இந்த வார ராசிபலன் 3-8-2025 முதல் 9-8-2025 வரை

thisweekrasi
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, 
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532. 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: ஆயில்யம்- 1.
சந்திரன்: விசாகம்- 4.
செவ்வாய்: உத்திரம்- 2. 
புதன் : பூசம்- 3 (வ).
குரு: திருவாதிரை- 4. 
சுக்கிரன்: திருவாதிரை- 1. 
சனி: உத்திரட்டாதி- 2 (வ).
ராகு: பூரட்டாதி- 2.
கேது: பூரம்- 4.  
கிரக மாற்றம்: இல்லை

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: விருச்சிகம் 
5-8-2025 பகல் 11.23 மணிக்கு தனுசு.
7-8-2025 இரவு 8.11 மணிக்கு மகரம்.

மேஷம்   

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை, அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. சனி வக்ரகதியில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் ஒரு நல்ல முன்னேற்றம், எதிர்பாராத லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள், வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, அரசாங்கவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக்கூடிய யோகம் ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு எடுத்த பணியை குறித்த நேரத் தில் செய்துமுடித்து நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு வெளியூர் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு பெற்றோர் களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவத தட்சிணா மூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 8, 9.

ரிஷபம்  

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- குரு சேர்க்கை பெற்று 2-ல் சஞ்சரிப்பதும், 3-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிக்கமுடியும். குடும்ப ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள் வழியில் ஒருசில அனுகூலமான பலன்களை அடையக் கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. நண்பர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்க ளுக்கு சாதகமாக இருப்பதால் எதிர்பாராத ஏற்றத்தை அடையமுடியும். போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சட்டரீதியாக இருந்த சிக்கல்களுக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல முடிவு கிடைத்து மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்தப்பணியை குறித்த நேரத்தில் முடிப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களால் முடிக்க முடியாத பணியைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்திவுடன் செயல் பட்டு நல்ல மதிப்பெண்களை பெறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வதன்மூலமாக வளமான பலன்களைப் பெறமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4.

thisweekrasi1

மிதுனம் 

(மிருகசீரிடம் 3, 4

முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, 
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532. 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: ஆயில்யம்- 1.
சந்திரன்: விசாகம்- 4.
செவ்வாய்: உத்திரம்- 2. 
புதன் : பூசம்- 3 (வ).
குரு: திருவாதிரை- 4. 
சுக்கிரன்: திருவாதிரை- 1. 
சனி: உத்திரட்டாதி- 2 (வ).
ராகு: பூரட்டாதி- 2.
கேது: பூரம்- 4.  
கிரக மாற்றம்: இல்லை

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: விருச்சிகம் 
5-8-2025 பகல் 11.23 மணிக்கு தனுசு.
7-8-2025 இரவு 8.11 மணிக்கு மகரம்.

மேஷம்   

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை, அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. சனி வக்ரகதியில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் ஒரு நல்ல முன்னேற்றம், எதிர்பாராத லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள், வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, அரசாங்கவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக்கூடிய யோகம் ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு எடுத்த பணியை குறித்த நேரத் தில் செய்துமுடித்து நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு வெளியூர் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு பெற்றோர் களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவத தட்சிணா மூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 8, 9.

ரிஷபம்  

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- குரு சேர்க்கை பெற்று 2-ல் சஞ்சரிப்பதும், 3-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிக்கமுடியும். குடும்ப ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள் வழியில் ஒருசில அனுகூலமான பலன்களை அடையக் கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. நண்பர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்க ளுக்கு சாதகமாக இருப்பதால் எதிர்பாராத ஏற்றத்தை அடையமுடியும். போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சட்டரீதியாக இருந்த சிக்கல்களுக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல முடிவு கிடைத்து மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்தப்பணியை குறித்த நேரத்தில் முடிப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களால் முடிக்க முடியாத பணியைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்திவுடன் செயல் பட்டு நல்ல மதிப்பெண்களை பெறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வதன்மூலமாக வளமான பலன்களைப் பெறமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4.

thisweekrasi1

மிதுனம் 

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று பொறுமையோடு செல்வது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள், பெரியவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடை யூறுகள் ஏற்படும். வேலையாட் கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகளை அடைய ஒருசிலர் இடையூறாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பது மட்டுமில்லாமல்; பிறருடைய பணியும் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியானநிலை உண்டாகும். மாணவ- மாணவியர்களுக்கு எதிர்பாராதவகையில் ஞாபக மறதி ஏற்படலாம் என்பதால் கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 5, 6.

கடகம்  

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஜென்ம ராசியில் புதன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். இக்கட்டான நேரத்தில் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்க முடியும். உங்கள் ராசிக்கு 8-ல் ராகு, 9-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, உடல் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் நேரத்திற்கு சாப்பிடுவது, தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். சில விஷயங்களில் மற்றவர்களை நம்பாமல் நேரடியாக நீங்கள் செயல்பட்டால் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளித்து ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு சூழலுக்கு ஏற்றவாறு நடந்துகொண்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு உடனிருப்பவர்களால் ஒருசில தேவையற்ற இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் சக நண்பர்களிடம் சற்று கவனத் தோடு இருக்கவேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களை அடைய மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, ராகுகால நேரத்தில் அம்மனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8, 9.

