முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: பூசம்- 3.
சந்திரன்: மகம்- 3.
செவ்வாய்: உத்திரம்- 1.
புதன்: ஆயில்யம்- 1 (வ).
குரு: திருவாதிரை- 3.
சுக்கிரன்: மிருகசீரிடம்- 3.
சனி: உத்திரட்டாதி- 2 (வ).
ராகு: பூரட்டாதி- 2.
கேது: பூரம்- 4.
கிரக மாற்றம்:
28-7-2025 கன்னி செவ்வாய் இரவு 7.59 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: சிம்மம்
28-7-2025 இரவு 12.00 மணிக்கு கன்னி.
31-7-2025 பகல் 11.15 மணிக்கு துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் வருகின்ற செவ்வாய்க்கிழமைமுதல் ராசியாதிபதி செவ்வாய் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதாலும் எதையும் எளிதில் சமாளிக்கக்கூடிய ஒரு பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். தொழில்ரீதியாக சில சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உறவினர்களிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் வருகின்ற நாட்களில் குறையும். மாணவ- மாணவியர்கள் ஆசிரியர்களுடைய நெருக்கடிகள் இருந்தாலும் படிப்பில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தங்களுக்கு சென்றுவருவதுமூலம் ஏற்றமிகுந்த பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 19, 30, 31, 1, 2.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன்- குரு சேர்க்கைப்பெற்று தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதும், 3-ல் சூரியன் சஞ்சரிப்ப தும் அற்புதமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த் ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை பெறமுடியும். 4-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய் வருகின்ற செவ்வாய்க்கிழமை முதல் 5-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு இருந்துவந்த சின்ன சின்ன நெருக்கடி கள்கூட முழுமையாக விலகி மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எதிர்பாராத பதவி உயர்வு களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு எதிர்பார்த்ததைவிட அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைபெற துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவதன்மூலம் நன்மை கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 31, 1, 2.
மிதுனம்
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: பூசம்- 3.
சந்திரன்: மகம்- 3.
செவ்வாய்: உத்திரம்- 1.
புதன்: ஆயில்யம்- 1 (வ).
குரு: திருவாதிரை- 3.
சுக்கிரன்: மிருகசீரிடம்- 3.
சனி: உத்திரட்டாதி- 2 (வ).
ராகு: பூரட்டாதி- 2.
கேது: பூரம்- 4.
கிரக மாற்றம்:
28-7-2025 கன்னி செவ்வாய் இரவு 7.59 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: சிம்மம்
28-7-2025 இரவு 12.00 மணிக்கு கன்னி.
31-7-2025 பகல் 11.15 மணிக்கு துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் வருகின்ற செவ்வாய்க்கிழமைமுதல் ராசியாதிபதி செவ்வாய் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதாலும் எதையும் எளிதில் சமாளிக்கக்கூடிய ஒரு பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். தொழில்ரீதியாக சில சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உறவினர்களிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் வருகின்ற நாட்களில் குறையும். மாணவ- மாணவியர்கள் ஆசிரியர்களுடைய நெருக்கடிகள் இருந்தாலும் படிப்பில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தங்களுக்கு சென்றுவருவதுமூலம் ஏற்றமிகுந்த பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 19, 30, 31, 1, 2.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன்- குரு சேர்க்கைப்பெற்று தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதும், 3-ல் சூரியன் சஞ்சரிப்ப தும் அற்புதமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த் ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை பெறமுடியும். 4-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய் வருகின்ற செவ்வாய்க்கிழமை முதல் 5-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு இருந்துவந்த சின்ன சின்ன நெருக்கடி கள்கூட முழுமையாக விலகி மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எதிர்பாராத பதவி உயர்வு களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு எதிர்பார்த்ததைவிட அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைபெற துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவதன்மூலம் நன்மை கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 31, 1, 2.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் சஞ்சரிப்பதும், வருகின்ற செவ்வாய்க்கிழமைமுதல் 4-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதும் உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ஒருசிலருக்கு வண்டி, வாகனங்கள்மூலமாக வீண்விரயங்கள் உண்டாகும். சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி தற்போது இருக்கக்கூடிய நல்ல வாய்ப்புகளை இழந்துவிட வேண்டாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்படுவது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட கல்விக்காக நேரத்தை செலவிடுவது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 27, 28,
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் குரு சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்பட்டால் வளமான பலன்களை பெறமுடியும். உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து நிம்மதி ஏற்படும். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனுகூலமான பலன்களைப்பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையமுடியும். சில நேரங்களில் வேலையாட்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்காமல் நீங்களே நேரடியாக செயல்பட்டால்தான் ஒருசில ஆதாயத்தை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் என்னதான் சிறப்பாக செயல்பட்டாலும் அதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சூழ்நிலையை புரிந்து கொண்டு சற்று பொறுமையோடு நடப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு நீங்கள் முனைப்புடன் செயல்பட்டாலும் ஞாபக மறதி ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது உத்தமம். துர்க்கை யம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக வளமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் தனகாரகன் குரு, சுக்கிரன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். திருமண வயதை அடைந்த ஆண்- பெண்களுக்கு நல்ல வரன் அமைவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப் படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு இருக்கிறது. கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் ஒருசில ஆதாயத்தை பெறுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் 1, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் கோபத்தை மட்டும் சற்று குறைத்துக்கொள்வது நல்லது. நெருங்கியவர்களை சற்று அனுசரித்துச் செல்லவேண்டும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறந்து விளங்கி பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. வருகின்ற நாட்களில் வளமான பலன்களைப்பெற துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் : 27, 28, 31, 1, 2.