முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026.
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038,
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038,
Advertisment
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: அஸ்தம்- 3.
சந்திரன்: சதயம்- 4.
செவ்வாய்: சுவாதி- 3.
புதன்: சித்திரை- 3.
குரு: புனர்பூசம்- 3.
சுக்கிரன்: பூரம்- 4.
சனி: பூரட்டாதி- 4 (வ).
ராகு: பூரட்டாதி- 1.
கேது: பூரம்- 3.
கிரக மாற்றம்: 9-10-2025 கன்னி சுக்கிரன் பகல் 10.49 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: கும்பம்
5-10-2025 இரவு 12.45 மணிக்கு மீனம்.
8-10-2025 அதிகாலை 1.28 மணிக்கு மேஷம்.
10-10-2025 அதிகாலை 1.23 மணிக்கு ரிஷபம்.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்:
இல்லை
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒருவருக் கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைப்பதை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருநல்ல நிலையை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது உத்தமம். வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வுநேரம் குறைந்தாலும் எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உங்களுக்கு இருக்கும். மாணவ- மாணவியர்கள் சூழலுக்கு ஏற்றவாறு நடந்துகொண்டால் நல்ல மதிப்பெண்கள் எடுக்கமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்று வதன்மூலம் அனுகூல பலன் களை அடையமுடியும்.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 5, 8, 9.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4, 5-ல் சஞ்சரிப்பதாலும், 2-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருக் கக்கூடிய கடன் பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையக்கூடிய நேரமாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப் பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு இருந்த வீண்செலவுகள் குறைந்து சேமிக்கக்கூடிய அளவிற்கு சாதகமான பல சூழ்நிலை உண்டாகும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோக ரீதியாக ஒரு கௌரவ நிலையும் எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். மாணவ- மாணவி யர்கள் கல்வி யில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று சிறப்பான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு விநாயகர் வழிபாடு மேற்கொள்வதும், துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவதன்மூலமும் அனுகூலமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7, 10, 11.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026.
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038,
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038,
Advertisment
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: அஸ்தம்- 3.
சந்திரன்: சதயம்- 4.
செவ்வாய்: சுவாதி- 3.
புதன்: சித்திரை- 3.
குரு: புனர்பூசம்- 3.
சுக்கிரன்: பூரம்- 4.
சனி: பூரட்டாதி- 4 (வ).
ராகு: பூரட்டாதி- 1.
கேது: பூரம்- 3.
கிரக மாற்றம்: 9-10-2025 கன்னி சுக்கிரன் பகல் 10.49 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: கும்பம்
5-10-2025 இரவு 12.45 மணிக்கு மீனம்.
8-10-2025 அதிகாலை 1.28 மணிக்கு மேஷம்.
10-10-2025 அதிகாலை 1.23 மணிக்கு ரிஷபம்.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்:
இல்லை
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒருவருக் கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைப்பதை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருநல்ல நிலையை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது உத்தமம். வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வுநேரம் குறைந்தாலும் எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உங்களுக்கு இருக்கும். மாணவ- மாணவியர்கள் சூழலுக்கு ஏற்றவாறு நடந்துகொண்டால் நல்ல மதிப்பெண்கள் எடுக்கமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்று வதன்மூலம் அனுகூல பலன் களை அடையமுடியும்.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 5, 8, 9.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4, 5-ல் சஞ்சரிப்பதாலும், 2-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருக் கக்கூடிய கடன் பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையக்கூடிய நேரமாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப் பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு இருந்த வீண்செலவுகள் குறைந்து சேமிக்கக்கூடிய அளவிற்கு சாதகமான பல சூழ்நிலை உண்டாகும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோக ரீதியாக ஒரு கௌரவ நிலையும் எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். மாணவ- மாணவி யர்கள் கல்வி யில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று சிறப்பான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு விநாயகர் வழிபாடு மேற்கொள்வதும், துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவதன்மூலமும் அனுகூலமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7, 10, 11.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் குரு, 4-ல் சூரியன், 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு செயல்படவேண்டும். வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு ஏற்படும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க் கொள்ளும்படி இருக்காது. பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதால் உங்களது கையிருப்பு குறையும். ஒருசிலருக்கு உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக மன நிம்மதிக் குறைவு, அதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அசையும், அசையா சொத்துவகையில் தேவையற்ற வீண்விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. மாணவ- மாணவியர்கள் சக நண்பர்களிடம் வீண் பேச்சைக் குறைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8, 9.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 4-ல் புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் மூலமாக வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுடைய செயல்களுக்கு நல்ல ஒரு ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத அனுகூலங்களால் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் வரும் நாட்களில் குறையும். உங்கள் ராசிக்கு 8-ல் ராகு சஞ்சரிப்பதாலும், சனி வக்ரகதியில் இருப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் வளமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு ஒரு கௌரவமான நிலையை அடைவீர்கள். ஒரு சிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவ- மாணவிகள் முன்பைவிட தற்போது எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவதும், தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் அனுகூலப் பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10, 11.