முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038,
Advertisment
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: அனுஷம்- 2
சந்திரன்: மூலம்- 3.
செவ்வாய்: கேட்டை- 1.
புதன்: விசாகம்- 4 (வ).
குரு: புனர்பூசம்- 4 (வ).
சுக்கிரன்: விசாகம்- 2.
சனி: பூரட்டாதி- 4 (வ).
ராகு: பூரட்டாதி- 1.
கேது: பூரம்- 3.
கிரக மாற்றம்:
23-11-2025 துலாத்தில் புதன் இரவு 8.07 மணிக்கு.
26-11-2025 விருச்சிகத்தில் சுக்கிரன் பகல் 11.22 மணிக்கு.
28-11-2025 சனி வக்ரம் முடிவு காலை 9.18 மணிக்கு.
29-11-2025 புதன் வக்ரம் முடிவு இரவு 11.08 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: தனுசு
25-11-2025 அதிகாலை 4.27 மணிக்கு- மகரம்.
27-11-2025 பகல் 2.07 மணிக்கு- கும்பம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய், சூரியன் சேர்க்கைப்பெற்று அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சாரம் செய்வதால் உங்களது தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உடனிருப்பவர்களால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். தற்போது 7-ல் சஞ்சரிக்கக்கூடிய சுக்கிரனும் வரும் புதன்கிழமை முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரரீதியாக நீங்கள் நினைப் பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இருக்காது என்பதால் சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு ஏற்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்வார்கள் என்பதால் உங்களது பணியில் மட்டும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தமுடியாத அளவிற்கு தேவையற்ற இடையூறுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சற்று பொறுப்புடன் நடந்துகொள்வது உத்தமம். வரும் நாட்களில் முருக வழிபாடு மேற்கொள்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக அனுகூலங்கள் ஏற்படும்.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27, 28, 29.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லவேண்டிய நேரமாகும். ஒன்றும் இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கடந்த நான்கு மாத காலமாக வக்ரகதியில் சஞ்சரித்த சனி வரும் வெள்ளிக்கிழமை வக்ரநிவர்த்தி அடைய இருப்பது உங்களுக்கு நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் வருகின்ற நாட்களில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு லாபகரமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து செயல்படுவதன் மூலமாக ஒரு சில வளமான பலன்களை அடையமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட பயனுள்ள காரியத்திற்கு நேரத்தை செலவிடுவது நல்லது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடைய முடியும்.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 29.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஒரு ஆதரவு கிடைக்கும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு நல்ல லாபத்தை ஈட்டி ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்கு நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்ப தால் வாடிக்கையாளர்களுடைய தேவையை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். கடந்த காலங்களில் உங்கள்மீது இருந்து வந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது குறைவதால் தற்போது மன நிம்மதி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு காலபைரவரை வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனை செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 4, 5-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து மகிழ்ச்சியும் மனநிம்மதியும் ஏற்படும். கடந்த நான்கு மாதகாலமாக வக்ரகதியில் இருந்துவந்த சனி வரும் வெள்ளிக்கிழமைமுதல் வக்ரநிவர்த்தி அடைய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார பிரச்சினைகள் எல்லாம் வரும் நாட்களில் படிப்படியாக குறையும். உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன், செவ்வாய், 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று பொறுமையோடு செயல்பட்டால் ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொது இடங்களில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் துர்க்கையம்மன் வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன்மூலமாக அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25, 26.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன் 4-ல் செவ்வாய் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதும், 7-ல் ராகு, 8-ல் சனி சஞ்சரிப்பதும் தேவையற்ற நெருக்கடி களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லவேண்டும். வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக மன அமைதி குறையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, மற்றவருக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு சக மாணவ- மாணவிகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப்பெற லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27, 28, 29.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய பலமும் வலிமையும் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் அசட்டு தைரியத் துடன் செயல்பட்டு அடையவேண்டிய லாபத்தை அடையமுடியும். தொழில் முன்னேற்றத்திற்காக அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். கடந்த காலங்களில் உங்கள்மீது இருந்துவந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது குறையும். மாணவ- மாணவியர்கள் முன்பைவிட எதிலும் தற்போது சுறுசுறுப்பாக செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வரும் நாட்களில் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பதன்மூலமாக ஏற்றங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 29.