முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026.
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038,
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: சுவாதி- 3
சந்திரன்: பூரட்டாதி- 3.
செவ்வாய்: அனுஷம்- 1.
புதன்: அனுஷம்- 2.
குரு: புனர்பூசம்- 4.
சுக்கிரன்: சித்திரை- 2.
சனி: பூரட்டாதி- 4 (வ).
ராகு: பூரட்டாதி- 1.
கேது: பூரம்- 3.
கிரக மாற்றம்:
2-11-2025 துலா சுக்கிரன்
பகல் 1.15 மணிக்கு
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குரு 4-ல் அதிசாரமாக சஞ்சரிப்ப தால் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கக்கூடிய நேர மென்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்ளவேண்டும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று பொறுமையோடு செல்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். சுக்கிரன் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் பெண்கள்வகையில் ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மறைமுக எதிர்ப்புகள் காரணமாக நல்ல வாய்ப்புகள்கூட தட்டிப்போகும். ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. வேலைக் குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருக்கக்கூடிய நேரமென்பதால் உங்களுக்கு ஒதுக்கப் பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண் களைப் பெறமுடியும். வரும் நாட்களில் அனுகூல பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 8.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். குருபகவான் 3-ல் சஞ்சரிப்பதாலும், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதாலும் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட கோபப்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் தற்போது குறையும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல வளர்ச்சியினை அடையக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கமுடியும். ஒருசிலருக்கு உடன் வேலை செய்யக்கூடிய நபர்களால் சில பிரச்சினைகள் இருக்கும் என்பதால் பேச்சில் கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவதன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 6, 7.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். சுக்கிரன் இனி 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். மங்களகரமான சுப காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகள் மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய நேரமாகும். வேலைக்குச் செ ல்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலன்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள்மீது இருந்த அவப்பெயர்கள் எல்லாம் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் தற்போது எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை பெறமுடியும். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, காலபைரவரை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 5, 8.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 8-ல் ராகு சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அசையும், அசையா சொத்துவகையில் சுபச் செலவுகள் உண்டாகும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நேரத்துக்கு சாப்பிடுவது நல்லது. தேவையில்லாத பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. உங்கள் ராசிக்கு இனி 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிர்பாராதவகையில் தன வரவுகள் உண்டாக்கி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் சிறப்பு. வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. வேலை சம்பந்தப்பட்ட முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது உத்தமம். வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச் செலவுகள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் ஞாபக மறதிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் படிப்பில் அதிகமாக கவனம் செலுத்துவது மிகவும் சிறப்பு. வரும் நாட்களில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக ஏற்றமிகுந்த பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 6, 7.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன் 3-ல் சஞ்சரிப்பதாலும், 4-ல் புதன் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். பணவரவுகள் சற்று சாதகமாக இருப்பதால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு மாற்றத்தை அடையக்கூடிய நேரமாகும். வயது மூத்தவர்கள்மூலமாக ஒருசில ஆதாயங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 7-ல் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அலைச்சல் காரணமாக மனநிம்மதி குறைவு ஏற்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் உழைப்புக் கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர் களுக்கு எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. மாணவ- மாணவியர்கள் முன்பைவிட எதிலும் சற்று சுறுசுறுப்பாக செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களைப் பெறமுடியும். வரும் நாட்களில் மேன்மைமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் ராகு, 11-ல் அதிசாரமாக குரு சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால் எல்லாவகையிலும் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு நல்ல ஒரு முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்களிடம் கருத்து வேறுபாடுடன் இருந்தவர்கள்கூட தற்போது உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். நீண்டநாட்களாக தடைப்பட்டுவந்த சுப காரியங்கள் தற்போது கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைக்கூட தற்போது சுலபமாக செய்து முடிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஏற்றங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 8.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமை யோடு இருக்க வேண்டும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சனி வக்ரகதியில் இருப்பதாலும், குரு அதிசாரமாக 10-ல் சஞ்சரிப்பதாலும் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உடனிருப்பவர்களால் நிம்மதி குறைவு ஏற்படலாம் என்பதால் வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது உத்தமம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் ஏற்படக்கூடிய சிறு சிறு உடல் உபாதைகளை தவிர்க்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பது மட்டுமில்லாமல் உடன் வேலை செய்பவர்கள் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல நிலையினை அடையமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களை அடைவதற்கு சிவவழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 5.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிப்பதும், குருபகவான் அதிசாரமாக 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் பணவரவுகள் நன்றாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். தொழி-ல் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதால் உங்களது கையிருப்பு சற்றுக் குறையும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். படிக்கக் கூடிய மாணவ- மாணவியர்களுக்கு சிறப்பான நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பெற்றோர், ஆசிரியரிடம் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு சிவவழிபாடு மேற்கொள்வது, முருகன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 6, 7.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து மனமகிழ்ச்சி ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய நேரமாகும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வருகின்ற நாட்களில் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் மற்றவர்களால் முடிக்க முடியாத பணியைக்கூட நீங்கள் தலையிட்டு குறித்த நேரத்தில் முடித்து அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் எதிலும் திறமையாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுக்கமுடியும். வரும் நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். குரு அதிசாரமாக 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து எல்லா வகையிலும் ஏற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 2-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உடனிருப்பவர்களை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல ஒரு வளர்ச்சியை பெறுவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த போட்டி, பொறாமைகள் எல்லாம் தற்போது விலகி நல்ல லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் முன்னேற்றம் ஏற்படுவது மட்டுமில்லாமல் புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர் களுக்கு நல்ல இடத்தி-ருந்து அழைப்பு வரும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர் கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 8.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். சுக்கிரன் இனி 9-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் நெருங்கியவரின் உதவியால் ஒருசில ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி வக்ரகதியில் இருப்பதால் பொதுவாக பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் ஒரு சில எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பது மட்டுமில்லாமல் மேலதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பதுமூலம் நல்லது நடக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 4, 5.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குருபகவான் அதிசாரமாக 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. கேது 6-ல் சஞ்சரிப்பதாலும், சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு பொருளாதார ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு வளர்ச்சியினை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பதும் நல்லது. சூரியன், சுக்கிரன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் சற்று கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்ககூடியப் பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடிய நேரமென்பதால் படிப்பில் கவனம் செலுத்துவது, பிறர் பேச்சுக்கு செவி சாய்க்காமல் இருப்பது மிகவும் நல்லது. வரும் நாட்களில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, அம்மன் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 7, 8.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-08/murugu.balamurugan_3.jpg)
/nakkheeran/media/media_files/2025/10/31/thisweekrasi-2025-10-31-15-23-30.jpg)