். அசையும், அசையா சொத்துவகையில் எதிர்பாராதவகையில் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் ஒரு நல்ல நிலையினை அடையமுடியும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11.
மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பது மிகவும் 
அற்புதமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய நேரமாகும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. முடிந்தவரை இரவு நேரப் பயணங்களைத் தள்ளிவைப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. உத்தியோக ரீதியாக பார்க்கின்றபொழுது நீங்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு ஒருநல்ல நிலையினை அடைவீர்கள். புதியவாய்ப்பு எதிர்பார்த்தவர் களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய காலமாகும். மாணவ- மாணவியர்கள் நல்ல ஞாபக சக்தியுடன் செயல்பட்டு சிறப் பான மதிப்பெண்களைப் பெறமுடியும். ஒருசில நேரங்களில் கோபப்படாமல் நிதானத்தோடு இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, பாம்பு புற்றுக்கு பால் விட்டு வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8.
கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் குரு சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத பண வரவுகளால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சக ஊழியரிடம் பேசுகின்றபொழுது சற்று கவனத்தோடு இருப்பதன் மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். மாணவ- மாணவியர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களை அடைய ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8, 9, 10.
மீனம் 
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் சனி, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் வீண் பேச்சை குறைப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்
கொள்வது நல்லது. வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். சிலருக்கு சட்டரீதியாக சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்குகளை சரியான முறையில் பராமரிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். ஒரு
சிலருக்கு உடன் வேலை செய்பவரிடம் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் சக நண்பர்கள் உங்களை வேற்றுப்பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11.