இந்த வார ராசிபலன்  20-7-2025 முதல் 26-7-2025 வரை

thisweekrasi

 


முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, 
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532. 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: பூசம்- 1.
சந்திரன்: கிருத்திகை -1.
செவ்வாய்: பூரம்- 4. 
புதன்: ஆயில்யம்- 2 (வ).  
குரு : திருவாதிரை- 3. 
சுக்கிரன்: ரோகிணி- 4. 
சனி: உத்திரட்டாதி- 2 (வ).
ராகு: பூரட்டாதி- 3.
கேது: உத்திரம்- 1. 

கிரக மாற்றம்:

26-7-2025 மிதுன சுக்கிரன் காலை 8.57 மணிக்கு
சந்திரன் மாறுதல் ஆரம்பம்: ரிஷபம்
22-7-2025 காலை 8.15 மணிக்கு  மிதுனம்.
24-7-2025 பகல் 10.59 மணிக்கு  கடகம்.
26-7-2025 பகல் 3.52 மணிக்கு சிம்மம்.

மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 4-ல் சூரியன், 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருந்து தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. உடன்பிறந்தவரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம். சுக்கிரன் 2-ல் வலுவாக இருப்பதால் குடும்ப உறுப்பினர்களின் உதவியால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் சிக்கனமாக செயல்பட்டால்தான் அனுகூலங் களை அடைய முடியும். தற்போது கிடைப்பதை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருநல்ல நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக உடல் அசதி உண்டாகலாம். அதிகாரியிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருகப் பெருமானை தரிசிப்பது, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவதன்மூலமாக வளமான பலன்களை நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

வெற்றி தரும் நாட்கள்: 22, 23.

ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சுக்கிரன் பலமாக சஞ்சரிப்பதும், 2-ல் குரு, 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவை களும் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அசையும், அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த இடமாற்றங் கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறையும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறந்து விளங்கி பெரியோர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு செய்வது, பெருமாள் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 24, 25.

மிதுனம் 
(மிருகசீரிடம்

 


முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, 
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532. 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: பூசம்- 1.
சந்திரன்: கிருத்திகை -1.
செவ்வாய்: பூரம்- 4. 
புதன்: ஆயில்யம்- 2 (வ).  
குரு : திருவாதிரை- 3. 
சுக்கிரன்: ரோகிணி- 4. 
சனி: உத்திரட்டாதி- 2 (வ).
ராகு: பூரட்டாதி- 3.
கேது: உத்திரம்- 1. 

கிரக மாற்றம்:

26-7-2025 மிதுன சுக்கிரன் காலை 8.57 மணிக்கு
சந்திரன் மாறுதல் ஆரம்பம்: ரிஷபம்
22-7-2025 காலை 8.15 மணிக்கு  மிதுனம்.
24-7-2025 பகல் 10.59 மணிக்கு  கடகம்.
26-7-2025 பகல் 3.52 மணிக்கு சிம்மம்.

மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 4-ல் சூரியன், 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருந்து தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. உடன்பிறந்தவரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம். சுக்கிரன் 2-ல் வலுவாக இருப்பதால் குடும்ப உறுப்பினர்களின் உதவியால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் சிக்கனமாக செயல்பட்டால்தான் அனுகூலங் களை அடைய முடியும். தற்போது கிடைப்பதை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருநல்ல நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக உடல் அசதி உண்டாகலாம். அதிகாரியிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருகப் பெருமானை தரிசிப்பது, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவதன்மூலமாக வளமான பலன்களை நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

வெற்றி தரும் நாட்கள்: 22, 23.

ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சுக்கிரன் பலமாக சஞ்சரிப்பதும், 2-ல் குரு, 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவை களும் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அசையும், அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த இடமாற்றங் கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறையும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறந்து விளங்கி பெரியோர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு செய்வது, பெருமாள் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 24, 25.

மிதுனம் 
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. கணவன்- மனைவி இடையே ஒற்றுமையானது மிகவும் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிதானத்தோடு நடந்துகொள்வது நல்லது. வெளியூர் தொடர்புகள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலமாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் சற்று குறையும். உத்தியோக ரீதியாக பார்க்கின்றபொழுது வேலைப்பளு உங்களுக்கு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை பெறுவீர்கள். பொதுவாக உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களிடம் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 22, 23.

கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத் துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்லவேண்டும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படக்கூடிய நேரமென்பதால் உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு இருப்பது உத்தமம். ஒருசிலருக்கு உடன் பிறந்தவரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல லாபங்கள்கூட தடைப்படக்கூடிய நேரம் ஆகும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது வேலைப்பளு சற்று கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்கள் பணியும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் நீங்கள் கவனத்தோடு இருந்தாலும் ஞாபகமறதி காரணமாக அடையவேண்டிய மதிப்பெண்களை அடைய இடையூறுகள் ஏற்படும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 24, 25.

சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். நல்ல நட்புகள் உங்களை நாடி வரும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அதிக லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. கூட்டாளிகளை சற்று அனுசரித்துசெல்வதன்மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதுமூலமாக அனுகூலமான பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22, 23.

கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன்- சூரியன் சேர்க்கை பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் 6-ல் ராகு, 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருந்த கடந்தகால சோதனைகள் எல்லாம் தற்போது விலகி ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதையும் எதிர்கொண்டு லாபகரமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் முன் னேற்றத்துக்காக புதிய திட்டங்களை போட்டு அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். கடந்த சில நாட்களாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி மனதில் நிம்மதி உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு விடிவுகாலம் ஏற்பட்டு அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளைவெல்லமுடியும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வதன்மூலமாக அனுகூலங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24, 25.

துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன், 11-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய நேரமாகும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய யோகமானது உங்களுக்கு இருக்கிறது. பூர்வீக சொத்துவகையில் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில்ரீதியாக சிறப்பான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களால் முடிக்க முடியாத பணியைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் நல்ல ஞாபக சக்தியுடன் செயல்பட்டு எதிலும் முதன்மை யாக விளங்கக்கூடிய நேரமா கும். உடல்ரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, அம்மன் ஸ்தலங் களுக்கு சென்றுவருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26.


விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 9-ல் சூரியன், புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினருடைய ஆதரவால் ஏற்படக்கூடிய சின்ன சின்ன பிரச்சினைகளை எளிதில் சமாளிக்கமுடியும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் அதிகப்படியான லாபத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் தற்போது குறையும். நண்பர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய நேரமாகும். தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் கையாள்வது நல்லது. ஒருசிலருக்கு வேலையாட்களால் சின்ன சின்ன பிரச்சினைகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல நல்ல பெயர் எடுக்கமுடியும். பெண்கள்மூலமாக எதிர்பாராத ஆதாயத்தை பெறுவீர்கள். மாணவ- மாணவியர்கள் முன்பைவிட இப்பொழுது உற்சாகத்தோடு செயல்பட்டு படிப்பில் சிறந்து விளங்கமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்:  20, 21.

தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குருபகவான் ஜென்ம ராசியை பார்ப்பதாலும், முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு செயல்களிலும் துணிச்சலோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். நண்பர்கள் மூலமாக ஒருசில ஆதாயத்தை அடைவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தற்போது சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கடந்த கால அலைச்சல், டென்ஷன் எல்லாம் தற்போது குறைந்து மன நிம்மதி உண்டாகும். உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது, வயது மூத்தவரிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறப்பான நிலையினை அடையக்கூடிய நேரமாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது நீங்கள் கௌரவமான நிலையினை அடையமுடியும். பொதுவாக மேலதிகாரியிடம் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் உங்களுடைய படிப்பில் கவனம் செலுத்துவது, பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22, 23.

மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். உடனிருப்பவர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நீங்கள்விளையாட்டுத்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய நேரமென்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போது பயன்படுத்திக்கொண்டு அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது உத்தமம். உத்தியோக ரீதியாக பார்க்கின்றபொழுது கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வு நேரம் குறைவது மட்டுமில்லாமல் மனநிம்மதியும் குறையும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உங்கள்மீது வீண் பழிச்சொற்கள் ஏற்படக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் உடன் இருக்கக்கூடிய நண்பர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, அம்மன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதுமூலமாக அனுகூலமான பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24, 25.

 

கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியை குரு பார்ப்பதாலும், 4-ல் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய நேரம் ஆகும். எதிர்பாராத பண வரவுகள் வந்தடைந்து உங்களின் நீண்ட நாளைய நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது விலகி அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பெரிய மனிதர்களுடைய நட்பு உங்களுக்கு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு ஒரு நல்ல நிலை ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் ஒருசில காரியங்களில் நீங்கள் நேரடியாக தலையிட்டு சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் கடந்த காலங்களில் ஒப்பிடுகின்றபொழுது தற்போது எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு தங்களுடைய திறன்களை வெளிப்படுத்தக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அம்மன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மூலமாக அனுகூலமான பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26.

மீனம் 
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் சனி, 4-ல் குரு, 5-ல் புதன், சூரியன் சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். பெண்கள்மூலமாக தேவையற்ற நெருக்கடிகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை பெறமுடியும். செவ்வாய், கேது 6-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்பாராத ஒருசில அனுகூலத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க் கொள்ளும்படி இருக்காது. சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் எடுத்த காரியத்தை முடிக்கமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் நீங்கள் திறமையாக செயல்பட்டு எடுத்த பணியை முடிப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட பயனுள்ள காரியங்களுக்கு நேரத்தை செலவிடுவது மிகவும் நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற காலபைரவரை வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக அனுகூலமான பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 20, 21.

 

bala190725
இதையும் படியுங்கள்
Subscribe