முனைவர் முருகுபாலமுருகன்
தொலைபேசி: 044 24881038, 2483 9532. 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: அஸ்தம்- 1.
சந்திரன்: கேட்டை- 1.
செவ்வாய்: சுவாதி- 1. 
புதன் : அஸ்தம்- 4. 
குரு: புனர்பூசம்- 3. 
சுக்கிரன்: பூரம்- 1. 
சனி: உத்திரட்டாதி- 1 (வ).
ராகு: பூரட்டாதி- 1.
கேது: பூரம்- 3. 
கிரக மாற்றம்:
3-10-2025 துலா புதன்
அதிகாலை 3.43 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: விருச்சிகம்
29-9-2025 அதிகாலை 3.55 மணிக்கு- தனுசு.
1-10-2025 பகல் 2.27 மணிக்கு- மகரம்.
3-10-2025 இரவு 9.27 மணிக்கு- கும்பம். 
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியாதிபதி செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதாலும், 5-ல் கேது சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, முன் கோபத்தை குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத்தோடு செயல்படுவதும் ஆடம்பரத்தை குறைத்துக்கொள்வதும் தற்போதைக்கு நல்லது. உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிக மாக தள்ளிவைப்பது நல்லது. வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலமாக ஒருசில ஆதாயத்தை அடைய முடியும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் தற்போது கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் வயது மூத்தவரிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதன்மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4.
ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
Advertisment
ராசியாதிபதி சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதும், 5-ல் புதன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு ஆகும். உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கக்கூடிய குரு 6, 8, 10 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் எல்லா வகையிலும் ஒரு அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையானது மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு அதிகப்படியான லாபத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய நேரமாகும். கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களைத் தற்போது குறைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. வேலைக்கு செல்பவர்களுக்கு உங்களுடைய திறமைகளை வழிகாட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். ஒருசிலருக்கு கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து மன அமைதி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு போட்டித் தேர்வுகளில் பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூல பலன்களை பெறுவதற்கு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 28, 4.

rasipalan1

மிதுனம் 
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
Advertisment
உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நேரத்துக்கு சாப்பிடுவது மிகவும் நல்லது. பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருக்க வேண்டும். இக்கட்டான நேரத்தில் நெருங்கியவர்களின் உதவியானது சற்று ஆதரவாக இருக்கும். பெண்கள்மூலமாக சின்ன சின்ன பிரச்சினைகள் மேலோங்கக்கூடிய நேரமென்பதால் சூழ்நிலையை புரிந்து நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தேவையில்லாத பயணங்களைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான வேலைப்பளு காரணமாக மன நிம்மதி குறைவு ஏற்படக்கூடிய நேரமாகும். சக ஊழியரிடம் பேசுகின்றபொழுது சற்று கவனத்தோடு பேசினால்தான் நிலைமையை சமாளித்து ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் கவனத்தோடு இருந்தாலும் ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 30.
கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். நெருங்கியவர்களால் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வயது மூத்தவர்களுடைய உதவியானது தற்போது கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளைத் தற்போது எளிதில் சமாளிக்கமுடியும். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று கவனத்தோடு இருப்பது, இரவு நேரப் பயணங்களைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஏற்ற- இறக்கமான நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்துச்செயல்பட்டால்தான் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது உத்தமம். ஒருசிலருக்கு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கலாம் என்பதால் கவனத்தோடு இருப்பது மிகமிக நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்யக்கூடிய நபர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்லலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற துர்க்கையம்மனை வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 1, 2, 3.
சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியில் சுக்கிரன், 2-ல் புதன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். உங்கள் பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். உடன்பிறந்தவர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய நேரமாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய நேரமாகும். கடந்த காலங்களில் உங்கள்மீது இருந்துவந்த பழிச் சொற்கள் எல்லாம் தற்போது குறையக்கூடிய ஒரு காலமாகும். மாணவ- மாணவியர்கள் நல்ல ஞாபக சக்தியுடன் செயல்பட்டு அதிகப்படியான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவதற்கு அம்மன் வழிபாடு மேற்கொள்வது, பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4.
கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்க வேண்டும். முக்கிய விஷயங்  களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். இக்கட்டான நேரத்தில் ஒருசில உதவிகள் கிடைப்பதால் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்க முடியும். கூட்டாளிகளை கலந்தா லோசித்து செயல்படுவதன்மூலமாக ஒரு சில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச் சுமை அதிகரிப்பது மட்டு மில்லாமல் நீங்கள் சிறப் பாக செயல்பட்டாலும் அதிகாரியிடம் தேவை யற்ற மனஸ்தாபங்கள் உண்டாகக்கூடிய நேர மாகும். மாணவ- மாணவி யர்கள் தேவையற்ற வகையில் கவனச் சிதறல்கள் ஏற்பட்டு அடைய வேண்டிய மதிப்பெண்கள் அடைவதில் இடையூறுகள் ஏற்படும். முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 28, 4.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியை குரு பார்ப்பதாலும், ராசியாதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் உங்களுடைய கனவுகள் எல்லாம் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. ஒருசிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்ப தால் இயற்கை உணவுகளை உட்கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டு அடைய வேண்டிய லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். திறமைவாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் உங்களுக்கு இருந்த வேலை நெருக்கடி சற்று குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு சிவன் வழிபாடு மற்றும் முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 1.
விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், 10-ல் சுக்கிரன், கேது சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஒரு பெரிய மனிதர்களுடைய உதவி கிடைப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். எதிர்பாராத பண வரவுகள் கிடைத்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமையானது மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு சஞ்சரிப்பதாலும், சனி வக்ரகதியில் இருப்பதாலும் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க ஒருசில இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வேலை யாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப் பாக இருக்கும். ஒரு சிலருக்கு வேலை நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்களுக்கு சிலவற்றை புரிந்து கொள்வதில் இடையூறுகள் இருந்தாலும் தேர்வில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப்பெற அம்மன் வழிபாடு மேற்கொள்வது, குருபகவானுக்கு வியாழக்கிழமைக்கு வஸ்திரம் சாற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 28, 2, 3..
தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதும், 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு ஆகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் நிறைவேறும். பணவரவுகள் மிகமிக தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் ஏற்படும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய நேரமாகும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவது மட்டுமில்லாமல் தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். கூட்டாளிகள் மூலமாக இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு நிலை ஏற்படுவது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங் களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு விடிவுகாலம் பிறக்கக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு நல்ல பெயர் வாங்கித் தருவார்கள். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன் மூலமாக வளமான பலன்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 4.
மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 6-ல் குரு, 8-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனத்தோடு செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பது மட்டுமில்லாமல் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்லக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் சக மாணவ- மாணவிகளால் உங்களுக்கு தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலையை புரிந்து நடந்துகொள்வது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவதுமூலம் அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 28, 2, 3.
கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியை குரு பார்ப்பதும் 7-ல் சுக்கிரன், 9-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் பொருளாதார நிலையானது மிக மிக சிறப்பாக இருக்கும். இக்கட்டான நேரத்தில் உடன்பிறந்தவர்கள்மூலமாக ஒரு சில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஜென்ம ராசியில் ராகு, 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சற்று விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. ஒருசில நேரங்களில் உங்களது கோபத்தை குறைத் துக்கொண்டு நிதானத்தோடு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு சட்டரீதியாக சிறு நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் தொழில் தொடர்பான கணக்குகளை சரியாக பராமரிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய மதிப்பெண்களை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தேவையற்ற தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூலங்களை றுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங் களுக்கு சென்றுவருவது மிகவும் சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள்:  28, 29, 30, 4.
மீனம் 
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் சனி, 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு இருக்கவேண்டும். கணவன்- மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நேரமாகும். சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஆடம்பரத்தை குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு செயல்பட வேண்டும். உடனிருப்பவர்களால் தேவையில்லாத நிம்மதிக் குறைவுகள் ஏற்படும் கூடிய நேரமென்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தேவையில்லாத சிக்கல்கள் உண்டாகக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலமாக ஒருசில ஆதாயத்தை அடைய முடியும். தற்போது கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்தி கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. பொதுவாக அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 1, 2, 3.