முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment


மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், சூரியன் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத் தில் ராகு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் குறைந்து வளமான பலன் களைப் பெறுவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருந்து மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தற்போது கைகூடக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர் களுடைய தேவையை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். உடன் பிறந்தவர்கள் மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையமுடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு படிப்பில் நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன்மூலமாக உங்களுக்கு இருக்கும் நெருக்கடிகள் குறைந்து நல்லது நடக்கும்.

Advertisment

வெற்றி தரும் நாட்கள்: 9, 10.

thisweekrasi1

ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும். உடல் ஆரோக்கியரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு இருக்க வேண்டும். நம்பியவர்களே உங்களை ஏமாற்றக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். தேவையற்ற தூரப் பயணங்களைத் தவிர்ப்பது மிக மிக நல்லது. பேச்சில் சற்று பொறுமையோடு இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கக்கூடிய பலம் உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு சக ஊழியரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலம் நல்லது நடக்கும்.

Advertisment

வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 6.

மிதுனம் 
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 7-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சூரியன், செவ்வாய் 7-ல் இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதிலும் அசட்டு தைரியத்தோடு செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலமாக ஒருசில ஆதாயங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. பிள்ளைகள்வழியில் ஒருசில அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் கவனத்தை சிதறவிடாமல் எதிலும் முனைப்புடன் செயல்பட்டால்தான் நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை அடைய தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8.

கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இருக்கக் கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். நண்பர்கள்மூலமாக ஒருசில வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் தற்போது குறைந்து மன நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நேரமாகும். உங்கள் பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் மனதில் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பயணங்கள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் முன்பைவிட எதிலும் தற்போது உற்சாகத்தோடு செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 9, 10.

சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சற்று சாதகமாக இருந்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். சூரியன், செவ்வாய் 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. உடன் பிறப்புகளை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் சின்னசின்ன எதிர்ப்புகள் இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளி வைப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்து முடிக்கக்கூடிய பலம் இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் சக மாணவ- மாணவியரிடம் பேசுகின்றபொழுது சற்று கவனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் நல்லது நடக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8.

கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கைபெற்று 4-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நெருங்கியவர்களால் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. எந்த எதிர்ப்பையும் சமாளிக்கக்கூடிய பலம் உங்களுக்கு இருக்கும். குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் படிப்படியான வளர்ச்சிகளை பெற்று நல்ல நிலையினை அடைவீர்கள். சூரியன், செவ்வாய் 4-ல் இருப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் அதிகாரியிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. பணி தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். தேவையற்ற தூரப் பயணங்களைத் தற்கா-கமாக தள்ளி வைப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 9, 10.

துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். சனிபகவான் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் நீண்டநாட்களாக தடைப்பட்ட ஒருசில காரியத்தை தற்போது முடித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரம் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் உங்கள்மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் தற்போது குறையும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் திறனை வெளிப்படுத்தக்கடிய போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெற லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 6, 7, 8.

விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய், 4-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்ப ஒற்றுமை பாதிக்கும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் எவ்வளவு பெரிய நெருக்கடியில் இருந்தாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத் தில் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். முடிந்தவரை தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் முடிந்தவரை நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். மாணவ- மாணவியர்களுக்கு கவனச் சிதறல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது, படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப்பெற சரபேஸ்வர வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் அனுகூலப் பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 7, 8, 9, 10.

தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு இருக்க வேண்டும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நீங்கள் மிகவும் நிதானத்தோடு இருக்கவேண்டும். உங்கள் ராசிக்கு 4-ல் சனி சஞ்சரிப்பதால் வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைப்பதில் ஒருசில தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக உடல் அசதி உண்டாகும். நீங்கள் கடினமாக உழைத்தாலும் ஒருசிலர் உங்கள்மீது தேவையற்ற பழிச் சொற்களை சொல்வார்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டாலும் உடன் பழகக்கூடிய மாணவ- மாணவியர்கள் உங்களை வேற்றுப்பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்பார்கள் என்பதால் எதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவதன் மூலம் நல்லது நடக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 9, 10.

மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல் காரணமாக வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 2-ல் ராகு இருப்பதால் நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. உங்கள் ராசியாதிபதி சனி 3-ல் சஞ்சரிப்பதாலும், குரு வக்ர கதியில் இருப்பதாலும் பணவரவுகள் சாதகமாக இருந்து அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டானாலும் அதன்மூலமாக அனுகூலங்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறந்து விளங்கி நல்ல பெயர் எடுக்கமுடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதுமூலம் அனுகூலங்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 4, 5.

கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பெரிய மனுஷனுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபத்தை அடையக் கூடிய நேரமாகும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த வெளி உதவிகள் தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்க முடியும். உடல் ஆரோக்கியரீதியாக இந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்தி உடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப்பெற ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதன்மூலம் அனுகூலங்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 6, 7.

மீனம் 
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் கேது சஞ்சரிப்பதும், 10-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். நல்ல நட்புகள் உங்களை நாடிவரும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட ஒரு சிறப்பான மதிப்பெண்களை பெறக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நீங்கள் எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிக்கக்கூடிய பலம் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள்வழியில் இருந்து வந்த மன கவலைகளை எல்லாம் தற்போது முழுமையாக மறையும். மாணவ- மாணவியர்கள் எதிலும் பொறுப்போடு செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் வரும் நாட்களில் குறையும். உறவினர்கள்மூலமாக இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது முழுமையாக குறைந்து நிம்மதி ஏற்படும். வரும் நாட்களில் ஏற்றம்மிகுந்த பலன்களைப்பெற துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, வெங்கடேசப் பெருமாளை தரிசிப்பதன் மூலம் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள்: 7, 8, 9, 10.