சிம்மம் 

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் மிகமிக சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். நல்ல நட்புகள் உங்களை நாடிவரும். நண்பர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகள் வழியில் ஒருசில ஆதாயங்கள் நடக்கக்கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. ஒருசில நேரங்களில் உங்களுடைய முன்கோபத்தால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய நேரமாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். சனி வக்ர கதியில் இருப்பதால் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு மனநிம்மதியுடன் இருப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லமுடியும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக வளமான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 8, 9.

கன்னி 

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் ராகு, 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். தற்போது சனி வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருந்த மறைமுக பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள்மூலமாக ஒருசில அனுகூலங்களை பெறுவீர்கள். பணவரவில் ஒரு சிறப்பான நிலை இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. அரசாங்கவழியில் நீங்க எதிர்பார்த்த உத்தரவுகளை பெறக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக ஒரு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய பலம் ஏற்படும். நீங்கள் ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாகச் செயல்பட்டு எதிர்பார்த்ததைவிட நல்ல மதிப்பெண்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெற தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக நல்லது நடக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன், குரு சேர்க்கைபெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் அதிகரிக்கக்கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பெரிய மனிதர் களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய நெருக்கடிகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி லாபகரமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் புதிய வாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய காலமாகும். பிள்ளைகள்வழியில் தேவையில்லாத மனக்கவலைகள் சில நேரங்களில் ஏற்படலாம். பொதுவாக உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் முன்பைவிட தற்போது சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக வளமான பலன்களை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7.

விருச்சிகம் 

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசியாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதாலும், பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். உடன் இருப்பவர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை பெறுவீர்கள். குரு, சுக்கிரன் 8-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு சஞ்சரிப்பதாலும், சனி வக்ர கதியில் இருப்பதாலும் தேவையில்லாத அலைச்சல்கள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், மன நிம்மதி குறைவுகள் ஏற்படும். தாய் வழியில் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைப்பதை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். அதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவ- மாணவியர்கள் கவனச் சிதறல் ஏற்படக்கூடிய நேரமென்பதால் படிப்பில் கவனத்தோடு இருப்பது உத்தமம். வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு குரு பகவானுக்கு அர்ச்சனை செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 8, 9.

தனுசு 

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு, சுக்கிரன் இணைந்து சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். ராகு 3-ல் இருப்பதால் உங்கள் செயல்களுக்கு உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப ஒற்றுமை திருப்திகரமாக இருப்பதால் மன நிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த சில நாட்களாக இருந்த மன குழப்பங்கள் தற்போது குறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய யோகமானது உங்களுக்கு இருக்கிறது. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமல்லாமல் அதிகாரியிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது மறைந்து நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறப்பாகச் செயல்படுவது மட்டுமில்லாமல் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதும், லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதும் ஏற்றமிகுந்த பலன்களை உங்களுக்குத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7.

மகரம் 

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 7-ல் சூரியன் சந்திப்பதால் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்படவேண்டும். ராகு 2-ல் இருப்பதாலும், சனி வக்ரகதியில் இருப்பதாலும் நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். முடிந்தவரை உங்களது முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லவாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பது மிகவும் நல்லது. சில விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வதன்மூலமாக வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நெருக்கடிகள் இருப்பது மட்டுமில்லாமல் உடனிருப்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச் சொற்களை சொல்லலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். மாணவ- மாணவியர்களுக்கு நீங்கள் கவனமாக இருந்தாலும் உடனிருப்பவர்கள்மூலம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் பொறுமையோடு இருக்கவேண்டும். ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 8, 9.

கும்பம்  

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதும், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்க கூடிய அமைப்பாகும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மறைமுக பிரச்சினைகள் எல்லாம் குறைந்து மன நிம்மதி ஏற்படும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலங்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல லாபத்தை அடையமுடியும். தொழில் வளர்ச்சிக்காக எதிர் பார்த்த வெளி உதவிகள் உங்களுக்கு கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய நேரமாகும். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் ஒருசில நேரங்களில் உங்களது கோபத்தை குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலங்களும் உண்டாகும். மாணவ- மாணவி யர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்படக்கூடிய காலமாகும். ஒருசிலருக்கு உல்லாசப் பயணங் கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7.

மீனம் 

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 4-ல் குரு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டு எதிலும் சற்று சிக்கனத்தோடு செயல்பட வேண்டும். சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படக் கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 6-ல் கேது சஞ்சரிப்பதால் உங்களுடைய தனித்திறனால் ஒருசில ஆதாயத்தை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, தேவையற்ற தூரப் பயணங்களைத் தள்ளி வைப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொண்டால் இருப்பதை சமாளித்து ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். எந்திரங்கள் பழுதாவதால் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய பணியும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். ஒருசிலருக்கு உடல்நல குறைபாடும் அதன்காரணமாக மருத்துவச் செலவுகளும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பிற்காக நேரத்தை செலவிட வேண்டிய நேரமாகும். பெண்கள் மூலமாக ஒருசில ஆதாயத்தை பெறுவீர்கள். ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு வரும் நாட்களில் முருக வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பதன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8, 9.      
bala020825
இதையும் படியுங்கள்
Subscribe