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உடன்பிறந்தவர்கள் மூலமாக ஆதாயமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு வளர்ச்சியினை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு மேல் அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவதன்மூலம் கெடுதிகள் குறைந்து ஏற்றங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 5, 10, 11.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டு சிக்கனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு மன நிம்மதி குறைவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை அதிகப்படியாக இருப்பதால் ஓய்வுநேரம் குறைவது மட்டுமில்லாமல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் வீண் பழிச்சொற்கள் ஏற்படலாம் என்பதால் பிறரிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று நிதானத்தோடு இருப்பது உத்தமம். வரும் நாட்களில் அனுகூல பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும், பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு அமையப்பெற்று ஜென்ம ராசியை பார்ப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உடனிருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. நண்பர்கள்மூலமாக ஒரு சில வளமான பலன் களைப் பெறக்கூடிய ஒரு அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. வெளியூர் தொடர்புகள்மூலமாக ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்துமுடித்து வாடிக்கை யாளரிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, காலபைரவரை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8, 9.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 10, 11-ல் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், 4-ல் ராகு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் சக்திக்கு மீறிய செலவுகள், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருக்கவேண்டும். வண்டி, வாகனங்கள்மூலமாக எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். ஒரு பெரிய மனிதர்களுடைய நட்பு இருப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொண்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொது இடங்களில் பேசாமல் இருப்பது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு நீங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்லலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்புக்காக நேரத்தை செலவிடவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்றங்களைப்பெற அம்மன் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10, 11.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குருபகவான் ஜென்ம ராசியை பார்ப்பதும், 10-ல் சூரியன், 11-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய யோகமானது வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் தொழிலை எளிதில் அபிவிருத்தி செய்ய முடியும். அசையும், அசையா சொத்துவகையில் அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது நீங்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் தற்போது உங்களுக்கு கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திருமணமான புதுமண தம்பதி களுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வரும் நாட்களில் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு படிப்பில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள். வரும் நாட்களில் அனுகூல பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 5, 10, 11.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும், 10-ல் புதன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு சஞ்சரிப்பதாலும், சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. குறிப்பாக கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிக்கனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்லநிலையை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை வெளியிடங்களில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பது மட்டுமில்லாமல் மேலதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருக்கக்கூடிய மாணவ- மாணவியர்களால் வீண் சிக்கல்களை சந்திக்க நேரிடும். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களைப்பெற அம்மன் வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 6, 7.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் புதன், செவ்வாய் சஞ்சரிப்பதும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு கௌரவமான நிலையினை அடைவீர்கள். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஜென்ம ராசியில் ராகுவும், 8-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் உத்தமம். தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஒருசிலருக்கு தொழில் தொடர்பாக ஒருசில சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் கணக்கு வழக்குகளில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கும். உடனிருப்பவர்களிடம் பேசுகின்ற போது சற்று பொறுமையோடு இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 5, 8, 9.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானத்தோடு இருக்கவேண்டும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஒருசில நேரங்களில் கோபப்படாமல் நிதானத்தோடு இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது வேகத்தை குறைத்துக்கொள்வது மிகவும் உத்தமம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய வேலையும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். மேலதிகாரியிடம் பேசுகின்ற பொழுது வீண்வாக்குவாதத்தைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் பொறுப்புடன் செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களை வேற்றுப்பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். வரும் நாட்களில் அனுகூல பலன்களை அடைவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஏற்றங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 10, 11.