முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026.
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038,
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038,
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: சுவாதி- 1.
சந்திரன்: கேட்டை- 4.
செவ்வாய்: விசாகம்- 3.
புதன்: விசாகம்- 4.
குரு: புனர்பூசம் 4.
சுக்கிரன்: அஸ்தம்- 4.
சனி: பூரட்டாதி- 4 (வ).
ராகு: பூரட்டாதி- 1.
கேது: பூரம்- 3.
கிரக மாற்றம்:
27-10-2025 விருச்சிகம் செவ்வாய் பகல் 3.42
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/24/thisweekrasi1-2025-10-24-16-10-23.jpg)
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: விருச்சிகம்
26-10-2025 பகல் 10.46 மணிக்கு தனுசு
28-10-2025 இரவு 10.14 மணிக்கு மகரம்
31-10-2025 காலை 6.48 மணிக்கு கும்பம்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத்தோடு இருக்க வேண்டும். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக செயல்பட்டால்தான் தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்க முடியும். பிள்ளைகள்வழியில் ஒருசில அனுகூலமான பலன்களை வரும் நாட்களில் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க் கொள்ளும்படி இருக்காது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது நல்லது. பெண்கள்மூலமாக தேவையில்லாத செலவுகள் ஏற்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல பெயர் எடுக்க முடியும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் தேவையற்ற உபாதைகளை தவிர்க்கமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதன்மூலமாக ஏற்றங்களை அடைய முடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20, 21, 22, 23.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் சூரியன், 7-ல் புதன் சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். குருபகவான் அதிசாரமாக 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்காமல் சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் அனுகூல பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் சிறப்பு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருக்கின்ற இடத்தைவிட வெளியூர்மூலமாக வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிகாரியுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்து முடிக்க முடியும். மாணவ- மாணவியர்கள் தற்போது எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவதால் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறமுடியும். வரும் நாட்களில் அனுகூலங்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன்மூலமாக நல்லது நடக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 31, 1.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், வரும் செவ்வாய்க்கிழமை முதல் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு. தற்போது குருபகவான் அதிசாரமாக 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி பணவரவுகள் மிக மிகச் சிறப்பாக இருந்து பிறருக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவது மட்டுமில்லாமல் வம்பு, வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு வளர்ச்சியை அடைவதற்கான வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. திறமைவாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்ககூடிய பலம் உண்டாகும். புதிய வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் கடந்தகால தேக்கநிலை விலகி தற்போது நல்ல ஞாபக சக்தியுடன் செயல்பட்டு படிப்பில் சிறந்து விளங்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பூர்வீக வழியில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உண்டு. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 28.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சூரியன், 8-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாவது மட்டுமில்லாமல் வசதி வாய்ப்புகள் இருந்தும் அதனை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பூர்வீக சொத்துவகையில் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே வீண் கருத்து வேறுபாடுகள், நிம்மதி குறைவு உண்டாகும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொண்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக மன நிம்மதி குறைவு உண்டாகும். தேவையற்ற பழிச்சொற்கள் உங்கள்மீது வரும் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 28, 29, 30.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன் 3-ல் சஞ்சரிப்பதாலும், 2-ல் சுக்கிரன், 4-ல் புதன் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். எதிர்பாராத பண வரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய நேரமாகும். தற்போது சனிபகவான் வக்ரகதியில் இருப்பதால் எந்தவித நெருக்கடியும் சமாளிக்ககூடிய பலம் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப் பவர்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றம் இருப்பது மட்டுமில்லாமல் அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன் களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. வரும் நாட்களில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 31, 1.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, அதிசாரமாக 11-ல் குரு சஞ்சரிப்பதாலும், வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 3-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். தற்போது உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் விலகி ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு வளமான பலன்களை வரும் நாட்களில் அடையக்கூடிய யோகமானது இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர் களுடைய தேவையை எளிதில் பூர்த்தி செய்யக்கூடிய பலம் உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு முன்பைவிட தற்போது எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு எடுத்த பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 31, 1.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், 1, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உங்கள் ராசிக்கு 5-ல் ராகு சஞ்சரிப்பதாலும், சனி வக்ரகதியில் இருப்பதாலும் உடல் நலத்தில் கவனம் எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நேரமாகும். சிலருக்கு தொழில்ரீதியாக தேவையற்ற சட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடிய அமைப்பு இருப்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் அதிக நெருக்கடிகள், பிறருடைய வேலையும் இணைத்து செய்யவேண்டிய ஒரு இக்கட்டான நிலை உண்டாகும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்புக்காக நேரத்தை செலவிடவேண்டிய காலமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 28.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எதிலும் சாமர்த்தியமாக செயல்படக்கூடிய பலம் ஏற்படும். குரு பகவான் தற்போது அதிசாரமாக பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து ஜென்ம ராசியை பார்ப்பதால் உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் தற்போது குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள்
ராசிக்கு 4-ல் ராகு இருப்பதாலும், 12-ல் சூரியன் இருப்ப
தாலும் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்பு
கள் உண்டு. உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் தற்போது விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய அதிர்ஷ்ட
மானது உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் நல்ல ஞாபகசக்தியுடன் செயல்பட்டு படிப்பில் சிறப்பாக விளங்கக்கூடிய ஒரு அமைப்புகள் வரும் நாட்களில் உண்டாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். உங்கள் செயல்களுக்கு நல்ல ஒரு ஆதரவு கிடைக்கும். சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெண்கள்வழியில் ஒருசில சாதகமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். உங்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சாமர்த்தியமாக செயல்பட்டு எதையும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை அடைய லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி நெய் தீபமேற்றி வழிபடுவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 28, 31, 1.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், 10-ல் சூரியன், 11-ல் புதன் சஞ்சரிப்பதும், வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 11-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது குருபகவான் அதிசாரமாக 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து மனமகிழ்ச்சி ஏற்படும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல வளர்ச்சியை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய நேரமாகும். சக ஊழியரிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் பேச்சில் பொறுமையாக இருந்து படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல நிலையினை அடையமுடியும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை அடைய அம்மன் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் ராகு, 6-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரன், 9-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய காலமாகும். உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டும். பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகப்படியாக இருப்பதால் மன அமைதி குறைவு ஏற்படக்கூடிய நேரமாகும். பொதுவாக சக ஊழியரிடம் பேசுகின்ற போது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. ஒருசிலருக்கு தேவையில்லாத பயணங்களும் அதன்மூலமாக வீண் செலவுகளும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் சக மாணவ- மாணவியரிடம் பழகுகின்றபோது பார்த்து பழகுவது மிகமிக நல்லது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவதற்கு அம்மான் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 31, 1.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குருபகவான் தற்போது அதிசாரமாக 5-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதும், 7-ல் சுக்கிரன், 9-ல் புதன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நல்ல மாற்றங்கள் உங்கள் வாழ்வில் ஏற்படும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் ஓரளவுக்கு விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொண்டால் ஒருசில வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது மிகமிக நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்தகால நெருக்கடிகள் சற்றுக் குறைந்து படிப்படியான வளர்ச்சி களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் இதற்கு முன்பிருந்த இடையூறுகள் எல்லாம் விலகி தற்போது படிப்பில் சிறப் பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்கள் உண்டாகும். வரும் நாட்களில் நல்ல பலன்களை அடைய சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, வெங்கடேசபெருமாளைத் தரிசிப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 28, 29, 30.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-08/murugu.balamurugan_3.jpg)
/nakkheeran/media/media_files/2025/10/24/thisweekrasi-2025-10-24-16-10-34.jpg)