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. லாப ஸ்தானமான 11-ல் கேது சஞ்சரிப்பதாலும், கடந்த நான்கு மாதகாலமாக வக்ர கதியில் இருந்துவந்த சனி தற்போது வக்ரநிவர்த்தி அடைய இருப்பதாலும் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத உதவிகள் கிடைத்து ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது இருக்கிறது. உங்களுக்கு இருந்த சட்ட சிக்கல்கள் குறைவதால் மன நிம்மதி ஏற்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டாகும். எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற பேச்சுகளை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. சுப காரிய முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, வெங்கடேசப் பெருமாளை தரிசிப்பதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு சஞ்சரிப்பதாலும், குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்க இருப்பதாலும் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்களது முன்கோபத்தை குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்பட்டால்தான் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில்லாத தடங்கல்கள் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது வேலைப்பளு காரணமாக உங்களது மன அமைதி குறையும் என்றாலும் நீங்கள் எதிலும் தனித் திறமையோடு செயல்பட்டு எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். பொதுவாக வீண் பேச்சை குறைப்பது தற்போதைக்கு நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் நேரத்தை செலவிட வேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவதன்மூலமாக நல்லது நடக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், 4-ல் சனி, 8-ல் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருப்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத் துக்கொண்டு எதிலும் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டும். இது நாள் வரை வக்ரகதியில் இருந்துவந்த சனி தற்போது வக்ரநிவர்த்தி அடைய இருப்பதால் பொதுவாக எந்த ஒரு காரியத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது நிதானத்தோடு இருக்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு சின்ன வாய்ப்பைகூட உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு எடுத்த பணியை குறித்து நேரத்தில் முடிப்பீர்கள். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் ஞாபக மறதிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் படிப்பு விஷயத்தில் சற்று முனைப்புடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்கள் எடுக்கமுடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை அடைவதற்கு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 25, 28, 29.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். ராசியாதிபதி சனி பகவான் கடந்த நான்கு மாத காலமாக வக்ரகதியில் சஞ்சரித்து வந்ததால் சின்ன சின்ன பிரச்சினைகளை எதிர்கொண்டீர்கள். வரும் வெள்ளிக்கிழமைமுதல் வக்ர நிவர்த்தி அடைய இருப்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் சிறப்பான ஆதரவு கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு லாபகரமான பலன்களை அடைவது மட்டுமில்லாமல் நீங்கள் வாங்கிய கடன்களை குறைத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் தற்போது விடிவு காலம் பிறந்து மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் முன்பைவிட தற்போது எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு படிப்பில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. மேலும் அனுகூலமான பலன்களை அடைவதற்கு அம்மன் வழிபாடு மேற்கொள்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உடனிருப்பவர்கள்மூலமாக ஒரு சில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத தனசேர்க்கை ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறிது மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. சட்டரீதியாக உங்களுக்கு இருந்த சிக்கல்கள் எல்லாம் குறைவதால் எதிலும் உற்சாகத்தோடு செயல்படமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடைவது மட்டுமில்லாமல் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் மன நிம்மதி ஏற்படும். வெளியூர் பயணங்கள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் நல்ல ஞாபக சக்தியுடன் செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்கள் எடுக்கமுடியும். துர்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவதும் உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதும் ஒரு வளமான பலனை உங்களுக்கு தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 28, 29.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் சற்று நிதானத்தோடு செயல்பட்டால் ஏற்றமிகுந்த பலன்களை அடையமுடியும். ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலை ஆட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிக்கமுடியும். சுபகாரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் நீங்கள் சற்று கவனத் தோடு செயல்பட்டால் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணி தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை வரும் நாட்களில் உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் ஆசிரியருடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். உறவினர்கள்மூலமாக எதிர்பாராத உதவிகளைப் பெறக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவதற்கு ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25, 26.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-08/murugu.balamurugan_3.jpg)
/nakkheeran/media/media_files/2025/11/21/rasipalan-2025-11-21-15-55-26.jpg)