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன்- சூரியன் சேர்க்கை பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தற்போது சனி வக்ரகதியில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய யோகமும் அதன்மூலம் அனுகூலங்களும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பெரியோர்களிடம் பேசுகின்றபொழுது வாக்கு வாதங்கள் செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேர மாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை களில் அர்ச்சனை செய்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன் களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- குரு சேர்க்கைபெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும், 10-ல் புதன், சூரியன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் ஏற்படும். பிள்ளைகள் வழியில் இருந்துவந்த மனக்கவலைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது ஒரு கௌரவமான வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய யோகம் உண்டு. பெண்கள்மூலமாக எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டி தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 1, 2.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் புதன், சூரியன், செவ்வாய்க்கிழமைமுதல் ராசியாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8-ல் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். நண்பர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை பெறுவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் தைரியத் தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைப்பதை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையமுடியும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளி வைப்பது உத்தமம். ஒரு சிலருக்கு தேவை யற்ற பயணமும் அதன்மூலம் வீண் செலவுகளும் உண்டாகும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது ஒரு கௌரவமான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். சக ஊழியருடைய ஒத்துழைப்பு சுமாராக இருக்கும் என்பதால் முடிந்தவரை அவர்களிடம் பேசுகின்றபோது சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பிற்காக நேரத்தை செலவிடுவது மிகவும் நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 29, 30.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குருபகவான் 7-ல் சுக்கிரன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். சனி வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்கள்மூலமாக ஒருசில அனுகூலங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது 9-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய், செவ்வாய்க்கிழமை முதல் 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியும். சின்ன சின்ன அலைச்சல்கள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபோது பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியாக விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனநிம்மதி ஏற்படும். எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுக்கமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 31, 1, 2.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 7-ல் சூரியன், 8-ல் கேது சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலையும், தேவையில்லாத நெருக்கடிகளும் உண்டாகும். சுலபமாக முடியவேண்டிய விஷயங்கள் தாமதமாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது அதிகப்படியான வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய காலமாகும். வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது எதிலும் சற்று பொறுமையோடு செல்வது நல்லது. உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது தற்சமயத்துக்கு நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் கவனச்சிதறல் ஏற்படக்கூடிய நேரமென்பதால் படிப்பில் முனைப்புடன் செயல்பட்டால் மட்டுமே நல்லபெயர் எடுக்கமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 31, 1, 2.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதும், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறும். பணவரவுகள் சாதகமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்ப தால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாகச் செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் முன்பைவிட தற்போது எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் செவ்வாய்க்கிழமைமுதல் செவ்வாய் 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, பைரவரை தரிசிப்பதன்மூலம் வளமான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 27, 28.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 4-ல் குரு, 5-ல் சூரியன், வரும் செவ்வாய்க்கிழமை முதல் 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் சற்று தாமதம் ஆகும். வரவுக்கு மீறியச் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை சற்று அனுசரித்துச் சென்றால் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். மறைமுகப் போட்டிகள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் தடைப்படும். பிள்ளைகள்வழியில் தேவையில்லாத மனக்கவலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய பணியும் சேர்த்து செய்யவேண் டிய ஒரு நெருக்கடியானநிலை உண்டாகும். உடன்பிறந்தவரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு மன நிம்மதி குறைவுகள் ஞாபக மறதிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற காலபைரவரை தரிசிப்பது, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 29, 30.